தென்னவனை லாக் பண்ணி வைத்து விட்டு பேசியவளை முறைக்க கூட முடியாமல் “விடுடி” என்றான் வாயை அசைக்கமால்.
“நீ மூடிட்டு இருந்தா இப்பவே ரிலீஸ் பண்றேன்” என்றாள் தமிழ்.
“என்னைய நம்பி தான் உன் கூட அனுப்பி வச்சு இருக்காங்க. உன் கிறுக்கு தனத்தை எல்லாம் கொஞ்ச நேரம் மூட்டை கட்டி வை” என்றான் இதழ்களை அசைக்கமால்..
“நீ மூடு. எனக்கு தெரியும். என் வாழ்க்கையை பத்தி உனக்கென்ன அக்கறை” அவளும் ஜூஸ் குடிப்பது போல தென்னவனிடம் பேசினாள்.
“அடங்க மாட்டியாடி நீ” என்ற நேரம் அர்ஜுன்,
“என்னை பிராங் பண்ண பார்க்குறியா இனியா?” என்று கேட்டான். அவனை சலிப்புடன் பார்த்தவள்,
“இல்ல அர்ஜுன்... நான் சொன்னது எல்லாமே உண்மை. நீங்க வேணா என் மாமாட்ட கேட்டு பாருங்க” என்று சொன்னவள்,
தென்னவனிடம் “உனக்கு உன் மகனை பார்க்கணுமா வேணாமா?” என்று கேட்டாள். தென்னவன் அவளை முறைத்துப் பார்த்தான்.
“எனக்கு என் மகனை விட உன் வாழ்க்கை தான் முக்கியம். பரவாயில்ல என் மகனை பார்க்காட்டியும் ஒன்னும் பிரச்சனை இல்லை. இது நாள் வரை எப்படி பார்க்காம இருந்தானோ அதே போல இனியும் இருந்துக்குறேன். என் மகனுக்காக பார்த்து உன் வாழ்க்கையை தொலைக்க முடியாது” என்றவன் அர்ஜுனிடம் உண்மையை சொல்ல ஆரம்பிக்க,
“அப்போ நான் லவ் பண்ணது உன்னை தான். நீயும் நானும் அபெர்ல இருக்கோம்னு சொல்லுவேன்” என்றாள்.
அதிர்ந்துப் போய் அவளை பார்த்தவன் அவளை அடிக் கண்களால் முறைத்தான்.
“நீயும் சொல்லு நானும் சொல்றேன்” என்றவளை அடிக்க தோன்றியது.
“லூசாடி நீ... உன் வாழ்க்கை இன்னும் மலரவே இல்ல. அதுக்குள்ள கருகடிக்க பார்க்கிற?” ஆதங்கத்துடன் கேட்டவனை இதழ் வளைத்து ஏளனம் செய்தவள்,
“உன் கருணையை நீயே வச்சுக்க.. எனக்கு வேண்டாம்.. இந்த கல்யாண ஏற்பாடும் வேண்டாம்.. இன்னைக்கோட இதற்கு முடிவு கட்டணும். நீ வாயை திறந்தா கண்டிப்பா உனக்கும் எனக்கும் கள்ள தொடர்பு இருக்குன்னு சொல்லுவேன்” என்றாள்.
“எரும மாடு” என்று திட்டினான்.
“நீ என்ன சொல்லி திட்டினாலும் டோன்ட் கேர்” என்று சொன்னவள், அர்ஜுனிடம் இன்னும் சில பல பொய்களை சொல்லி அவனை விரட்டி விட்டவள் தென்னவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் கிளம்பி போனவளை மன சுமையுடன் பார்த்தவன் அலுவலகம் வந்து விட்டான்.
கிருஷ்ணமூர்த்தி எதிர்பார்ப்புடன் அவனை பார்த்தார்.
“உங்க பொண்ணுக்கு புடிக்கல மாமா” என்பதோடு நிறுத்திக் கொண்டான்.
சட்டென்று அவரின் முகத்தில் தோன்றிய வெறுமையை பார்த்து உள்ளம் நொந்துப் போனவன் தமிழிடம் பேச எண்ணினான். ஆனால் அவளை நெருங்க அவனால் முடியவில்லை. நாள்கள் அப்படியே கழிய வாரத்தின் இறுதி நாள்களுக்காக காத்திருந்தான்.
