அனுவின் இந்த ஆதாரத்தை நேரில் கண்ட சண்முகமும் வள்ளியும் ஆடி தான் போனார்கள்.
“அனு அவ உன் தங்கச்சி அவ கல்யாணத்தை நிறுத்த பார்க்குறியே”
“யாருக்கு யார் தங்கச்சி. அவ என்ன என் அம்மா வயித்துல வந்து பிறந்தாளா..” என்று கேட்ட அனு வள்ளிக்கு புதுசாய் தெரிந்தாள்.
“அப்போ இவ்வளவு நாள் நீ அவளை பாசமா பார்த்துகிட்டதுக்கு பேரு என்ன” வள்ளி கேட்க
“யாரு உன் மகளை பாசமா பார்த்துகிட்டா, அவ கிட்ட கேளு நான் அவளை எப்படி நடத்துநேன்னு... அதெல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது. உனக்கு தான் உன் புருசனோட ஊர் சுத்த தான் தெரியும். இப்படி பொறுப்பு இல்லாம நீயெல்லாம் எதுக்கு புள்ளைய பெத்துகிட்ட”
“அனு..” சண்முகம் தன் ஆருயிர் மனைவியை அசிங்க படுத்தவும் துள்ளி குதித்து வர
“வாயா எங்க நீ வாரலயோன்னு நான் நினைச்சேன்.. சரியா வந்துட்ட” என்றவளின் மரியாதை இல்லாத பேச்சு சண்முகத்திற்கு என்னவோ போல் இருந்தது.
“அனு மரியாதையா பேசு” வள்ளி முன் வந்து பேச
“உங்களுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டி கிடக்கு. பெத்த புள்ளைய கூட பக்கத்துல இருந்து பார்த்துக்க துப்பு இல்லாம உங்க சுகம் தான் முக்கியம்னு இருந்துட்டு இப்போ வந்து எகுற கூடாது. நான் தான் தாயில்லாத பிள்ளை.
கூடவே முதல் தாரத்து மகள். அப்படின்னு ஒரு வெறுப்போ இல்ல அக்கரி இல்லாம இருக்கலாம். ஆனா ஆரா நீ பெத்த பிள்ளை தானே அவ என்ன பண்றா...
எவ்வளவு கஷ்ட படுறா என்று ஒரு நாலாவது அவகிட்ட உட்கார்ந்து பேசி இருக்குற. நீயெல்லாம் தாய் ஸ்தானத்துக்கு லாயக்கே கிடையாது.
அதுக்கு என் அம்மா போல நீ அவளை பெத்து போட்டுட்டு செத்தே போய் இருக்கலாம்.” ஏற்னவளின் பேச்சில் வள்ளியின் உடம்பு கூசி ஒடுங்கியது.
அனு சொல்வது எல்லாமே ரொம்ப சரி தானே.. ஒரு நாலாவது ஆராவிடம் ப்மன்சு விட்டு பேசி இருக்கோமா... இல்லையே.. எப்போதும் அவருடன் ஊர் சுற்றுவது, நிகழ்ச்சி பிசினெஸ் என்று எப்போதுமே புருசனோடு சுத்தி கிட்டு இருந்ததை நினைத்தது பார்த்தவளுக்கு தான் ஒரு நல்ல தாயே கிடையாது என்று தோன்றியது. அவ்வெண்ணம் வந்த உடன் நிமிர்ந்து ஆராவை பார்த்தார்.
ஆரா எந்த உணர்வையும் காட்டாமல் கண்வெட்டாமல் அனுவையே பார்த்து இருந்தாள்.
அனு கேட்பது எல்லாமே சரி தான். ஆனால் இப்படி சபை நிறைந்து இருக்கும் இடத்தில் பெத்தவர்களை அசிங்க படுத்துவது தவறு என்று எண்ணியவள் அணுவை அடக்க விளைந்தாள்.
“அனு”
“ஆரா எனக்கு உன் கல்யாணம் நிக்கணும். நீ சூடன் மாமாவை கல்யாணம் செய்துகொள்ள கூடாது.” என்றாள் நேரடியாக
அதை கேட்ட பிறைசூடனுக்கு கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது.
“அதை சொல்ல நீ யாரு” என்று அவன் எகிற
“நான் உங்க கிட்ட பேசல ஆரா கிட்ட பேசிகிட்டு இருக்கேன்”
“அவ என்னோட சம்மந்த பட்டு இருக்கா. அதனால நான் தான் பேசுவேன்”
என்றவனை கூர்மையாக பார்த்தவள் அவனருகில் இருந்த ஆராவிடம் தன் பார்வையை திருப்பினாள்.
