இது நாள் வரை தப்பித்துக்கொண்டு இருந்த சதிக்கு இன்று அவனிடம் வசமாக சிக்க இருக்கிறோம் என்பது நன்கு தெரிய, படபடப்பில் உள்ளங்கையில் விரல்களை மடக்கி கை நகங்களை அழுத்தி காயப்படுத்திக் கொண்டு இருந்தாள்.
ராக்கிக்கு மட்டும் அவளது போராட்டம் புரிய, மெல்ல அவளின் காதோரம் சரிந்து,
“என்ன இன்னைக்கும் ருத்திர தாண்டவமா...?” என்று கேட்டான்.
“டேய் நீ வேற சும்மா இருடா... அவரு வந்துட போறாரு...” படபடத்து போனாள்.
“நான் சும்மா தான் இருக்கேன். நீங்க தான் சும்மா இருக்காம எப்போ பாரு வம்பிழுத்துக்கிட்டே இருக்கீங்க.”
“டேய் ப்ளீஸ் டா... கொஞ்ச நேரம் வாயை மூடு...”
“அதெல்லாம் முடியாது... நேக்கா உன் புருஷன் கிட்ட இந்த பதினைஞ்சு நாளும் கோத்து விட்டில்ல... அதுக்கு நீ என் பேச்சை கேட்டு தான் ஆகணும்...” என்றான்.
“உன் பேச்சை கேக்குறதுக்கு பேசாம நானே இந்த பதினைஞ்சு நாளும் அவருக்கு அசிஸ்ட் பண்ணி இருக்கலாம்...”
“பண்ணியிருக்க வேண்டியது தானே... நானா கேட்டேன்... வலுக்கட்டாயமா என்னை அனுப்பி வச்சு இருக்கும் போதே இதெல்லாம் நீ யோசிச்சு இருக்கணும் செல்லம்...” என்றபோதே குரு ஒரு செருமலோடு வர, அதில் பயந்தவன்,
“ஆத்தி இவரு எப்போ வந்தாரு... இவருக்கு முன்னாடி செல்லம்னு வேற பேசிட்டன்னே... அதுக்கும் சேர்த்து வச்சி காலை ஓடிப்பாரே...” புலம்பியவன்,
“எரும உன் ஆளு வந்தா சொல்லமாட்டியா... இப்படியா கோர்த்து விடுவ...”
“டேய் எனக்கே தெரியாது டா... இவரு இப்படி வந்து பயம் காட்டுவாருன்னு...” என்று பல்லை கடித்து உதடுகள் அசையாமல் சொன்னாள்..
“அது என்னவோ போ... புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து என்னை நல்லா பந்தாடுறீங்க...” என்ற போதே குரு அவனை பார்த்து முறைத்தான்.
“அய்யய்யோ என்னைய தான் பார்க்கிறாரு... போச்சு வச்சு செய்ய போறாரே...” வாய்விட்டே முனகிவிட்டான்.
அவன் சொல்லி முடிக்கவில்லை.
“ராக்கி உன் ஸ்டுடண்ட்சை முன்னாடி வர சொல்லு...” என்று அந்த அரங்கமே கேட்குமாறு கம்பிரமாக சொன்னான்.
“நான் சொல்லல்ல... வச்சி செய்ய போறாருன்னு...” புலம்பியபடியே
“வாங்க...” என்று தன் மாணவர்களுடன் எல்லோரையும் விட்டு மூன்றடி முன்னாடி வந்து நின்றான்.
“மியூசிக்...” என்றான் ஒற்றை சொல்லாக.
அதை தொடர்ந்து பெல்லி டான்சுக்கு உரிய சங்கீதம் ஒலிக்க ஆரம்பிக்க, சட்டென்று மாணவர்கள் ஆட தொடங்கினார்கள்... அவர்கள் ஆடிய ஆட்டத்தில் ஒரு சில பிழைகள் இருந்ததே தவிர மற்றபடி பெரிதாக எந்த குறையும் இல்லை...
அதை உணர்ந்தவன் திரும்பி சதியை பார்த்தான்... நீண்ட நாட்களுக்கு பிறகான சந்திப்பு. அதுவும் இத்தனை பேரின் மத்தியிலும்... சதிக்கு அவனது பார்வை படபடப்பை கொடுத்தது...
