Notifications
Clear all

அத்தியாயம் 13

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 961
Topic starter  

அந்த அளவு அவன் அறிமுகம் செய்யும் வித்தைகளில் சாரம் இருந்தது. உடை கொஞ்சம் கூட களையவில்லை. வயிற்று பகுதில் இருந்த சேலை மட்டுமே ஒதுக்கினான். அதற்கே அவள் தளர்ந்து போனாள்.

தன்னோடு அவனை இறுக்கி அணைத்தவள்,

“போதும் மாமா முடியல..” என்றாள்.

“இதுக்கே இப்படின்னா அப்போ மத்ததுக்கெல்லாம் என்னடி சொல்லுவா..” என்று மையலாக சிரித்தான்.

“ம்கும் இதுக்கே முடியல என்னால... மத்ததுக்கெல்லாம் இன்னைக்கு லீவு...” என்று கண்களை மூடிக்கொண்டாள். அவனிடமிருந்து அவள் விலகவும் இல்லை. தன் மீது படர்ந்து இருப்பவனை எழும்பவும் சொல்லவில்லை.

அவளின் இந்த நிலை சம்மதமும் சொல்லவில்லை தான் ஆனால் ‘நான் உன்னிடம் தான். என்னவோ செய்துக்கொள் என்னை’ என்றபடி ஒரு எதிர்பார்ப்புடன் படுத்து இருந்தாள்.

அவளது அந்த தோற்றம் அவனுள் ஆழ பதிந்து போனது. உடன் ஒத்து போவது வேறு. ஆனால் இவள் உடனொத்து போய் அவனுள்ளே அடைக்கலாமாவது போல அவனின் ஆளுகையின் கீழ் இருந்தாள்.

‘என்னவோ பண்ணிக்கொள்... நீ என்னை எது செய்தாலும் எனக்கு சரி தான்...’ என்பது போலவே இருந்தது அவளின் முக பாவனைகள்.

இந்த ஒற்றுதலை தான் பாண்டியன் எதிர் பார்த்தான் அவளிடமிருந்து. அவள் அப்படியே அவனின் கைபிள்ளையாக இருக்க வேறு என்ன வேண்டும் அவனுக்கு. கொஞ்சி கொண்டாடி தீர்த்தான்.

நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் தான் அவனுக்கு பெரிதினும் பெரிது நிறைவாக திருப்தியாக ஆழ்மன ஒன்றுதல் வந்தது.

அதை அவளிடமும் சொல்ல, வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

“என்னடி மாயம் பண்ண... ஒரே ஒரு நாள் தான் உன்னை பார்த்தேன்... ஆனா என்னை மயக்கி உன் மாராப்புல என்னை முடிஞ்சி வச்சுக்கிட்ட..” அவளின் முகத்தோடு முகம் வைத்து பேசியவனின் காதில்,

“மாராப்பில் இல்ல என்னோட உயிருல முடிஞ்சி வச்சு இருக்கேன்...” என்றாள்.

அதை கேட்ட உடன் பசும்பூண் பாண்டியன் திகைத்து போனான். வேகமாய் அவளது கண்களை பார்த்தான்.

சொல்லில் சொன்ன செய்தி அவளது விழிகளிலும் தெரிய, பரவசமானான்.

“நிஜமா...?” என்ற சொல் கூட அவனது வாயிலிருந்து எழவில்லை. அந்த அளவு பிரம்மை பிடித்து இருந்தான் அவளது சொல்லில்.

அவன் எதிர் பார்க்கவே இல்லை. தன்னளவு அவளும் காதல் கொள்ளுவாள் என்று. ஆனால் அதை அவள் செயலில் உணர்த்தி, சொல்லாலும் விழியாலும் காட்டிய பின்பு அவனது மொத்த ஆர்ப்பாட்டமும் அடங்கி தான் போனது அந்த நொடியில்.

“பொழிலி...”

“எனக்கும் உங்களை பார்த்த அன்னைக்கே ரொம்ப பிடிச்சு போச்சு... ஆனா உங்க உயரம் கண்டு பயமாய் இருந்தது. ஆனா உங்க காதலுக்கு முன்னாடி அதெல்லாம் எதுவுமே  இல்லன்னு தோணுனது. அதான் தடைஇல்லாம உங்க கிட்ட வந்துட்டேன்...” என்று சொல்லி அவனது நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள்.

அவளை தன்னோடு சேர்த்து அனைத்துக்கொண்டவன் நெஞ்சம் பொழிலி பொழிலி என்று கூவிக்கொண்டு இருந்தது.

அகமலர்ந்து ஒரு காதல் இருவரின் இடையில் அழகாய் பாதை போட, அதன் பின்பு சொல்லவும் வேண்டுமோ காதலர்களின் நிலையை.

மூடிய விழிகளில் அசைந்த கண்மணியின் ஓட்டத்தை கண்டவனுக்கு காதலின் உச்ச நிலையில் மோகம் பிறக்க,

அவளை கீழ் கிடத்தி, வயிற்றில் முகம் புதைத்தான். பின்னர் கீழிருந்து மேலாக நகர, அவனது அசைவில் முகத்தை திருப்பிக்கொண்டு தலையணையில் முகத்தை பதித்துக்கொண்டாள் நாணத்துடன்.