“ஆரா...” என்று தொடங்கும் முன்பே
சண்முகமும் வள்ளியும் ஓரளவு தெளிந்தார்கள். தெளிந்தவர்கள் அனுவின் சுயநலம் மிகுந்த குணத்தை கண்டு வெறுத்து போனார்கள்.
“அனு நீ என்ன பண்ணாலும் ஆராவின் கல்யாணம் நடக்க தான் போகுது. ஆரா நீ மணவறையில் உட்காரு” என்று இருவரும் கூற ஆரா விரக்தியாக அவர்கள் இருவரையும் பார்த்தாள்.
காலம் கடந்த அன்பு என்று சித்ரா பார்த்தார். அனுவின் பார்வை ஆராவிடம் மட்டுமே இருந்தது. அனுவின் உள்ளம் இப்போது எப்படி இருக்கும் என்று கணித்த ஆராவுக்கு அனுவின் மீது இறக்கம் வந்தது.
அனுவின் செயல்களில் எப்போதும் அடங்கி தான் போவாள் ஆரா... அது அவளுக்கு பயந்துகிட்டு இல்லை. அந்த செயல்களிலாவது அவளது வன்மம் தீருமா என்று தான்.
அவள் அன்னை இருக்க வேண்டிய இடத்தில் தன் அன்னை இருப்பதும், அவர்களின் உல்லாசமான வாழ்க்கை அவளை உள்ளே எரிய செய்ய அதை உணர்ந்து கொண்டவள் அமைதியாகி போனாள் சிறுவயதிலிருந்தே.
அவளை அடக்க ஒரு நிமிடம் ஆகாது தான். ஆனால் அனுவின் செயல்களை அடக்கினால் அவள் விரைவாக மன நோய்க்கு ஆளாகி விடுவாள் என்று ஆரா தோழியின் அம்மா சொல்ல ஒரு மனநல மருத்துவர் சொல்லுகையில் அனுவை கவனத்துடன் பார்த்துக்கொண்டாள் ஆரா. அனுவிற்கு தெரியாமலே அவளை அன்புடன் பார்த்துக்கொண்டாள்.
தான் அவள் மீது மிகுந்த அக்கறையும் அன்பும் வைத்திருக்கிறேன் கான்பித்துக்கொண்டது இல்லை. அதை அனுவும் அனுமதிக்க மாட்டாள். அனு ஒரு காட்டாறு. அதை அவளின் போக்கில் சென்று கையக படுத்தவது தான் ஆரா.
அனு செய்யும் எந்த ஒரு அநீதியையும் பெற்றவகளின் கவனத்துக்கு அவள் கொண்டு சென்றதே இல்லை. பிரைசூடனுக்கு மட்டும் கொஞ்சம் தெரியும். ஆனால் அவனுக்கு கூட முழுவதும் தெரியாது. தெரியவிட்டது இல்லை ஆரா...
எல்லாரும் இருந்தும் யாரும் அற்ற தனிமையில் வாடிக்கொண்டிருன்தவள் அனுவின் செயல்களின் மூலம் அவளுக்கு தாயாகி போனாள் ஆரா.
அவளை குழந்தையாகவே பார்த்தாள். அது இப்போதும் தொடர்கிறது. ஆனால் அதை ஆரா வெளிப்ப்டுத்திக்கொண்டதே இல்லை. ஆராவின் லேசான இறக்கம் கருணை கூட அனுவை நிறைய கோவம் கொள்ள வைத்து விடும்.
அந்த அளவு அவளின் உள்ளம் நைந்து போய் கிடக்கிறது. அதை அறிந்தவளுக்கு உள்ளம் பெரும் பாரத்தை சுமப்பது போல ஆனது.
கண்ணாடி பாத்திரம் போல அவளை கையாண்டாள்.
அனுவுக்கு ஆரா எப்போதும் அவளுடன் வேண்டும். சீண்டி அழவைத்து கோவப்பட வைத்து கை பொம்மை போல அவளுக்கு அவள் கூடவே இருக்க வேண்டும்.
அனு மனதளவில் மிக பெரும் தனிமையில் இருக்கிறாள். முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் அதுவும் தாய் இல்லை என்று ஆனா பின் அவர்களுக்குள்ளே ஒரு தனிமை வந்து விடும்.
