“நன்றிடி...” என்றான் முத்தான முதல் வார்த்தையை உதிர்த்து... உத்தமன் இப்படி ஆரம்பிக்கவும் அவளின் படபடப்பு எல்லாம் ஒடுங்கி தான் போனது.. வேகமாய் அவனின் இதழ்களை தன் கரம் கொண்டு மூடியவள்,
“என்னங்க இது நன்றி அது இதுன்னு... உங்களுக்கும் சரி எனக்கும் சரி ஒரே ஒரு வாழ்க்கை தான். அது எப்பொழுதும் உங்களோடு என்னோடு தான்... அதனால இந்த நன்றி அது இதுன்னு எல்லாத்தையும் தூக்கி போடுங்கங்க.. நாம நாமளா இருக்கலாம்” என்று புன்னகைத்தாள்.
“அப்போ நன்றிய திருப்பி வாங்கிக்கவா?” என்று கேட்டவனின் கண்களில் குறும்பு தெரிந்தது.
அதை உணராமல் “கண்டிப்பா... திருப்பி வாங்கிக்கோங்க...” என்றவள், “நன்றி...” என்று சொல்ல வர,
“திருப்பி வாங்குறதுன்னா அது இப்படி இல்லடி...” என்று அவளை இன்னும் நெருங்கி அமர்ந்தவன் அவளது கன்னத்தில் முத்தம் வைத்து,
“இப்படி தான் திருப்பி குடுக்கணும்டி... எங்க குடு...” என்று அவளின் இதழ்களின் அருகே தன் கன்னத்தை காட்டினான்.. முக பொழிவுடன் கண்களில் ஆசையுடன் தன்னிடம் கேட்டவனை ஏமாற்ற மனம் வராமல் தன் இதழ்களை அவனது முள் குத்தும் கன்னத்தில் புதைத்து முத்தம் கொடுத்தாள்.
கேட்டவுடன் உடனே கொடுத்தவளை மனம் கசிய பார்த்தவன்,
“என்னை பிடிச்சி இருக்கா தங்கம்...?” என்று ஆசையாக கேட்டான் அவளை தன் கரங்களுக்குள் இழுத்துக் கொண்டு.
“பிடிச்சி இருக்கு பிடிச்சி இருக்கு... இந்த உத்தமன ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு...” என்றவள் அவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்து அவனது நெஞ்சை நிறைத்தாள்.
“இப்போ பயம் போயிடுச்சாடி தங்கம்...?” என்றவனது கேள்வியில் நடப்பை உணர்ந்தவள் முகம் சிவக்க,
“ரொம்ப ரொம்ப பயமா இருக்குங்க...” என்று அவனின் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள்.
“என்னது பயமா இருக்கா?” என்று அவன் முகத்தை சுறுக்க, அப்பொழுது தான் அவளின் உடம்பு லேசாக குலுங்குவது தெரிய,
“என்னையவே ஏமாத்துறியாடி...” என்று தன் நெஞ்சில் புதைந்து இருந்தவளை நிமிர்த்தி தன் முகத்தை காண வைத்தான். அவனது முகத்தை ஏறெடுத்து பார்க்க முடியாமல் வெட்கத்தில் சிவந்தவள்,
“ஆமா நீங்க அப்படியே ஏமாந்துட்டாலும்...” என்று உமை சொல்ல,
“உன்னை இப்படியே விட்டு வச்சி இருக்கேன் இல்லையா... அதனால நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலையும் பேசுவ...” என்று கறுவியவன் வேகமாக விளக்கை அணைக்க, அச்சோ என்று தன் புடவையால் முகத்தை மூடிக் கொண்டாள்.
படுக்கையில் படுத்து தலையணையில் முகம் பதித்துக் கொள்ள அவளது நாணம் தடுக்க, புடவையால் தன் வெட்கத்தை மறைத்துக் கொண்டாள். அப்படியே அவள் அமர்ந்து இருக்க, உத்தமனின் அருகாமை எதுவுமே இல்லாமல் போனது.
“என்ன ஆச்சு..?” என்று இவள் தன் புடவையை எடுத்துவிட்டு பார்க்க அவன் நின்றிருந்த இடத்தில் உத்தமன் இல்லை.
