Notifications
Clear all

அத்தியாயம் 8

 
Admin
(@ramya-devi)
Member Admin

குருவின் ஏமாற்றம் நிறைந்த முகத்தை ஏற்க முடியாமல் குழந்தையை அவனிடமே கொடுப்பதற்காக அவனது அறைக்கு வந்தாள்.

வந்தவள் அவனருகில் குழந்தையை கிடைத்த...

குரு, “வேண்டாம்... நீயே தூக்கிட்டு போ...” என்று சொல்லி குழந்தையை மறுக்க சதிக்கு வேதனையாய் போனது.

“குழந்தை தெரியாம பண்ணதுக்கு எதுக்கு இவ்வளவு கோவம் வருது... என் மேல கோவம் னா என்கிட்டே காட்டுங்க... இப்போ என்ன நான் இந்த வீட்டை விட்டு போகணும் அது தானே... நான் போறேன். அதுக்காக குழந்தையை தள்ளி வைக்காதீங்க... இது வரை நீங்க தள்ளி வச்ச உறவாலையே உங்க பிரிவை தாங்கிக்க முடியல...”

“இதுல இந்த பச்சை பிள்ளையையும் வதைக்காதீங்க.. நான் நாளைக்கு என் வீட்டுக்கு போயிடுறேன்...” என்று குழந்தையை அவனுக்கு அருகில் போட்டுவிட்டு அவள் திரும்பி போக முனைந்தாள்.

அப்பொழுது படுக்கைக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருந்த அவனது காலை கவனிக்காமல் விலகி சென்றவள் அவனது கால் தடுத்து பட்டென்று அவனின் மீதே விழுந்து வைத்தாள்... அவள் அப்படி திடிரென்று விழுவாள் என்று எதிர் பாராதவன் திகைத்து தான் போனான்.

“ஏய்...” என்று தடுக்க நினைக்கும் முன்பே அவள் அவன் மீது விழுந்து இருந்தாள். அந்த சமயம் பார்த்து கைகள் இரண்டும் போர்வைக்குள் இருக்க அதை இழுத்து கைகளை வெளியே எடுப்பதற்குள் கண்ரோல் இல்லாமல் இருவரது உடலும் ஒன்றோடு ஒன்று நேரடியாக மோதியது...

அதில் திகைத்து போன சதி வேகமாய் எழ முயன்றாள். ஆனால் அவள் விழுவதற்கும் குரு போர்வையை விலக்குவதற்கும் சரியாக இருந்ததால் அவளும் போர்வையின் உள்ளே மாட்டிக்கொண்டாள்.

தன் மேல் கிடந்த போர்வையை எடுக்க பார்த்தவள் அது குருவின் காலில் பாதி மாட்டியதோடு இருக்க, முடியாமல் அவனை பாவமாய் பார்த்தாள்.

அப்பொழுது தான் குருவின் ஆழமான பார்வையை உணர்ந்தாள். அவளின் பார்வையை தன் கண்களால் கவ்விக்கொண்டவன் விழிகளை அசைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகான இந்த பார்வையை பார்த்த சதிக்கு அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சி மலர்ந்தது.

ஒட்டி நின்ற நிலையில் சதிக்கு மூச்சியடைக்க, வேக வேகமாய் மூச்சு வாங்கினாள்.

அவளது இமைகள் ஒன்றோடு ஒன்று படபடப்பதை பார்த்தவனுக்கு என்னவோ போல் ஆனது... தர்சமயமாய் நிகழ்வது போல பட்டென்று அவளது இதழை சிறை செய்தான்.

அதில் ‘ஹக்...’ என்ற ஒலி வந்தது சதியிடமிருந்து... மெல்ல மெல்ல குருவின் கைகள் அவளின் இடையை வளைத்து இன்னும் தன்னோடு நெருக்கிக்கொள்ள முனைந்தது...

தடைகலற்ற ஏகாந்த நேரத்தில் இருவரும் கட்டுண்டு அந்த நேர இன்பத்தில் துயித்து இருந்தார்கள். குரு மெல்ல மெல்ல சதியை ஆட்கொள்ள முயன்றான்.

