“அதெல்லாம் எதுவும் வேணாம்... வா” என்று அவளை அறைக்கு உள்ளே கூட்டி சென்றான்.
அவனது அதிரடியில் திகைத்துப் போனவள்,
“இல்ல அவங்க எல்லாம் இருக்காங்க” என்று தடுமாறினாள்.
“இன்னொரு டோர் வழியா எக்சிட் ஆகிடுவாங்க... அவங்களுக்கு எப்பொழுதும் அந்த வே தான். இது நம்மோட வே” என்று சொன்னவன் கதவை சாற்றிவிட்டு அவளிடம் நெருங்க அவள் கண்களை தலைத்துக் கொண்டாள். அவளை நெருங்கி நின்று அவளை பார்த்துக் கொண்டே தன் சட்டையின் ஒவ்வொரு பட்டனாக அவன் அவிழ்க்க இங்கே இவளது முகம் சிவந்துப் போனது.
உடைக் களைந்து வெறும் துண்டுடன் நின்றவனை காண தைரியம் இல்லாது தலையை முற்றுமாக கவிழ்ந்துக் கொண்டாள்.
காட்டு தேக்கு தேகத்தின் வலிமையை ஒவ்வொரு நாளும் அவள் உணர்ந்துக் கொண்டு தானே இருக்கிறாள். என்ன ஒன்று அவளால் அந்த தேகத்தை நின்று நிதானமாக பார்த்து மகிழ முடியவில்லை. எங்கே அவள் அவனை ரசிப்பதை பார்த்தாலே தான் அவனது இதழ்கள் வளைந்து நெளிகிறதே. பிறகு எங்கிருந்து நின்று நிதானமாக பார்ப்பது.
எப்பொழுதும் போல ஏந்திழையாள் தலையை குனிந்துக் கொள்ள, அவளை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தான்.
“ப்ளீஸ்” என்று அவள் பார்க்க மறுக்க,
“பார்த்தே ஆகணும்டி” என்று கட்டளை இட்டவன் அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டான்.
இன்டெர்காம் ஒலிக்க எடுத்தான்.
“சார் ஒர்க் முடிச்சாச்சு” என்று தகவல் வர பெண்ணவளை அப்படியே கையில் ஏந்திக் கொண்டவன் லக்சுரியான குளியல் அறைக்குள் நுழைந்து பளிங்கு பாத்டப்பில் ரோசா அத்தர் நிரம்பி இருந்ததில் போட்டவன் தானும் அவளுடன் படுத்துக் கொண்டான்.
மெல்ல மெல்ல பெண்ணவளின் வாசம் அத்தரை தாண்டி அவனது நாசியில் ஏற இங்கே ஏந்திழையாள் தவித்து துடித்துப் போனாள்.
அத்துமீறி பயணிக்கும் ஆணவனின் கைகளில் துவண்டு சரிந்தாள். அவன் போட்ட மெட்டிகளில் ஒன்று அவளின் நெகிழ்வில் கழண்டு ஓடியது.
பெண்ணவளின் உடைகள் எல்லாம் அவனுக்கு பாரமாகிப் போனதோ என்னவோ முற்றிலும் ஆதிவசியாகிப் போனார்கள் இருவரும்.
அவனது உதடுகள் அவளின் முகத்தில் இருந்து கழுத்துக்கு இடம் பெயர்ந்து அதனினும் கீழிறங்க மெல்ல மெல்ல பெருங்காமம் அங்கே சூழ ஆரம்பித்தது... ஜகூசியுடன் கூடிய மெல்லிய மனம் இருவரையும் வேறு உலகுக்கு கூட்டி செல்ல பெண்ணவளின் போதை இன்னும் வேணும் போல இருந்தது ராசசிங்கனுக்கு.
ஒயின் பாட்டில் ஒய்யாரமாய் அங்கு இருக்க அதை எடுத்து ஒரு சிப் பண்ண போனவனை தடுத்தவள் அவனை அப்படியே தன்னக்குள் இழுத்துக் கொண்டாள்.
“வேணும்டி” என்றவனின் கோரிக்கை அவள் காட்டிய காதலில் மடிந்துப் போக அதன் பிறகு ராசசிங்கன் வேறு எந்த போதையையும் நாடவில்லை.
