Notifications
Clear all

அத்தியாயம் 17

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 991
Topic starter  

அவனின் அப்பா அம்மா இருந்தவரை அவனின் முரட்டு குணமும் கோவமும் அதிகம் வெளியே தெரியவில்லை. ஆனால் அவர்கள் போன பிறகு அவனின் முழுமையான குணம் தெரிய ஆரம்பிக்க மகரியாளுக்கு உள்ளுக்குள் அத்தனை நெருடலாக இருந்தது. நெருடல் என்பதை விட பயமாக இருந்தது.  

“என்ன அண்ணா இப்படி இருக்காரு..” கவலை தேய்ந்த முகத்துடன் கேட்டவளை பார்த்த ராஜா,

“நல்லவன் தான் மகரி, ஆனா அத்தை மாமா இறந்த பிறகு அவனுக்குள் இருக்கும் தனிமை அவனை அரித்து திங்குது.. எனக்கு நீ இருக்க, ஆனா அவனுக்கு அப்படி யாரும் இல்ல இல்லையா அது தான் பிரச்சனை” என்றவன்,

“அதுக்காக நாம அவனை அப்படியே விட முடியாது, அவனுக்கு இனி நாம மட்டும் தான் பாப்பா” என்றவனின் சொல்லில் இவளும் தலையை ஆட்டினாள்.

மூன்று நேரமும் ஆதியோடே இருந்தார்கள் அண்ணன் தங்கை இருவரும். கேசவனும் காலையிலே வந்து விடுவான்.

நால்வரும் ஒன்றாக இருந்தாலும் ஆதி அழுத்தமாக வாயையே திறக்க மாட்டான். பிடித்து வைத்தவன் போல அப்படியே அமர்ந்து இருப்பான். கல்லூரி காலமும் முடிய ஆரம்பிக்க, இப்படியே இவனுங்களை விட்டால் சரிவராது என்று தொழிலில் மூன்று பேரையும் ஈடுபடுத்தினார் நாதன்.

அதன் பிறகே மகரிக்கு கொஞ்சம் இலகுவாக இருந்தது. ஆனால் ஆதியின் இறுக்கம் மட்டும் தளரவே இல்லை. அவன் இறுக்கம் தளர பெண்ணவளை கேட்டு நின்றான் அந்த அழுத்தமானவன்.

“என் அழுத்தமும் இறுக்கமும் போகணும்னா நீ எனக்கு வேணும்” என்றான்.

“இல்ல அது எப்படி.. கல்யாணம் பண்ணாம” என்று தயங்கினாள் மகரி.

“இதே இது உன் அத்தை இருந்து இருந்தா நீ என் கூட படுக்க தயங்கி இருக்க மாட்டல்ல. ஏன்னா உன் கூட படுத்து உன்னை ஏமாத்தினாலும் என்னை மிரட்டி அடிபணிய வைக்க என்ன பெத்தவங்க இருந்தாங்க. இப்போ தான் அப்படி யாரும் இல்லையே.. அதனால உனக்கு தயக்கமா இருக்கும்” என்று அவன் பேச,

உள்ளுக்குள் துடிதுடித்துப் போனாள்.

“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க ஆதி?” கண்கள் கலங்க கேட்டவளை வெறித்துப் பார்த்தவன்,

“எனக்கு நீ வேணும். அவ்வளவு தான்.. முடிஞ்சா வந்து படு. இல்லன்னா வெளில போடி. இனி என் வீட்டுக்கே வரக்கூடாது” என்று விழிகள் சிவக்க சொன்னவனை வேதனையுடன் பார்த்தவள்,

அவனை சரி பண்ணி கொண்டு வர வேற வழியில்லாது அவனது படுக்கையில் போய் படுத்தாள்.

“அழுதுக்கிட்டே படுத்தா என்னத்தடி இரசிக்க முடியும்” அதற்கும் ஒன்றை சொல்ல, வேகமாய் கண்களை துடைத்துக் கொண்டவள் அவனை பார்த்தாள். அவளின் கண்களில் கொஞ்சமும் வெட்கமில்லை, காதலித்த கண்ணனின் உயிரோடு கலக்கப் போகிறோம் என்கிற பரவசம் எதுவும் இல்லை.