அன்றைக்கு சனி கிழமை என்பதால் அலுவலகம் முடித்து நேராக குழந்தையை தூக்கிக் கொண்டு அவளுடைய தனிப்பட்ட கெஸ்ட்ஹவுஸ்க்கு போய் விட்டாள்.
தென்னவனும் சிறிது நேரம் இடைவெளி விட்டு அவள் இருந்த வீட்டுக்கு சென்றான்.
குழந்தையோடு நேரம் செலவழித்தவள் அவன் தூங்க தொடங்கவும் தொட்டிலில் போட்டு ஆட்டி விட்டாள்.
அன்னையின் மடி கேட்டு அவன் அழ, தொட்டிலில் இருந்து தன் நெஞ்சில் போட்டு தட்டிக் கொடுத்தாள்.
அதன் பிறகே அவன் தூங்க தொடங்க,
“உங்க கை சுகம் கத்துக்கிட்டான் பிள்ளை.. இனி உங்களை விட்டுட்டு இருக்கவே மாட்டான்.. எல்லாத்துக்கும் நீங்க தான் வேணும்னு அடம் பிடிக்க போறான்” என்று பணிப்பெண் சொல்ல, தமிழின் இதழ்களில் சாந்த புன்னகை தவழ்ந்தது.
நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்தபடி தூங்க வைத்தவள் அவன் நன்றாக அசரவும் தொட்டிலில் அலுங்காமல் போட்டு ஆட்டி விட்டாள்.
“நீங்க போங்க மேடம்.. நான் பார்த்துக்குறேன்” என்று தொட்டிலை ஆட்டி விட வர, அவளிடம் குடுத்து விட்டு, மகனின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்து விட்டு வேறு ஒரு அறைக்கு சென்றாள்.
கட்டி இருந்த புடவையை அவிழ்த்து விட்டு நீச்சல் உடைக்கு மாற இருந்த சமயம் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் தென்னவன்.
உள்ளே வந்தவன் தமிழ் இருக்கும் கோலத்தை கண்டு திகைத்துப் போனான்.
“சாரி தமிழி...” என்று வேகமாய் வெளியே போக, தமிழ் தன்னை மறைக்கவெல்லாம் செய்யவில்லை. நிதானமாக அவனை பார்த்தவள் அலட்டிக் கொள்ளாமல் நீச்சல் உடைக்கு மாறினாள்.
பின் வெளியே வந்து நீச்சல் குளத்துக்கு செல்ல, கூடத்தில் அமர்ந்து இருந்தவனை அவள் கண்டுக் கொள்ளவே இல்லை. பேசுவாள் என்று எதிர் பார்த்து இருந்தவன் அவள் கண்டுக் கொள்ளாமல் போகவும்
“திமிர்டி உனக்கு” கருவிக் கொண்டே இவனும் நீச்சல் குளத்துக்கு சென்றான்.
அங்கே அவள் தண்ணீருக்குள் பாய்ந்து நீந்த ஆரம்பிக்க அவள் நீச்சல் அடிக்கும் விதத்தை பார்த்துக் கொண்டே நின்று இருந்தான்.
பின் சுதாரித்து “தமிழி” என்று அவளை அழைத்தான்.
அவளோ அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
“ப்ச் தமிழி உன் கிட்ட கொஞ்ச நேரம் பேசணும்டி... வெளில வா”
“யாரு சார் நீங்க... நீங்க எதுக்காக என்கிட்டே பேசணும். அண்ட் இன்னொரு விசயம்... தமிழின்னு கூப்பிட உங்களுக்கு உரிமை இல்லை. அது என் நண்பனுக்கு மட்டும் உரியது. அவன் மட்டும் தான் என்னை அப்படி கூப்பிடனும். கூப்பிடுவான்” என்றவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,
“இப்ப நான் உன் நண்பனா தான் வந்து இருக்கேன்” என்றான்.
“சாரி அவன் எப்பவோ செத்துட்டான்” என்றாள் கொஞ்சமும் இரக்கமே இல்லாமல்.
“தமிழி இப்படி குதர்க்கமா பேசுனா எப்படி தான்டி மனுசன் பேசுவான்” ஆதங்கமாய் கேட்டவனை முறைத்துப் பார்த்தவள்,
“நீங்க பேசவே வேணாம் சார்...” என்றாள் வெடுக்கென்று.