அவளின் ஒவ்வொரு செயலும் அவனை கிளர்ந்து எழ செய்துக்கொண்டே இருந்தது. கழுத்தோரம் முகம் புதைத்து மீசையில் அவளது சதைகளை கிழிக்க பார்த்தான்.

பத்தாதற்கு அவளின் பாதத்தின் மேல் புறம் கட்டைவிரலில் இருந்து ஆரம்பித்து தன் முரட்டு தனமான கட்டைவிரலால் கோடு இழுத்து அவளின் உணர்வுகளை தூண்டிவிட,

அதில் பொழிலியின் உணர்வுகள் பொங்கி பெருக, அந்த உணர்வுகளை அடக்க கால் மேல் கால் வைத்து பின்னிக்கொள்ள பார்த்தாள். ஆனால் இவன் அவள் மேல் இருக்கவும் அவளால் அது செய்ய முடியாமல் போனது.

இவ்வளவு நெருக்கம் காட்டுபவனின் அன்பில் கரைந்து போனவள், அவனை தள்ளிவிட்டுவிட்டு வேகமாய் குறுங்கண்ணோரம் சென்று நின்றாள் மூச்சு வாங்கி.

இடைவெளியின்றி அவளின் பின்னோரம் வந்து வெற்று தோளில் முகம் புதைத்து மூச்சுக்காற்று முட்ட முட்ட முத்தம் கொடுத்தவன்,

அவளின் ரவிக்கையில் இருந்த கையிற்றை அவிழ்த்து அவளை இம்சை செய்தான். அதில் அவளது நெஞ்சு இன்னும் படபடப்பாக சட்டென்று திரும்பி நின்றாள்.

மோகம் வழியும் அவனது விழிகளில் படர்ந்து இருந்த செம்மையை கண்டவளுக்கு அடிவயிற்றில் இம்சையாய் ஒரு கலவரம் எழுந்தது.

ஏனோ அவன் இன்னைக்கும் தன்னை விட மாட்டான் என்கிற எண்ணமே அவளை இன்னும் தூண்டிவிட்டது. பாண்டியன் அவள் மீது முழுமையாக படர, பொழிலி சுவரில் சாய்ந்து நின்றாள்.

“பொழில்...”

“ம்ம்ம்...”

“ப்ச் மாமா சொல்லுடி...” என்றவன் நறுக்கென்று அவளின் கழுத்தோரம் கடித்து வைத்தான். அதன் பிறகு அங்கு வெறும் வளையல் ஒலியும் கொலு சொலியும் மட்டுமே கேட்டது. அவைகளுக்கு பின்பாட்டாய் ‘மாமா’ என்கிற சன்னமாய் முனகல் ஒலியும் கேட்டுக்கொண்டே இருந்தது விடிய விடிய.

அடுத்த நாள் அழகாய் புலர, பசும்பூண் பாண்டியன் நீர் சொட்ட சொட்ட குளித்துவிட்டு வெளியே வந்தான். பொழிலி மாதுமையாள் சின்ன பாண்டியனுக்கு தலை துவட்டி விட்டு, ஆடை அணிவித்துக்கொண்டு இருந்தாள்.

அவளின் பின்னோரம் சென்று தலையில் இருந்து சொட்டிய நீரோடு கட்டிக்கொண்டவன், அவளின் வாசனையை தன்னுள் நுகர்ந்தான்.

அதில் சிலிர்த்து அடங்கிய தேகத்தை கட்டுப்படுத்திக்கொண்டு,

“பையன் இருக்கான். அவனுக்கு முன்னாடி என்ன இது... தலையை துவட்டுங்க... எப்படி ஈரம் சொட்டுது பாருங்க...” என்று தன் இன்னொரு பக்கம் தோளில் இருந்த துண்டை எடுத்து அவனது தோளில் போட,

“நீ எதுக்குடி இருக்க... நீ துவட்டி விடு...” என்று சட்டமாய் படுக்கையில் அமர்ந்துக்கொண்டான்.

“டேய் கண்ணா உன் அம்மா ரொம்ப பண்றாடா அப்பாவுக்கும் துவட்டி விட சொல்லுடா...” என்று தன் மகனை இருவருக்கும் நடுவில் இழுக்க,

“ஏற்கனவே நேரமாச்சுன்னு பாட்டி கீழ கத்திக்கிட்டு இருக்காங்க... நீங்க இப்போ தான் சின்ன பிள்ளையாட்டம் அடம் பண்றீங்க...” என்றவள், சின்ன பாண்டியனை கீழே விட்டுவிட்டு வந்தவள் பெரிய பாண்டியனுக்கு தலையை துவட்டி விட தொடங்கினாள்.

அவள் துவட்டி விடும் சுகத்தில் அப்படியே பின்னால் சரிந்தவன் தன்னோடு அவளையும் இழுத்துக்கொண்டான்.

அவன் மீது விழுந்தவளின் தேகம் சரியாக அவனது முகத்தில் இருக்க, வெட்கம் பிடுங்கி தின்றது அவளுக்கு.

“ஐயோ விடுங்க மாமா...” என்று அவனது பிடியிலிருந்து விலக பார்த்தாள். ஆனால் உடும்பு பிடி பிடித்து இருந்தவன் தலைக்கு மேல் அவளை இன்னும் உயர்த்தி, சேலை மறைத்து இருந்த அவளது இடையை விலக்கி, தன் முகத்தை அங்கு பதித்தவன், மீசை முடியால் கோலம் போட்டான்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top