தன்னுடைய கோவத்தை முழுமையாக சதியிடம் காட்ட அவள் தொய்ந்து சரிந்தாள் அவனது கைகளில்...
அப்பொழுதும் கூட அவளை விலகாமல் வலிக்க வலிக்க தான் பட்ட வலிகளை அவளுக்கு உணர்த்தினான் இதழ் முத்தத்தில்...
அதை முத்தம் என்று சொல்லக்கூடாதோ...?
அவளின் இதழ்களை கசக்கி எடுத்தவன் அதில் குருதி வந்த பின்பே அடங்கினான்... அப்பொழுதும் அவனது விழிகளில் அவ்வளவு ஆத்திரம் அடங்கி இருந்தது..
“என்னை பொம்பளை பொறுக்கின்னு நினைச்சியா..?” என்று மறுபடியும் விட்ட இடத்திலிருந்து சீறினான்...
“ஐயோ நான் எப்போ...” என்று அவன் விட்டதிலிருந்து தன்னை சமன் படுத்திக்கொண்டே அவனுக்கு பதிலுரை சொல்ல,
“ஆமான்டி நீ என்னை பொம்பளை பொறுக்கின்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்க... இல்லன்னா உனக்கெதுக்கு பாதி நாள் விடுப்பு... இல்ல இங்க வந்த பின்னாடி என்னை தொடுறதுக்கு எதுக்கு அவ்வளவு தயங்குன...”
“நீ என்னை தொட்டா உடனே உன்னை துவம்சம் பண்ணிடுவேன்னு நினைச்சியா...? அந்த அளவு கட்டுப்பாடு இல்லாதவன்னு நினைச்சியாடி என்னை...” என்று மேலும் மேலும் அவன் கேட்க, அவளால் தான் பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
அவளது உணர்வே வேறு அல்லவா...? இவன் வேறு எதையோ சொல்ல.. உண்மையாகவே திகைத்து தான் போனாள்.
இதுல இப்படி ஒரு காரணத்தை யூகிக்க முடியுமா என்று ஒரு கணம் சிந்தித்தாள். அதன் பின்பே தீபாவின் கல்யாணத்திற்கு பின்னாடி தான் நடந்துக்கொண்ட செயல்களை கோர்வையாக்கி பார்த்தவளுக்கு தன்னை தானே திட்டிக்கொள்ள தோன்றியது..
அந்த அளவு சொதப்பி வைத்து இருக்கிறாளே இவள்... வேறு என்ன செய்வது... சாஸ்ட்டங்கமாக அவனது காலில் விழுந்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே குரு மேலும் தன் வார்த்தையால் அவளை சுழற்றிக்கொண்டு இருந்தான்.
“உன் அக்கா காரி என்னமோ நான் சாகுரதுக்குள்ள எனக்கு ஒரு குழந்தையை பெத்து குடுங்க... நான் போயிட்டன்னா சதி உங்களோட வாழுறது கஷ்ட்டம்.. அதுக்குள்ள உங்க வாழ்க்கையை சரி பண்ணுங்கன்னு குதிக்கிரா... நீ என்னமோ பார்த்தாலே புள்ள வந்துடும்ன்ற கணக்கா பார்த்தா கூட அவ்வளவு சீன போடுற... என்னடி நினைச்சுக்கிட்டு இருக்கீங்க...”
“தாலி காட்டுன அன்னைக்கே அவ என்னமோ ஆயிரம் டைலாக் பேசிட்டு, உன்னை கொண்டு வந்து ரூம்ல விட்டுட்டு போறா... நீ என்னமோ நான் உன் மேல வந்து பாய்ஞ்சுடுவேன்னு அன்னைக்கு முழுசும் கதவை கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருக்க... இல்ல என்னை பார்த்தா லூசு மாதிரி தெரியுதாடி உங்களுக்கு...” தாண்டவம் ஆடினான்.
‘ஆஹா அடக்கி வச்ச ஆத்திரம் எல்லாம் வரிசையா வெடிக்குது போலேயே... இதுல கொத்தா மாட்டி நிக்கிறது நான் மட்டும் தானோ...?’ புலம்பியவள் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது பார்வைக்காக காத்துக்கொண்டு இருந்தவன் இன்னும் ஆடினான்.