“எங்க போனாங்க..” என்று எழுந்து அறையை சுற்றி விடிவிளக்கு வெளிச்சத்தில் தேட, அவனோ கர்ம சிறத்தையாக அவள் கொண்டு வந்த பாலை ஆற்றிக் கொண்டு இருந்தான்.
“என்னங்க பண்றீங்க... பசிக்குதா குடுங்க நான் ஆற்றி தரேன்” என்று சொல்லி அவன் அருகில் வந்து அவனது கையில் இருப்பதை வாங்க முயன்றாள்.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் உமை... நீ போய் உட்காரு...” என்றவன், குடிக்கும் சூட்டுக்கு ஆற்றி எடுத்தவன் அவளிடம் நீட்டினான்.
“இல்லங்க நீங்க தானே முதல்ல குடிக்கணும்... நீங்க குடிங்க..” என்று அவனிடம் நீட்ட,
“நான் வயிறு நிறைய சாப்பிட்டுட்டேன்.. நீ தான் எதுவுமே சாப்பிடல.. ஒழுங்கா இந்த பாலை குடி..” என்றான்.
“என்னங்க ப்ளீஸ்.... வேணாமே...” என்று அவள் தயங்க, அவளின் காதோரம் நெருங்கி,
“இரவு முழுக்க என்னை சுமக்க உனக்கு கொஞ்சமாச்சும் தெம்பு வேணும்டி... அதுக்காகவாவது குடி...” என்று சொன்னான். அதை கேட்டு குப்பென்று சிவந்து போனாள். ஆனாலும் தன் வெட்கத்தை வெளியே காட்டிக் கொள்ளமால்,
“ஓ...! உங்களை சும்மக்க இருக்கிறதுனால தான் இந்த பரிவா...?” என்று கேட்டாள்.
“ஆமா அதுல என்ன உனக்கு சந்தேகம்...” என்றவன், “நேரம் ஆகுதுடி... சீக்கிரம் குடி” என்று அவளை அவசரப் படுத்தினான்.
உதட்டை சுளித்தவள், “ரொம்ப தான்...” என்று முணுமுணுத்துக் கொண்டே பாலை குடித்து விட்டு அவனுக்கு கொஞ்சம் கொடுத்தாள்.
அவள் கொடுத்ததை வாங்கி ஒரே மொடக்காக வாயில் ஊற்றியவன், அப்படியே அவளை கரங்களில் தூக்கிக்கொண்டு படுக்கைக்கு சென்றான். அவன் அப்படி தூக்குவான் என்று எதிர்பாராதவள் கொஞ்சம் அதிர்ந்து போனாள். பின் சட்டென்று தன் முகத்தை அவனது வெற்று மார்பில் பதித்துக் கொண்டாள்.
அவனது வெற்று மார்பே அவளை கிளர்ச்சியுற செய்ய, உதடுக் கடித்து அவனது மார்பில் தன் முகத்தை இன்னும் அழுத்தி புதைத்துக் கொண்டாள். அவளின் சேட்டையை இரசித்தவன், பொத்தென்று கட்டிலில் போட,
“அம்மா...” என்று இடுப்பை பிடித்துக் கொண்டாள்.
“ஏன்டி இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள இடுப்பை பிடிக்கிற...” என்று சீண்டினான்.
அவனை முறைத்துப் பார்த்தவள்,
“பொறுமையா கையாளக் கூடாதாங்க... இப்படியா போட்டு என் இடுப்பை ஒடிப்பீங்க...” முகம் சுறுக்கியவள், கட்டிலில் உருண்டு நன்றாக படுத்துக் கொண்டாள் அவனை முறைத்துக் கொண்டே. அவள் முறைத்தும் உத்தமன் திருந்தவில்லை...
அவள் மீது பொத்தென்று விழுந்து வைத்தான். அதில் அவளது மேனி காயம் பட்டு போக இன்னும் அதிகமாக அவனை முறைத்தாள்.
அவளது முறைப்புகளை எல்லாம் ஏறக்கட்டியவன்,
“ஒரே ஒரு டீப் கிஸ் வேணும்டி...” என்றான்.
“எதுவும் கிடையாது... என் இடுப்பை வலிக்க செய்துட்டு, உங்களுக்கு முத்தம் வேணுமா... மொத்தமாவே எதுவும் கிடையாது” என்று தன் மீது இருந்த அவனை தள்ளி விட பார்த்தாள்.