“ப்ச் சாருன்னு கூப்பிடாதடி”
தமிழ் எந்த பதிலும் பேசவில்லை. அவள் எதுவும் பேசாமல் இருப்பதிலே தான் பேசுவதை கேட்க ஆரம்பித்து விட்டாள் என்று புரிந்துக் கொண்டவன் தன் பேன்ட் நனைவதை கூட பொருட்படுத்தாமல் நீச்சல் குளத்தில் காலை விட்டு அமர்ந்து அவளின் முகத்தை பார்த்து பேச ஆரம்பித்தான்.
“என்னை மன்னிக்கவே மாட்டியாடி?” வேதனையுடன் கேட்டவனை ஆழ்ந்துப் பார்த்தவளின் விழிகளில் கண்ணீர் மின்னியது. ஆனால் அதை வெளியே வர விடாமல் தடுத்துக் கொண்டவள்,
“ஏன்டா என்கிட்டே எல்லாத்தையும் மறைச்ச.. நான் உன்னை என் நண்பனா தானே நினைச்சேன். அப்படி தானே உன் கிட்ட நடக்கவும் செஞ்சேன். என் குடும்பத்து ஆட்களுக்கு தெரியாத பல இரகசியத்தை உன்கிட்ட சொன்னனே.. ஆனா நீ எனக்கு துரோகம் செஞ்சுட்டியேடா” என்று அவனின் சட்டையை பிடித்து உலுக்கி கேட்டவள்,
“அப்போ நீ என்னை உன் நண்பியா பார்க்கல அப்படி தானே.. இல்லன்னா நீயும் என் அக்காவும் காதலிக்கிற விசயத்தை சொல்லி இருப்ப இல்லையா?” என்று கேட்டவளை பெருமூச்சு விட்டு பார்த்தவன்,
“நான் சொல்ல வர்றதை முதல்ல கேளுடி”
“முடியாதுடா” என்றவள்,
“ரொம்ப டீப்பா லவ் பண்ணீங்களா?” என்று கேட்டாள்.
“ப்ச்..” என்று சலித்துக் கொண்டவன், “இப்போ இந்த விசயம் ரொம்ப முக்கியமா?”
“எனக்கு முக்கியம் தான். நீ சொல்லு...” என்றாள். அவன் அமர்ந்து இருந்த இடத்துக்கு அருகில் தண்ணீரில் நின்றுக் கொண்டாள்.
“சரக்கடிக்கிரியா?” கேட்டான்.
“ம்ம்ம்” என்றவள் கிளாசை எடுக்க போக,
“இருடி நான் மிக்ஸ் பண்ணி தரேன்” என்று தென்னவன் மிக்ஸ் பண்ணி குடுக்க, தமிழின் பார்வை மொத்தமும் அவான் மீது தான் இருந்தது.
“இப்பவும் உன் மேல இருக்குற க்ரஷ் குறையலடா” என்றாள்.
நிமிர்ந்து பார்த்து அவளை முறைத்தவன்,
“நாளைக்கு நான் என் வீட்டுக்கு போறேன்” என்றான்.
“ஏன் திடிர்னு”
“கோர்ட் குடுத்த மூன்று மாதம் முடிஞ்சு போச்சு” என்றான்.
“சோ”
“ம்ம் வீட்டுக்கு போறேன்” என்றான்.
“சரி போ.. ஆனா பிள்ளையை தர மாட்டேன்” என்றாள்.
“அந்த பிள்ளையை நீ பேக்கல அதை நியாபகம் வச்கிக்க. நாளைக்கு உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையும். அப்போ உன் வாழ்க்கை சிக்கலா போயிடும். அவனை என்கிட்டே குடுத்துடுடி”
“ஓ... இது தான் சரக்கை குடுத்து அபேஸ் பண்றதா?” நக்கலுடன் கேட்டவளை முறைத்துப் பாத்தவன்,
“உன் நல்லதுக்கு தான்டி சொல்றேன்”
“நீ எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்... எனக்கு தெரியும்.. நீ மூடிட்டு சரக்கை மட்டும் மிக்ஸ் பண்ணி குடு” என்றவள் அவன் மிக்ஸ் பண்ணி வைத்த சரக்கை வாயில் சரித்தாள்.
அவன் ஊற்றி குடுக்க குடுக்க இவள் பாட்டுக்கு உள்ளே இறக்கிக் கொண்டே போக,
“மூணு கிளாஸ் முடிஞ்சு போச்சு. இதுக்கு மேல வேணாண்டி” எச்சரிக்க,
“ப்ச் போதை இன்னும் ஏறலடா.. நீ ஊத்தி குடு” என்றாள்.
