Notifications
Clear all

அத்தியாயம் 6

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஒரு வழியாக அன்றைய பொழுது முடிய, இரவு குழந்தையை சதியிடம் குடுக்குமாறு சொல்ல போனார் ராதிகா அவனது அறைக்கு...

அங்கு குரு தன் ஆறு மாத மகனை தோளில் சுமந்துக்கொண்டு

“இது தாண்டா உன் அம்மா... அம்மா எப்படி இருக்கா பாரு... மூஞ்சை உர்ருன்னு வச்சுக்கிட்டு... ஒரே ஒரு செல்பி தாண்டா எடுத்தேன். அதுக்குன்னு இப்படியா மூஞ்சை வச்சுக்குவா..” என்றவன் அந்த புகைப்படத்தை ரசித்து பார்த்தான்.

அதிலிருந்த பெண்ணவள் மைதா மாவு அபிசேகத்தில் தன் அருகில் இருந்த குருவை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள்..

“என்ன தான் சொல்லு, உன் அம்மா தனி அழகுடா...” என்று புகைப்படத்தில் இருந்த பெண்ணின் உதடுகளை கில்லி முத்தம் கொடுத்தான்.

“ஹும்... உன் அம்மாவை முத்தம் குடுத்து கொஞ்சி எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா...? என் விரக தாபம் ஒவ்வொரு நாளும் ஏறிக்கிட்டே இருக்குடா தம்பி...” என்று அந்த படத்தில் இருந்த பெண்ணவளின் முகத்தோடு முகம் வைத்து கொஞ்சி தன் தாபத்தை வெளிப்படுத்தியவன் தன் மகனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

“இந்த வலி எனக்கு மட்டும் தாண்டா இருக்கும். உன் அம்மாவுக்கு இருக்காது. அதனால தான் அப்படி நடந்துக்கிட்டா...” மேலும் குரு தன் மகனோடு புலம்பிய புலம்பலை பார்த்துக்கொண்டு இருந்த ராதிகாவுக்கு மனம் கனத்து போனது..

ஆனால் ஒரு தாயாய் அவனை இப்படியே இந்த சூழலிலே விட மனம் வரவில்லை... அதனால் சட்டென்று அறையின் உள்ளே நுழைந்து,

“ஏண்டா வாண்டு பயலே, இன்னைக்கு உன் அப்பன் இருக்கவும் இந்த கிழவி உன் கண்ணுக்கு தெரியாம போயட்டன்னா... வாடா இன்னைக்கு நீயா நானான்னு பாக்குறேன்...” என்று வெடுக்கென்று குருவிடமிருந்து தன் பேரனை பிடுங்கியவர், அவனை முறைத்து பார்க்க

தன் அப்பாவிடமிருந்து தன்னை பிரித்ததால் ஏற்பட்ட சினத்தில் குழந்தை எட்டி தன் பாட்டியின் தலை முடியை பற்றி இழுத்து வலிக்க செய்தான்.

“அடேய் ரவுடி பயலே... விடுடா வலிக்குதுடா... தெரியாம உன் அப்பன் கிட்ட இருந்து உன்னை வாங்கிட்டேன்.. அதுக்குன்னு இப்படியாடா பண்ணுவ...”

“விடுடா வலிக்குதுடா...” என்று அவனது சின்னஞ்சிறு கையிலிருந்து கொத்தாய் மாட்டி இருந்த முடி கற்றைகளை விலக்க பார்த்தார்.

ஆனால் அவனது கைகளை இறுக்கமாக மூடி இருந்ததால் அவரால் விடுவிக்க முடியவில்லை. அவர் அவனது கையை எடுத்து விட பார்க்கவும் இன்னும் அதிகமாக அவரது முடியை பிடித்து இழுத்து ஆட்டினான்.

“அடேய்... விடுடா வலிக்குதுடா... நீ உங்கப்பன் கிட்டக்கையே போ...” என்று குருவிடம் அவனை குடுத்துவிட்டு தன் முடிகளை அவனது கையிலிருந்து எடுத்து விட்டார்.