ம்ஹும்... அவனை அசைக்க கூட முடியவில்லை. பாவமாக அவனை பார்த்தாள். அதோடு இப்படி அவள் மீது மொத்த பாரத்தையும் போட்டு படுத்து இருந்தவனின் செயலில் உமைக்கு மூச்சு முட்டிக் கொண்டு வந்தது. அவள் சிரமப்படுவதை பார்த்தவன், தானே விலகி அவளின் அருகில் படுத்துக் கொண்டான்..
அவனது இந்த கரிசனையில் முகம் மலர்ந்து அவனை பார்த்தாள். அவளின் புன்னகையில் தன் உயிரை தொலைத்தவன், அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான்..
இருவரின் முகமும் அருகருகே மிக நெருக்கமாக இருந்தது. ஒருவரின் பார்வை இன்னொருவரின் பார்வையை கவ்வியபடி இருக்க, மெல்ல மெல்ல உத்தமனின் இதழ்கள் பெண்ணவளின் இதழ்களை நெருங்கியது...
அவன் நெருங்க நெருங்க உமை அப்படியே நேராக நீட்டி படுக்க அவள் மீது கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்தவன் பெண்ணவளின் இதழ்களை சத்தமின்றி கவ்விக் கொண்டான். மெல்லிய இதழ் முத்தம் சற்றே வன்மையாக மாற ஆரம்பிக்க, அவனது வேகம் தாளாது உத்தமனின் பிடரியை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
அவளது கை இறுக்கம் உணர்ந்து அவளை இன்னும் சற்றே வன்மையாக நெருங்கினான். மெல்ல மெல்ல அவனது ஆவேசம் சற்றே மறைந்து மீண்டும் தென்றலாய் அவளது இதழ்களை வருடி நெகிழ்த்தி முத்தம் கொடுத்தவன், அப்படியே கீழே இறங்கி அவளின் நெஞ்சில் தன் முகத்தை வைத்து படுத்துக் கொண்டான்.
அவனது இரண்டு கரமும் உமையின் இடையை தளர்வாக பிடித்துக் கொண்டன... நேரம் ஆக ஆக உத்தமனிடம் எந்த மாற்றமும் இல்லை. அவளை கட்டி பிடித்தபடி அபப்டியே படுத்து இருந்தான். அவன் தூங்கவில்லை என்பது நன்றாகவே தெரிந்து இருந்தது.. உமை ஆச்சரியமாக உத்தமனை பார்த்தாள்...
அவனது தலையை கோதிக் கொடுத்தவள், “என்ன ஆச்சுங்க.. நீங்க குடுத்த முத்தத்தை பார்த்து நான் இன்னைக்கு ஒரு வழி ஆகி இருப்பேன்னு நினைச்சேன்... நீங்க என்னடான்னா இப்படி படுத்துட்டீங்க” கேட்டாள்.
அவளின் இடையில் இருந்த கரத்தால் அவளை இறுக்கிப் பிடித்தவன்,
“உனக்கு இன்னைக்கு ஓய்வு தேவைன்னு எனக்கு தெரியும் தங்கம்... எவ்வளவு அலைச்சல்.. இப்படியே எடுத்துக்கிட்டா நான் என்ன மனிதன்...” என்று நிமிர்ந்து அவளது கண்களை பார்த்து கேட்டான்.
அவனது பேச்சை கேட்ட உமைக்கு கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது.
“அழாம இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா அழவச்சுடுவீங்க போலையே...” என்றவள் அவனை இன்னும் கொஞ்சம் மேலே இழுத்து அவனது முரட்டு இதழ்களில் முத்தம் கொடுத்தவள்,
“இந்த மனசுக்கே என்னை உங்க கையில குடுக்கணும்னு இருக்குங்க...” என்று அவனது தலையில் முட்டி சிரித்தவள் அவனது கை வளைவுக்குள் அடங்கிப் போனாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நன்றாக தூங்கிப் போனார்கள்... காலையில் இருந்து அலைந்த அலைச்சல் ஒரு புறம் என்றால் திருமணம் நடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே உத்தமனுக்கு பயங்கர அலைச்சல்...
அதனால் அவளை அணைத்தபடி தன் கை வளைவுக்குள் பெண்ணவளை வைத்துக் காலை அவள் மீது போட்டுக்கொண்டு ஏதோ பொம்மையை கட்டி பிடித்துக் கொண்டு தூங்குவது போல அவளை அமுக்கி பிடித்துக் கொண்டு தூங்கிப் போனான் உத்தமன்.