இவ்வளவு நெருக்கம் அவளிடம் இந்த ஆறு மாத காலத்தில் ஏற்படாததில் தள்ளியே இருந்தான். ஆனால் அவனது விரதத்துக்கு முற்று புள்ளி வைப்பது போல சதி அவன் மீது விழவும் தன் விரதத்தை விடுத்து சதியை ஆலிங்கனம் செய்ய தொடங்கினான்...

அவனிடம் மறுத்து கூற எந்த தடையும் இல்லாததால் அவனிடம் முழு சரணாகதி அடைந்தாள். அவளின் ஒத்துழைப்பை கண்டு மனம் மகிழ்ச்சி கொண்டவன் இத்தனை நாள் அடக்கி வைத்த ஆசைக்கு விடுதலை கொடுத்து காட்டாற்று வெள்ளமாய் அவளை ஆக்கிரமிக்க தொடங்கினான்.

அவனது வேகத்தை கண்டு சற்றே மிரண்டாலும் அவனிடம் தன்னை முழுமையாக கொடுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

“என்னை பாருடி...” காதோரம் குரு சொல்ல,

“ம்ஹும்...” என்பது போல தலையை ஆட்டினாள்.

“ப்ச் பாருடி...” என்றவன் வலிக்க அவளது கன்னத்தை கடித்து வைத்தான்.

அதில் அவனை பட்டென்று பார்த்தவள், “வலிக்குதுடா...” சிணுங்கலோடு சொல்ல,

அதை ஆழமாக ரசித்தவன் “அப்போ என்னை பார்த்துக்கிட்டே இருடி...” என்று சொல்லி அவளின் இதழ்களில் முத்தமிட்டான். மெல்லிய உணர்வுகளால் அவளை ஆட்கொள்ள சுகமாய் அவனிடத்தில் தொலைந்து போனாள் சதி.

நீண்ட நாட்களுக்கு பின்னான தாம்பத்தியத்தில் சதிக்கு வலி எடுக்கவே தலையணையை பற்றுகோலாய் கொண்டு அதில் முகம் புதைத்து தன் வலியை போக்க நினைத்தாள்.

ஆனால் அதற்கு அவன் விடாமல் தன் தோளை அவளுக்கு கொடுத்து காதோரம் சரிந்து அந்தரங்கமாய் தனது ஆசையை சொல்ல, அவனது விருப்பபடியே அவனது தோளை தன் பற்களால் கடித்து தன் வலியை தாங்கிக்கொண்டாள்.

அவள் ஏற்படுத்திய காயம் அவனுக்கு வலித்தது என்றாலும், அவளால் அந்த நிமிடம் தாங்கிய வலியை விட இது சிறிது தான் என்ற எண்ணம் தோன்றி தன்னவளை அதிகமாக நேசித்தான்.

அவளது ஒவ்வொரு உணர்வுகளையும் தன்னுள் கொண்டு வந்து உள்ளுக்குள் இரசித்தவன், முழுவதுமாக ஆட்கொண்டான்.

அவன் ஆட்கொண்டு பக்கம் சரிந்த போது அவளின் நெற்றியில் முத்தமிட்டு தன் நிறைவை உணர்த்தியவன், தூங்கி போனான்...

அவனையே பார்த்தவள் அவன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பின் அவனது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, குழந்தைக்கு பசியற்றிவிட்டு, கீழிறங்கி படுத்துவிட்டாள் தன் உடைகளை சரியாக்கிக்கொண்டு.

பத்து நிமிடம் கூட இருந்து இருக்காது குரு தன் அருகில் தடவி பார்த்தான் குழந்தை மட்டும் தான் இருந்தான். வேகமாய் எழுந்து சதியை தேடி பார்த்தான்.

அவனது கட்டிலுக்கு கீழே படுத்து இருந்தவளை கண்டவனுக்கு சொல்லரியாத நிம்மதி எழ, குழந்தைக்கு இந்த பக்கமும் ஒரு தலையணையை எடுத்து வைத்தவன், அவளுடன் கீழே படுத்துக்கொண்டான்.

கீழே படுத்த போதும் தூக்கம் வராமல் போக, தன்னவளின் இடையில் கையிட்டு தன் புறம் திருப்பினான். அவனது தொடுகையில் கண் விழித்தவள்,

“என்ன மாமா...” என்று கேட்ட படியே இயல்பு போல அவனது கையில் தலை வைத்து நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டு தூங்க தொடங்க, குருவுக்கு தான் அவஸ்த்தையாய் போனது.