ஆனால் பெண் எண்ணும் போதையை மட்டும் கை விடவே இல்லை. போக பொருளாய் அவளை நினைத்து பெருங்காமமம் கொண்டு அவளை நாடி நாடி கூடியவன் ஒரு கட்டத்துக்கு மேல் தாங்காது படுக்கையில் கொண்டு வந்து அவளை விட்டவன் போர்வையை எடுத்து போத்த முயன்றவளை தடுத்து விட்டு அவளுக்கு அவனே போர்வையாகிப் போனான்.
இங்கே மனைவியோடு வந்து இருந்த கதிரை வேலைக்காரர்கள் மிகுந்த மரியாதையோடு வரவேற்று அவர்களுக்கு ரெப்ரெஷ் பண்ண ஒரு அறையை கொடுத்து இரவு அங்கேயே தங்க ஏற்பாடு செய்து இருப்பதாக சொல்லி விட்டு சரியாக ஒன்பது மணிக்கு டின்னருக்கு வந்து விடுமாறு கூறி விட்டதோடு மாற்று உடை இருவருக்கும் அந்த கபோர்டில் இருப்பதாக சொல்லி விட்டு சென்றார்கள்.
கதிரின் மனைவி அந்த அறையை பார்த்து வியந்தவள்,
“அழகா இருக்குங்க” என்று அவள் ஒவ்வொன்றையும் பார்க்க கதிர் தன் மனைவியையே பார்த்தான். கணவனின் பார்வை வேறு மாதிரி இருக்க,
“வந்த இடத்துல இதென்ன கூத்து” என்று அவள் அலறினாள்.
“இந்த ஏற்பாடெல்லாம் எதுக்கு தெரியுமா? இதுக்கு தான்” என்று சொல்லி கண்ணடித்தவன், பெண்ணவளை இறுக கட்டிக் கொண்டான்.
“ப்ச் படுத்தாதீங்க” என்று அவள் அவனை விட்டு நகர,
“வாய்ப்பே இல்லை. பாஸ் வர நேரமாகும்” என்று சொன்னவன் தன் மனைவியுடன் நேரத்தை செலவிட்டான் இன்பமாக.
சரியாக ஒன்பது மணிக்கு ராசசிங்கனும் ஏந்திழையாளும் கீழே இறங்க, தயாராக கதிரும் அவன் மனைவியும் கூடத்தில் இருந்தார்கள்.
வெல்கம் ட்ரிங்க்ஸ் கொடுத்து அவர்களை வரவேற்றவன் உண்ண அழைத்துச் சென்றான்.
பணியாளர்கள் பரிமாற வர அவர்களை தடுத்து விட்டு தானே அனைவருக்கும் பரிமாறினாள் ஏந்திழையாள். ராசசிங்கன் விழியுயர்த்தி பார்த்தான். ஆனால் அவளை தடுக்கவில்லை.
மூவரும் உண்ண அவள் நின்றிருக்க அவளை அவன் உண்ண சொல்லவே இல்லை. அவளும் அதை சட்டை செய்யவில்லை. ஆனால் கதிரின் மனைவி
“நீங்களும் சாப்பிடுங்க மேடம்.. நம்ம நாலு பேர் தானே நமக்குள்ள பரிமாறிக்கலாம்” என்று சொன்னாள்.
“இல்ல இருக்கட்டும் நான் பிறகு சாப்பிட்டுக்குறேன்” என்றவளுக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்தது. சற்று முன்பு ஆடிய கூடலில் உடல் மொத்தமும் ஓய்வுக்கு கெஞ்சியது. குறிப்பாக கால்கள்.
என்னவோ சிறிது கூட பலமே இல்லாதது போல தடுமாற்றமாய் இருந்தது. சிறிது உட்கார்ந்தால் பரவாயில்லை போல இருந்தது. ஆனால் உட்கார்ந்தால் சாப்பிட வேண்டுமே என்று நின்றுக் கொண்டே இருந்தாள்.
ராசசிங்கனின் அருகில் நின்று இருந்தாள். கால் மாற்றி கால் நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்தவனுக்கு கோவமாய் வந்தது.
