Notifications
Clear all

அத்தியாயம் 3

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஆலிங்கன நிலையில் நின்று இருந்த இருவரும் ஒரு நிமிடத்தை முழுமையாக அதே முத்திரையில் நின்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.

அதன் பின் சக்தி வேறு சிவன் வேறு என்று சதி அபிநயம் பிடிக்க ஆரம்பிக்க சிவனது கோவத்தை அப்படியே குரு தன் நடனத்தில் கொண்டு வந்து ஆங்கார மூர்த்தியாய் நின்றான்... அவனுக்கு ஏற்றவாறு அந்த அரங்கம் முழுவதும் இருவரது குருதியும் சிந்தி சிதறி கிடந்தது... ஆனாலும் அதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை...

மனமே ரணப்பட்டு, புண் பட்டு இருக்கும் போது காலில் இருக்கும் இந்த சின்ன வலியா தெரிய போகிறது அவனுக்கு...

ஓரளவு அந்த நடனம் முடிந்தவுடன் தான் சதியை விட்டான் குரு... அவன் விட்ட நொடியில் வேகமாய் சுவரின் உள்ளே பதித்து இருந்த அலமாரியில் சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவனுக்கு மருந்து போட வர,

அவளை பார்த்து ஏளனமாக சிரித்தவன்,

“வலிக்க வலிக்க காயத்தை குடுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி மருந்து போட வர்ற பத்தியா அங்க நிக்கிரடி நீ...” கூறியவன் அவள் சொல்ல வருவதை எதையும் கண்டுக்கொள்ளாமல் விலகி சென்றான்.

கண்கள் கலங்கினாளே தவிர கண்ணீரை சிந்தவில்லை... அவளுக்குள் இருக்கும் வைராக்கியம் அதை செய்ய விடவில்லை.

அவள் கால்களுக்கு மருந்து போட்டு முடித்த சமயம் மீண்டும் குரு வந்தான்...

“இடத்தை சுத்தம் பண்ணிட்டு தயாரா இரு.. அடுத்த ரிகசல் இருக்கு..” என்று சென்றுவிட்டான்.

‘இன்னைக்கு இவன் விட மாட்டான் போலேயே...’ புலம்பியவள் அவ்விடத்தை சுத்தம் செய்ய தொடங்கினாள்.

தரையில் இருந்த குருதி கரையை முழுவதும் நன்கு துடைத்துவிட்டு பலபலப்பாகிவிட்டவள், அப்படியே தரையில் சரிந்து படுத்துக்கொண்டாள் சிறிது நேரம்...

அவள் படுத்த சிறிது நேரத்திலே அவளை வலிய கரம் ஒன்று அணைத்து, மூச்சுக்காற்றால் அவளது கழுத்தில் கோலம் போட்டுவிட்டு, இடை தழுவி, அவளின் உதடுகளை சிறை செய்ய ஆரம்பிக்க திடுக்கிட்டு எழுந்தாள்...

அப்பொழுது தான் கவனித்தாள் குரு அவளையே முறைத்துக்கொண்டு அவளின் எதிரில் நின்றிருப்பதை... பதைபதைத்து போய் எழுந்து அமர்ந்தவள் குளிரூட்டப்பட்ட அந்த கூடத்திலும் அவளுக்கு வேர்த்தது...

“சோம்பேறி சோம்பேறி... கொஞ்ச நேரம் குடுத்தா போதுமே உடனே தூங்கி வழிய வேண்டியது...” திட்டினான்...

ஒன்றும் சொல்லாமல் அந்த கூடத்தின் உள்ளே இருந்த கழிவறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள்.

வந்தவளிடம் கேரளா நடிகருக்கான இருண்டு விதமான தீமை பத்தி ஆலோசித்து இந்த இந்த மூவ் வைக்கணும் என்று பேசி முடிவெடுத்து அதன் படி இருவரும் ஒரு முறை ரிகசல் பார்க்க தொடங்கினார்கள்.

இரவு நேர ரிசெப்சன் என்பதால் கொஞ்சம் ரொமன்டிக்ககவே கேட்டு இருந்தார்கள். காலையில் கேரளா சண்டை மேளத்துக்கு ஏற்றவாறு கேட்டு இருந்தார்கள்.

