ATHTHIYAAYAM 46

 
Admin
(@ramya-devi)
Member Admin

நேர்த்தியாக புடவை கட்டிய ஏந்திழையாள் மாராப்பை எப்பொழுதும் போல ஒற்றையாய் விட்டாள். தலையில் இருந்த துண்டை அவிழ்த்து விட்டு ஹேர் ட்ரை மூலம் உலரவைத்து விட்டு கேட்ச் கிளிப் மூலம் அடக்கி விட்டு பின் புறம் முதுகு தெரியாமல் இருக்க விரித்து விட்டு இருந்தாள்.

அவளின் நீளமான முடி அவளை ஆண் மயில் தொகை போல ஒரு தோற்றத்தை கொடுத்தது...! பூ ஒரு பந்து இருக்க எவ்வளவு வைப்பது என்று யோசித்தாள்.

பிறகு மூன்று முழம் பூவை நறுக்கி தலையில் இரு பக்க காதோரம் சொருகி யூ வடிவில் வைத்துக் கொண்டாள். கழுத்தில் அவன் அணிவித்த மஞ்சள் தாலி மட்டுமே இருந்தது...

புடவையோடு எடுத்து வைத்த நகைகளை பார்வை இட்டாள். அளவுக்கு அதிகமாக இருந்தது. அதில் புடவையின் ஆரி ஒர்க்குக்கு தகுந்தார் போல இருந்த வைர நகையை எடுத்து அணிந்துக் கொண்டாள்.

காதில் வைரத்தில் மின்னிய டிசைனர் தோடும், அதே வடிவில் டாலர் கோர்த்து இருந்த மெலிதான சங்கிலியை மட்டும் அணிந்துக் கொண்டாள்.

மற்றவைகளை எடுத்து டிரேசிங் டேபிளில் வைத்து விட்டு கண்ணாடியை பார்த்தாள். நாட் பேட்... முகத்துக்கு சின்னதாய் ஒப்பனை செய்து இதழ்களுக்கு வெறும் லிப் கிளாஸ் மட்டும் போட்டுக் கொண்டவள் கண்ணுக்கு மை எடுத்து எழுதி விட்டு நெற்றி வகிட்டில் அடர் சிவப்பு நிற குங்குமத்தை எடுத்து வைத்துக் கொண்டாள்.

இனி திருமதி ஏந்திழையாள்.. என்று எண்ணியவளுக்கு என்னவோ அடைத்த உணர்வு. ஆனால் அதை உதறி தள்ளியே ஆக வேண்டிய சூழலில் இருந்தாள். குளிர் அதிகம் வாட்டி எடுக்க ஏசியை ஆப் செய்து விட்டு குறுங்கண் கதவை திறந்து வைத்தாள்.

வெளியே இருந்து குளிர் வாடை காற்று அவளின் முகத்தில் வந்து மோதியது. அதை ஆழ்ந்து அனுபவித்தபடி இருந்தவளின் இடையில் ஒரு முரட்டு கரம் அழுந்தி இறுக்கிப் பிடிக்க விதிர்விதிர்த்துப் போனாள் ஏந்திழையாள்.

விழிகள் பயத்தில் சிவக்க பின்னால் திரும்பி பார்த்தாள். ராசசிங்கன் தான்.. வெற்று மார்புடன் அவளை மிக அதிகமாக நெருங்கி நின்று இருந்தான்.

அவனது வெற்று தேகத்தை பார்த்தவளுக்கு கூச்சமாய் போய் விட சட்டென்று திரும்பிக் கொண்டாள். திரும்பியவளின் இடையை இறுக்கிப் பிடித்தவன் இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளி அவளின் சேலைக்குள் கையை நுழைத்து வயிற்றில் கை வைத்து தன்னோடு நெருக்கி இறுக்கினான்.

வெற்று வயிற்றில் அவனது ஜில்லென்ற கை பட பக்கென்று ஆனாது. தன் வயிற்றை உள் இழுத்துக் கொண்டாள். அவள் அப்படி செய்யவும் அவனின் பிடியில் இருந்த அவளின் வயிறு உள்ளே போக அதை தாங்காதவனாய் இன்னும் அதிக வீரியத்துடன் அவளின் வயிற்றை கையால் கசக்கி இறுக்கிப் பிடிக்க தவித்துப் போனாள்.

அதோடு அவனது முகம் அவளின் கழுத்தில் பதிந்து மீசையின் வன்மையால் அவளின் கழுத்தில் கோலம் போட ஆரம்பிக்க தன் வயமிழந்துப் போனாள் பெண்ணவள்.

“ப்ளீஸ்” என்றவளின் குரல் கொஞ்சம் கூட வெளியே வரவே இல்லை. மீசை முடி உரசலில் பெரிதும் தகித்துப் போனாள். தகித்துக் கொண்டு இருந்தவளின் மாராப்பை அவன் உருவி எடுக்க விழிகளில் அச்சம் பரவியது. மூச்சடைத்து போனது போல இருந்தது.

