Notifications
Clear all

அத்தியாயம் 11

 
Admin
(@ramya-devi)
Member Admin

குரு சதியை சுண்டக்காய் என்று சொல்ல சதிக்கு அவ்வளவு கோவம் வந்தது...

“இங்க பாருங்க இடையில கொஞ்ச நாள் சொல்லாம இருந்தததால மறந்துட்டீங்கன்னு நினைச்சேன்... ஆனா இப்போ மறுபடியும் ஆரம்பிக்கிறீங்க... இதெல்லாம் நல்லதுக்கு இல்ல சொல்லிட்டேன்..” ஆத்திரமாக சொல்ல, அவளது முகத்தை நக்கலுடன் பார்த்தவன்,

“எனக்கு உன்னை சுண்டக்காய்னு கூப்பிட தான் பிடுச்சி இருக்கு. நான் என்னடி பண்ணட்டும்... நீ பொறந்ததுல இருந்தே நான் இப்படி தான் கூப்பிடுறேன்...” என்றார்.

“அதெல்லாம் சரி தான்.. இப்போ நானே ஒரு குழந்தைக்கு அம்மா ஆகிட்டேன்ல... இப்பவும் சுண்டக்காய்னு கூப்பிட்டா என் இமேஜ் என்னத்துக்கு ஆகுறது... இனி அப்படி கூப்பிட கூடாது... வேணா வேற பேரு ஏதாவது சொல்லி கூப்பிடுங்க...”

“அப்போ ஒக்கே டின் பியர்... உனக்கு சுண்டக்காயை விட இந்த டின் பியரு தான் செம்மையா பொருந்துது.. அதுவும் உன்னை லிப் கிஸ் பண்ணா அதுக்குரிய அர்த்தம் முழுமையாகிடும்...” என்றவனது பேச்சில் தன்னை போதை தரும் வஸ்த்து என்று சொல்லாமல் சொல்ல, கண்களை விரித்து தன் கோவத்தை காட்ட முயன்றாள்...

“திசிஸ் டூ மச் குரு... நான் என்ன அப்படி....” முடிக்கும் முன்பே அவளது இதழ்களை கவ்விக்கொண்டு அவளது உமிழ் நீரை பருகியவன், கண்களை மூடிக்கொண்டு,

“நிஜமாவே நீ டின் பியரு தாண்டி... இப்போ பாரு என் கண்ணு ரெண்டும் மேல சொருகுது... மதி மயங்கி போய் அடுத்ததா சிந்திக்க கூட முடியாம இருக்கேன்... அப்போ நான் சரியா தானே பேர் வச்சு இருக்கேன்...” என்றவன் டான் அவளிடம் எந்த அளவு மதி மயங்கி போய் இருக்கிறேன் என்பதை அவளுக்கு உணர்த்த, அவள் தான் சித்தம் தடுமாறி போனாள்.

ஒருவழியாய் அவனிடமிருந்து விலகியவள் தன் இதழ்களை துடைத்துக்கொண்டவள், வெட்க சிரிப்புடன் அவனை விடுத்து விலகி சென்றாள்.

அவள் சென்றவுடன் தன் தலையை அழுத்தமாக கோதிக்கொண்டவனின் முகம் வசிகரமாய் இருந்தது...

“உன் மேல கோவம் இருக்குடி.. ஆனா அதை விட உன் மேல காதல் இருக்கு... என்னை ரொம்பவும் ஆட்டி வைக்கிறடி நீ...” என்று முனகியவன் வெளியே வந்தான்.

அவன் வந்தவுடன் எல்லோரும் அவனையே ஒரு நொடி பார்த்தவர்கள், பின் சட்டென்று கீழே குனிந்துக்கொண்டு தங்களது வேலையை கவனிக்க தொடங்கினார்கள். அவனும் அவர்களோடு கலந்துக்கொண்டான்.

சிறிது நேரத்திலே சதி அவனுக்கு அருகில் வந்து காதோரம்,

“தலை கலைஞ்சி இருக்கு. அப்படியேவா வருவீங்க...” முனகியவள்,

“போங்க முதல்ல தலையை சீவிட்டு வாங்க...” என்று சொல்லிவிட்டு அடுத்து நிமிடம் அவ்விடம் விட்டு அகன்றாள்.