அதை பற்றி ஆதி எதுவும் கவலை பட்டது போல தெரியவில்லை. அவளின் அருகில் வந்து படுத்தவன் தன் வெற்று மார்பில் அவளை இழுத்துப் போட்டான். அவனின் இழுப்பில் அவனோடு வந்து ஒட்டிக் கொண்டாள் பெண்ணவள். ஆனால் அவளின் மனம் என்னவோ ரணமாக இருந்தது.

அவள் எதிர் பார்த்த காதலை அவனிடம் தேடி இவ்வளவு நாளும் களைத்துப் போய் விட்டாள் போல. வலையில் சிக்காத நீர் போல அவளின் காதலில் சிக்காமல் இருந்த ஆதித்யன் அவள் காட்டும் அன்பில் உருகுவானா என்று பார்ப்போம்.

அவள் அணிந்து இருந்த சுடியின் பின் பக்கம் இருந்த ஜிப்பை இறக்கி தன் முகத்தை அவளின் வெற்று மேனியில் பதித்தவனின் மூச்சுக் காற்று அவளை கொதிக்க வைத்தது.

மீசை முடியோ முற்கள் போல குத்தி வதை செய்ய, அவனிடம் இருந்து நழுவி ஓடப் பார்த்தவளை தன்னுடைய இரு கையாளும் இறுக்கமாக பற்றிக் கொண்டவன்,

“நீ வேணும்டி” அவளின் காதுக்குள் முணுமுணுத்தவன் அவளின் சின்ன சின்ன எதிர்ப்புகளை வெகு சுலபமாக தகர்த்து விட்டு அவளை தனக்குள் ஏற்றவளாக வளைத்துக் கொண்டான்.

“ப்ளீஸ் மாமா..” மகரி உளற, அவளின் உளறல்களை எல்லாம் தனக்குள் எடுத்துக் கொண்டு அவளின் உதடுகளில் தன் இதழ்களை புதைத்து அவளை பேசவே விடாமல் செய்து விட்டான்.

மிச்சம் சொச்சம் இருந்த ஆடைகளையும் உருவி எடுத்து விட்டு அவளின் அழகை விழி அகற்றாது பார்த்தவனின் சிந்தை எங்கும் பெண்ணவள் மட்டுமே நிறைந்து விட அவளின் கழுத்தில் முகம் புதைத்து மெலிதாக கட்டித்து தன் உணர்வுகளை அவளுக்கு கடத்த, பெண்ணவளின் முதுகு தண்டில் லட்சம் மின்னல் எழுந்தது.

தன் மேனி மீது ஊரும் மன்னவனின் விரல்களின் வித்தைகளை தாள முடியாமல் தலையணையில் முகம் புதைத்துக் கொள்ள,

“என்னை பாருடி” என்று அதட்டல் போட்டான். அவன் அதட்டிய பொழுதும் அவளால் அவனின் முகத்தை காண முடியாமல் நாணம் வந்து தடுக்க இன்னும் அழுத்தமாக புதைந்துக் கொண்டாள்.

ஆரம்பத்தில் ஆதியின் செயல்களை ஏற்க முடியாமல் தடுமாறி திண்டாடிப் போன மகரி, இது எப்படியும் என்றைக்காவது நிகழக் கூடிய உறவு தானே என்று அவனின் செயலுக்கு முழுமையாக தன்னை ஏந்திக் கொடுத்தாள்.

ஆதியின் பெண்ணவளை வதைக்காமல் பூக்களை வருடி விடுவது போல அவளை பாந்தமாக கையாண்டான். அதனால் மகரிக்கு பயம் நீங்கி நாணம் வந்தது.

விரைத்துப் போன அவளின் உடம்பும் மெல்ல மெல்ல நெகிழ்ந்துக் கொடுத்தது. அதை உணர்ந்தவன் அவளை சுகமாக வதைக்க ஆரம்பித்தான்.

நீடித்துக் கொண்டே போன அவனின் தேடலில் பயந்துப் போனவள்,

“ப்ளீஸ் போதுமே..” மூச்சு வாங்க சொன்னவளின் முகத்தோடு முகம் வைத்துக் கொண்டவன்,

“உன்கிட்ட இருந்தா எனக்கு ரொம்ப நல்லா இருக்க மாதிரி தோணுதுடி” என்றான்.