அவனது கையை தன் நெஞ்சோடு பிடித்துக் கொண்டாள்.

“கையை விடுடி..” என்று கிறங்கிப் போய் சொன்னவன் அவளின் கழுத்துக் கீழ் முகத்தை புதைத்துக் கொண்டு அவளின் வாசத்தை நாசிக்குள் ஏற்றிக் கொள்ள பெரிதும் கூசிப் போனாள்.

தனக்குள் அவள் குறுகப் பார்க்க அவளை அதற்கு விடாமல் அவளின் முதுகோடு கையை வைத்து தன் பக்கம் தள்ளியவன் அவளின் மார்பில் அழுத்தமாக புதைந்துக் கொண்டான்.

மேற்கொண்டு அவளின் உடைகளை கலைத்து விட்டு படுக்கையில் கிடத்தியவன் அவளின் மீது வன்மையாக படர்ந்துக் கொண்டான்.

அவளின் தலை முடி முதல் கால் பாதம் வரை முத்தங்களால் அவளை கொல்லப் பார்த்து அவளை சுகமாக வதைத்து எடுத்தான். அவனின் ஒவ்வொரு தொடுதலிலும் அவளுள் லட்சம் பூக்கள் பூக்க தொடங்கியது. உணர்வுகள் அவளின் வயம் இல்லாமல் போய் அவன் விரல் நுனியில் ஏங்கி தவித்துக் கொண்டு இருந்தது.

கண்கள் சிவக்க தன் மீது இருந்தவனை பார்த்தாள். அவள் விழிகளில் இருந்த சிவப்பை விட அவனின் விழிகளில் இருந்த சிவப்பே அதிகமாக இருந்தது. தன் உடலோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருப்பவனின் தலையை அழுத்தமாக பற்றிக் கொண்டவளுக்கு உணர்வுகள் எல்லாம் வெடித்துக் கிளம்பியது போல இருந்தது.

“ம்ம்ம்” என்று அவளின் முணகல்களை எல்லாம் கூட்டும் நோக்குடன் அவளிடம் அவன் பிணைந்து கிடந்தான். மோகம் மோகம் மட்டுமே... அந்த மோகத்தின் ஊடே கிளந்து எழுந்த காமத்தை வன்மையாகவும் மென்மையாகவும் அவளிடம் கொட்டி கவிழ்த்துக் கொண்டு இருந்தான் ராசசிங்கன்.

முதல் கூடலிலே அடித்து போட்டது போல உணர்ந்தாள் ஏந்திழையாள். அவனது இரும்பு பிடிக்குள் அவளின் தேகம் கரும்பு சக்கையாய் போனது. கூடல் முடிந்து நெற்றி முத்தம் வைப்பான் என்று அவள் எதிர்பார்த்து இருக்க அவனோ அவனது தேவையை முடித்துக் கொண்டு அவளின் நெஞ்சில் தலையை வைத்து படுத்துக் கொண்டான்.

என்னவோ ஒரு ஏமாற்றம் அவளின் நெஞ்சை கவ்விக் கொண்டது. விழியோரம் ஈரம் மினுமினுக்க அதை காட்டிக் கொள்ளாமல் தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவனது பாரத்தை தாங்க முடியாமல் அவள் அசைய,

“ப்ச் அசையாதடி” என்று அதட்டி விட்டு இன்னும் நன்றாக சொகுசாக அவளின் மீது படுத்துக் கொண்டான். அவனது அதட்டலில் மறுகிப் போனவள் அதை பிறகு அசையவே இல்லை. அப்படியே படுத்து இருந்தாள். உடையை கூட மாற்ற விடவில்லை.

அவளின் சேலையை மட்டுமே ஒப்புக்கு சுற்றி இருக்க வைத்தான். அவளையும் அறியாமல் அவளின் நெஞ்சு எதற்கோ ஏங்கியது. அது கிடைக்காமல் போக ஏமாற்றத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.

“இதென்ன காதலில் மலர்ந்த திருமணமா நான் நினைத்தது எல்லாம் நடக்க? எல்லோருக்கும் காரியம் ஆகணும்னு என்னை பகடை காயா மாத்திட்டாங்க... இதுல அன்பையும் பாசத்தையும் எதிர் பார்க்க முடியுமா? வெறும் லஸ்ட்டு தான் இருக்கும்” என்று எண்ணியவளுக்கு தூக்கம் எட்டா கனியாகிப் போனது.

பாதி இரவுக்கு மேல் மிகவும் அசவுகாரியமாக இருக்கவும் எழுந்துக் கொள்ள பார்த்தாள். ராசசிங்கன் அவள் மீது மலை மாதிரி கிடக்க அவனை புரட்டி தள்ள பார்த்து மூச்சு வாங்கியது தான் மிச்சம்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 16, 2026 9:52 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top