கூடவே ஒரு பாதுகாப்பு இன்மையை அவர்கள் உணர்வார்கள். அந்த சமயம் உடன் இருப்பவர்கள் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். அப்படி அவர்களது ஆறுதலை பெற்ற குழந்தைகள் ஓரளவு தனிமையில் இருந்து வெளியே வந்து விடும்.
ஆனால் இங்கே ஆறுதல் கூற வேண்டிய இரு பெரியவர்களும் தங்களது சந்தோசத்தை மட்டுமே பார்த்து ஒரு சிறிய மொட்டை சிதைத்து சின்ன பின்னமாக்கி இருந்தார்கள்.
ஆரா அனுவின் உள்ளாத்தை படிக்க சற்று காலம் தாமதாமாகி போய்விட்டது. அவளும் என்ன செய்வாள் அனுவை விட சின்னவள் அவள். அவளது கருத்துக்கு எட்டியவரை அனுவை பார்த்துக்கொண்டாள்.
அப்போதும் முழுமையாக அவளால் கவனித்துக்கொள்ள முடியவில்லை. எல்லாவற்றிலும் விட்டு கொடுத்தவள் பிறைசூடன் என்று வரும் போது அவள் விட்டு கொடுக்காமல் இருந்த நிலை அனுவை லேசாக சைக்கோ அளவுக்கு மாற்றி இருந்தது.
அதை இப்போ இங்க நடந்து கொண்டிருக்கிற நிகழ்வும் நிச்சய்த்தின் போது நடந்த நிகழ்வும் தான் என்று ஆராவுக்கு புரிய வைத்தது. அதை உணர்ந்த அடுத்த நொடி ஆரா சில முடிவை எடுத்து விட்டாள்.
அனு ஆராவை தீர்க்கமாக பார்த்தாள். பெற்றவர்கள் அவளை துவேசித்து ஆராவை உட்காரா சொன்னார்கள். பிறைசூடனுக்கு ஆராவின் இந்த நிலை எதையோ உணர்த்தியது. அவளை பார்த்தான்.
அவனது பார்வையை எதி நோக்கியவள் தன் கண்களில் இருந்த யாசிப்பை அவனுக்கு புரியும் படி காட்ட பிறைசூடன் நொறுங்கி போனான்.
பிரகாஷ் என்ன செய்வது என்று தெரியாமல் மணவறையில் அப்படியே அமர்ந்து இருந்தான்.
சித்ராவுக்கு ஆரா என்ன முடிவெடுப்பாள் என்பது புரிய அழுகை வந்தது அவருக்கு. இரு உள்ளங்களின் ஆசையும் அவருக்கு தெரியுமே. அதை நிறைவேற்றாமல் இப்படி கையை கட்டிக்கொண்டு நிற்கும் தன் நிலையை வெறுத்தார். கணேசனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
அனுவின் மீது வெறுப்பு வந்தது தான். ஆனாலும் இவ்வளவு நடந்தும் பிரகாஷ் எழுந்து கொள்ளாமல் மணவறையிலே அமர்ந்து இருந்தது அவருக்கு எதையோ உணர்த்தியது.
ஆராவின் மீது பரிதாபம் எழுந்தது. ஆனால் பிறைசூடன் ஆராவை அப்படியே விட்டுவிட மாட்டான் என்று அவருக்கு தெரியும். அதனால் நடப்பதை வேடிக்கை பார்த்தார்.
அனு மீண்டும் ஆராவை பார்க்க ஆரா பிறைசூடனை விட்டு நகர்ந்து அனுவின் பக்கம் வந்து நின்றாள்.
ஆராவின் செயலில் அனுவின் முகம் புன்னகை பூக்க சூடானின் முகம் கருத்து போனது.
அனு கத்தியை கீழே போட்டு விட்டு பிரகாஷின் அருகில் அமர்ந்து தாலியை வாங்கிகொண்டாள். வள்ளிக்கும் சண்முகத்திற்க்கும் வேதனையாய் இருந்தது.
அன்பும் அரவணைப்பும்
காலம் கடந்த புரிதல் வீண்தான்
ஆரா கல்யாணத்தை நிறுத்தி
அனு தன் கல்யாணத்தை நடத்திக் கொள்ள அனைவருக்கும் அதிருப்தி தான்
ஆனால் தடுக்க முடியவில்லை
ஆராவின் பார்வையில்
அமைதியாகினான் பிறை சூடன்.....
ரொம்ப சந்தோசம்...இப்படியே பாரு அவளுக்காகவே 😏😏😏