அவனது அணைப்பும் இறுக்கமான பிடியும், இடையில் கிடக்கும் அவனது காலும், கழுத்தடியில் கிடக்கும் அவனது உரம் வாய்ந்த கையும் அவளுக்கு புதிதாக இருந்தது... ஆனால் வளைவான இடுப்பில் அவனது கால் பாரம் போட்டு இருந்தாலும் அவளுக்கு அது பெரிதாக தோன்றவில்லை.
அவளின் இடுப்பு வலிக்கு அவனது அந்த பாரம் மிதமாக இருக்க அவனது நெஞ்சு முடியோடு தன் முகத்தை புதைத்துக் கொண்டு தூங்கிப் போனாள். நன்றாக ஆழ்ந்த உறக்கம்... கண்களை கூட பிரிக்க முடியவில்லை... நாவரண்டு போக தண்ணீர் வேண்டும் போல இருந்தது...
ஆனால் உமையவளால் கொஞ்சம் கூட அசைய முடியவில்லை... அங்கும் இங்கும் நகர்ந்து பார்க்கிறாள் ம்ஹும்... கொஞ்சம் கூட நகர முடியவில்லை... அதில் கண்விழித்துப் பார்க்க அப்பொழுது தான் தான் எங்கு இருக்கிறோம், எந்த நிலையில் இருக்கிறோம் என்பதே உணர்ந்தாள்.
நிமிர்ந்து தன்னவனை பார்த்தாள். முகத்தை நிர்மலாக வைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனை கலைக்க மனம் வராமல் திரும்ப பார்த்தாள் முடியவில்லை. வலிமையான அவனது கால் இடுப்பில் கிடக்க, மெல்லிய புன்னகை வந்தது.
அவனது காலை கைக் கொண்டு தூக்கி நேராக போட்டவள், கழுத்தை சுற்றி இருந்த அவனது கரத்தையும் எடுத்து அந்த பக்கம் போட்டுவிட்டு எழுந்து சென்று தண்ணீர் குடித்தாள். ஏசி சத்தம் மட்டும் அறை எங்கும் கேட்க, அதோடு லேசாக குளிர் பரவுவது போல் இருக்க போர்வையில் தஞ்சம் கொண்டாள்.
“எழுந்துட்டியா தங்கம்?” என்று கேட்டபடி அவளை இறுக்கி அணைத்தவன், அவனது நெஞ்சில் ஏதோ குத்த என்னவென்று பார்த்தான். அவன் இது நாள் வரை போர்த்திக் கொண்டு இருந்த போர்வை தான் அவனை குத்தியது. அதில் கோவம் வர, அவளை மட்டும் மூடிய போர்வையை உருவியவன், இருவருக்கும் சேர்த்து போத்தி, ஏசியின் அளவை இன்னும் அதிகப்படுத்தி விட்டு இன்னும் கொஞ்சம் முன்னேறி அவளது புடவையை மாராப்பை கலைத்து போட்டு விட்டு அவளின் நெஞ்சில் தலை வைத்து தூங்கிப் போனான். அவனது இந்த செயலில் முகம் சிவந்தவள், அவனின் பிடியில் இருந்து நழுவ பார்த்தாள்.
ஆனால் உத்தமன் அதற்கு கொஞ்சம் கூட அசையவில்லை... அவள் நெளிந்துக் கொண்டே இருக்க, அதில் கடுப்பானவன்,
“தங்கம் இப்போ நீ ஒழுங்கா தூங்கலன்னா இருக்கிற ஆடையையும் நீ விட்டுக் கொடுக்க வேண்டி வரும்..” என்று சொல்ல, அதன் பிறகு அவள் நெளிவாளா என்ன...? நேராக நிமிர்ந்து படுத்திருந்தவள் அப்படியே படுத்து இருந்தாள்.
