Notifications
Clear all

அத்தியாயம் 20

 
Admin
(@ramya-devi)
Member Admin

“கொஞ்சம் மில்க் சேக் போடவாடா?”

“யா சுயர்... உன் டேடிக்கு பிடிச்ச ப்ளேவரும் சேர்த்து போடுடி”

“ம்ம்” என்றவள் அதற்குரிய எல்லா வேலைகளையும் பார்க்க, திருட்டு தனமாய் அவளை சைட் அட்டிதுக் கொண்டு இருந்தான் தென்னவன்.

இடுப்பு சேலையில என்னத்தடி ஒளிச்சு வச்சு இருக்க. என்னை காந்தமா இழுக்குது.. வாய்க்குள்ளே முணகிக் கொண்டான். கண்கள் அடிக்கடி அவளின் இடுப்பை தொட்டு தொட்டு பார்த்து பெருமூச்சு விட்டான்.

“கொல்றா அரக்கி” முணகினான்.

“என்னடா பண்ற.. எப்பவும் பேசிட்டே இருப்ப. இன்னைக்கு என்ன ஆச்சு எதுவும் பேசல” என்று அவனுக்கு முதுகு காட்டியபடி வேலைகளை செய்தாள்.

“ஒன்னும் இல்லடி..” என்றவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. எங்கே தன்னையும் அறியாமல் அவளின் இடுப்பில் கையை வைத்து விட்டுவமோ என்று பயந்துப் போய் நின்றிருந்தான்.

அவனிடம் பேசிக்கொண்டே வேலை செய்தவள், அவன் புறம் திரும்பி

“நான் கொஞ்சம் குடிப்பேன்” என்றாள் திடுதிப்பென்று.

“ஆமா யாருக்கும் தெரியாத மிகப்பெரிய இரகசியம் பாரு” என்றவன் அவளின் இடுப்பில் இருந்து தன் கவனத்தை அவளின் பேச்சில் வைத்தான்.

“இல்ல நான் கொஞ்சம் கெட்ட பொண்ணு” என்றாள் இழுவையாக.

“இப்ப நான் என்ன உனக்கு மாப்பிள்ளையா பார்த்க்கிட்டு இருக்கேன். உன்னை பத்தி உன் கேரக்ட்டரை பத்தி புட்டு புட்டு வச்சுட்டு இருக்க?”

“இப்ப இல்லன்னாலும் சப்போஸ் எதிர் காலத்துல தேவை பட்டா என்ன செய்யிறது அது தான் முன்னாடியே சொல்லி வைத்தேன்” என்றாள்.

“அதுக்கென்ன அதை அப்புறம் பார்த்துக்கலாம்” என்றவன், பின்சுதாரித்து,

“வாட்?” என்று அதிர்ந்தான். அவனது அதிர்ச்சியை பார்த்தவள்,

“சும்மா ஜோக்கு ஜோக்கு.. நீ என் அக்கா ஞாபகத்துலையே இரு. யாரு உன்னை டிஸ்ட்டப் பண்ணா?” கேட்டவள்,

“நான் உன் ஞாபகத்துலையே இருக்கேன்” என்று முணகிக்கொண்டாள்.

அவளது முணுமுணுப்பை காதில் கேளாதவன்,

“என்னடி சொன்ன?” புருவம் சுருக்கி பார்த்தான்.

“ஒண்ணும் சொல்லல தம்பி. நீ உன் வேலையை பாரு” என்ற நேரம் கிருஷ்ணன் வந்து விட அதன் பிறகு பேச்சின் போக்கு மாறிப் போனது.

“நானும் உதவி செய்யாவாடா?” மகளிடம் கேட்டவர், மருமகனோடு சேர்ந்து அவனுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்.

மூவருக்குமே அலுவலகம், வேலை, பைல், கம்ப்யூட்டர், மீட்டிங் என இருப்பதில் அதில் இருந்து இந்த சமையல் வேலை ரிலீப்பாக இருந்தது.

