Notifications
Clear all

அத்தியாயம் 19

 
Admin
(@ramya-devi)
Member Admin

“கேரமேல் பாப்கான் பால்ஸ் தானே” கேட்டான் தென்னவன்.

“ம்ம்” என்று மட்டும் தலையை ஆட்டினாள். இவனும் போய் வாங்கிக்கொண்டு வந்து அவளுக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான்.

அமர்ந்தவனிடம் “இந்த பிள்ளையை வச்சு இரு.. சாப்பிட்டுட்டு வாங்கிக்கிறேன்” என்று சொன்னவளை அந்த இருளில் கண்கள் ஒளிர பார்த்தான்.

“ப்ச் பார்த்துக்கிட்டே இருக்காம முதல்ல வாங்கு” என்று ஒரு அதட்டல் போட்டாள். சட்டென்று குழந்தையை வாங்கிக் கொண்டான் தென்னவன். குழந்தையை தொட்ட உடனே அவனுக்கு உடலெல்லாம் புல்லரித்தது.. முதல் முதல் தொடுகை. பிள்ளைக்கு நோகாமல் வாங்கி நெஞ்சில் போட்டுக் கொள்ள அவன் தடுமாற, தமிழ் “இப்படி பிள்ளையை படி” என்று சொல்லிக் கொடுத்து அவனது நெஞ்சில் போட்டு விட்டாள். தென்னவனின் உடல் சிலிர்த்தது.. அதை பார்த்தவளுக்கு இதழ்களின் ஓரம் சின்ன புன்னகை எழுந்தது.

அடுத்த சில நாட்களில் குழந்தை காணமல் போனது...

தென்னவன் வீட்டை விட்டு போன அன்று தமிழ் பானுமதி கிருஷ்ணன் மூவரும் சண்டையிட்டு அவரவர் அறைக்கு திரும்பிய பின் கூடத்தில் இருந்த வினோ குடும்பம் அர்ஜுனிடம்,

“காசு பணம் இருந்து என்னத்துக்கு.. நல்ல குடும்பம் இல்லையே.. சொல் பேச்சு கேட்காத பிள்ளை. பிள்ளையோட விருப்பத்தை மதிக்காத பெற்றவர்கள். இப்படி வாழுற வீட்டுல எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே யிருந்தா எப்படி இந்த குடும்பம் தளைக்கும்.. நல்ல குடும்பம்டா சாமி. இந்த குடும்பத்துல சம்மந்தம் வச்சுக்குறவன் பைத்தியம் புடுச்சு தான் திரியனும்” என்று சொன்ன தேவி,

“விரும்பி சம்மந்தம் வச்சுக்கிறவன் கூட இவ பேசுற பேச்சுக்கும் எப்படி குடும்பம் நடத்துவா.. ரெண்டே நாள்ல இந்தா உன் தாலின்னு கழுத்துல கட்டுனதை பிச்சு புருசன் கையில குடுத்துட்டு வந்திடுவா” என்று மேலும் சொல்ல,

“ம்மா என்னம்மா இப்படி எல்லாம் பேசுறீங்க? என்ன இருந்தாலும் இதும் நம்ம குடும்பம் தான். அவங்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வரணுமே தவிர இப்படியா பேசுறது? தப்பும்மா.. இவங்களுக்குன்னு நம்மளை விட்டா வேற யாரு இருக்கா. நாம தான் நல்லது சொல்லி புரிய வைக்கணும்” என்று சொன்ன வினோதினி,

“ஆமாம் தானே அத்தான்.. நீங்களே சொல்லுங்க, ஒருத்தர் தவறான வழிக்கு போனா நாம தானே புத்திமதி சொல்லி திருத்தணும்” என்று சொன்னவளுக்கு தலையை ஆட்டினான் அர்ஜுன்.

அவனுக்கு அருகில் இயல்பாய் அமர்வது போல அமர்ந்தவள்,

“அத்தான் நீங்க அக்காவை நினைச்சு கவலை படாதீங்க.. அக்கா நல்லவங்க தான். நீங்க எடுத்து சொன்னா புருஞ்சுக்குவாங்க.. ப்ளீஸ் அத்தான். இந்த சின்ன விசயத்துக்காக எங்க அக்காவை கை விட்டுடாதீங்க” என்று அவனின் கையை இறுகப் பற்றிக் கொண்டு கெஞ்சினாள்.

