அத்தியாயம் 8

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என் மேல உள்ள பாசத்துல அப்படி எல்லாம் பண்ணிட்டாங்க சார்.. இனி அப்படி எதுவும் செய்ய மாட்டாங்க.. ப்ளீஸ் எங்களை விட்டுடுங்க” என்று கெஞ்சினாள்.

“ஹாங்... விடுறதுக்கா உன்னை கட்டம் கட்டி தூக்கி இருக்கேன்.. உன்னை அணு அணுவா...” என்று முடிக்காமல் வில்லனாக அவன் சிரிக்க அடி நெஞ்சு வரை உலர்ந்துப் போனது.

“ப்ளீஸ் சார்... ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க” என்று அவள் நாக்கு தந்தி அடிக்க தடுமாறிக் கொண்டே சொன்னாள்.

“ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல கிட்டத்தட்ட ஒரு மாசம் முழுசும் என்னை பிசியா வச்சுக்கிட்ட உன் லவ் பிரதர்ஸ்க்கு நான் யாருன்னு காட்ட வேண்டாம்?” என்று கேள்வியாக அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்,

“ஆமா உன்கிட்ட அப்படி என்ன இருக்குன்னு உன்னை என் கிட்ட இருந்து காப்பாத்த பார்க்குறானுங்கன்னு நான் தெருஞ்சுக்கணுமே...” அவளை ஏளனமாக பார்த்தவன் சடுதியில் அவள் என்ன என்று யோசிக்கும் முன்பே அவளின் மொத்த புடவையையும் உருவி விட்டான்.

“சார்...” என்று அவள் கதற,

“இதுக்கு மேலையும் உன்னை உரிச்சு பார்க்க ஆசையா இருக்கே” என்று ராசசிங்கன் அவளிடம் முன்னேற, உயிர் துடித்துப் போனாள்.

“ப்ளீஸ் கிட்ட வராதீங்க... என்னை விட்டுடுங்க” என்று கூனி குறுகிப் போய் பின்னால் நகர்ந்து லிப்ட் சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டாள்.

“ஆக்சுவலி நான் உன்னைய அன்னையோட மறந்துட்டேன். ஆனா உன் பாச மலர்கள் தான் என்னை சீண்டி விட்டாணுங்க... அதுக்கு தக்க பதிலடி குடுக்கலன்னா நான் எல்லாம் என்னடி ஆம்பளை” என்று கேட்டுக் கொண்டே அவளை இன்னும் நெருங்க, அவள் அப்படியே மூன்றாய் மடிந்து தன் கால்களுக்குள் முகத்தை மறைத்துக் கொண்டு அவனிடம் இருந்து தப்பிக்கப் பார்த்தாள்.

ராசசிங்கன் அவளை அப்படியே விடுவானா என்ன..? அவளின் கூந்தலை அழுந்தப் பற்றி அவளை மேலே இழுக்க வலி தாங்க முடியவில்லை அவளால்.

“ப்ளீஸ் என்னை விட்டுடுங்க... நான் இனி இந்த ஊர்லையே இருக்க மாட்டேன்” என்று அவள் கதறி கையெடுத்து கும்பிட அதை எல்லாம் அலட்சியம் செய்தவன் அவளின் கூந்தலை பற்றி மேலே இழுத்தான்.

அதில் அவளும் மேல வரவேண்டியானது. முன்னழகை கை வைத்து மறைத்துக் கொண்டவள் விழிகளில் வழிந்த கண்ணீருடன் அவனை கெஞ்சலுடன் பார்த்தாள்.

அதை எல்லாம் சட்டை செய்யாதவன் அவளின் கைகளை வேகமாக பற்றி கீழே இறக்கி விட்டவன் அவளின் முன்னழகை வேட்கையுடன் பார்த்தான்.

“ப்ளீஸ்” என்று அவள் கூனி குறுகி அவனிடம் இருந்து தன்னை மறைத்துக் கொள்ளப் பார்க்க அந்த அரக்கன் அவளை விடவே இல்லை.

கண்களாலே அவளை வேட்டையாடியவன், “பார்க்க ஒர்த்து தான். ஆனா யூஸ் பண்ணா தானே பொருளோட மதிப்பை கணக்கிட முடியும்... சோ நீ என்ன பண்ற இன்னைக்கு மாலை நேரம் சரியா ஆறு மணிக்கு புல் மேக்கப்போட என்னோட கெஸ்ட் ஹவுஸ்க்கு வரணும். ஒரு நிமிடம் லேட்டா ஆனாலும் உன் பாச மலர்களோட உயிர் ஊசல் ஆடும். அது ஒருத்தரா இல்ல ரெண்டு பேரான்னு தெரியாது. என் மூட் நல்லா இருந்தா ரெண்டு பேரோட விட்டுடுவேன். ரொம்ப மோசமா இருந்துச்சுன்னா மொத்த பேரையும் காலி பண்ண கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன். சோ கேர் புல்” என்று சொன்னவன்,

நடுங்கிக்கொண்டு நின்று இருக்கும் பெண்ணவளை வக்கிரமாக பார்த்து அவளின் கழுத்துக்கு கீழ் மார்புக்கு மேல் என இருந்த வெற்றுப் பகுதியில் தன் கோவத்தை கொட்டினான்.

அதில் உயிர் வதை கண்டாள் பெண்ணவள்.