அந்த குட்டி குமரனும் அவரது தலை முடியை விடுத்துவிட்டு சப் சப்பென்று அவரது முகத்திலே அடித்தான்.

“ஏண்டா இப்படியெல்லாம் செய்ய சொல்லி உங்கப்பன் சொல்லி குடுத்தானாடா...” முறைத்துக்கொண்டே தள்ளி நின்றார் அவனை விட்டு...

அவரது சொல்லில் குரு அவரை முறைத்து பார்த்தான்.

“ஏற்கனவே அவன் ரொம்ப கோவமா இருக்கான். இதுல அவனை இன்னும் கோவப்படுத்துங்க... இன்னும் சேர்த்து நாலு போடு போடுவான்..” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே குட்டி அவரை எட்டி இன்னும் நாலு சாத்து சாத்தினான்.

“உன்ன போய் பார்க்கணும்னு வந்தேன் பத்தியா என்னை சொல்லனும்டா கருவாபயலே... உங்கப்பன் நாளைக்கு வேலைக்கு போய்டுவான்.. உன்னை நாளைக்கு வச்சுக்குறேன்...” என்று முறைத்தார் தன் செல்ல பேரனிடம்.

அதற்கு அவன் தன் முளைக்கத எயிற்றால் அவரை கடித்து வைத்தான்.

“போடா டேய்... போடா. அடிக்கிற, கடிக்கிற, முடிய பிடிச்சி இழுக்குற.. இதுக்கெல்லாம் சேர்த்து உன்னை நாளைக்கு வச்சுக்குறேன்... என்னையவே புறமுதுகு காண்பிச்சி ஓட ஓட விரட்டுற இல்ல... வச்சுக்குறேண்டா” என்று அவர் சொல்ல,

குட்டி குமரன் தன் பொக்கை வாயை வைத்துக்கொண்டு மனம் நிறைய சிரித்தான் அழகாக...

அவனது சிரிப்பில் காண்டான ராதிகா

“போடா நக்கலா சிரிக்கிறல்ல... நாளைக்கு பாட்டின்னு வருவல்ல அப்போ வச்சுக்குறேன்...” என்று அவன் சேட்டை தாங்காமல் ஓடிவிட்டார்.

இருவரது சம்பாசனையிலும் குரு மனம் விட்டு சிரித்தான். அதும் நீண்ட நாட்களுக்கு பிறகு...

“எங்க அம்மாவையே ஓட வச்சிட்டடா நீ... பெரிய கில்லாடி தான் போ...” என்று தன் மகனை கொஞ்சியவனின் கண்களில் மின்னலாய் ஒரு நீர் படலம் தோன்றியது... அது உருண்டு திரண்டு ஒரு துளி நீராய் உருவாவதற்குள் தன்னுள் உள் இழுத்துக்கொண்டு கம்பீரமாய் நிமிர்ந்து நின்றான்.

இரவு பொழுதில் எப்பொழுதும் சதியின் நெஞ்சு கூடு பாலகன் பால் குடிக்காத காரணத்தால் கனத்து போய் தான் இருக்கும்... விடிய விடிய வலியில் சரியாகவே தூங்கவே மாட்டாள்.

இன்று தான் அவளது மகன் அவளது வலிகளை நீக்கி ஆழ்ந்த தூக்கத்தை கொடுத்தான். நன்றாகவே தூங்கினாள் சதி.

சரியாய் பன்னிரண்டு மணிக்கு அலாரம் வைத்தது போல அவளது அறைக்கதவு தட்டப்பட, அவளால் எழுந்துக்கொள்ளவே முடியவில்லை. அவ்வளவு அசதியாக இருந்தது...

ஆனால் உள்ளுணர்வு அவளுக்கு நன்றாகவே வேலை செய்ய, தன் மகன் தான் தன்னை எழுப்புகிறான் பசிக்காக... என்று உணர்ந்து அடித்து பிடித்துக்கொண்டு எழுந்து வந்தாள்.