அவன் பார்க்கும் போது அவள் தலையை குனிந்துக்கொண்டு இல்லாமல் அவனை தான் பார்த்தாள். அவளுக்கும் இது நீண்ட இடைவெளி தானே... அதனால் பார்த்தாள்.
ஆனால் அதில் சிறிது கலக்கமே இருந்தது... இந்த மீட்டிங் சரிவர முடியணுமே என்று... குருவின் கோவம் அவள் அறிந்தது தான். அதனால் தான் கலக்கமடைந்தாள்.
ராக்கியின் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தது சதி தான். அதனால் தான் அவளை பார்த்தான். ஏனெனில் இந்த பதினைந்து நாளும் ராக்கிக்கு பதிலாக அவள் தான் சொல்லிக்கொடுத்தாள்.
அதனாலே குருவின் பார்வை சதியிடம் நிலைத்தது...
ராக்கிக்கே ஆச்சரியமாய் இருந்தது. அவனுடைய மாண்வர்களா இந்த அளவிற்கு பெர்பாம் பண்ணுவது என்று...
அப்படியே நகர்ந்து நகர்ந்து சதியிடம் வந்தவன்,
“செல்லக்குட்டி ரொம்ப தேங்க்ஸ்... பசங்களை இந்த அளவு ட்ரைனிங் குடுத்ததுக்கு. நீ இல்லன்னா கண்டிப்பா நான் அவருக்கிட்ட திட்டு வாங்குவது உறுதி..” என்றான் நெகிழ்வாக...
“இல்லன்னாலும் சார் இப்போ திட்டு வாங்க தான் போறீங்க...” என்றாள் சிரிப்புடன்.
“அதை விடு, அது எப்பொழுதும் வாங்குறது தானே... அதை பார்த்துக்கலாம்...” என்று சிரித்தவன் குருவை பார்க்க, குரு அவனை முறைத்துக்கொண்டு இருந்தான்.
“அய்யய்யோ...” அலறியவன் வேகமாய் சதியை விட்டு நகர்ந்து நின்றான் தன் வாலை சுருட்டிக்கொண்டு.
பசங்க ஆடி முடித்தவுடன், குரு ராக்கியை பார்த்துக்கொண்டே சாரி முறைத்துக்கொண்டே,
“பசங்க நல்லா ஆடுறாங்க... ஆனா எனக்கு தெரிஞ்சு கோச் சரியில்லன்னு நினைக்கிறேன்... ராக்கி உன் டீம்ல நீ தான் சொதப்புற... சோ...” என்று முடிக்கும் முன்பே பசங்க அனைவரும் மென்மையாய் சிரிக்க, அதை பார்த்தவன்,
“டேய் தடி மாடுங்களா... வாயை மூடுங்கடா... அப்புறம் அண்ணன் நோன்னேன்னு வந்தீங்க. யாருக்கிட்டயும் பேச மாட்டேன் பாத்துக்கங்க...” கடுப்படித்தவன்,
“குரு அப்படியெல்லாம் எதுவும் இல்ல... கொஞ்சம் ஷூட்டிங் போனதுல கவன குறைவா இருந்துட்டேன்... இனிமே இப்படியெல்லாம் நடக்காது... பைனல்ல பாருங்க பசங்க எப்படி ஆடுவாங்கன்னு...” என்று குருவின் கையில் காலில் விழுந்து வேறு எதையும் இழுத்து வைக்காமல் வெற்றிகரமாக பின் வாங்கினான். அவனை தொடர்ந்து மீதி இருந்த எட்டு ஆசிரியரின் மாணவர்களை ஆட சொல்லி பார்த்தவன், சில பல அறிவுரைகளை வழங்கிவிட்டு, சதியை பார்த்தான்.
அவனது பார்வையிலே தெரிந்தது இன்று அவனிடம் கொத்தாக மாட்டினேன் என்று... உள்ளூர எழுந்த படபடப்புடனே தன் மாணவர்களை கண்களாலே முன்னாடி வந்து நிற்க சொன்னாள்.
இன்று அவளுக்கு பரதநாட்டிய ஒத்திகை இருந்ததால் புடவையில் இருந்தாள்... காதிலிருந்து முத்து தோடும், கழுத்தில் சின்னதாய் ஒரு முத்து வடமும், கைகளில் கண்ணாடி வளையல்களோடு முத்து வைத்த வளையல்களும் சேர்த்து அணிந்து இருந்தாள்...
