Notifications
Clear all

அத்தியாயம் 6

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஆனால் அதற்குள் பிறைநிலா குடுத்து இருந்த புகார் விசயம் அண்ணன் தம்பி மூவருக்கும் போய் விட, தயாளன் தான் களத்தில் இறங்கினான் முதலில்.

“நான் பெங்களூர் போய் முதல்ல அவளுங்களை அள்ளிட்டு வர்றேன்.. நீ இங்க பார்த்துக்க” என்று சின்னவன் பிரபாகரனிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

போனவன் தயாழினி மற்றும் குறிஞ்சியை அள்ளி போட்டுக்கொண்டு வந்து விட்டான் தன் இருப்பிடத்துக்கு. சரியாக இவர்கள் இருவரும் இங்கு வந்த ஆறாம் நாள் சின்னவளை குடும்பத்தோடு அள்ளி இருந்தான் பிரபாகரன்.

தன் வீட்டில் வைத்து அவர்களை செய்யக்கூடாத சித்ரவதை எல்லாம் வைத்து செய்ய ஆரம்பித்து விட்டான். இது தெரியாமல் தயாழினி தன் குடும்பத்தை காப்பாற்ற ப்ளான் போட்டாள். அத்தனையும் ஓட்டை பானையில் நீர் அள்ளிய நிலையானது.

தன் ஒட்டு மொத்த குடும்பமும் இவன்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு இருப்பதை பார்க்க முடியாமல் கதறினாள் தயாழினி. அதுவும் சின்னவள் கொஞ்சம் வாய் துடுக்கு கொண்டவள். அவள் எதிர்த்து பேச பேச அவளுக்கான தண்டனைகள் அதிகரித்துக் கொண்டே போனது. அதை வீடியோ வடிவில் இங்கே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு நெஞ்சில் வலி எடுத்தது.

ஏற்கனவே மிளகாய் காரம் முகம் முழுக்க காந்தி எடுத்தது. அதை கழுவ கூட விடாமல் அவளை அவன் காலடியில் வைத்து சித்ரவதை செய்தான். தொண்டை புண் வலித்தது. இதோடு மன வலியும் சேர ஓய்ந்துப் போனாள்.

“என்ன மேடம்.. ரொம்ப ஜாலியா இருக்கீங்க போலையே” நக்கலுடன் கேட்ட தயாகரனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்.

“என்னடி நீ பெரிய கண்ணகியா? பார்வையாலே முறைக்கிற..” கடுப்படித்தவன்,

“இப்படி முறைச்சி பார்த்தன்னு வை கண்ணு ரெண்டையும் பிடுங்கி காக்காய்க்கு போட்டுட்டு குருடியா தெருவுல பிச்சை எடுக்க விட்டுடுடுவேன்” எச்சரித்தான்.

அவன் செய்தாலும் செய்வான் என்கிற பயம் இருக்க பார்வையயை தலைத்துக் கொண்டாள்.

“போ போய் பெட்ல படு” என்றான் அதிகாரமாய்.

“அது தான் இவ்வளவு டார்ச்சர் பண்றீங்களே.. இது போதாதா? எதுக்கு படுக்க கூப்பிடுறீங்க? இப்படியே கொடுமை பண்ணி கொடுமை பண்ணி எங்களை சாவடிச்சுடுங்க ப்ளீஸ்” என்று மரணத்தை கேட்டாள்.

“உன்னை சாவடுச்சுட்டா என் பணத்துக்கு நான் எங்கடி போறது.. பிறகு உன் கூட பிச்சை தான் எடுக்கணும்” கேலியாக கேட்டான்.

“அதுக்கு?” என்று வாய் நடுங்கியது அவளுக்கு.

தன் இறுக்கமான முகத்தை அவளின் முகத்துக்கு நேராக கொண்டு வந்து வெறுப்புடன் அவளை பார்த்தவன்,

“அது தான் உன்னை ஒரு பார்ட்டிக்கிட்ட விக்கலாம்னு இருக்கேன்” என்றவனை உயிர் நடுங்க பார்த்தாள்.

“ப்ளீஸ் சார் அப்படி எல்லாம் எதுவும் செஞ்சிடாதீங்க.. உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன்..” என்று கதறினாள். சத்தமே வரவில்லை அவளுக்கு வெறும் காற்று மட்டும் தான் வந்தது.