கதவை திறந்து பார்த்தாள். குரு தான் முகத்தை கடினமாக வைத்துக்கொண்டு தன் மகனோடு நின்றுக்கொண்டு இருந்தான்.

தூக்கம் கலையாமலே மகன் அவனது மார்பில் புரண்டுக்கொண்டு இருந்தான். அதை பார்த்தவுடனே இன்னும் சில நொடிகள் தாமதமானால் வீடே இரண்டு படும் அளவுக்கு கத்தி கூப்பாடு போட்டுவிடுவான் என்று நன்கு புரிய வேகமாய் குருவிடம் கையை நீட்டினாள்.

அவன் அவளை வன்மையாய் முறைத்துக்கொண்டே வேண்டா வெறுப்பாக மகனை கொடுத்தான்.

கை மாறிய உடனே அவன் இன்னும் வேகமாக புரண்டு நெளிய ஆரம்பிக்க சட்டென்று தன் உடைகளை தளர்த்தி அவனுக்கு அமுது ஊட்டினாள்.

குரு நாகரிகமாய் வெளியே நின்றான். அவனது இந்த செய்கை சதியின் உயிரை குறைக்க போதுமானதாய் இருந்தது..

கண்களில் கண்ணீர் வழிந்தது... ‘இது எல்லாத்துக்கும் காரணம் நான் மட்டும் தானா...?’ என்ற எண்ணம் பிறக்க இவ்வளவு நாட்கள் வராத கண்ணீர் இப்பொழுது வந்ததில் தன்னையே நொந்துக்கொண்டவள் அழுத சுவடு தெரியாமல் தன் முகத்தை நன்கு துடைத்துக்கொண்டாள்.

குழந்தை நன்கு பசியாறிய பின் எழுந்து வந்தாள் அவனிடம் குழந்தையை குடுக்க... ஆனால் குரு அங்கு வெளி கூடத்தில் இல்லாமல் போக, சுற்றிலும் கீழ் தளம் முழுவதும் பார்த்தாள் அவன் அங்கு இருக்கும் சுவடே இல்லை..

சரி என்று தன்னிடமே குழந்தையை படுக்க வைத்துவிட்டு அவனை அணைத்துக்கொண்டு தூங்கி போனாள்... முதல் முறையாக தன் மகனுடன் சேர்ந்து படுக்கிறாள்...

அவ்வளவு துக்கம் இருந்தும் ஆறு மாதத்திற்கு பின் கிடைத்த இந்த சொர்கத்தை இழக்க மனம் வராமல் மகிழ்வுடன் தன் பிள்ளையை நெஞ்சில் அணைத்துக்கொண்டு தூங்கி போனாள் நன்றாக...

அதுவும் குழந்தை தன்னிடம் இருந்த இந்த மகிழ்வே அவளை ஆழ்ந்த நித்திரைக்கு கொண்டு சென்றது... இருவரும் நன்கு உறங்கிய பின் தாளிடப்படாத சதியின் அறைக்குள் நுழைந்து இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அந்த ஒரு நொடி மட்டுமே அவனது முகத்தில் இளக்கம் வந்து போனது... அதன் பின் வெடுக்கென்று தன் மகனை அவளது அணைப்பிலிருந்து பிடுங்க,

“கண்ணா நழுவாதடா...” என்று தூக்கத்திலே தன் மகனை இறுக்கிக்கொண்டாள் சதி. அவளது இந்த நிலையை கண்ட குருவுக்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.

பாதி தூக்கத்தில் குழந்தை பசிக்கு அழும், அதற்கு முன்னாடி குழந்தை பசியில் நெளிந்து புரண்டு அதன் பின்பே சத்தம் கொடுப்பான்.

குரு பல நேரம் அவன் அசையும் போதே எழுந்து பால் புட்டியை எடுத்து அவனுடைய வாயில் வைத்து விடுவான்.

சில நாட்கள் குழந்தை கத்தினால் கூட அவனால் எழும்ப முடியாது... அந்த அளவு உடம்பு அசிதியாக இருக்கும். அதும் குழந்தை பிறந்து ஆறு மாத காலமும் தாயின் வாசனை அறியாது தந்தையின் அணைப்பிலே உறங்கியவன் அந்த மழலை..