அவ்வளவு தான் மகரி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவனின் தேடலுக்கு வழிவகை செய்துக் கொடுத்தாள்.

“பிடரியை இறுக்கிப் பிடிடி” அதட்டல் போட்டவன் அவளின் கைகளை எடுத்து தன் முதுகில் வைத்துக் கொண்டான்.

“இறுக்கிப் பிடி.. உன் நக காயங்கள் எனக்கு வேணும்” கேட்டு அவளிடம் வாங்கிக் கொண்டவன் வன்முறையை லேசாக கையில் எடுத்தான்.

அதில் மகரி கொஞ்சம் மிரண்டுப் போக,

“இதுவும் ஒரு வகைடி” என்று மன்மத கலைகளை அவளுக்கு கற்றுக் கொடுத்துவிட்டு அவளையும் வன்முறையில் ஈடுபட செய்தான்.

வேணாம் என்று மறுத்தவளை தன் விருப்பம் போல வளைத்துக் கொண்டவன்,

“செம்மையா இருக்குடி இந்த பீல்” சொன்னவன் அவளை மேலும் விடாமல் தன் கைச்சிறையிலே வைத்துக் கொண்டான்.

“அண்ணன் தேடுவான்” என்று அவள் விலகப் போக,

“தேடாத அளவுக்கு நான் பார்த்துக்குறேன்” என்றவன் அவளின் வெற்று மேனியில் மீண்டும் புதைந்துப் போனான்.

இந்த முறை அவளை வதைக்கவில்லை என்றாலும் அவளின் மேனி தரும் இதமும் சூடும் மீண்டும் மீண்டும் வேண்டும் போல இருக்க அவள் போர்த்தி இருந்த போர்வைக்குள் தானும் நுழைந்து பெண்ணவளோடு ஒன்றிக் கொண்டான்.

மகரிக்கு தான் அவன் செயலில் முகம் சிவந்துப் போனது.

“ப்ளீஸ்.. ட்ரெஸ் போட்டுக்குறனே..” என்றவளை நிமிர்ந்துப் பார்த்தவன்,

“எனக்கு உறுத்தும்” என்று சொன்னவனை கண்டு வாயை பிளந்தாள்.

“எனக்கு ஒரு மாதிரியா இருக்கு ப்ளீஸ்” என்று சொன்னவளை கூர்ந்து ஒரு பார்வை பார்த்தான்.

அவனது பார்வையில் அடி நெஞ்சில் லேசாக பயம் வர,

“இன்னொரு முறை ட்ரெஸ் போடுறன்னா போட சுடிதார் இருக்காது” அப்பட்டமாக அவன் மிரட்ட, வாயை மூடிக் கொண்டாள்.

இனி ஏதாவது பேசினா இருக்குற சுடிதாரை கிழித்து விடுவான் என்று அறிந்துக் கொண்டவளுக்கு வெட்கமும் நாணமும் நெட்டி தள்ளியது.

அவனுடன் இப்படி ஒரே போர்வைக்குள் இருப்பது அவளை என்னவோ செய்தது. அதை சொன்னால் இந்த ஆதி கேட்டு தொலைக்க மாட்டார் என்று அமைதியாக இருந்துக் கொண்டாள். அவள் மீது புதைந்து இருந்தவன், மெல்ல கண்ணசர, அவன் தூங்கவதற்காக காத்துக் கொண்டு இருந்தவள், அவன் நன்றாக தூங்க ஆரம்பித்த உடன் அவனை மெல்ல புரட்டி போட்டு விட்டு உடைகளை எடுத்து அணிந்துக் கொண்டு அவன் வீட்டை விட்டு வெளியேறி தன் வீட்டுக்குள் போய் அடைந்துக் கொண்டாள்.

அவள் போன சிறிது நேரத்திலே அவள் இல்லாமல் திடுக்கிட்டு கண் விழித்த ஆதி வேகமாய் அவளை தேடி அவளின் வீட்டுக்கு விரைந்து வந்தான்.

அவனது முகத்தில் ஏகத்துக்கும் கோவம் சூழ்ந்து இருந்தது.

Loading spinner


   
Quote
(@megalaveera)
Trusted Member
Joined: 2 weeks ago
Posts: 69
 

nice

Loading spinner


   
ReplyQuote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top