அவள் அப்படி சொல்லிவிட்டு சென்ற போதும் அவன் அசையாமல் மேற்கொண்டு தன் வேளைகளிலே மூழ்கி இருக்க, சதி யோசனையாய் அவனை பார்த்தாள்.

அவள் அவனையே பார்ப்பது புரிய, குரு நிமிர்ந்து அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு மீண்டும் தன் வேளைகளில் மூழ்கி போக, இவளுக்கு தான் முகம் செவ்வானமாய் சிவந்து போனது...

“என்ன இது இப்படியெல்லாம் பண்றாரு... அடிச்சா மொட்டை, இல்லன்னா குடுமின்னா எப்படி...” என்று புலம்பியவள் தன் வேளைகளில் கலந்துக்கொண்டாள்.

பிமேல் மேல் அக்டர்ஸ் என்று பலரும் வர, அந்த கலைக்கூடமே கலைக்கட்டியது. அதோடு சில ஜோடி ஆக்டர்ஸ் மட்டுமே பேராய் வர, மற்றவர்கள் எல்லாரும் அவரவருக்கு சொல்லி கொடுக்கும் மாஸ்டரோடு பேராகிக்கொண்டார்கள்.

குருவும் சதியும் சொல்லிக்கொடுப்பதோடு நிறுத்திக்கொண்டார்கள். மேடை ஏறி ஆட மறுத்துவிட்டார்கள்.

அதோடு தனியாக பிலிம் பேர் அவர்ட் ஆர்கனைசர் வேறு தனியாக வற்புறுத்தி இருந்தார்கள். ஆனால் குரு அந்த வாய்ப்பை வளர்ந்து வரும் ஒரு நடன பயிர்ச்சியாளருக்கு வழங்க சொல்லிவிட்டான்.

அதனால் இருவரும் கோரியோ வேலையை மட்டும் செய்தார்கள். ராக்கி பேமஸ் அக்ட்டர் ஜெலினா வுடன் ஆட வாய்ப்பு கிட்ட, ஜொள்ளு வடிய வடிய ப்ராக்டீஸ் எடுத்துக்கொண்டு இருந்தான்.

அவனுடைய மாணவர்கள் அனைவரும் “அண்ணா ம்ம்ம்ம்... கலக்குங்க...” கோரஸ் பாடி உற்ச்சாகப்படுத்த ஜாலியானான் ராக்கி..

ஒரு மாத காலமும் இந்த பயிற்சி போனதால் பைனல் இயற் மாணவர்களின் பயிற்சி தடைபட்டு போனது.

ஆனால் அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இந்த பிலிம் பேரை அமைத்து கொடுத்தான்.  இது முடிந்தவுடன் பைனல் வைத்துக்கொள்ளலாம் என்று குரு சொல்லிவிட, அனைத்து மாணவர்களுக்கும் ஏக போக மகிழ்ச்சி...

அதோடு குருவின் தம்பி நவீனுக்கும் கேகேவின் தங்கை லேக்காவிற்க்கும் திருமணம் செய்ய ஏற்பாடு ஒரு புறம் நடந்துக்கொண்டு இருந்தது...

அதன் படி லேக்காவை பொண்ணு பார்ப்பதற்காக அன்று வீட்டிலிருந்த அனைவரும் கிளம்பி சென்றார்கள்.

குரு காரின் முன் பக்கம் அமராமல் பின் இருக்கைக்கு செல்ல, அனைவரும் திகைத்து தான் பார்த்தார்கள்...

“அண்ணா நீ வண்டி ஓட்டலையா...?” வியந்து போய் கேட்டான்.

“டையர்டா இருக்கு டா.. நீயே ஓட்டு...” என்றவன் பின் இருக்கையில் கூட அமராமல் மூன்றாவது வரிசையில் அமர்ந்து இருந்த சதியின் அருகில் சென்று அமர, அனைவரும் விழிவிரித்து பார்த்தார்கள் அதிசயமாக...

ஏனெனில் இன்று வரை சதி அவனது அறைக்கு சென்று உறங்குவதோ, இல்லை அவனோடு பேசுவதோ அவர்களுக்கு தெரியாது...

