“சரி அதை எல்லாம் விடு.. இப்போ வா சாப்பிடலாம்.. வெளில போயி சாப்பிடலாம்னு நினைச்சேன்.. ப்ளான் மாறி போயிடுச்சு.. இன்னைக்கு வீட்டு சாப்பாடு தான். நாளைக்கு போகலாம்..” என்றான்.
“நான் வரல”
“உன்கிட்ட பெர்மிஷன் கேட்கலையே நானு”
“ஆனா உங்க ப்ளானுக்கு என்னோட விருப்பம் முக்கியம் இல்லையா?” ஆற்றாமையுடன் கேட்டாள்.
“உன் விருப்பத்துக்கு இந்த ஒரு மாதமும் தடை விதித்துள்ளேன். சோ நீ நான் சொல்றதை மட்டும் தான் கேட்கணும்”
அவனது திமிரில் இவளுக்கு பத்திக் கொண்டு வர,
“என்னை கைதி மாதிரி ட்ரீட் பண்றீங்க?”
“இசிட்” என்று கேட்டவன், “அப்படியே நினைச்சுக்கோ.. ஐ டோன்ட் மைன்ட்.. இப்ப வா சாப்பிட” அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.
வீடே பெரும் கலோபரத்தில் மூழ்கி இருக்க, கதிரவன் மட்டும் எதையும் கண்டு கொள்ளவில்லை.
பணியாளரை வர வைத்து இருவருக்கும் தட்டு வைக்க சொல்ல, அவர்களும் பரிமாற வர,
“நான் பார்த்துக்குறேன்” என்று அவர்களை அனுப்பி வைத்தவன், பனிக்கு அவனே பரிமாறினான்.
அவளுக்கு தொண்டைக்கு கீழ் உணவு செல்ல மறுத்தது. குச்சி வைத்து குத்தினால் கூட போகாத அளவுக்கு உணர்வுகள் எல்லாம் அடைத்துக் கொண்டு நின்றது.
ஆனால் அதை எல்லாம் சட்டை செய்யாமல் கதிரவன் தன் வேலையை பார்த்தான். கண்ணும் கருத்துமாக அவன் உண்டதை பார்த்து இவள் தான் மலைத்து நின்றாள்.