தலைக்கு குளித்து முடியை அழகாக பின்னி அதில் மல்லி பூவை முத்து போலவே சூடி இருந்தாள்.
அதில் குருவின் மனம் பித்தம் கொண்டது... ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் கம்பீரமாகவே அமர்ந்து இருந்தான்.
பரதநாட்டியத்திற்கு ஏற்றார் போல அவர்கள் ஆட, அதிலிருந்த தெளிவை உணர்ந்தவன் மனதுக்குள்ளே அவளை மெச்சிக்கொண்டான்.
இருந்தாலும் அப்படியே விட்டால் அது குரு இல்லையே... நிறைய மாணவர்கள் இருந்ததில் இரு நபரை மட்டும் அழைத்து ஒரு சிச்சுவேசன் சொல்லி பாடலை சொல்ல, அடுத்த நிமிடம் பாடல் அந்த அரங்கில் ஒலிக்க, மாணவர்கள் இருவரும் அழகாக நாட்டியம் ஆட தொடங்கினார்கள்...
அப்பொழுதும் அவனால் சின்ன ஒரு தவறை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக இருந்தது அவர்களது நடனம்...
அடுத்த முறை வேறு இருவரை அழைத்து அடவு பிடிக்க சொல்லி அதற்கு ஆடுமாறு சொல்ல, அதற்கும் சரியாக முத்திரை பிடித்து, அளவீடுகளையும் சரியாக பிடித்த மாணவர்களை உள்ளுக்குள் மெச்சியவன், சட்டென்று சதியை
அழைத்து புடவை கொசுவம் விரிந்து தாமரை போல விரிந்து ஆட சொல்ல, இது பேசிக் இதை போய் ஆட சொல்றாரே என்று சட்டென்று அதற்குரிய அடைவை எடுத்து அவள் இரு நொடியில் அதை செய்து முடித்தாள்.
அதன் தொடர்ச்சியாக நட்டுவங்கத்தை தட்டி அவன் ஜதி சொல்ல சட்டென்று திகைத்தாள்.
தலக்கு தக்க தக்க தகிட தோம்...
நம் தம் நம் தம்...
தாளம் தம் த... நம் த... நம் த...
தாளம் நம் தாளம் நம் த...
தாளம் த... தாளம் நம் த...
நம் தாளம் த...
தாளம் தகிட தகிட...
தாளம் தோம் நங்கிட்... தாளம் தோம் நங்கிட்...
நட்டனம் தம்.. தாளம் தம்... நட்ட ன்னம் தம்...
நங்கி நங்கி.. நட்டட்டணம் தாளம் தம் த... இதுவே முதல் முறை அவன் எப்பொழுதும் யாருக்கும் ஜதி சொல்லவே மாட்டான்...
அதிலே திகைத்து போனவள் ஒரு சுழன்று சுழற்றி ஆடியவள் அவனை பார்த்துக்கொண்டே ஆடினாள். அதன் பின் தொடர்ச்சியாக ‘லாஸ்யா’ வுக்கு ஆட சொல்லி சொல்ல பார்வதி தேவியின் நடனத்தை மிக லாவகமாகவும் மென்மையான அசைவுகளுடனும் பதங்களுடனும் ஆட தொடங்கினாள்.
ஆடும் போது அவளிடம் பட்டு தெரிந்த நவரசங்களும், அழகும் அவனை கொள்ளை கொள்ள அத்துடன் ஜதி சொல்லுவதை நிறுத்திவிட்டு,
“பைனல்க்கு தயாராக இருங்க...” என்று பொதுவாக உரைத்துவிட்டு விருட்டென்று கிளம்பிவிட்டான்.
அவன் அந்த பக்கம் சென்றவுடன் வேகமாய் ராக்கி அவளிடம் வந்து “அப்போ இது உனக்கான டெஸ்ட் தான்... பசங்கல சாக்கா வச்சி ரெண்டு பேரும் அடவு கட்டுறீங்க இல்லையா...?” என்று கேலி பண்ண, அவனோடு சேர்ந்து மற்ற ஆசிரியர்களும் அவளை கிண்டல் பண்ண,
“ஷ்.. பசங்களுக்கு முன்னாடி இதென்ன பேச்சு...” கண்டித்தவள், இது தான் சாக்கு என்று ஓடிவிட்டாள்.