தூங்குபவளை தொந்தரவு பண்ண மனம் வரவில்லை. ஆனால் அவளால் எழும் உணர்வுகளை அடக்க முடியாமல் அவளை இறுக்கி கட்டிக்கொள்ள, அதில் முற்றிலும் தன் தூக்கத்தை தொலைத்தவள், நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

அவனது கண்களில் தெரிந்த உணர்வில் அவளாகவே அவனது இதழில் தன் இதழை சேர்த்து சம்மதம் சொல்ல, அதுவரை தேக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் பொங்கி பிரவாகம் எடுக்க, பேரலையாய் அவளை தன்னுள் சுருட்டிக்கொண்டான்.

முன்பு குழந்தை அருகில் இருந்ததால் ஒருவித கட்டுப்பாட்டுடனே நடந்துக்கொண்டவன் இப்பொழுது கட்டுகலற்ற பெருங்காற்றை போல தன்னுள் இழுத்துக்கொண்டான் அவளை.

அவனது செயலில் வியப்பெய்திய சதி அவனுக்கு இணையாக செயல்பட, முற்றிலும் பித்தமாகி அவளுள் சங்கமித்தான் குரு...

அடுத்த சிறிது நேரத்திலே குழந்தை அழ, எழுந்து பார்த்தவளுக்கு குரு தன் அருகில் இல்லாததை பார்த்து மனம் கனத்து போனது. குழந்தையை கவனித்தவள் வேகமாய் அவனை தேடி பார்த்தாள்.

மொட்டை மாடியில் இருளை வெறித்துக்கொண்டு நின்றிருந்தான் குரு... அதை பார்த்தவுடனே கண்கள் கலங்கியது அவளுக்கு. சட்டென்று கதவை ஒரு தட்டு தட்டிவிட்டு விரைந்து கீழே வந்தவள் அவளுக்கு கொடுத்த கெஸ்ட் அறையில் சென்று முடங்கிக் கொண்டாள்.

அவன் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். அங்கு ஒருவரும் இல்லாமல் போக, கீழே இறங்கி வந்தான். அங்கு சதி இல்லாமல் போக, குழந்தை மட்டும் தனியாக இருப்பதை பார்த்து பார்த்து கோவம் வந்தது.

வேகமாய் கீழே வந்தான். அவளது அறை கதவு தாளிடப்பட்டு இருந்ததை கண்டு கடுப்பானவன், வேகமாய் அவளது கதவை தட்டினான்.

அவள் திறக்கவே இல்லை. கண்களில் கண்ணீர் மிதந்து இருந்தது...

அவன் தட்டும் சத்தம் கேட்டு ராதிகா வெளியே வர, சட்டென்று குரு சென்றுவிட்டான்.

‘என்ன இது ஏதோ சத்தம் கேட்டது. வந்து பார்த்தா ஒண்ணுமே இல்ல...’ என்று புலம்பியபடி மீண்டும் சென்றுவிட்டார்.

அதன் பின் மீண்டும் குரு வந்து அவளை எழுப்ப, அவளிடமிருந்து பதிலே இல்லை. கடுப்பானவன்

“இனி உன்னை திரும்பி பார்த்துட்டன்னா என்னை என்னன்னு கேளுடி...” என்றவன் போய்விட்டான்.

அவன் போன பின்பே நிம்மதி அடைந்தவள், காலையில் அனைவரும் எழுந்திரிக்கும் முன்பே கிளம்பி கலைக்கூடத்திற்கு சென்றுவிட்டாள்.

குழந்தை அவளை தேடி அழவும், ஆனந்தி வேகமாய் சதியின் அறைக்கு வந்தார்.

ஆனால் அவள் அங்கு இல்லாமல் போக, அதன் பின்பே அவளிடம் போன் போட்டு பேசி குழந்தையை கலைக்கூடத்திற்கு தூக்கிக்கொண்டு சென்றார்.

இரவிலிருந்து சதியின் நடவடிக்கையை கண்ட குருவிற்கு பெரும் கோவம் கிளர்ந்தது... அதை அவளிடம் காட்ட இவனும் கலை கூடத்திற்கு சென்றான்.