“அம்மா” என்று அலறி துடித்துப் போனாள். அந்த அளவுக்கு வலி உயிர் போனது ஏந்திழையாளுக்கு.

“ஏன் இப்படி மிருகம் மாதிரி நடந்துக்குறீங்க...?” என்று கண்ணீருடன் கேட்டாள்.

“என்னை மிருகம் ஆக்கியதே நீயும் உன் பாச மலர்களும் தானேடி... இப்போ அய்யோ அம்மான்னா உன்னை விட்டுடுவேன்னு நினைச்சியா... விடவே மாட்டேன்டி... என்னை அலைக்கழிக்க வச்ச உங்க யாரையும் சும்மா விட மாட்டேன்... இது இன்னைக்கு மாலையில நடக்கும் கச்சேரிக்கு முன்னோட்டம்... எல்லாத்துக்கும் ரெடியா வந்திடு...” என்று சொல்லி விட்டு அவள் முகத்திலே புடவையை விசிறி அடித்தவன் லிப்ட் கதவை திறந்துக் கொண்டு வெளியே போய் விட்டான். அவன் போன அடுத்த நொடி கதவை சாத்திக் கொண்டவள் அப்படியே கூனி குறுகி அமர்ந்து விட்டாள்.

ஓவென்று ஒரே அழுகை. பொன்னே பூவே என்று இருக்கும் அவளது வாழ்க்கையில் புயல் காற்று சுழற்றி அடிக்க ஆரம்பித்தது...

அதை தாங்கிக் கொள்ளாமல் தனக்குள் மறுகிப் போனவள் கதறி கதறி அழுதாள். ஆற்றுவார் தேற்றுவார் இன்றி நீண்ட நேரம் அழுதவள் வெளியில் தனக்காக வேதனையுடன் காத்துக் கொண்டு இருக்கும் உறவுகளை எண்ணி அழுந்த தன்னை சீர் செய்ய ஆரம்பித்தாள்.

கண்கள் சிவப்பை தவிர அவளிடம் வேறு எந்த மாற்றமும் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவள் கவனமாக தன் முக உணர்வுகளை காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பது போல வைத்துக் கொண்டு கீழ் தளத்தில் வந்து லிப்ட் நிர்ப்பது போல கதவை திறந்துக் கொண்டாள்.

அங்கே தவிப்புடன் அவளின் பாதி குடும்பம் இருக்கக்கண்டு இயல்பாக புன்னகைத்தாள். மீதி இருப்பவர்கள் எல்லோரும் இருக்கும் ஒவ்வொரு தளத்தின் லிப்ட் முன்னாடி நின்றுக் கொண்டு இருப்பார்கள் என்று உணர்ந்து கண்களை கரித்துக் கொண்டு வந்தது.

ஆனால் அவர்கள் ஏற்கனவே கலவரத்தை சுமந்துக் கொண்டு இருப்பார்கள் அதோடு தான் கண்கள் கலங்கினால் இன்னுமே நொந்துப் போவார்கள் என்று புரிந்து முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள் ஏந்திழையாள்.

“என்ன ஆச்சு தங்கம்...? யாரு அந்த ஆளு? அந்த ஆளு ஏன் உன்கிட்ட இப்படி எல்லாம் பிகேவ் பண்ணனும். உனக்கும் அவனுக்கும் என்ன சமந்தம்.. என்ன தான் நடக்குது. உன் அண்ணனுங்களும் மாமனுங்களும் தவியா தவிச்சு போயிட்டானுங்க?” என்று கேள்வி மேல் கேள்வி தாய்மார்கள் கேட்க அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

தவிப்புடன் அவர்களை பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே லிப்ட் ஓபன் ஆவதை கண்டு அணைத்து தளத்திலும் இருந்தவர்கள் கீழ் தளத்திற்கு ஓடி வந்தார்கள்.

அடித்து பிடித்துக் கொண்டு வந்ததை பார்த்து தாய்மார்கள் இன்னும் கலவரம் கொள்ள,

ஏந்திழையாளை அடி முதல் நுனி வரை அலசி ஆராய்ந்தவர்களுக்கு அவளிடம் சொல்லிக் கொள்ளும் படி பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதை கண்டு பெருமூச்சு விட்டார்கள் லவ் பிரதர்ஸ்.

ஆனாலும் கண்களாலே அவளிடம் எல்லாம் ஓகேயா என்று கேட்டு அறிந்துக் கொண்டார்கள். அவளும் கண்ணை சிமிட்டி ஓகே என்பதாக சொன்னாள். ஆனாலும் கார்த்திக்கும் யுகேஷுக்கும் மனதே இல்லை. அது அவர்களின் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : March 18, 2026 8:56 am
Sowmya reacted
(@sowmya)
Active Member

Deii...sunapana unnaku oru nal irukudaa....

Writer siz ivana nalla vachu senjutu than neenga ivangala sethuvaikanum....

goyala romba than overa poran...

Loading spinner

ReplyQuote
Posted : March 18, 2026 10:22 am
Admin
(@ramya-devi)
Member Admin

Posted by: @sowmya

Deii...sunapana unnaku oru nal irukudaa....

Writer siz ivana nalla vachu senjutu than neenga ivangala sethuvaikanum....

goyala romba than overa poran...

ஹஹஹா.. நல்லா வச்சு செய்வோம் மா

 

Loading spinner

ReplyQuote
Topic starter Posted : March 18, 2026 10:37 am
Sowmya reacted
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top