அதனால் மீண்டும் சதியோடு இணைந்து நெருக்கமாக ஆட ஆரம்பித்தான்... இதில் அதிக மூவ் இல்லையென்றாலும் இருவரது நெருக்கமும் இருவருக்குள்ளும் தீப்பிடித்தது...

அந்த உணர்வுகளை பெரிது படுத்தாமல் குரு இயல்பாக இருப்பது போல அவன் ஆட, சதியால் தான் முடியாமல் அவ்வப்பொழுது சரிய தொடங்க, அவளை ஆழ்ந்து பார்த்தான் குரு..

அதில் பாதி குற்றம் சொல்வது போல குத்தும் பார்வையாகவே இருக்க...

மனதில் தைரியத்தை வர வைத்துக்கொண்டு “எனக்கு ஒரு மணி நேரம் ஓய்வு வேணும்...” தயக்கத்துடனே கேட்டாள்.

“உன் விருப்பப்படி இங்க ஆட முடியாது... என் விருப்ப படி தான் இங்க எல்லாமே நடக்கணும்... இப்போ நீ ஆடி தான் ஆகணும்...” என்றவன் மென்மையாய் பிடித்திருந்த அவளது இடையை வலிக்க பற்றி ஆட தொடங்கினான்...

அதில் பெண்ணவளின் உணர்வுகள் எல்லாம் மேலெழும்பி குதியாட்டம் போட.. மனதை கட்டுப்படுத்த முடியாமல் அவனிடம் மயங்க தொடங்கினாள்.

அவள் கண்கள் சொருகி மோனோ நிலையில் அவன் வளைத்த படி ஆடிக்கொண்டு இருந்தவளை கண்டவனுக்கு என்னவோ போல் ஆகிவிட, இடையில் இருந்த கரத்தை இன்னும் அதிக இறுக்கமாக வைத்து அவளின் இடையை பற்றிக்கொண்டான்...

அதில் இன்னும் அதிக மோகம் கொண்டவள் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அவனின் வெற்று தோளின் மீது சாய தொடங்கிவிட்டாள்.

அது ஆணவனின் உடலில் பல மாயங்களை செய்ய வைத்தது... இயல்பாய் நடனமாடிக்கொண்டு இருந்தவனை உணர்வுகளின் பிடியில் சிக்க வைத்து தன்னிலை மறந்து அவளிடம் ஒன்றினான்...

இது நாள் வரை நடனமாடும் போது அவன் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததே கிடையாது... முதல் முறை அவளுடன் எல்லாவற்றையும் மறந்து நெருக்கமானான்...

அவனது நெருக்கம் பெண்ணவளை இன்னும் உணர்வு குவியலாய் மாற்ற இன்னும் அவனிடம் நெருக்கம் காட்டினாள்...

அதுவரை மிதமாய் ஒலித்துக்கொண்டு இருந்த இசை சட்டென்று வேகம் எடுக்க, அந்த இசையில் இருவரும் தங்களை உணர்ந்து சட்டென்று பிரிந்துக்கொண்டார்கள்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதில் இருந்த சங்கடத்தை உணர்ந்து சதியே சட்டென்று கழிவறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

பத்து நிமிடத்துக்கு பின் வெளியே வந்தவளை கண்கள் சிவக்க எதிர் நோக்கினான் குரு...

அவனது கண் சிவப்புக்கு ஒப்பாக அவளது கண்களும் சிவந்து போய் தான் இருந்தது...

என்ன ஒண்ணு அவனது கண்கள் சினத்தில் சிவந்து இருந்தது... இவளுடைய கண்கள் அழுகையில் சிவந்து இருந்தது... அது மட்டும் தான் வித்யாசம்..

சினத்துடன் அவளை எதிர் நோக்கியவன் எந்த வித உரையாடலும் இல்லாமல் நேரடியாக ஆட்டத்தில் இறங்கிவிட, அவளும் உடன் பட்டு ஆட தொடங்கினாள்.

இருவரும் அப்படி இனைந்து ஆடிய போது, விரித்து விட்டிருந்த சதியின் முடி குருவின் கைகளில் சிக்கிக்கொண்டது...

அதில் எரிச்சலுற்றவன் “முடிய கட்டணும்னு கூட தெரியாதா...? இப்படி தான் விரிச்சி போட்டுட்டு இருப்பியா...?” என்று அவளிடம் எரிந்து விழுந்தான்...