ஆனால் அவன் போகும் போதே பட இயக்குனர் அவனை ஷூட்டிங்க்கு வர சொல்லி சொல்ல, வேறு வழியில்லாமல் அங்கு சென்றான்.

அங்கு சென்றபின் சதியை எதிர் பார்த்தான். ஆனால் அவளுக்கு பதில் ராக்கியை அனுப்பி வைத்தாள் சதி. அதில் இன்னும் அவனது கோவம் கிளர்ந்து கிடந்தது...

ஷூட்டிங் வேறு இப்பொழுது முடியும், அப்பொழுது முடியும் என்று பார்த்துக்கொண்டு இருந்த குரு, அது முடியாமல் விடியற்காலை வரை இழுத்துக்கொண்டே செல்ல கோவத்தின் முழு உச்சியில் இருந்தான்.

அந்த கோவத்தோடு வீட்டிற்கு வந்தவன் சதியும் குழந்தையும் தேடினான். இருவரும் இல்லாததை கண்டவனுக்கு இன்னும் கோவம் பெருகியது.

தன் அம்மாவிடம் குழந்தை எங்கே என்று கேட்டான்.

அவரோ பாதி தூக்கத்தில்

“தம்பியும் ஆனந்தியும் வீட்டுக்கு போறேன்னு சொல்லவும், இவங்க ரெண்டு பேரும் பொயிட்டு காலையில வரதா சொன்னாங்க டா.. நான் தான் சரி ரெண்டு நாள் இருந்துட்டு வரட்டும்னு அனுப்பி வச்சேன்...” என்றுவிட்டு விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார் ஹால் சோபாவிலே...

இதுவரை அவளுக்கு அழைக்கதவன் முதல் முறை அவளை அழைத்தான் போனில்.

தூக்கம் கலையாமலே “ஹலோ...” என்று சதியின் குரல் கேட்க,

இது வரை சண்டை போட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் அவளே உன்னை ஒதுக்கும் போது நீயேன் அவளை தேடி போக வேண்டும் என்கிற வீராப்பு எழ, போனை கட் பண்ணிவிட்டு ஆத்திரம் தீர குளிக்க சென்றான்...

நேற்று நடந்த கூடல் கண் முன் எழ, முயன்று அதை அடக்கிவிட்டு கட்டிலில் வந்து பொத்தென்று விழுந்தான்...

அந்த கட்டிலில் கூட அவளது வாசம் வீசுவது போல இருக்க, ஆழ்ந்து சுவாசித்தான் அவளது வாசனையை...

கிட்டதட்ட அடுத்த நான்கு நாட்களும் குரு ஷூட்டிங்கில் பிசியாக இருக்க, சதி அவனை எதிர்க்கொள்ள முடியாமல் தனித்து ஒதுங்கி போனாள்.

அதில் இன்னும் இன்னும் ஆத்திரம் வந்தது. ஆனால் அதை கண்டு கொள்ளாமல் தன் வேலையை சரிவர பார்த்தான்.

இருவருமிடையே குழந்தை ராதிகாவினால் பயணப்பட்டுக்கொண்டு இருந்தான். அதில் ஒரளவு பெற்றவர்களுக்கு நிம்மதி என்றாலும், குழந்தையின் மீது வரும் குருவின் வாசனையை சதி தேடுவதும், சதியின் பால் மனத்தை குழந்தையிடம் குரு தேடுவமாய் பொழுதுகள் நகர்ந்துக்கொண்டு இருந்தது...

கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஓடி இருக்க, குரு குடுத்த பதினைந்து நாட்கள் நிறைவடைந்து இருந்ததால், மாணவர்களுக்கும் சரி சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் சரி பெரும் பதட்டமாய் போனது...

ஏனெனில் பதினோரு மணி போல அனைவரையும் கலைக்கூடத்தில் இருந்த பிரம்மாண்டமான நடன அரங்குக்கு வர செய்து இருந்தான்.

Loading spinner
Quote
Topic starter Posted : June 1, 2025 9:21 am
(@gowri)
Estimable Member

இன்ன வரை இவன் முறுக்கினான்....

இப்ப இவ turn போல 🤷🤷🤷🤷

போச்சி போச்சி மாட்டிடாங்க

Loading spinner
ReplyQuote
Posted : June 4, 2025 3:12 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top