அவளின் இந்த அட்டேன்ஷன் பொஷிஷனில் தூக்கம் கலைந்தவன்,
அவளது கழுத்தில் வாசம் பிடித்துக் கொண்டே தன் இதழ்களை அங்கு உலாவ விட இரு கால்களின் கட்டை விரலை ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டாள். அவளின் அவஸ்த்தையை உணர்ந்தவன், அவளின் காதோரம் சரிந்து,
“ரொம்ப லொள்ளு பண்றானா தங்கம்...?” என்று அறியா சிறுவனாய் கேள்வி கேட்டான். அதற்கு பதில் சொல்ல முடியாமல் சிவந்துப் போனவள்,
“ம்ஹும்...” என்று மறுத்தாள். அவளின் மறுப்பில் புன்னகை வர,
“அப்போ என் பெர்பாமன்ஸ் பத்தலையாடி...” கேட்டவன் அவள் மீது புயலாகி ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தான். அவனது வேகத்தில் முகம் அந்திவானமாய் சிவந்தவள்,
“விடி விளக்கையும் அனைங்கங்க... ப்ளீஸ்” என்று கெஞ்ச, அவளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தவன் முழு இருட்டில் தன்னவளை உச்சி முதல் பாதம் வரை கொண்டாடித் தீர்த்தான்.
உத்தமனின் வேகத்துக்கு உமையவளின் அணிகலன்கள் மெட்டிசைக்க, அவன் அவளது கால் விரலில் போட்ட சலங்கை வைத்த மெட்டி மெல்லிசை பாடியது... அனைத்தும் முடிந்த பின்பு அவளது காலில் அணிவித்த மெட்டியில் அழுத்தமாய் மீசை முடி உரச முத்தம் வைத்தவன், அவளை நிமிர்ந்து பார்த்தான்.
மெல்லிய வெளிச்சத்தில் கூந்தல் கலைந்து, ஆடை விலகி, பூக்கள் நசுங்கி போய் ஆங்காங்கே உதிர்ந்து போய் கிடக்க, போட்டிருந்த வளையல்களில் சில உடைந்து போய் இருக்க, அந்த தோற்றத்தில் மிக மிக சோபையாக தெரிந்தாள் அவனது கண்களுக்கு...
“ஏய்... நான் சாதிச்சுட்டேன்...” என்று அவன் கத்த, வேகமாய் அவனது வாயை பொத்தியவள் மார்போடு போர்வையை அணைத்துப் பிடித்துக் கொண்டாள்.
எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அவளை கலைத்துப் போட்டவனுக்கு ஓரிடத்தில் தோல்வியே மிஞ்சியது... ஆம் அவளின் கொலுசு சிறிது கூட இடம் மாறாமல் அவளின் கால்களில் கிடந்தது...
அதை பார்த்து முறைத்தவன்,
“இரு உன்னை ஒரு நாள் என் கூடலுக்கு சாட்சியா பிச்சி போடுறேன். அப்போ தெரியும் என்னோட பெர்பாமன்ஸ் எப்படின்னு...” என்று அவளின் கால் கொலுசோடு உறவாட, அவனை பார்த்து ஆதூரமாக புன்னகைத்தாள்.
அதோடு அவனது பார்வை இன்னும் சற்றே கீழிறங்க, அவன் முத்தமிட்ட ஒற்றை மெட்டி மட்டுமே அவளது விரலில் இருந்தது. இன்னொரு கால் விரலில் இருந்து நழுவி படுக்கையில் இருக்கக் கண்டவன் மீசையை முறுக்கிக் கொண்டான்...
அவனது முதல் கூடலுக்கு இதை விடவா ஒரு சாட்சி வேண்டும்... அதை பெண்ணவளுக்கு கண் காட்டினான். அதில் முகம் சிவந்துப் போனவள்,
“ஐயோ போங்கங்க...” என்று வெட்கம் கொண்டாள். அவளின் வெட்கத்தை இரசித்தவன், மீசையை முறுக்கிக்கொண்டு அவளை பாதத்தில் முத்தம் வைத்து, கழண்டு இருந்த மெட்டியை அவளது மெல்லிய விரலில் மாட்டி விட்டவன், மீண்டும் குனிந்து அவளின் மெட்டிக்கு முத்தம் வைத்து அவளின் காலுக்கும் முத்தம் கொடுத்தான்..!
முதல் கூடல் இருவருக்கும் ஒரு நிறைவைக் கொடுத்தது..! இரசனையான கூடல்... பல முத்தங்களுக்கு இடையில் நடந்த கூடலில் பெண்ணின் மனமும் ஆணின் மனமும் பருவ மலராய் மலர்ந்து இருந்தது...!