அவள் ஓடியதை பார்த்தவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது. ஓரளவு குருவுக்கும் சதிக்கும் இடையே என்ன இருக்கிறது என்பதை அறிந்து தான் வைத்து இருக்கிறார்கள்.
அதில் ராக்கிக்கு கொஞ்சம் அதிகமே தெரியும். அதோடு ராக்கி குருவின் நண்பன் வேறு... ஆனால் எங்கும் காட்டிக்கொள்ள மாட்டான்.
ஏன் என்று சதி கேட்டால்,
“அவன் குரு ஸ்தானத்தில் இருக்கிறான். அவனை போய் கலைக்கூடத்தில் மரியாதையாக பேசாமல் போனால் அனைவரும் அதையே பாலோ பண்ணுவார்கள்.”
“நான் வீட்டுக்கு வரும் போது அவனிடம் நண்பனாக தானே இருக்கிறேன். இதை இப்படியே விடு...” என்று ஏதாவது சொல்லுவான்.
குரு எதையும் கண்டு கொள்ள மாட்டான். ஆரம்பத்தில் ராக்கியினை கண்டு முறைத்தான். அதன் பின்பு அவனை மாற்ற முடியாமல் அவன் போக்கிலே விட்டுவிட்டான்.
அதோடு கடந்த இரண்டு வருட சம்பவங்களால் அவனது இந்த இயல்பு இறுக்கமாகி போனது... அதனால் ராக்கியிடம் இன்னுமே ஒதுங்கி போனான்.
அது ராக்கியிடம் என்று மட்டும் சொல்ல முடியாது... மொத்தமாகவே தன்னை தனிமை படுத்திக்கொண்டான்.
அவனை எண்ணி பெருமூச்சு ஒன்றை விட்ட ராக்கி தன் மாணவர்களுக்கு ஒல்லி பெல்லி நடனத்தை பயிற்றுவிக்க சென்றான்.
அன்றிரவு ஷூட்டிங் எதுவும் இல்லாமல் போக, வீடு திரும்பினான் குரு.
வந்ததே தாமதம் என்பதால் குளித்துவிட்டு குழந்தையை பார்க்கலாம் என்று குளித்துவிட்டு உணவு உண்டுவிட்டு குழந்தையை தேடி சென்றான்.
வீடே நன்கு உறக்கத்தில் இருக்க குருவின் கால்கள் சதியின் அறையை தேடி நடந்தது.. அங்கு குழந்தையும் அவளும் நன்கு உறக்கத்தில் இருந்தார்கள்.
அவர்களை கலைக்க மனம் வரவில்லை.. ஆனால் அப்படியே விட மனமும் வரவில்லை. இத்தனை நாள் எதற்காக தன்னை விலக்கி நிறுத்தினாள் என்று தெரிந்துக்கொண்டே ஆகவேண்டும் என்று வெறி இருந்தது அவனிடம்...
இத்தனை நாள் அதை அடக்கி வைத்ததே பெரிய விஷயம்... இன்றும் அப்படியே அடக்க தான் நினைத்தான். ஆனால் அதற்க்கு விடாமல் காலையிலே தனது நாட்டியத்தில் உசுப்பேற்றி விட்டுவிட்டாள் சதி.
அதனாலே அவளை தேடி வந்துவிட்டான். வந்தவன் இருவரும் கட்டிக்கொண்டு இருப்பதை பார்த்து புகைச்சலாய் போனது...
மெல்ல அவளை உசுப்பினான் குரு... அவனது தொடுகையில் மெல்ல திரும்பியவள் யாரென்று பார்த்தாள். அங்கு குரு இருக்க கண்டு வேகமாய் எழுந்தாள்.
“எதுவும் வேண்டுமா...? இந்த நேரத்துல...” என்று கேட்டவள் அதன் பின்பே நிதானித்து, “குழந்தை வேண்டுமா...?” என்று கேட்டவள் குழந்தையை தூக்க குனிய வேகமாய் அவளது கரத்தை பற்றி தடுத்தவன்,
“நீ தான் வேண்டும்... தருவியா...?” என்று நிதானமற்ற குரலோடு கேட்டவனை கண்டு திகைத்து போனாள்.
அவளது அதிர்ந்த பார்வையை கண்டு சினம் எழுந்தது சட்டென்று...