அப்படி இருக்கும் போது ஆறு மாத காலம் கூடவே இருந்து தன் கையணைப்பிலே இருந்த குழந்தையின் நழுவல்களை அறியாமல் அசந்து தூங்கி இருக்கிறான்.

ஆனால் சதி இன்றைக்கு தான், அதுவும் ஒரு மணி நேரம் தான் குழந்தை அவளுடன் இருந்தது... அதிலே குழந்தையின் அசைவுகளை கணித்து தூக்கத்திலே இழுத்து பக்கத்தில் போட்டு அணைத்துக்கொண்டு தூங்குபவளின் தாய் பாசம் கண்டு கலங்கி தான் போனான் குரு....

நாட்டிய உலகின் சிகாமணி... மணி மகுடம் தரிக்காத அரசன் அவன்... அப்படி பட்டவன் கலங்கி நிற்கும் ஒரே இடம் சதி என்றால் யாராலும் நம்பவே முடியாது...

இன்றைக்கும் அப்படி தான் கலங்கி நின்றான்.. அதை இந்த உலகம் பார்க்க தவறியது... ஏன் சதிக்கு கூட அவனது கலங்கிய உள்ளம் தெரியாமலே போனது.

அவளிடமிருந்து குழந்தையை பறிக்க மனம் வராமல் அங்கிருந்த நாற்காலியில் சத்தமெலுப்பாமல் அமைதியாய் அமர்ந்து இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான்.

மெல்லிய பருத்தி சேலை அணிந்து பெண்ணின் இலக்கணமாய் மிளிர்ந்த பெண்ணவளும், அவளுக்கு இன்னும் அழகு சேர்ப்பது போல அருகில் இருந்த குட்டி வாண்டும் தாய்மையின் பூரிப்பில் இருந்தவளை காண காண மனம் சில்லென்று பூ பூக்க ஆரம்பித்தது..

தினமும் அவளை கலைக்கூடத்தில் பார்ப்பவன் தான்.. ஆனால் இன்று அதிக பொலிவுடன், தாய்மையின் மிடுக்குடன் ஆர்ப்பாட்டமில்லாத அழகுடன் இருந்தவளை கண்டு பார்க்க சலிக்காமல் கண்கள் வலிக்கும் வரை விடிவிளக்கின் ஒளியில் ரசித்து பார்த்தான் நாட்டிய தலைவன்.

அவனது தொடர் பார்வையால் தூக்கம் கெட்ட சதி படுக்கையிலே பிரண்டாள். அதில் உணர்வுக்கு வந்தவன் அவளிடமிருந்து குழந்தையை பறித்துக்கொண்டு வேகமாய் சென்றுவிட்டான்.

அவன் குழந்தையை வேகமாக வெடுக்கென்று பிடுங்கவே தூக்கம் முற்றிலும் களைந்து பதறி எழுந்தவள், குழந்தையை பறித்தது குரு தான் என்றவுடன் அமைதியாகி போனாள்.

அதையும் ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்துக்கொண்டவன் கண்டுக்காமல் தன் அறைக்குள் சென்று மறைந்தான்.

சென்ற அவனது முதுகையே வெறித்து பார்த்தவள் கண்களை மூடி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு படுத்தாள்.

குருவுக்கு சுத்தமாக தூக்கமே வரவில்லை... குழந்தை அடுத்து பாலுக்காக அழும் நேரத்துக்காக காத்துக்கொண்டு இருந்தான்...

மகனும் தந்தையின் தவிப்பை புரிந்துக்கொண்டு மூன்று மணி வாக்கில் பிரள தொடங்கினான். உடனே சட்டென்று அவனை தூக்கிக்கொண்டு அவளிடம் விரைந்தான்.

எப்படியும் குழந்தை மீண்டும் பசிக்காக வருவான் என்று தெரிந்ததால் இந்த முறை கதவை சாற்றாமலே வைத்து இருந்தாள்.