காலையில் எழுந்து சீக்கிரமாகவே கலைக்கூடத்திற்கு சதி சென்றுவிடுவாள். அங்கே சென்றாள் பிள்ளையோடு வரும் ராதிகாவிற்கு கூட குரு அவளுடன் பேசுவதோ, தனி அறையில் ஒட்டி உரசிக்கொண்டு இருப்பதோ அறியாமல் போனார்.

அதே போல சீக்கிரமாக வீடு தெரியும் சதி எப்பொழுதும் போல அனைவரோடும் உண்டுவிட்டு குழந்தையை அனைத்து தூங்கி விடுவாள். குரு தமாதமாக வீடு திரும்பும் போது வீடே ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்.

அதனால் இரவு பொழுது மனைவி மற்றும் பிள்ளையை அலேக்காக தூக்கிக்கொண்டு தன் அறைக்கு செல்லும் குருவின் சேட்டையை பற்றி தெரியாமலே போனது அந்த குடும்பத்திற்கு...

அதனாலே இன்று சதியின் அருகில் சென்று அமர்ந்தவனை எல்லோரும் வியந்து போய் பார்த்தார்கள். அவர்களது அனைவரின் பார்வையையும் ஒரு பொருட்டாக கூட கருதாமல் அவன் பாட்டுக்கு பின் புறம் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு தூங்க தொடங்கினான்.

சதிக்கு தான் அவர்களது பார்வையை கண்டு சிரிப்பு வந்துவிட்டது... அவளது இதழ்களில் தோன்றிய புன்னகையை கண் திறவாமலே அறிந்தவனாய், தன் காலை எடுத்து அவளின் காலின் மீது வைத்து லேசாய் அழுத்தினான்.

அதில் சட்டென்று அவளது முகம் சிவந்துவிட்டது. அதை அடக்க பெரும்பாடு பட்டவள் குழந்தையை சாக்காக வைத்துக்கொண்டு கீழே குனிந்துக்கொண்டாள்.

 

 

காரின் முன் இருக்கையில் நவீனும் குமாரும் அமர்ந்துக்கொள்ள, பின் இருக்கையில் ராதிகா, ஆனந்தி, சேகர் என்று அமர்ந்துக்கொள்ள, அதற்க்கு பின் இருக்கையில் ரொம்பவும் வசதியாக குருவும் சதியும் தங்களுடைய குழந்தையோடு அமர்ந்துக்கொண்டார்கள்.

“டேய் என்னடா நீ போய் சதியோட...”

“ப்ச் தூக்கம் வருது... தூங்க விடு...” என்றவன் இன்னும் நன்றாக சாய்ந்துக்கொண்டு தூங்கி போக, ராதிகாவிற்கு தான் சந்தேகமாக போனது...

“நிஜமாவே இவனுக்கு தூக்கம் வருதா...? இல்ல சதிக்கூட இருக்கணும்னு பின்னாடி போனானா...?” என்று புலம்ப,

“அண்ணி விடுங்க. அவன் தூங்கட்டும்.” என்று ஆனந்தி சொல்லியதோடு,

“பழம், பூ, ஸ்வீட் வாங்கணும்.. மறந்துடாதீங்க... சரியான நேரத்துக்கு தானே கிளம்பி இருக்கோம்.” என்று அவர் வேறு பேச ராதிகா திசை திருப்பினார் குருவிடமிருந்து.

எல்லோரும் ஓரளவு செட்டாகி பேச்சில் கலந்துக்கொள்ள, குரு மெல்ல மெல்ல சதியின் அருகில் நெருங்கி அமர்ந்தான்.

அவனது நெருக்கம் கண்டு திகைத்து அவனை பார்க்க,

“ஷ்.. சாக் ஆகாதடி..” என்றவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் சட்டென்று அவளை கீழே இழுத்து தானும் கீழே குனிந்து இதழ்களில் முத்தமிட்டு நிமிர்ந்த நேரம் நவீன் கைபிடியிலிருந்து கார் நழுவியது...

காரின் தடுமாற்றத்தில் சட்டென்று குரு தன்னை மீட்டுக்கொண்டு தூங்குவது போல பாசாங்கு செய்தான்.