அவன் தான் அவளது முடிந்த கூந்தலை அவிழ்த்துவிட்டான் என்பதை எண்ணிக்கொண்டே அவளிடம் சிடுசிடுத்தான்...

அவனது குணம் தெரியும் ஆகையால், சட்டென்று அவனது கைகளில் சிக்கி இருந்த முடியை எடுத்து விட்டு, நொடியில் கொண்டடை போட்டு தன் குழலை முடிந்துக்கொண்டு ஆட தயாராக நின்றாள்.

அவளது இந்த வேகம் குருவுக்கு எப்பொழுதும் பிடிக்கும்... ஆனால் அதை காண்பித்துக்கொள்ளவே மாட்டான்... இன்றும் அது போலவே பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளாமல் அவளுடன் இயைந்து ஆடி, இந்த இந்தெந்த ஸ்டேப் என்று நோட் பண்ணி வைத்துக்கொண்டு அதன் படி இருவரும் ஆடி முழுவதுமாக ரிக்சல் பார்த்தார்கள்...

இது மண மக்களுக்காக மட்டும் ஏற்பாடு செய்த ஒத்திகை.. மத்தியத்துக்கு மேல் குழுவுடன் சேர்ந்து எப்படி செய்வது என்று அதற்க்கும் சேர்த்து ஆலோசனை செய்து வைத்துவிட்டு அவளை அனுப்பினான்...

அதன் படியே மத்தியம் தேர்ந்தெடுத்த குழு நடன கலைஞகர்களுடன் சேர்ந்து ஆடி முழுதாக ஒத்திகை பார்த்தார்கள் பொதுவாக பயன் படுத்தும் அரங்கில்...

அடுத்த நாள் அந்த நடிகர் வந்து அந்த நடனத்தை பார்த்து விட்டு மகிழ்ந்து போய் அன்றே தான் மணக்க இருக்கும் பெண்ணை வர செய்து இருவரும் ரிகசல் பார்க்க தொடங்கினார்கள்...

ஓரளவு அவர்களுக்கு கற்று கொடுத்துவிட... சக நடன ஆசிரியரிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சதியும் குருவும் அவரவர் வேலைகளை செய்ய தொடங்கினார்கள்.

அன்று ஒரு படத்துக்கான அனைத்து பாடல்களையும் கொரியோ பண்ண சொல்லி தமிழகத்தின் முன்னணி பட இயக்குனர் ஒருவர் ஆலோசனை செய்ய அவனை அழைக்க, குருவும் இரவு வருவதாக சொல்லி நேரம் வாங்கி இருந்தவன், இடைப்பட்ட நேரத்தில் இன்னொரு படத்தின் கொரியோக்ராபர் கமிட் ஆனதில் அந்த பாட்டு ஷூட்டிங்க்காக செட்டுக்கு சென்றான்...

அந்த நேரம் சதியின் அலைபேசிக்கு கால் வந்தது...

எடுத்து பார்த்தாள். குருவின் அம்மா தான் அழைத்து இருந்தார்கள்.

“சொல்லுங்க அத்தை என்ன பண்றீங்க... தம்பி பய என்ன பண்றான்... என்னை தேடுனானா...?” தாயின் பரிதவிப்போடு கேட்டவளுக்கு,

“அதெல்லாம் நிமிசத்துக்கு ஒரு முறை உன்னை தேடிட்டு தான் இருக்கான்... இப்போ எங்க இருக்க...”

“கலைக்கூடத்தில் தான் இருக்கேன் அத்தை...”

“சீக்கிரமா கிளம்பி எப்பொழுதும் போற கோயிலுக்கு வா... இன்னைக்கு குரு அங்க இல்ல தானே...”

“ஆமாம் அத்தை... பிள்ளைய தூக்கிட்டு வருவீங்களா...?” ஏக்கத்துடன் கேட்டாள்.

“அதுக்கு தான் உன்னை வர சொல்றேன்... சீக்கிரமா வா...” என்று வைத்துவிட்டார்...

அவர் சொன்னவுடன் அவளின் உடலில் புது உதிரம் பாய்வது போல இருக்க, வேகமாய் குருவின் தனிப்பட்ட அறைக்கு சென்று ஒரு குளியலை போட்டவள் விரைந்து போனாள் அந்த கோயிலுக்கு...