“என்ன பயந்து பயந்து பார்க்குற... ஏன் இதுக்கு முன்னாடி நான் உன்னை தொட்டதே இல்லையா...? இல்ல உன்னை இப்படி பார்த்ததே இல்லையா...? ஏதோ இன்னைக்கு தான் உன்னை புதுசா பாக்குற மாதிரி பாவ்லா பண்ணிக்கிட்டு இருக்க... என்னடி திமிரா..?” என்று அவளை பார்த்து கடுமையாக கேட்க பாவமாய் அவனை பார்த்தாள்.
“மாமா...” என்று கோவைசரளா வாய்சில் கூப்பிட்டவளை வெட்டவா குத்தவா என்று பார்த்தான் குரு...
“ஓ... நான் மாமான்றதே உனக்கு இப்போ தான் ஞாபகம் வருதா...?” என்றான் கோவமாக.
அவனது நியாயம் மிக தெளிவாக புரிந்தது சதிக்கு. அதனாலே தன் தயக்கத்தை விடுத்து அவனிடம் நெருங்கினாள்...
“மாமா...” என்றாள் மறுபடியும்...
“ப்ச்...” என்றான் அசுசையாக...
“அது அப்படி இல்ல மாமா... அக்காவை கல்யாணம் பண்ணதுக்கு பின்னாடி உங்களை சட்டுன்னு என்னோட பழைய காதலனா பார்க்க முடியல... அதனால சில...” என்று மேற்கொண்டு சொல்ல வந்தவளை தடுத்தவன்,
“தாலி கட்டுன எனக்கே அவ மேல எந்த உணர்வும் வரல சதி... இது தான் உண்மை...”
அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து போனாள் அவள்...
“மாமா... என்ன சொல்றீங்க...”
“சீரியஸ்லி டி... எனக்கு உன் அக்கா மேல பாசத்தையும் பரிதாபத்தையும் தாண்டி மனைவின்ற எந்த உரிமையும் அவக்கிட்ட எனக்கு தோணல... ஒரு மஞ்சள் கயிறு எல்லாத்தியும் மாத்தும்னா ஏன் கோர்ட் ஏறி விவாகரத்து வாங்குறாங்க... அந்த உணர்வு மனசுல இருந்து வரணும்... வெறும் மஞ்சள் கயிறுனால வராது...”
“இதோ இப்ப உனக்கு நான் தாலி கட்டல... ஆனா எனக்கு உன் மேல அந்த மாதிரி எண்ணம் தான் வருது... என்னை என்ன பண்ண சொல்ற... இது தான் காதல்... இது தான் தாம்பத்தியத்துக்கு அவசியம்...”
“அதோட உன் அக்கா சொன்னா நீயும் நானும் குழந்தை பெத்து தரணும்னு... நானும் சரின்னு சொன்னேன்... ஏன்னா எனக்கு அதுல எந்த தப்பும் தோணல... இதே உன் இடத்துல அவ இருந்து கேட்டா சத்தியாமா என் உயிரே போனாலும் செய்ய மாட்டேன். அதனால உன் குழப்பத்தை விட்டுட்டு என்னை உன் புருசனா நினை... உன் அக்காவோட கணவனா என்னை நினைக்காதடி... அதுக்கு பிறகு தான் நம்ம தலைமுறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகணும்...” என்றான் சற்று கோவத்தோடு.
அவன் சொன்ன அனைத்தயும் தெளிவாக கேட்டவளுக்கு மனம் சிறகின்றி பறந்தது... ஏனெனில் இவ்வளவு நாள் தீபா சொல்லி சொல்லி அவனுடைய குழந்தையை தன் மடியில் தாங்க வேண்டும் என்கிற ஆசை வந்தது தான். ஆனால் அது அக்காவின் கணவன் என்று வருகையில் தன் எண்ணம் செல்லும் போக்கை கண்டு கலங்கி போனாள்.
ஆனாலும் அவனது பார்வை அவனது தொடுகை அனைத்தையும் அவள் ஏற்கவே செய்தாள்... இதோ இப்பொழுது கூட உதட்டில் ஆரம்பித்த பயணம் உடலோடு முடிந்தாலும் அவள் எதிர்த்து நின்றிருக்க மாட்டாள் தான். ஆனால் காலமெல்லாம் அவளது மனதில் தன்னவன் என்கிற எண்ணமே எழாமல் போய் இருக்கும்...