வெறும் சமையல் வேலையோடு மட்டும் இல்லாமல் மாலை நேரம் டென்னிஸ், பேட்மிட்டேன் என விளையாட்டில் மூழ்கினார்கள் மூவரும். இளையவர்களோடு சேரும் பொழுது கிருஷ்ணனும் தன்னை இளமையாக உணர்ந்தார்.

“பசங்களா.. உங்களோட சேர்ந்து நானும் யங்கா பீல் பண்றேன்.. கீப் இட் பாய்ஸ்” என்று இருவரையும் சொன்னவர், தன் மகளிடம் தனியாக வந்து,

“தென்னவன் மேல இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சா டா?” என்று கேட்டார்.

“அது ஆரம்பத்துல இருந்த கோவம் ப்பா. அக்காவை காட்டிலும் அப்படி என்ன பிசினெஸ்னு தோனுச்சு. அதனால தான் கோவப்பட்டேன். ஆனா அவர் இவ்வளவு பரிதவிக்கிறத பார்க்கையில அவர் மேல தப்பு இல்லன்னு புரிஞ்சது. அதுவும் மகனுக்காக அவர் ஏங்கி நிக்கிறாத பார்க்கும் பொழுது என் மனசு மாறாம இருந்தா தான் ஆச்சரியம்” என்றாள்.

கிருஷ்ணன் மகளின் தோளை தட்டிக் கொடுத்தவர்,

“அவன் ரொம்ப பாவம் ம்மா” என்றார்.

“ஐ நோ டேட்” என்றாள்.

“அவனை பத்திரமா பார்த்துக்குறது நம்ம பொறுப்புடா” என்றார்.

“ஆமாம் ப்பா”

“விசயம் கேள்வி பட்டியா?” என்றார்.

“தெரியும் டேட்.. குப்பை குப்பையோட தானே சேரும். தென்னவனுக்கு அவ வேணாம் டேடி”

“அதே தான் உனக்கும் அந்த அயோக்கியன் வேணாம்டா” என்றார்.

“அதை உங்க மனைவிக்கிட்ட சொல்லுங்க” என்றாள் சிரிப்புடன்.

“சொல்லிட்டேன் பாவாம் அவ தான் உடைஞ்சி போயிட்டா” என்று சொன்னார் பெருமூச்சு விட்டு.

“எனக்கு திருமணத்துல இப்போதைக்கு ஆர்வம் இல்ல டேட்.. எனக்கு ஆர்வம் வரும் பொழுது கண்டிப்பா உங்ககிட்ட சொல்லுவேன். அதுவரை இந்த பேச்சு வார்த்தை எல்லாம் வேண்டாம் டேட்..” என்றாள் அழுத்தமாக.

“புரியுதுடா” என்றவருக்கு மகளின் வாழ்க்கை அந்தரத்தில் நிற்பது போலவே இருந்தது. அர்ஜுனோடு வினோதினி கூத்தடிப்பது அடுத்த நாளே இவர்களுக்கு தெரிய வந்தது. ஆனாலும் யாரும் அதை காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் இந்த விசயம் கேள்விப்பட்ட பானுமதி தான் சற்றே தளர்ந்துப் போனார். தன் மகளுக்கு நல்லது நடக்கும் என்று எதிர் பார்த்து இருந்தவரின் தலையில் இடி அல்லவா வந்து விழுந்து இருக்கிறது.

இவ்வளவு பொறுக்கியா இவன் என்று தோன்றியது. அதை விட தன் மகள் இவனிடம் இருந்து தப்பி விட்டாள் என்று நிம்மதிக் கொண்டார். ஆனாலும் முன்பை விட அவரின் கவலை அதிகரித்துக் கொண்டே போனது.

இருக்க இருக்க அவரின் உடல் நலத்தில் சிறு சிறு பழுது ஏற்பட கிருஷ்ணன் நொடிந்துப் போனார்.

லேசாக நெஞ்சு வலி எடுப்பது போல பானுமதி சொல்லவும் அரண்டு போய் அவரை வேக வேகமாக மருத்துவமனையில் அனுமதித்தார்கள். பானுமதி மருத்துவ கருவிகளுக்கு இடையில் மூச்சு விட்டுக் கொண்டு இருந்ததை பார்த்து உடைந்துப் போனார் கிருஷ்ணன்.