கெஞ்சி அழுதுக் கொண்டு இருந்தவளை பார்த்த பொழுதும் அவனது மனம் இறங்கவே இல்லை.

“நீ வேணான்னு சொல்லிடுவ. ஆனா நான் குடுத்த ஒரு கோடி பணம் எனக்கு வேணுமே. பணத்துக்கு எங்க போறது. உன் புகைப்படத்தை அவனுக்கு அனுப்புனேன். போனா போகுதேன்னு இருபத்தி ஐஞ்சு லட்சம் தரேன்னு சொன்னான்.. அட்லீஸ்ட் கொஞ்சமாச்சும் கிடைக்குதே.. அது தான் உன்னை சேல்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்”

“அதுவும் கன்னி பொண்ணுன்னா ஐம்பது தரேன்னு சொன்னான்.. கன்னி பொண்ணு தானே நீ?” என்று அவளிடம் கேட்டான்.

இவளுக்கு செத்து போய் விடலாம் போல இருந்தது.

“சொல்லுடி இல்லன்னா இருபத்தி ஐந்து லட்சம் பட்ட நாமம் தான்” என்றான்.

அவள் பதில் சொல்லாமல் இருக்க கோவப்பட்டவன்,

“நீயா சொல்றியா இல்ல செக் பண்ணி பார்க்கவா?” என்று அவாள் மீது கையை வைக்க வர, வேகமாய் அவனது கையை தட்டி விட்டுட்டு,

“நான் இன்னும் கன்னிப் பொண்ணு தான்” என்று முகத்தை மூடிக் கொண்டு கதறி தீர்த்தாள்.

அவாள் அழுவதை வெறித்துப் பார்த்தவன்,

“ஆமா உன்கிட்ட அப்படி என்ன இருக்குன்னு அம்பது லட்சம் விலை பேசுறான் அந்த பொறம்போக்கு...” அவளை மேலும் கீழும் பார்த்தவன்,

“பரவாயில்லை ஐம்பதுல பாதி வந்தா கூட போதும். ஆனா உன்கிட்ட என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்” என்று அவளை தூக்கி படுக்கயில் போட்டவன் அவள் மறுக்க மறுக்க படுக்கையில் துள்ளி துடிக்க அவளின் உடைகளை எல்லாம் களைந்தான்.

கத்தி கதறி தீர்த்து அவனை அடித்து உதைத்து கடித்து கில்லி என பல வழிகளில் அவனை துன்பம் படுத்தியவள் ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் அப்படியே மயக்க நிலைக்கு போய் விட்டாள். இத்தனைக்கும் அவன் அவளுக்கு ஒரு முத்தம் கூட குடுக்க வில்லை. அதற்குள் அவனை குரங்கு கையில் குடுத்த பூமாலையாக மாற்றி விட்டு மயக்கம் வேறு போட்டு விட்டாள்.

தலையை மட்டும் திருப்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன் அவள் மீது போர்வையை போர்த்தி விட்டுட்டு எழுந்து உப்பரிக்கைக்கு போய் நின்றான்.

“என்னடா ஆச்சு?” என்று குணாதரனுக்கு போன் போட்டான்.

“பயம் காட்டி அடக்கி வச்சு இருக்கேன் அண்ணா.. ஆனா இவ அடங்க மாட்டேங்குறா.. சீக்கிரம் ரேப் பண்ணலும் பண்ணிடுவேன்” என்றான் கடுப்பாக.

“டேய் எருமை இது தான் சான்சுன்னு பாஞ்சி தொலைஞ்சிடாத... பொன்மாரி உன்னை சும்மா விடாது”

“அதுக்கு பயந்துக்கிட்டு தான் கையை வைக்கல. இல்ல இந்நேரம் இவ பேசுற பேச்சுக்கு ரேப் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்” என்றான்.

“அவன் என்ன பண்றான்..?”

“அவனுக்கு தான் தலைவலி அதிகம் அண்ணா.. சின்னவ ரொம்ப பேசுவா போல..” என்றான்.

“ம்ம்ம் கையை மேல வைக்க வேணான்னு சொல்லு”

“அவன் ஆல்ரெடி அவளை பின்னி எடுத்துட்டான்”

“அடிக்கிறத சொல்லலடா”

“புரியுதுண்ணா சொல்லிடுறேன்..” என்றவன், சில விசயங்களை அண்ணனிடம் கேட்க, பதில் சொன்னவன் வைத்து விட்டான்.