அதை மிக தெளிவாக கலைந்து எடுத்தான் குரு அவனறியாமலே... அதிலே சதி மகிழ்வு கொண்டவள், கொஞ்சமும் யோசியாமல் அவனது இதழ்களை அவனை விட வன்மையாக சிறை செய்தாள்.
இவ்வளவு பேசியும் அவளது மௌனம் கண்டு கோவம் கொண்டு இருந்தவன், அவள் அடுத்து செய்த செயலில் அவள் வசம் பித்தாகி போனான்.
சதி குரு கொஞ்சமும் எதிர் பாரா சமயத்தில் அவனின் இதழ்களை தன் வசமாக்கி இருந்தாள். அவள் அப்படி செய்வாள் என்று எதிர் பாராதவன் அவள் வளைத்த வளைப்புக்கெல்லாம் சென்றான்.
அதில் சதியின் மனதில் கர்வம் எழுந்தது... என்னவன் என்கிற எண்ணம் இன்னும் அதிகமாக வலுத்தது...
இவ்வளவு நாள் அவனை விட்டு இருந்த நாட்களுக்கு எல்லாம் சேர்த்து வைத்து அவனை வாட்டினாள்... அதில் சுகமாகவே தொலைந்து போனான் குரு...
ஒரு கட்டத்தில் அவனுக்கு கழுத்து வலிக்கவே அவளது இதழ்களை பிரியாமலே தன் இடையோடு சேர்த்து அவளை தூக்கிக்கொண்டவன், சற்று நகர்ந்து ரிமோட்டின் உதவியுடன் நடராஜரின் சிலையை திரைக்கொண்டு மறைத்தவன் முழு மூச்சாக தன்னவளுடன் இணைந்தான்...
அவனது உணர்வுகள் அனைத்தும் வெளிப்படும் இடமான அவனுக்கு மட்டும் உரிமையான தனிப்பட்ட நடன கூடத்தில் தன்னவளை சரித்து அவளின் மெயில் தன் மெய்யை கலக்க விட்டான்...
அவனது இந்த அதிரடியை எதிர்ப்பார்க்காத பெண்ணவள் சற்றே பயந்து அவனை பார்த்தாள்.
அவளின் விழிகளில் தெரிந்த அச்சத்தை கண்டு “வேணாமாடி...?” என்று ஒரே சொல்லில் தன் உணர்வுகள் அத்தனையும் வெளிப்படும் வண்ணம் கேட்க,
அவனை ஏமாற்ற மனம் வரமால், சிவந்த முகத்தை பக்கவாட்டில் திருப்பி “வெளிச்சமா இருக்கு ங்க...” என்று முணகினாள்...
அதில் ஆணவன் கர்வம் கொள்ள, சுற்றி இருந்த ஜன்னல்களை ரிமோட்டின் உதவியுடன் திரையிட்டு மறைத்தவன் “இப்போ...?” என்றான் இரு புருவத்தையும் ஏற்றி.
அதை கண்ணுற்றவளுக்கு முகம் இன்னும் சிவந்து போனது...
வார்த்தைகளில் எதுவும் சொல்லாமல் தன்னை நோக்கி அவனை இழுத்தவள், சம்மதம் என்பது போல மெலிதாய் அவனது இதழ்களில் முத்தமிட்டாள்.
அவளது இந்த பதிலில் குரு சிலிர்த்து எழுந்து தன்னவளை தன் வசமாக்கிக்கொண்டான் முழுமையாக...
கடினமான நேரத்தில் கூட பொறுமையை கையாண்டான் குரு... அவனது பொறுமையே பெண்மையை அடியோடு சாய்க்க, அவனை இழுத்து தன்னோடு கட்டிக்கொண்டாள்.
அவளது அணைப்பில் விரும்பியே கட்டுண்டு கிடந்தான் வெகு நேரமாக...
மன சுணக்கம் எதுவும் இல்லாமல் நீண்ட நெடிய தாம்பத்தியத்தில் இருவரின் மனமும் சிறகு விரித்தது... திரும்பி தன்னவளை பார்த்தான்..