நவீனுக்கு தான் தன் கண்களை நம்பமுடியவில்லை. எதிரில் இருந்த பேக் கேமராவில் இருவரது தலையும் தெரியவில்லை ஒரு நொடி... என்ன இது என்று முன் புறம் ஒரு கணம் பார்வை பதித்து விலகிய நேரம் கார் சட்டென்று ஸ்லிப் ஆனது.

அதனாலே இது ‘நிஜமா நடந்ததா...? இல்ல நாம ஏதும் கனவு கண்டமா...?’ குழம்பி போனான். ஏனெனில் குரு தன் கண்களை மூடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.

சதிக்கு தான் புன்னகையை அடக்க முடியவில்லை.

“அப்பா என்ன சேட்டை பண்றாரு... மொத்த பிராடு தனத்தையும் குத்தகைக்கு எடுத்து இருப்பாரு போல...” மனதுக்குள் செல்லமாய் வைதுக்கொண்டாள்.

ஒரு வழியாய் கேகேவின் வீட்டிற்கு வந்தவர்கள் பெண் பார்க்கும் சடங்கை அழகாக ஆரம்பித்து வைத்தார்கள். லேக்கா அனைவருக்கும் காபி கொண்டு வந்து தர, ஏற்க்கனவே கேகேவின் வழியில் அவளை தெரியும் என்பதால் யாரும் அவளுக்கு பெரிதாக சங்கடத்தை கொடுக்கவில்லை.

அவளும் இயல்பாய் நடந்துக்கொள்ள, அழகான குடும்ப நட்பாய் மாறி போனது பெண் பார்க்கும் சடங்கு. நவீனையும் லேக்காவையும் மனம் விட்டு பேச சொல்லி சொல்ல, இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போனது.

“என்னை பிடுச்சி இருக்கா...” நவீன் ஆண்மையுடன் அன்பாக கேட்க, அவனது அன்பில் நெகிழ்ந்தவள், மெல்ல அவனுக்கு ஒப்புதலாய் தலை அசைத்துவிட்டு,

“உங்களுக்கு என்னை பிடிச்சி இருக்கா...?” கேட்டாள்.

“ம்ம்ம்... கேகேவுடன் உன்னை அடிக்கடி பார்ப்பேன்... அப்பவே உன் மேல ஒரு விருப்பு... ஆனா முறைப்படி வரணும் இல்லையா...? அதான் அம்மா கிட்ட சொல்லி இந்த ஏற்பாடு பண்ணேன்...” என்றான்.

அவனது பதிலில் ஆசையுடன் நிமிர்ந்து பார்த்தாள் அவனை.

“நிஜமாவா...?”

“ம்ம்ம்... உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்னோட பூ முகம் அதை விட ரொம்ப பிடிக்கும்... ஒரு டைம் நீ எனக்கு ஹெல்ப் பண்ண” என்றான்.

அதில் வியந்து “எப்போ...”

“உன் காலேஜ் டைம்ல... சம் ஆக்சிடென்ட். அப்போ ஓடி வந்து தண்ணி குடுத்து, பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போன..” என்றான் புன்னகையுடன்.

அந்த சம்பவம் அவளுக்கு நினைவே இல்லை. அதை அவள் சொல்லவும் செய்தாள்.

“பரவால.. நோ ப்ராப்ளம்... பட் என்னை பிடிச்சி இருக்கு தானே...?” எதிர்பார்ப்புடன் கேட்டவனை மறுக்க எந்த காரணமும் இல்லாமல் போக,

“ம்ம்... ரொம்ப பிடிச்சி இருக்கு...” என்றவள் உள்ளே ஓடி போய்விட்டாள்.

அதில் லேசாய் ஏமாற்றமனாலும் அவளது வெட்கம் அவனை நிறைவு செய்தது..

குருவிற்கும் சதிக்கும் இந்த நினைவுகள் வந்து போக சதியின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

அவள் எதற்காக கண்ணீர் விடுகிறாள் என்று அறியாதவனா அவன்..

யாவரும் அறியாமல் சதியின் கரத்தை இறுக்கி பிடித்து ஆறுதல் படுத்த முனைந்தான். ஆனால் அவ்வளவு எளிதாக அடங்கி விடுமா அவளது தவிப்பு.