“எனக்கு உரிமையானதை தான் கேட்கிறேன்... மறுக்க உனக்கு அதிகாரம் இல்லை...” என்றவன் எரிந்துக்கொண்டு இருந்த விளக்கை அணைத்தவன் அவள் பேச வருவதை காதிலே வாங்கிக்கொள்ளாமல் தனக்கு என்ன வேண்டுமோ அதை அவளிடம் சாதிக்க பார்த்தான்.
அதற்க்கு விடாமல் தன்னிடமிருந்து அவனை பிரித்து தள்ளி விட்டவள் கீழே அமர்ந்து கட்டிலில் சாய்ந்துக்கொண்டாள். அவளது பிடியிலிருந்து நழுவியவன் மீண்டும் அவளிடமே வந்து அமர, வேகமாய் அங்கிருந்து எழ பார்த்தாள்.
“என்ன தான்டி உன் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்க... மனுசனை கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டியா...?”
“நான் புரிஞ்சுக்கிறேன்... ஆனா நீங்க என்னை புரிஞ்சி நடந்துக்கிறீங்களா...? சொல்லுங்க...”
“என்ன உன்னை புரிஞ்சுக்கல... நீ தான்டி என்னை ஒவ்வொரு முறையும் சாகடிக்கிற...” கடுப்படித்தான்.
“ஏன் சொல்ல மாட்டீங்க... நீங்க கேட்ட உடனே என்னை ஒவ்வொரு முறையும் கொடுத்தேன்ல நீங்க அப்படி தான் பேசுவீங்க...” இவளும் பதிலுக்கு பேச,
“வேணாண்டி ஏற்கனவே நான் கடுப்புல இருக்கேன்... தேவையில்லாம...” முடிக்கும் முன்பே,
“சரி அதை எல்லாத்தையும் விடுங்க... என்னை கலந்துட்டு எதுக்கு அன்னைக்கு அவ்வளவு வேதனை பட்டீங்க... நானாவா உங்களை அணுகினேன்... நீங்களா வந்து...” முடிக்கும் முன்பே கண்கள் சிவக்க அவளது இதழ்களை கவ்விக்கொண்டான் முரட்டு தனமாக...
அவனது வன்மையில் கலங்கி போனவள் தடுமாறி போனாள்.
கிடைத்த இடைவெளியில் “மாமா...” என்றாள்.
“ம்ம்ம். ரொம்ப நல்லா என்னை தெரிஞ்சி வச்சு இருக்கடி.. ரொம்ப சந்தோஷம்..” என்று எழுந்து செல்ல, அவனது கையை பற்றி தடுத்தவள்,
“அப்புறம் எதுக்கு நீங்க மொட்டை மாடிக்கு போனீங்க...” தயக்கத்துடன் கேட்டாள்.
“ஏன் இதை நீ அப்பவே கேட்டு இருந்திருக்க வேண்டியது தானே...” சுல்லென்று கேட்டான்.
“இல்ல... அப்போ நீங்க பீல் பண்ற மாதிரி இருந்தது... அதான்” தயக்கத்துடன் இழுத்தாள்.
“ஓ... அப்போ இவ்வளவு நாளும் மேடம் அதுக்காக தான் என்கிட்டே தள்ளி இருந்தீங்க, இல்ல..” என்று முழு கோவத்தையும் அவளிடம் காட்டியவன்,
அவள் அணிந்து இருந்த புடைவையை விலக்கி அவளது வயிற்றில் கிழித்து தையல் போட்டு இருந்த வடுவை காட்டினான் வேதனையுடன்.
“இதனால தான்டி என்னால் நிம்மதியா இருக்க முடியல அன்னைக்கு... ஆனா நீ... ச்சீ போடி...” என்றவன் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.
அவன் விட்ட இடத்தில் கண்கள் கலங்க அப்படியே இருந்தவளுக்கு தன்னவனை பற்றி தவறாய் எண்ணி விட்டோமே என்று வேதனையாய் இருந்தது...
எதை எதோடு முடிச்சி போட்டு இப்பொழுது மறுபடியும் தன்னவனை கோவப்படுத்தி விட்டோமே என்று கலங்கி போனாள்.
இவ ஏதோ சம்பவம் பண்ணி இருக்கா போல....அது தான் கோவமா இருக்கான் குரு.....
என்னவா இருக்கும்?????