Notifications
Clear all

அத்தியாயம் 7

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என் மூத்த பொண்ணு இருக்கும் போது இளையவளை கல்யாணம் செய்து கொடுக்க முடியாது” என்று வள்ளி பேச

“இங்க யாருடைய அனுமதியையும் நான் கேக்கவில்லை அத்தை” என்றான் திமிராக

“எங்க அனுமதி இல்லாம ஆரா உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டாள் சூடன்” என்று சொல்ல

“அது என்னவோ உண்மை தான். ஆனா எனக்கு அவ அனுமதி கூட தேவை இல்லை. அவளை கடத்திக்கொண்டோ இல்லை தோளில் தூக்கி போட்டுக்கொண்டோ போய் அவள் கழுத்தில் தாலியை கட்டுவேன்” என்றான் எதற்கும் சலிக்காமல்.

அவனது அந்த தெனவட்டில் உள்ளம் குளிர்ந்து போனது இருவர் மட்டுமே.. அது ஆரா மற்றும் சித்ரா...

ஆரா நிமிர்ந்து பார்க்க வில்லை என்றாலும் அவளுடைய கவனம் முழுவதும் தன் மனம் கவர்ந்தவனிடம் மட்டுமே இருந்தது.

அதை உணர்ந்து கொண்டவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் உள்ளம் நெகிழ்ந்தாலும் கோவம் மட்டும் குறையவில்லை.

‘நீ எப்படி சந்தோச பட்டாலும் எனக்கு உன் மேல இருக்குற கோவம் குறையாதுடி’ என்று வெஞ்சினத்தில் இருந்தான்.

அவனது பதிலை கேட்டு எல்லோரும் அவனை கோவமாக பார்க்க வள்ளியோ

“என்ன சூடன் இப்படி பேசுற”

“வேற எப்படி பேச சொல்றீங்க அத்தை.. இப்ப இந்த நிமிஷம் நான் முடிவெடுக்கல.. ஆரா பொறந்த போதே என் அம்மா இவ தான் உன் பொண்டாட்டின்னு சொல்லிக்குடுத்து வளர்த்தாங்க.. அவளும் அப்படி தான். இதெல்லாம் தெருஞ்சு இருந்தும் உங்க சவுகாரியத்துக்கு ஏத்தா போல மறந்து போனா நான் ஒன்னும் செய்ய முடியாது. எனக்கு என் ஆரா வேணும் அவ்வளவு தான்” முடிக்க அவன் சொல்வது ஒரு வகையில் நியாயமாய் பட்டது.

ஏனெனில் சூடன் அதிகமாய் இருப்பது ஆராவுடன் தான். அப்போ தவறு நம்ம பக்கம் தான் இருக்கு என்று அவர்கள் ஓரளவு இறங்கி வர அனுவின் நிலை இன்னும் கொதிப்புடனே இருந்தது.

“சரி இப்போ அனுவோட வாழ்க்கை அவ வேற மன பொண்ணா வந்து சபையில நிக்குறாலே அவளுக்கு என்ன பதில் சொல்றது” என்று கணபதி கேட்க

பிறைசூடன் அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான். பின் அங்கே கொஞ்சமும் சலனமில்லாமல் நின்றுக்கொண்டு இருந்த பிரகாசை பார்த்தான்.

அவனின் கண்ணோட்டத்தை கவனித்த பெரியவர்களில் கணபதி முந்திக்கொண்டு “என் சின்ன பையனுக்கு உன் பெரிய பொன்னை கொடு வள்ளி” என்று கேட்க

இப்பவும் யாரிடமும் அனுமதி வாங்காமல் பெற்றவர்கள் தங்களது ஆசைக்காக சம்மந்தம் பேசி முடிக்க அனுவினால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை. பிரகாஷ் ஏதாவது செய்வான் என்று காத்திருக்க அவனோ செல்போனில் எதையோ பார்த்துக்கொண்டு இருந்தான்.

சித்ரா தான் தன் சின்ன மகனை உலுக்கி விஷயத்தை சொல்ல தோளை குலுக்கிக்கொண்டு மீண்டும் போனில் மூழ்கினான்.