போனவுடனே குருவின் அம்மா ராதிகாவிடமிருந்து சதியிடம் தாவினான் ஆறு மாத குட்டி குமரன்..

தாவி வந்தவனை இறுக தன் நெஞ்சோடு தழுவியவள், தன்னிடம் முட்டி மோதிக்கொண்டு இருப்பவனை அடக்கி பிடித்து மறைவிடம் சென்று அவனுக்கு அமுது ஊட்டியவள் தன் மகனின் தலையை வருடி கொடுத்தாள் ஆதுரத்துடன்...

எப்பொழுதும் குரு அவளுடன் இருப்பது கிடையாது... ஒத்திகையின் போது மட்டுமே அதும் இருவர் சேர்ந்து ஆடும் நடந் என்றால் மட்டுமே அவள் அவனுடன் இருப்பாள்.. மற்ற படி எப்பொழுதும் அவனுடன் இருப்பது கிடையாது...

அதனால் குருவின் பார்வை படமால் தன் மகனுக்கு அமுது ஊட்டி அவனது பசியை போக்குவாள். அதற்க்கு பெரும் ஒத்துழைப்பு கொடுப்பது குருவின் அம்மா ராதிகா தான்.

குரு ஆரம்பத்திலே இதெல்லாம் வேணாம் என்று உறுதியாக சொல்லிவிட்டான்...

ஆனால் ராதிகா தான் அவனை எதிர்க்க முடியாமல் அவனது கண் பார்வைக்கு தெரியாமல் பெரும்பாலும் அவரே தன் பேரனை கொண்டு வந்து சதியிடம் கொடுப்பார்.. எப்பொழுதாவது முடியாத பட்சத்தில் தான் யார் மூலமாகவோ குழந்தையை கொடுத்து அனுப்புவார் பசியாற...

இன்றும் அதுபோல வர... முதலில் தன் மகனின் பசியை ஆற்றிய சதி அசதியாய் வந்து தன் அத்தையின் அருகில் அமர்ந்தாள்.

“காலையில் இருந்து குடுக்கததுனால ரொம்ப கடினமா போயிடுச்சா டா...” ஆதரவாக அவளது தலையை வருடி விட,

“ஆமா அத்தை. எப்படியும் அவனுக்கு மூணு நேரம் குடுத்துடுவேன்... இன்னைக்கு அவரு கூடவே இருந்ததுனால...” என்றால் தயக்கமாய்..

“சரி அதை விடு... முதல்ல இந்த சூசை குடி...” என்று தன் மருமகளை கவனித்தார்..

அவரின் தோளில் சாய்ந்துக்கொண்டவள் மெல்ல கண்களை மூடிக்கொண்டாள்... அதே நேரம் அவளுடைய பெற்றவர்களும் அந்த கோயிலுக்குள் நுழைந்து கற்பக்கிரகம் கூட செல்லாமல் தன் மகளின் மடியில் இருக்கும் தங்களது பேரனை தூக்கி கொண்டாடி தீர்த்தார்கள்..

“அண்ணா இன்னும் ஆபிஸ் விட்டு வரைலயா அண்ணி..” என்று ஆனந்தி ராதிகாவிடம் பேச ஆரம்பிக்க, சேகர் தன் பேரனோடு அந்த கோயிலை வளம் வந்தார் மகிழ்வுடன்..

சதி கண்களை மூடி நன்றாக தன் அத்தையின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள் அசதியில். குருவுக்கு தெரியாமல் இவர்கள் அனைவரும் கூடி குலாவிக்கொண்டு இருக்கிறார்கள்.

என்றைக்கு அவனுக்கு தெரியவருமோ அன்றைக்கு இருக்கிறது இவர்களுக்கு.. அப்பொழுது தான் அவனுடைய உண்மையான ருத்திர தாண்டவத்தை காண்பார்கள்.

அதே நேரம் குருவிடமிருந்து போன் வந்தது ராதிகாவிற்கு...

அடுத்து என்ன நடக்க போகிறதோ...

Loading spinner
Quote
Topic starter Posted : May 30, 2025 9:19 am
(@gowri)
Estimable Member

அட கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்கா????

சூப்பர் சூப்பர்....அப்பறம் ஏன் இந்த பிரிவு????

குடும்பமே இவளுக்கு தான் சப்போர்ட் போல

Loading spinner
ReplyQuote
Posted : June 1, 2025 6:42 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top