“அவ வாழ்க்கையை பற்றி அவளுக்கே அக்கறை இல்லை. எப்படியோ போன்னு வருங்கால புருஷனை அம்போன்னு விட்டுட்டு போயிட்டா.. ஆனா நீ அவளுக்காக இப்படி இவர்கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கியேடி.. என்ன புள்ளையோ நீ.. உன்னை சூது வாது தெரியாம வளர்த்துட்டேன்னு இப்ப வருத்தப் படுறேன்.. உன்னை ஒரு நல்லவன் கையில பிடிச்சு குடுத்துட்டன்னா நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்” என்று தேவி ஓவர் பெர்பாமன்ஸ் பண்ணினார்.

அர்ஜுன் விழி எடுக்காமல் வினோவை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது கண்கள் முழுவதும் அவளின் முன்னழகில் தான் இருந்தது. அதை பெருமையுடன் பார்த்த வினோ இன்னும் தாராள கொள்கையை கையில் எடுக்க, தேவி தன் கணவன் மற்றும் மகனை கூட்டிக்கொண்டு உள்ளே போய் விட்டார்.

போகும் முன்பு தன் மகளை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றார்.

“உங்களுக்கு எவ்வளவு மனசு கஷ்ட்டமா இருக்குன்னு தெரியுது அத்தான்” என்று அவள் மேலும் பேசிக் கொண்டே போக,

“உன் கையை இருக்கமா புடிச்சுக்கட்டுமா?” என்று கேட்டவன் அவள் மீது சாய்ந்துக் கொண்டான். இவனுக்கு வருத்தமா இருக்காம். அவ தோள் குடுக்குறாலாம்.. இருவரும் சற்றே நெருங்கி அமர, அந்த இடம் தோதாக இல்லாமல் போக,

“உன் ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டான்.

“இந்த தான் வாங்க” என்று அவள் அதற்கு மேல் எள் என்ற உடன் எண்ணையாக நின்றாள்.

அறைக்கு வந்த உடன்,

“அவளை விட உன்னை தான் எனக்கு பிடிச்சு  இருக்கு” என்று சொன்னவன் அவளை காமத்துடன் முத்தமிட ஆரம்பித்து எல்லையும் மீற ஆரம்பித்தான்.

ஆனால் இது தமிழின் வீடு என்பதால் ஆபத்து அதிகம் என்பதை உணந்தவன்,

“நாளைக்கு காரை அனுப்புறேன் வந்திடு.. உன் ஆறுதல் எனக்கு வேண்டும்” என்று கண் சிமிட்டி விட்டு சென்றான் அர்ஜுன்..

அடுத்த நாள் காலையில் பரபரப்புடன் கிளம்பியவள் தாயிடம் விசயத்தை கூறி விட்டு அர்ஜுன் அனுப்பி வைத்த காரில் ஏறிக் கொண்டாள். வந்து இறங்கிய இடம் அவனது கெஸ்ட் ஹவுஸ். அதுவே மிக ஆடம்பரமாக அமர்க்களமாக இருப்பதை கண்டு பேராசையில் கண்கள் விரிந்தது அவளுக்கு.

முழு அலங்காரத்துடன் வந்தவளை ஒரே இழுப்பில் தன் கைக்குள் கொண்டு வந்து அவளிடம் அத்துமீற ஆரம்பிக்க, அவனுக்கு முழு ஒத்துழைப்பு குடுத்து தன் உடைகளை துறந்து நின்றாள் வினோ.

“நீ இப்போ என் காலுக்கு கீழ தமிழ். உன் வாழ்க்கையை நான் முழுசா தட்டி பரிச்சுக்கிட்டேன். எத்தனை நாள் பணம் இருக்கும் மிதப்புல என்னை மதிக்காம இருந்த. இனி என்னோட நேரம். இந்த கோடீஸ்வர அர்ஜுன் என் புருசன்.. உன்னை மாதிரி பல பேரை என் காலுக்கு கீழ வேலை செய்ய வைக்கலாம்” என்று உள்ளுக்குள் கொக்கரித்துக் கொண்டாள்.