ஒரு நாளும் இப்படி மருத்துவமனையில் வந்து படுக்காத பானுமதி, இன்றைக்கு அசைவற்று அவர் படுத்து இருப்பதை கண்டு நொடிந்துப் போனார் அவரின் கணவன்.

அப்படி நொடிந்துப் போய் அமர்ந்தவரை பார்க்கையில் தமிழுக்கு தாங்க முடியவில்லை. அவரை தோளோடு கட்டிக் கொண்டவள்,

“சீக்கிரம் உங்க பொண்டாட்டி உங்க கிட்டையே திருப்பி வருவாங்க டேடி. அவங்களுக்கு நம்மளை விட்டா வேற யாரையுமே தெரியாது.. கலங்காதீங்க டேடி” என்று அவரை தேற்றினாள் கம்பீரமாக.

ஆனால் தனக்குள் பொங்கி வரும் துக்கத்தை மறைத்துக் கொண்டு மருத்துவ பரிசோதனைக்கும் மெடிக்கல் ஷாப்புக்கும் அலுவலகத்துக்கும் என அலைந்தாள்.

அவளின் போராட்டத்தை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு இருந்தவளை காண காண தென்னவனுக்கு பாவமாய் இருந்தது. வலுக்கட்டாயமாக அவளை தன் தோளில் சாய்த்து அழுதுடுடி என்று வெறியாய் வந்தது.

ஆனால் அதை சொல்லாமல் அவளுடனே அலைந்தான் அனைத்துக்கும். முதலில் அதை உணராதவள் தன்னோடு ஒரு ஜீவன் அலைந்துக் கொண்டு இருப்பதை தாமதமாகப்  புரிந்துக் கொண்டவள் திரும்பி அவனை பார்த்தாள்.

அவளின் பார்வையில் சிதறியவன்,

“என்னடி?” என்று தான் கேட்டான். சட்டென்று அவனின் சட்டையை பிடித்து இழுத்து அவனின் நெஞ்சோடு தன் முகத்தை புதைத்துக் கொண்டாள். ஒரே ஒரு நிமிடம் தான்.

அதற்குள் தன்னை மீட்டுக் கொண்டு அவனை விட்டு விலகி நின்றவள், “சாரி தென்னவா” என்றாள்.

“ப்ச் கடுப்பை கிளப்பாதடி” என்றவன் அவளின் தோளோடு தோள் நின்றான். அடக்கி வைத்து இருந்த உணர்வுகள் எல்லாம் அருகில் நின்று இருந்தவனிடம் உரிமையாக கொட்ட, தன் தோளில் அவளை தாங்கிக்கொள்ள உள்ளம் துடித்துப் போனான்.

“என்னடி நீயே இப்படி கலங்கிப் போனா எப்படிடி? நீ தைரியமா இருந்தா தான் அவங்க ரெண்டு பேரையும் நல்லா பார்த்துக்க முடியும். ஸ்டே ஸ்ட்ராங்டி குடிகாரி” என்று சொன்னவனை விழிகள் கலங்க பார்த்தவள்,

“வெளியே தான்டா நான் ஸ்ட்ராங். குடும்பம்னு வந்துட்டா நான் ரொம்பவே வீக்... அது உனக்கு தான் நல்லாவே தெரியுமே..” என்றவளின் கண்ணீரை பார்க்க பிடிக்காமல், முகத்தை திருப்பிக் கொண்டவன்,

“சரியா போயிடும்டி.. நீ மட்டும் அழுதுடாத..” என்றான் லேசாக கமரிய குரலில்.

“ப்ச் அப்பட்டி எல்லாம் உடைஞ்சி அழுதுட மாட்டேன் தென்னவா.. நீ பயப்படாத. ஏதோ ஒரு எமோஷன்ஸ்ல உன் மேல சாஞ்சுட்டேன்” என்றவளுக்கும் குரல் இடறியது. தன் தோளோடு அவளை இழுத்து அணைத்துக் கொள்ள முடியாமல் அவன் தவியாய் தவித்துப் போனான்.