அவளது கணிப்பு படியே குரு குழந்தையை தூக்கிக்கொண்டு வர, எழுந்து அமர்ந்து மகனை வாங்கிக்கொண்டு சுவர் புறம் திரும்பிக்கொண்டாள்.

குரு மறுபடியும் வெளியே நின்றுக்கொள்ள இந்த முறை வெடித்துக்கொண்டு அழுகை வந்தது... தன் உதடுகளை அழுத்தி கடித்துக்கொண்டு அழுகையை அடக்க பார்த்தாள்.

அதில் ஓரளவு வெற்றியும் கண்டாள். ஆனால் மனம் முழுக்க புண்ணாகி போனது.. குழந்தை பசியாறிய உடன் அவனை தேடி சென்றாள்.

இந்த முறை குரு எங்கும் செல்லாமல் கூடத்திலே அமர்ந்து இருக்க, அவனது மடியில் குழந்தையை கிடத்திவிட்டு தன்னுடைய கதவை அடைத்துக்கொண்டு துக்க மிகுதியில் அழத் தொடங்கினாள்.

அடுத்த நாள் குருவுக்கு முன்னாடியே எழுந்து, குழந்தையின் தேவையை கவனித்துவிட்டு, தன் தாயை கலைக்கூடத்திற்கு குழந்தையை தூக்கிட்டு வர சொல்லி சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

அதுவரை குழந்தையின் அழுகை சத்தம் மட்டுமே கேட்ட குருவின் வீடு, நேற்று முதல் அவளின் கொலுசொலியும், வளையொலியும் கேட்க தொடங்கியது...

கூடவே அவளின் பேச்சும், சிரிப்பும் சேர, அவ்வீட்டிற்கு ஒரு மங்களகரமான தோற்றத்தை கொடுத்தது...

ஆனால் அதை குருவின் மனம் ஏற்க தயாராயில்லை... ஒருவித பிடிவாதத்துடனே இருந்தான்...

அந்த பிடிவாதம் கலைக்கூடத்திலும் தொடர்ந்தது..

இன்றைக்கு எந்த ரிகசளும் இல்லை. மாறாக அவனுக்கு சினிமா ஷூட் தான் இருந்தது. ஆனாலும் காலையில் கலைக்கூடத்திற்கு வந்தான்.

அங்கிருந்து சதியையும் அழைத்துக்கொண்டு ஷூட்டிங் ஏரியாவுக்கு சென்றான்...

அதில் சதி தான் பெரும் பாடு பட்டு போனாள். ஏனெனில் அந்த படத்தின் நாயகனுக்கு ஆடவே வரவில்லை.

சிம்பிள் ஸ்டெப் சொல்லி கொடுத்தாலும் அவனால் போட முடியாமல் பல்லை காட்டிக்கொண்டு இருக்க குருவிற்கு கடுப்பேரியது..

ப்ரோட்யூசரின் பணம் வீணாவது பற்றியோ, டைரக்டரின் நாட்கள் வீணாவது பற்றியோ மற்றயவர்களின் உழைப்பு வீணாவது பற்றியோ எந்த அக்கறையும் இல்லாமல் சிரித்துக்கொண்டு இருந்தவனை காண காண ஆத்திரம் அதிகமாய் எழுந்தது...

கிளி பிள்ளைக்கு சொல்லி தருவது போல சொல்லி தந்தும், கண்ணுக்கு முன்னாடி குருவின் அசிஸ்டென்ட் வேறு தனியாக ஆடிக்கொண்டு இருந்தும் அவனால் ஆட முடியாமல் இழுத்துக்கொண்டே இருந்தான்.

குரு கோவமாய் ஏதோ பேசவர, சட்டென்று சதி அவனது கையை பற்றிக்கொண்டாள் அவனை தடுப்பது போல...

Loading spinner
Quote
Topic starter Posted : June 1, 2025 9:18 am
(@gowri)
Estimable Member

இவன் என்ன எல்லாத்துக்கும் கோவ பண்றான்🤷🤷🤷🤷🤷

Loading spinner
ReplyQuote
Posted : June 3, 2025 1:24 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top