உள்ளே வந்தவன் படுக்கையில் படுத்து இருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன், சிகரெட் மதுவுடன் அமர்ந்து விட்டான் விடிய விடிய.

மயக்கம் தெளிந்து எழுந்தவள் பார்த்தது என்னவோ எதிரில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பவனை தான். ஒரு கையில் சிகரெட், இன்னொரு கையில் மது கோப்பை.

பக்கென்று ஆனது. அதுவும் அவனது கண்கள் அநியாயத்துக்கு சிவந்துப் போய் இருப்பதை பார்த்து ஏதோ வெறிப்பிடித்த மிருகம் போல மாறி இருந்தான்.

தன் உடைகளை தேடியவளுக்கு அவளின் அருகிலே அனைத்தும் இருக்க வேகமாய் போர்வைக்குள்ளே அணிந்துக் கொண்டவளுக்கு எந்த வலியும் இல்லாமல் போனது உடலில். தொண்டையில் மட்டும் வலி இருந்தது.

“எதுவும் நடக்கலையா?” என்று முணுமுணுத்தவளிடம்,

“எனக்கு பணத்தட்டுப்பாடு அதனால உன்னை முழுசா வித்துடலாம்னு இருக்கேன்” என்றான் இரசித்து புகைத்தபடி.

“அது நான் செத்துப் போனாலும் நடக்காதுடா” என்றாள்.

“என்னடி மரியாதை குறையுது?”

“பொண்ணுங்களை காசுக்கு விக்கிற உனக்கு மரியாதை ஒன்னு தான் கேடா” என்றவளின் தலைமுடியை இறுக பற்றி இழுத்தவன்,

“என்னடி சீண்டி விட்டு பார்க்குறியா? உயிரோட இங்க இருந்து போக மாட்ட” என்றான் அனல் கக்கும் விழிகளுடன்.

“நானும் அதை தான் செய்யின்னு சொல்றேன். என்னை கொன்னுடு” என்றாள்.

“கொன்னா கூட உன் பொணத்தோட சுகம் அனுபவிக்க காம வெறிப்பிடிச்ச ஒரு கூட்டமே இருக்குடி” என்றான்.

அவனது வக்கிரத்தில் கிலி பிடித்தது தயாழினிக்கு.

“ச்சீ நீயெல்லாம் மனுசனே இல்ல.. அரக்கன். அரக்கன கூட ஒரு விதத்துல சேர்த்துக்கலாம். ஆனா நீ எல்லோரையும் விட ஈன புத்தி உள்ள பிரவு. உனக்கு எல்லாம் கேடு காலம் மட்டும் தான்டா.. நல்ல வாழ்வே வாழ மாட்ட” என்று சொன்னவளின் தலை முடியை பிடித்து சுவரில் அப்படியே சுவரில் தள்ளி விட, அவளின் நெற்றி உடைந்துப் போனது.

உதிரம் அப்படியே கொட்டியது.

“ஐயோ அம்மா” என்று அவள் அலறி துடிக்க கொஞ்சமும் இறக்கம் காட்டாமல் அவளை தரதரவென்று இழுத்து வந்து கொட்டும் பனியில் போட்டவன் கதவை அழுந்த சாற்றி விட்டான்.

கடும் பனி காலமாக இருந்ததால் அவளால் குளிரை தாங்க முடியாமல் நடுநடுங்கிப் போனாள்.

விழிகளில் கண்ணீர் வழிய, நெற்றியில் உதிரம் வழிய அவள் இருந்த கோலம் நெஞ்சை கசக்கி பிடிக்கும் யாருக்கா இருந்தாலும். ஆனால் தயாகரனுக்கு எந்த உணர்வும் வரவில்லை போல...

குறுங்கண் வழியாக ஷம்பெயினை குடித்தபடி பார்த்துக் கொண்டு இருந்தான்.

இங்கே இந்த நிலை என்றால் குணாதரன் காவலர் குடி இருப்பில் இருந்த குறிஞ்சியின் நிலை அந்தோ பரிதாபம்.

 

தொடரும்..

Loading spinner
Quote
Topic starter Posted : June 25, 2025 11:05 am
(@gowri)
Estimable Member

அட பக்கி பயல்கலா.... ஏண்டா இப்படி பண்றீங்க😤😤😤😤😤😤

Loading spinner
ReplyQuote
Posted : June 25, 2025 12:33 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top