அவனது அந்த பாவம் அனைவருக்குமே ஒரு வித சங்கடத்தை கொடுத்தது. இது தான் என் வாழ்வா என்று மடிந்து போனது அனுவின் மனது.

அனுவும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவர்களுக்கு உடன் பட இரு ஜோடி திருமணமும் நிச்சயிக்க பட்டது.

மோதிரம் மாற்றும் சடங்கு வர இரு மோதிரம் மட்டுமே வாங்கி இருக்க இன்னொரு ஜோடிக்கு என்ன பண்ணுவது என்று விழிக்க

“என் பொண்டாட்டிக்கு நான் வாங்கிட்டேன். சோ யாரும் ஓரி பண்ண தேவை இல்லை” என்று கூறி ஆராவின் பக்கம் வந்து அவளை எழுப்பி அவளின் கை பிடித்து மோதிரம் மாற்றினான்.

அதில் உள்ளம் நெகிழ்ந்தாலும் பிறைசூடனின் கை இறுக்கத்தில் உள்ளத்தில் குளிர் சுரம் பிறந்தது. மெல்ல அவனை ஏறெடுத்து பார்த்தாள்.

“என்னடி பார்க்குற நீ மௌனமா இருந்ததுக்கு என்கிட்டே ரொம்ப பெரிய தண்டை இருக்கு” என்று அவன் பிடித்த பிடியை இன்னும் இறுக்கி பிடிக்க கை வலித்த போதும் நடக்க முடியாத ஒன்றை நடத்திக்காட்டியவனின் தீரத்தில் மனம் மகிழ்ந்து கொண்டது. அதை அவன் அறியாமல் மறைத்துக்கொண்டாள்.

அவளிடம் ஒரு மோதிரத்தை கொடுத்து அவனுக்கு அணிவித்து விட சொன்னான். அவளும் சிறிய நடுக்கத்துடன் அவனுக்கு அணிவித்து விட்டாள்.

பின் அழகான அட்டிகை ஒன்றை அவளின் கழுத்தில் அணிவித்தான். அணிவிக்கும் போது தன் விரல்களால் மெல்ல கழுத்தை வருடி விட்டு இன்னும் கொஞ்சம் நெருக்கமாய் நின்று கொக்கி மாட்ட சிரமமாய் இருப்பது போல பாவனை காட்டியவன் தன் உதட்டால் அவளது கன்னத்தை அத்தனை பேரின் மத்தியிலும் யாரின் கண்களுக்கும் புல படாமல் தீண்டினான்.

அவனது அந்த செயலில் உடல் தூக்கி வாரி போட்டது ஆராவுக்கு.

இத்தனை நாள் விரல் கூட தீண்டாதா தன் மனம் கவர்ந்தவன் இன்று அதுவும் அத்தனை பேரின் மத்தியிலும் நடந்து கொண்ட செயல் அவளை உலுக்கி எடுத்தது.

“எல்லாமே நான் கேட்டு தான் செய்வியா... ஆனா நான் கேக்காமலே நீ ஒன்னை செய்யணும் என்று சொல்ல அதில் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னன்னு யோசிக்கிறியா...” என்று அவன் கேட்க அவளின் தலை மெல்லமாய் அசைந்தது.

“அது இப்போ இல்ல” என்று சொல்ல மெலிதாய் இழுத்து பிடித்த மூச்சை வெளியிட்டாள்.

“ரொம்ப அவசர படதா... நான் கேப்பது வில்லங்கமா இருக்கும்” என்று சொல்ல

“அது தான் எனக்கு தெரியுமே.. நீ அப்படி கேக்கலைனா தான் நான் ஆச்சர்ய படனும்” என்று எண்ணியவள்

“என்ன” என்றாள் உள்ளே எழுந்த நடுக்கத்தை கட்டுபடுத்திக்கொண்டு

“ம்ம் உன் உதட்டால என் உதட்டுல ஒரு முத்தம் குடுக்கணும்” என்றான்.