“சட்னி எடு” என்று சொல்ல அவளும் அவனுக்கு குனிந்து பரிமாறினாள். அப்படி அவனின் அருகில் குனிந்து அவன் பரிமாற “ஏன்டி உன் வீட்டுல உன்னை சாப்பிட சொல்ல ஒரு ஆள் வேணுமா? கால் வலிக்கிதுன்னா உட்கார வேண்டியது தானேடி. அதுக்கு கூட ஒரு ஆள் சொல்லணுமா? வேலை வாங்கின எனக்கே அந்த வலி வலிக்கிது உடம்பு. உனக்கு வலிக்காதா?” சுல்லேன்று முறைத்த ராசசிங்கனை அதிர்ந்து அதிசயமாய் பார்த்தாள்.
“அப்படி முழிச்சு தொலைக்கதடி... வந்து உட்காரு” என்று அவளுக்கு அந்த பக்கம் இருந்த நாற்காலியை காலால் இழுத்து அவனுக்கு வெகு அருகில் போட்டான்.
அவனது இந்த அவதாரத்தில் நெஞ்சை அடிக்காத குறையாக வந்தது அவளுக்கு.
“நீயா பேசியது என் அன்பே..” என்று அவளின் மனம் பாட்டெலாம் வேறு பாடியது...
“என் முகத்துல என்னடி இருக்கு. முதல்ல உட்காரு” என்று பல்லைக் கடித்தான்.
அதில் பட்டென்று அமர்ந்து விட்டாள். “உனக்கு சாப்பிட தனியா வேற சொல்லணுமாடி?” என்று காதோரம் கடித்து குதற எதிரில் இருந்தவர்களை பார்த்து பொதுவாக புன்னகை சிந்தியவள் தனக்கு ஒரு தட்டை எடுத்து போட்டு உண்ண ஆரம்பித்தாள். மற்றவர்களையும் கவனித்துக் கொண்டாள் ஏந்திழையாள்.
அவளின் கவனிப்பில் உண்மையாகவே கதிரும் அவனின் மனைவியும் வெகுவாக மகிழ்ந்துப் போனார்கள். எல்லோரும் உண்டு முடித்து விட்டு கூடத்தில் அமர கூல் சோடாவில் இஞ்சி, புதினா, லெமன் தட்டி போட்ட ட்ரிங்சை பணியாளரை எடுத்து வர சொல்லி விட்டு ஏந்திழையாளும் அவர்களுடன் போய் அமர்ந்தாள்.
ட்ரிங்க்ஸ் எடுத்துக்கொள்ள பெரும் அமைதி சூழந்தது. நீண்ட இடைவெளியை தவிர்த்து கதிர் தன் தயக்கத்தை மீறி ராசசிங்கனை பார்த்து,
“ஏன் சார் திடிர்னு இந்த விருந்து? தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான்.
“இன்னைக்கு ஒரு கம்பெனி சைன் பண்ணி இருக்கோம் தெரியும் தானேடா? அதுக்கு தான் இந்த ட்ரீட்..”
“அதுக்கு தான் சம்பளம் ஏத்தி குடுத்து இருக்கீங்களே சார்” என்றான்.
“எல்லாருக்கும் தானேடா சம்பளம் ஏத்தி குடுத்து இருக்கேன்” என்றான் ராசசிங்கன்.
“அப்போ வீட்டுக்கு வரவச்சி இந்த கவனிப்பு எதுக்கு ண்ணா” என்று கண்களில் ஏக்கத்துடன் கேட்டான். அவனது ஏக்கத்தை புரிந்துக் கொண்டானோ என்னவோ,
“எனக்குன்னு வேற யார்டா இருக்கா... என் மகிழ்ச்சியை உன்னோட பகிர்ந்துக்கிட்டேன்” என்றான் கொஞ்சமும் தடுமாறாமல்.
ஆனால் கதிர் கண்கள் கலங்கி விட்டான்.
“ண்ணா” என்று ஓடி வந்து அவனது காலடியில் அமர்ந்து மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.