இரண்டு நாட்கள் மருத்துவமனை வாசம் தான் நால்வருக்கும். பிள்ளையை மட்டும் பணியாளர்களிடம் குடுத்து கவனிக்க சொல்லி விட்டு மூவரும் பானுமதியோடு தான் இருந்தார்கள்.

ஊன் உறக்கம் இல்லாமல் இரண்டு நாளும் கழிந்தது. பானுமதி இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே மூவருக்கும் உயிர் வந்தது. அதன் பிறகு பானுமதியிடம் பெறும் மௌனம் குடி கொண்டு விட அதை எவ்வளவோ கலைக்க தந்தையும் மகளும் முனைய அத்தனையும் தோல்வி தான்.

கிருஷ்ணன் அதை தென்னவனிடம் சொல்லி புலம்பினார்.

“நான் வேணா மேடம் கிட்ட பேசி பார்க்கட்டுமா சார்” என்றான்.

“எவ்வளவோ முயற்சி எடுத்து பார்த்தாச்சு தென்னவன். அவ அசைய மாட்டேங்குற. முன்ன மாதிரி வீடு வீடாவே இல்ல. என்னவோ குடும்பத்துக்கு சூனியம் வச்ச மாதிரி இருக்கு” என்றார்.

“பீல் பண்ணாதீங்க சார். எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்” என்று ஆறுதல் மட்டுமே அவனால் சொல்ல முடிந்தது. அதை தாண்டி அவன் என்ன செய்ய..

இடை பட்ட நாளில் கிருஷ்ணனின் தம்பி குடும்பமான கேசவனை வேற வீடு பார்த்து வைத்து விட்டார்.

“ஏண்ணா?” என்று பாவமாய் கேட்டவருக்கு எந்த பதிலையும் சொல்ல விருப்பாம் இல்லாமல்,

“தனி தனியா இருக்கிறது தான் நல்லது கேசவா.. பானுமதி முன்ன மாதிரி நல்லபடியா ஆகட்டும். பிறகு பார்த்துக்கலாம்” என்று மட்டும் சொன்னார். தன் மகளுக்கு பார்த்த அர்ஜுனனை மயக்கி தம்பி மகள் இழுத்துக் கொண்டதில் ஏனோ அருவெறுத்துப் போய் விட்டார். அதனால் அவர்களை விட்டு தள்ளி இருப்பதே நல்லது என்று எண்ணியே கிருஷ்ணன் இதை செய்தார்.

“சரியான பொறாமை பிடிச்சவன்.. என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிடுச்சுன்னு பொறாமை படுறான். இவனெல்லாம் எங்க விளங்க போறான்” என்று கேசவன் தன் அண்ணனையே திட்டிவிட்டு அந்த சின்ன வீட்டுக்கு குடி பெயர்ந்தார்.

தேவியோ, “ஏய் நமக்கு இந்த சின்ன வீடு எல்லாம் வேணாம்டி. நீ அர்ஜுன் கிட்ட சொல்லி எதாவது பங்களா மாதிரி வீட்டை பார்க்க சொல்லு.. ஏசி இல்ல ஒன்னும் இல்ல.. இதுல எப்படி இருக்குறது?” என்று கடுப்படித்தார்.

“நான் அவர் கிட்ட பேசுறேன்ம்மா” என்றவள், அப்பொழுதே அர்ஜுனனுக்கு போனை போட்டு,

“இப்பவே நான் உங்களை பார்க்கணும் அத்தான். நாம எப்போ மீட் பண்ணலாம். உங்க கெஸ்ட் ஹவுஸ்ல வெயிட் பண்ணட்டுமா?” என்று இவளே கேட்டு கிளாமராக கிளம்பி அவ்விடத்துக்கு சென்றாள்.

 

தொடரும்..

 

உறவில் ஒரு திருமணம்.. எனவே இனி திங்கள் கிழமை தான் இரு கதைகளும் வரும்.. ரீரன் கதை தொடர்ந்து வரும் தோழமைகளே 🥰

Loading spinner
This topic was modified 7 hours ago by Admin
Quote
Topic starter Posted : June 24, 2025 4:49 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top