 

கொஞ்சம் கொஞ்சமாக தென்னவனுக்கும் தனக்கும் இடையே உள்ள இடைவெளியை சரி செய்ய ஆரம்பித்தாள் தமிழ். முகம் பார்த்து சிரிப்பது தொடங்கி குழந்தையை அவன் கையில் கொடுத்து விளையாட விடுவது முதற்கொண்டு அவனுக்காக ஸ்பெஷலாக சமைத்து வருவது வரை தொடர்ந்தது.

“எதுகாக்கடி நீ சிரமப்படுற? உணவை நான் பார்த்துக்க மாட்டனா?” என்று கேட்டவனை ஒரு பார்வை பார்த்தவள்,

“உன் தோழியா தான் உனக்கு சமைச்சி குடுக்குறேன். உன் மனைவியா மாற ஆசைப்பட்டு செய்யல” என்றாள் கடுப்புடன்.

“ஹேய் லூசு” என்று திட்டியவன்,

“இனி நீ மட்டும் ஒண்டியா சமைக்க வேண்டாம். இன்க்ரிடியன்ட் எல்லாம் இங்க உன் ரூம்ல இருக்க கிச்சன்ல வாங்கி வைக்க சொல்றேன். மத்திய நேரம் இங்கயே ரெண்டு பேரும் சேர்ந்து சமைச்சி சாப்பிடலாம் சரியா?” கேட்டான்.

“ஓகே” என்றவள் தான் சமைச்சி எடுத்து வந்ததை அவனுக்கு பரிமாறி சாப்பிட சொன்னாள். அவளோடு அவனும் இணைந்து சாப்பிட்டான்.

“ம்ம்.. சூப்பர்” என்று பாராட்ட,

“இந்த காஞ்சி போன ரொட்டிக்கு இந்த சூப்பர் ஓவரா இல்ல” முறைத்தாள்.

“எனக்காக நீ எது செஞ்சாலும் அது எனக்கு சூப்பர் தான்டி” என்றவன் அவள் எடுத்து வந்து இருந்த ரோஸ்ட்டேட் ப்ரெட் சீஸ் மிக்சை இரசித்தே உண்டான்.

“க்ரீமி பாஸ்த்தா செய்யலாம்னு தான் நினைச்சேன்.. டைம் இல்லையா சோ சாரி” என்றாள்.

“நாளைக்கு செஞ்சு தரேன்” என்றான் தென்னவன்.

“உனக்கு செய்ய தெரியுமா தென்னவா?” வியந்தாள்.

“உனக்கு பிடிச்சது எல்லாம் நான் செய்ய கத்துக்கிட்டேன்டி” என்று வாய்க்குள் முணகியவன்,

“ம்ம்” என்று மட்டும் வெளியே சொன்னான்.

“சூப்பர்டா.. அப்போ சீஸ் கொத்து”

“அதுவும் செய்ய தெரியும்” என்றான்.

“பாரேன் நல்லாவே சமைக்க கத்துக்கிட்ட போலையே.. அதுவும் எனக்கு பிடிச்ச ஐட்டம் எல்லாம்..” என்று சிலாகித்தாள். அப்பொழுது கூட அவளுக்கு உரைக்கவில்லை தனக்கு பிடித்த வகை எல்லாம் செய்ய தெரியுதே என்று.

அடுத்த நாள் அலுவலகத்தில் பைல் பார்ப்பதோடு சமையல் வேலையும் ஆரம்பம் ஆனது. அவ்வப்பொழுது கிருஷ்ணனையும் கூப்பிட்டு டேஸ்ட் பார்க்க சொல்லி தாங்கலோடு சாப்பிட அமர்த்திக் கொள்வார்கள் இருவரும்.

ஏனோ இருவரும் தனியாக இருந்த இந்த சமயங்களில் இருவரின் மனதும் அலைப்பாய தொடங்கியது. அதை மற்றவர் உணரா வண்ணம் காத்து நின்றவர்கள் அந்த எண்ணங்களில் இருந்து வெளியே வரவே மூன்றாவது ஆட்களை சேர்த்துக் கொண்டார்கள்.

இல்லை என்றால் இவர்கள் இருவரும் தான் எப்பொழுதும். ஆனா பொழுதும் கிருஷ்ணனை அவர்களால் ஒதுக்கி நிறுத்தவும் முடியவில்லை. இருவரின் நலன் விரும்பியும் ஆயிற்றே அவர்.