“நீ முதல்ல நீச்சலை முடி.. அப்புறம் வந்து சரக்கடி” என்றான்.
“அப்போ நீயும் வா.. உன்னோட நீச்சல் போட்டு ரொம்ப நாளாச்சுடா” என்றவள் அவனது சட்டை காலரை பிடித்து தண்ணீருக்குள் இழுக்க அவளோடு அவனும் நீருக்குள் விழுந்து முங்கினான்.
“ஏய் ட்ரெஸ் எல்லாம் நனையுதுடி”
“கழட்டி போட்டுட்டு வாடா” என்று சொல்ல, முழுதாய் நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு என்று அவனும் உடைகளை கலைந்து விட்டு இன்னாரோடு வந்து குதித்தான்.
அவனுக்குள் அடக்கி வைத்து இருந்த உணர்வுகள் எல்லாம் வெளியே வர தண்ணீரில் ஒரே ஆட்டம் தான். நீண்ட நாட்கள் கழித்து கிட்ட தட்ட லண்டனில் இருந்த பொழுது எப்படி இருந்தானோ அது போல இப்பொழுது இருந்தான். இத்தனை நாட்கள் இருந்த இறுக்கம் எல்லாம் கலைந்து போய் தமிழியின் தென்னவனாக நண்பனாக அவன் மாற, தமிழிக்கு சொல்லவும் வேண்டுமா? அன்றைய இரவு பொழுது இருவருக்கும் செம்ம ஜாலியாக போனது.
இருவரும் போட்டு இருந்த கவசம் எல்லாம் உடைந்து சிதற,
“தென்னவா” என்று அவளும், “தமிழி” என்று அவனும் மாறிப் போனார்கள்.
நல்ல நண்பன் இருந்தால் போதும் சோகமான நிமிடங்களை கூட மாற்றிப்போட்டு விடும் வல்லமை வந்து விடும். இங்கே இவர்களும் அப்படி தான்.
அரைகுறை உடையுடன் இருந்தாலும் இருவரும் அதை பற்றிய சிந்தனையே இல்லாமல் ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்து, நீச்சல் போட்டி வைத்து, பாடல்களை ஒலிக்க விட்டு அதோடு கூட சேர்ந்து பாடி, பின் பாடலை அனைத்து விட்டு இருவரும் கர்ணகொடூரமாக பாடி என்ஜாய் செய்துக் கொண்டு இருந்தார்கள்.
இவள் ஒரு பேக் அடிக்கும் பொழுது அவனும் சால்ட் சோடா எடுத்து அவளுடன் சியர் சொல்லி வாயில் கவிழ்த்துக் கொள்வான்.
அவள் அருந்தும் பெரிய கிளாசை மாற்றி ஐம்பது மில்லி இருக்கும் குட்டி கிளாசை வைத்து அவளுக்கு சரக்கு ஊற்றி குடுக்க அவனது அக்கறையை பார்த்து சிரித்தவள்,
“தென்னவா ஒன்னு சொல்லணும் போல இருக்கு... ஆனா சொன்னா நல்லா இருக்காதுடா” என்றாள்.
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று தான் அவனுக்கு தெரியுமே.. இதழ்களை பிரிக்காமல் சிரித்தவன்,
“வேனான்டி.. நீ வாயை திறக்காத.. அப்புறம் எனக்கு தான் டேஞ்சர்” என்றான்.
“அதனால தான் சொல்லாம இருக்குறேன்” என்றாள் அவளும். லேசான போதையில் தள்ளாடிக் கொண்டு இருந்தவளை ஆழமாக பார்த்தவன்,
“ஐ லவ் யூ டி... ஐ லவ் சோ மச் கண்ணம்மா..” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
“எதாச்சும் சொன்னியாடா”
“நானா நான் ஒன்னும் சொல்லலடி” என்றவனின் விழிகளில் கண்ணீர் மின்னியது. அதை அவள் கவனிக்கும் முன் உள் இழுத்துக் கொண்டவன் இரவு நெடு நேரம் வரை அவளுடனே இருந்தான் தென்னவன்.
தொடரும்..
ஹான் நா நினைச்சது சரி தான்....இவனும் லவ் பண்ணி இருக்கான்....
அவ அக்கா தான் அவனை கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கா.....
இல்ல கிருஷ்ணன் ஏதோ மறைக்கறார?????