கதிருக்கு குடும்பம் என்று யாருமில்லை. எல்லாமே ராசசிங்கன் தான். ராசசிங்கன் தான் அவனை படிக்க வைத்து வேலை போட்டு கொடுத்து திருமணமும் செய்து வைத்து இப்பொழுது வரை பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
ஆனால் அதை எப்பொழுதும் எங்கும் காட்டிக் கொள்ளவே மாட்டான். கதிரும் அவனிடம் இருந்து எந்த சலுகையும் எடுத்துக் கொள்ள மாட்டான். அது தான் ராசசிங்கனுக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் இன்று எல்லாவற்றையும் உடைத்து போட்டுவிட்டான் அவனே.
“டேய் என்னடா சின்ன பிள்ளை மாதிரி” என்று அவனை எழுப்பி விட பார்க்க,
“மாட்டேன்” என்று அவனது காலில் முகம் புதைத்துக் கொண்டான் கரன்.
ஏந்திழையாள் இருவரின் பாச பிணைப்பையும் கண்டு வாயடைத்து போய்விட்டாள்.
ராசசிங்கன் சொன்ன ‘எனக்குன்னு வேற யார்டா இருக்கா...’ என்ற சொற்றொடரில் சில கணங்கள் உயிரற்ற சிலையாகிப் போனாள்.
“கொஞ்ச நேரம் ண்ணா” என்ற கதிர் ராசசிங்கனை விட்டு விலகவே இல்லை. சிங்கனும் அவனை விலக்கவில்லை.
ஏந்திழையாளின் விழிகளில் மெல்லிய நீர் படலம்.. அதை யாருக்கும் காட்டாமல் தன் முந்தானையால் துடைத்துக் கொண்டவளுக்கு நெஞ்சம் கனத்துப் போனது.
அன்றைக்கு ராசசிங்கன் சொன்ன சொல் காதில் வந்து மோதியது...
‘எனக்காக நீ அழனும்’ என்ற சொற்கள் இன்று அவளின் நெஞ்சை எட்டியது. ‘உங்களுக்காக என்று அழக்கூட ஆளில்லையா சிங்கன்... அப்பு உங்க துக்கம் துயரம் எல்லாமே உங்க நெஞ்சோடு மட்டும் தானா’ என்று நெஞ்சம் மறுகிப் போனாள்.
என்னவோ யாருமில்ல பிள்ளை போல அவளின் கண்களுக்கு சிங்கன் தென்பட்டான்.
அணைத்து ஆறுதல் கூற தாயில்லாமல் சுடும் வெயிலில் நடக்கும் ஒரு வயது பிள்ளை போல அல்லவா இருக்கிறான் என்னவன் என்று தன் கணவன் மீது தீரா இரக்கம் சுரந்தது ஏந்திழையாளுக்கு.
யாருமில்லாமல் வளர்ந்தவன் அவன். ஆனால் எல்லா சொந்த பந்தங்களோடும் பாச பிணைப்புடன் வளர்ந்தவள் இவள்.. அன்பு காட்ட ஆளே இல்லாமல் தனித்து நின்றவன் சிங்கன்... இவளோ அனைத்து சொந்தங்களின் அன்பில் திளைத்தவள். இப்பொழுது கூட அவளை அன்புடன் பார்த்துக்கொள்ள அவளை சுற்றி ஆயிரம் சொந்தம் இருக்கிறது... அதில் ஒரு சொந்தம் கூட தன்னவனுக்கு இல்லையே...! ஏன் இந்த முரண் என்று ஏந்திழையாள் ஏங்கிப் போனாள்.
சிங்கனுக்கும் உள்ளுக்குள் பாச பந்தம் இருக்கும் தானே... ஆனால் அதை காட்ட கூட ஆளில்லாமல் தானே இத்தனை வருடமும் இருந்து இருக்கிறார் என்று இன்னும் வேதனை பட்டாள்.
அவனுள் இருந்த ஏக்கத்தை உணர்ந்துக் கொண்டவள் அவனுக்கு எல்லாமுமாய் இருக்க எண்ணினாள். அப்படி எண்ணியவளே அவனை விட்டு விலகும் நாளும் வந்தது.