அதில் அவளின் மூச்சு தடை பட

“அது மட்டும் இல்லாம உன்னை மொத்தமா இப்பவே எனக்குள்ள நான் வாங்கணும்” என்று மேலும் அவளை சோதிக்க மெல்ல அவனை கெஞ்சலாக பார்த்தாள்.

பிறைசூடன் இன்று முட்டும் முழுவதுமாய் மாறி இருந்தான். இத்தனை நாள் பேச்சில் கூட கண்ணியம் காத்தவான் இல்லை என்று உள்ளம் கொக்கரித்தது. அதில் லேசாய் இல்லை அதிகமாவே  பயம் வந்து ஒட்டிக்கொண்டது அவளுக்கு.

“இப்படி பார்த்தா நான் விட்டுடுவேனா... மரியாதையா இன்னைக்கு மாலை ரெடியா இரு.. உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்” என்றான்.

“நான் அத்தைகிட்ட சொல்லுவேன்” என்றாள் கொஞ்சமாய் வந்த தைரியத்தில்.

“சொல்லு எனக்கொண்ணும் பிரச்சனையை இல்லை. ஆனா...”

“ஆனா என்ன”

“ம்ம்ம்” என்றவன் அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து “இப்போ எல்லாருக்கும் மத்தியில ஒரு லிப் கிஸ் குடுத்தா என்னடி பண்ணுவ குடுக்கவா” என்று அவளை மிரட்டினான்.

“ஐயோ வேணாம் நான் அத்தை கிட்ட சொல்லல”

“அது அந்த பயம் இருக்கணும்” என்றவன் கொக்கி போட்டு முடித்து விட்டு அவளிடமிருந்து லேசாய் விலகி நின்றான். ஆனால் கைகளை கோர்த்துக்கொண்டான்.

அவனது அந்த செயலை வன்மத்துடன் பார்த்த அனுவுக்குள் பழிவாங்கும் படலத்தை அப்போதே தீட்டிக்கொண்டாள்.

அவள் என்னதான் தலை கீழாக நின்றாலும் பிரைசூடநிண்டம் அது எடுபடாது என்று தெரியவில்லை.

தன் கையை பிடித்து மண் பொம்மை போல மோதிரம் போட்டவனை கண்டு உள்ளம் குமுறியது அவளுக்கு.

ஆனாலும் அடக்கிக்கொண்டாள். “நீ ஆடும் வரை ஆடு சூடா உன் மகிழ்ச்சி அழியறதுக்கு நான் பொறுப்பு” கறுவினாள்.

ஒருவழியாய் நிச்சயத்தை முடித்தவர்கள் உணவு உன்ன அமர பிறைசூடன் ஆராவின் கைகளை பிடித்துக்கொண்டு கார் சாவியை விரலில் சுழற்றியபடி

“நாங்க வெளிய போறோம்” என்று யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் அவளை இழுத்துக்கொண்டு வெளியே சென்றான். சித்ராவிடம் மட்டும் ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு காரில் ஆராதனாவை தள்ளிவிட்டு அவனும் ஏறிஅமர்ந்து கிளம்பினான்.

Loading spinner
Quote
Topic starter Posted : March 22, 2025 9:47 am
(@mrsbeena-loganathan)
Trusted Member

திட்டம் போட்டு பறிக்க நினைத்தால்

தள்ளி நின்று

தெரியாதது போல

திட்டத்தை உடைத்து

தன் காதலை நிறைவேற்றிக்

கொண்டான்....

பிளான் போட்ட அனுக்கு பல்ப்....

பிரகாஷ் கூட பொம்மை போல இருக்க

பாவம் அனு

பழிவாங்க நினைத்தால்

பாவமாக ஒருத்தன் வந்து சேர்ந்து இருக்கான்....

பார்ப்போம்  என்ன செய்யப் போகிறான்

பிரகாஷ்....

Loading spinner
ReplyQuote
Posted : March 25, 2025 12:26 pm
(@gowri)
Estimable Member

சூடன் சூப்பர்🥰🥰🥰🥰

இப்படியே ஊமை கொட்டானவே இரு ஆரா நினு 🤦🤦🤦🤦🤦

Loading spinner
ReplyQuote
Posted : March 28, 2025 4:16 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top