காலையில் உடுத்தி இருந்த புடவை கசங்கி எங்கோ சென்று இருக்க, வைத்து இருந்த மல்லிகை சரம் குருவின் கைபட்டு சிதறி இருந்தது அறையெங்கும்...
கலைந்த கோலமாய் காட்சி தந்தவளின் தோற்றம் இன்னும் மனதை நிறைக்க, மீண்டும் தன்னவளுடன் ஒரு போரை உருவாக்கினான்..
அதில் விரும்பியே திளைத்தவள், எல்லாம் அடங்கிய பின் தோய்ந்து விழுந்தவள், “பசிக்கிது மாமா...” என்றாள்.
அதில் தான் குரு மணியையே பார்த்தான். இரவு கவிழ்ந்து வெகுநேரமாகி இருந்தது...
அவசரமாய் ராக்கிக்கு போன் போட்டு உணவு பார்சலை வாங்கிக்கொண்டு வர சொன்னவன் சதியை கைத்தாங்கலாக அழைத்து வந்து ரெஸ்ட்ரூம் வந்து விட்டு அவளது தேவையை கவனிக்க செய்து இருவரும் தங்களை சுத்தம் செய்துக்கொண்டு, மாற்று உடை அணிந்துக்கொண்டார்கள்.
எப்பொழுதுமே குரு இருவருக்கும் நான்கு செட் உடைகளை அங்கு வைத்திருப்பான்... ரிகசல்க்காக பல இரவுகள் அங்கே தங்கி இருப்பார்கள். அதனால் வீட்டுக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது என்பதாலே இந்த ஏற்பாடு...
இது இவர்களுக்கு மட்டும் கிடையாது.. அங்கு வேலை பார்க்கும் ஒவ்வொரு பயிர்ச்சியாளருக்கும் தனி தனி அலமாரி இருக்கிறது. அதில் தேவையான உடுப்புகள் முதல் கொண்டு அனைத்துமே இருக்கும்...
ஏனெனில் அங்கு வேலை பார்க்கும் எல்லோருக்கும் பல பட வாய்ப்புகளும், மேடை நிகழ்ச்சிகளும் வந்துக்கொண்டு இருக்கிறது... அதனாலே இரவு தங்க நேர்ந்தால் அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளுவார்கள்.
ராக்கி சிறிது நேரத்திலே வந்து அவர்களுக்கு உணவை வழங்கிவிட்டு செல்ல, குரு கலைக்கூடத்தின் வாயிலில் இருந்த காப்பாளரிடம் சென்று உணவை வாங்கிக்கொண்டு வந்து சதிக்கு முதலில் ஊட்டிவிட்டான்.
அதன் பின் குரு சாப்பிட போக, அவனுக்கு அவள் ஊட்டி விட்டாள். அப்படியே இருவரும் மொட்டை மாடி சென்றவர்கள் தனியாக காய்ந்துக்கொண்டு இருந்த நிலவை ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்துக்கொண்டு ரசித்துக்கொண்டு இருந்தார்கள்.
வீட்டிற்கும் தகவல் சொல்லிவிட, யாரும் அவர்களுக்காக காத்திருக்கவில்லை... ஏகாந்தம் நிறைந்த அந்த பொழுதை அப்படியே கழிக்க மனம் வராத குரு,
மெல்ல தன் மூச்சுக்காற்றை தன்னவளின் செவியில் சிந்தினான்.
அதில் கூச்சம் கொண்டவள் குருவை தன் முன் பக்கம் இழுத்து அவனது கன்னத்தில் கடித்து வைத்தாள்... அதில் சிலிர்த்தவன், அவளது இடையில் கோலம் போட போக, அவனது கரங்களை பற்றிக்கொண்டவள் அவனது கைகளுக்குள்ளே திரும்பிக்கொண்டு வன்மையாக அவளது இதழ்களை கடித்தாள்...
அவளது இந்த பரிமாற்றம் அவனை இன்னும் காதல் கொள்ளவும் மோகிக்கவும் சொல்ல, அவளுடன் ஒன்றிணைந்து உடனாகி போனான் குரு...