அதனால் மிக இயல்பாக அவரோடு ஒண்டிக் கொண்டார்கள் இருவரும்.

அன்றைக்கு அப்படி தான் பன்னிரண்டு வரை அலுவலக வேலை செய்தவர்கள், பசி எடுக்கவே “பசிக்கிதுடா” என்று தென்னவனிடம் தலையை தூக்கி சொன்னாள்.

“இருடி இந்த ஒரே ஒரு டெண்டர் மட்டும் பைல் பண்ணிட்டு வந்திடுறேன்” என்று அந்த கை வேலையை முடித்து விட்டு நிமிர, அவள் சீட்டில் இல்லை.

மகனை எட்டிப் பார்த்தான். அவன் தூங்கிக் கொண்டு இருந்தான். அவனின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு, சமையல் அறைக்குள் நுழைந்தான்.

அங்கே சேலையை இடுப்பில் சொருகிக் கொண்டு காய்களை நறுக்கிக்கொண்டு இருந்தாள். டூ பீஸ்ல பார்த்தா ஒரு அழகு, இப்படி முழுமையா புடவையில் மூடிக்கொண்டு இருந்தாலும் அழகா இருக்கா.. அதுவும் அந்த சின்ன இடுப்பு என்று அவனின் கண்கள் அவளின் இடை பக்கமாக போக,

“எவ்வளவு நேரம்டா ஒத்தையா வேலை செய்யிறது.. வா வந்து ஹெல்ப் பண்ணு” என்று தமிழ் சத்தம் குடுக்கவும், தன் எண்ணங்களில் இருந்து மீண்டவன் அவளுடன் இணைந்துக் கொண்டான்.

“என்னடி சமைக்கிற?”

“எல்லாம் உனக்கு பிடிச்ச சிக்கென் கிரேவியும் எக் பாஸ்த்தாவும் தான்” என்றாள்.

“னான் போடலையா?” கேட்டவன் ரெடிமேடாக இருக்கும் னான் ரொட்டியை ப்ரிஜில் இருந்து எடுத்து வெளியே வைத்தான்.

“கொஞ்சம் மில்க் சேக் போடவாடா?”

“யா சுயர்... உன் டேடிக்கு பிடிச்ச ப்ளேவரும் சேர்த்து போடுடி”

“ம்ம்” என்றவள் அதற்குரிய எல்லா வேலைகளையும் பார்க்க, திருட்டு தனமாய் அவளை சைட் அட்டிதுக் கொண்டு இருந்தான் தென்னவன்.

இடுப்பு சேலையில என்னத்தடி ஒளிச்சு வச்சு இருக்க. என்னை காந்தமா இழுக்குது.. வாய்க்குள்ளே முணகிக் கொண்டான். கண்கள் அடிக்கடி அவளின் இடுப்பை தொட்டு தொட்டு பார்த்து பெருமூச்சு விட்டான்.

“கொல்றா அரக்கி” முணகினான்.

“என்னடா பண்ற.. எப்பவும் பேசிட்டே இருப்ப. இன்னைக்கு என்ன ஆச்சு எதுவும் பேசல” என்று அவனுக்கு முதுகு காட்டியபடி வேலைகளை செய்தாள்.

“ஒன்னும் இல்லடி..” என்றவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. எங்கே தன்னையும் அறியாமல் அவளின் இடுப்பில் கையை வைத்து விட்டுவமோ என்று பயந்துப் போய் நின்றிருந்தான்.

Loading spinner
Quote
Topic starter Posted : June 24, 2025 4:47 pm
(@gowri)
Estimable Member

இந்த வினோ...என்ன இப்படி பண்ணிட்டா????

கண்டிப்பா இந்த அர்ஜுன் அவளை கல்யாணம் பண்ண மாட்டான்....

இது இவளுக்கு தேவையா????

எல்லாம் இவ அம்மாவை சொல்லணும்.....நல்ல அம்மா🤮🤮🤮🤮🤮🤮

தமிழை வின் பண்ண நினைச்சி.... இப்ப உன்னோட வாழ்க்கையே??????

Loading spinner
ReplyQuote
Posted : June 25, 2025 12:35 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top