சதியின் முகம் இயல்புக்கு வர மறுக்கவே ஒரு கட்டத்துக்கு மேல் போருக்க முடியாமல் தன் கார் ஓட்டுனருக்கு பேசி காரை எடுத்து வர சொன்னவன்,

“சாரி... அவசரமான வேலைகள் இருக்கு... கேகேவும் இங்க வந்துட்டதால அங்க எல்லாமே அப்படி அப்படியே இருக்கும்.. அதனால நானும் சதியும் கிளம்புறோம்... மச்சான் நீ இருந்து முடிச்சி குடுத்துட்டு அப்புறமா வாடா... நான் அங்க எல்லாத்தையும் பார்த்துக்குறேன்...” என்று அனைவரிடமும் சொல்லி, கேக்கேவிடம் முடித்தவன் விடைபெற்றுக்கொண்டு சதியுடன் சென்றுவிட்டான்.

சதியிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டார் ராதிகா..

“நானே வச்சுக்குறேன் அத்தை..” என்று சொல்ல,

“நீ அங்க போய் வேலையை பாரு. இங்க தான் உன் அம்மாவும் இருக்கால்ல... ஒண்ணும் பிரச்சனையை இல்ல... நாங்க பார்த்துக்குறோம்...” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

வேகமாய் காரை ஓட்டியவன் தன் நடன அரங்கிற்குள் வந்து ஒரு பார்வை பார்த்தவன் அனைவரும் ரிகசலில் இருப்பதை பார்த்து எல்லாமே சரியாக நடக்கவும், சதியை யாரும் காணமல் தன் தனிப்பட்ட அரங்கிற்குள் அழைத்து சென்றான்.

அடுத்த நொடி அவனது நெஞ்சில் புதைந்து அழுதாள் சதி...

அவளது அழுகை அவனுக்கு பெரும் பாரத்தை கொடுக்க,

“சதி ப்ளீஸ் டி... அழாத... நீ அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...” மெல்ல அவளை ஆறுதல் படுத்த பார்த்தன்.

“ஏன் மாமா எனக்கு மட்டும் எதுவுமே நடக்கல...” வேதனையுடன் கேட்டவளை அதே குறையாத வேதனையுடன் பார்த்தான் குரு...

“எனக்கும் இதெல்லம் நடக்கணும்னு ஆசை இருக்கும் தானே... ஏன் என்னோட ஆசையை யாரும் புரிஞ்சிக்கல...” கண்ணீருடன் கேட்டவளின் மன குமுறல்கள் அவனை இன்னும் வேதனை படுத்தியது...

“நீங்க கூட என்னை ஒரு பொருட்டா எடுத்துக்கல தானே... ஐ ஹேட் யூ... போடா... நீயும் என்னை புருஞ்சிக்க வேணாம்... எனக்கு யாருமே வேணாம்... போ... போடா..” என்று அவனை தள்ளிவிட்டாள்.

ஆனால் அவளிடமிருந்து விலகாமல் இன்னும் இறுக்கி அணைத்தவன் அவளது புலம்பலை கேட்டு மனம் நொந்தவன் அவளை சீர் படுத்துவதற்காக அவளது இதழ்களை சிறை செய்தான்.

அதை கூட உணர முடியாமல் அவளது ஏமாற்றம் அவளை வெகுவாக தாக்கி இருந்தது...

இது வரை யாரிடமும் அதை காட்டிக்கொண்டது இல்லை.. ஏனோ குருவிடம் மட்டும் அதை மறைத்து வைக்க அவளால் முடியவில்லை.

உரிமை உள்ள இடத்தில் தானே எதுவுமே செல்லுபடியாகும்... அதே போல் தன் கோவம், ஆத்திரம், ஏமாற்றம் அனைத்தையும் அவனிடம் கொட்டி கவிழ்த்தாள் சதி...

 

Loading spinner
Quote
Topic starter Posted : June 1, 2025 9:25 am
(@gowri)
Estimable Member

சதி ஏன் இப்படி அழரா????

Loading spinner
ReplyQuote
Posted : June 12, 2025 11:32 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top