அந்த ஒர் இரவு இருவருக்கும் சுதந்திரமாக, போட்டு இருந்த முக கவசம் எல்லாம் உடைந்து சிதறி, சிறு பிள்ளையாக தங்களை உணர்ந்தார்கள். அவள் கேட்ட கேள்விகளை எல்லாம் திசை திருப்பி விட்டு விட்டான்.
ஏனோ அந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. பெருமூச்சு விட்டவன், தமிழை பார்த்தான்.
அவளுக்கு எந்த தளைகளும் இல்லை.. ஆனால் அவனுக்கு அப்படி இல்லையே..
நீரில் நீந்தி நீந்தி சோர்வாகிப் போனவள் அங்கிருந்த இருக்கையில் படுத்து விட்டாள். அருகில் இருந்த இன்னொரு இருக்கையில் தென்னவனும் படுத்து விட்டான். தலைக்கு மேல் இருந்த வானில் விண்மீன்களும் நிலாவும் அழகாக ஒளி வீசிக் கொண்டு இருந்ததை பார்த்து இரசித்தவள்,
“இந்த நிலா ரொம்ப அழகா இருக்குல்ல தென்னவா”
“ம்ம்” என்றான்.
குளுகுளு காற்று இருவரின் உடலையும் தழுவி செல்ல, இதமான மன நிலை உண்டானது. ஆனால் தென்னவனுக்குள் ஒரு புழுக்கம் இருக்க தான் செய்தது.
“நீ அந்த அர்ஜுனை கன்சிடர் பண்ணலாம் தமிழி”
அவளிடம் பெருத்த மௌனம் நிலவியது.
“கொஞ்சம் யோசியேன்டி” தாங்க முடியாமல் கேட்டான். நீண்ட மூச்சை எடுத்து விட்டவள்,
“மனசுல உன்னை வச்சுக்கிட்டு வேற ஒருத்தனோட குடும்பம் நடத்துனா அதுக்கு பேரு வேசித்தனம் தென்னவா.. நீ என்னை வேசித்தனம் தான் செய்ய சொல்ற அது உனக்கு புரியுதா?” அவனை திரும்பி பார்த்து கேட்டாள்.
“அப்போ என்னை மட்டும் நீ கல்யாணம் செய்ய சொல்லி வற்புறுத்துவதுக்கு பெயர் என்னடி?” ஆழ்ந்த அமைதியுடன் கேட்டான்.
“ப்ச் அது வேற இது வேறடா”
“எல்லாம் ஒன்னு தான். எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்குடி. அதுல சில உணர்வுகள் கொட்டி கிடக்கு” என்றவனை தொண்டை அடைக்கப் பார்த்தவள்,
“அக்காவை அவ்வளவு லவ் பண்ணியா தென்னவா?” என்றவளின் கேள்வியில் அடக்கி வைத்து இருந்த ஆத்திரம் உச்சிக்கு ஏறியது.
முதல் முறையாக அவளை கோவத்துடன் பார்த்தவன்,
“இந்த பேச்சை நீ விடவே மாட்டியாடி” கண்கள் சிவக்க கத்தியவன் விருட்டென்று எழுந்து போய் விட்டான்.
“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி ஓவரா ரியாக்ட் பண்ணிட்டு போறான்.. போயேன்.. எனக்கு என்ன வந்துச்சு.. அப்படியே போயிடுடா.. இனி தமிழி எமிழின்னு வா.. இடுப்புலையே ஓங்கி ஒரு உதை விடுறேன்” என்று கத்தியவள் ஆத்திரத்தில் சரக்கடித்து அந்த வீக் எண்டை அங்கேயே கழித்தவள்,
திங்கள் அன்று வீட்டுக்குள் நுழைந்தவளை கடுப்புடன் பார்த்தார் பானுமதி.
“என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? உன் தலையில நீயே மண்ணை வாரிப் போட்டுக்காத சொல்லிட்டேன். அர்ஜுன் யாரு தெரியுமா? எப்பேர்பட்ட கோடிஸ்வரன் தெரியுமா? நம்மளை விட ஒரு மடங்கு சொத்து அதிகம் வச்சு இருக்கவன். அவனை கட்டிக்க உனக்கு என்ன கசக்குது.. அவனே உன்னை தேடி வந்து பொண்ணு கேட்டா நீ ரொம்ப ஓவரா பண்ணி விரட்டி விட்டு இருக்க.. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லதுக்கே இல்ல.. இந்த பிள்ளை மட்டும் உனக்கு வாழ்க்கை இல்லை இனியா.. இவனுக்கு ஆயா வேலை பார்த்துட்டு காலம் முழுக்க வாழ்ந்துடலாம்னு நினைக்காத..” என்றவரை ஆழ்ந்து பார்த்தவள்,
“என் வாழ்க்கையை டிசைட் பண்ண எனக்கு தெரியும் மாம்.. நீங்க தேவை இல்லாமல் இதுல மூக்கை நுழைக்காதீங்க ஸ்டே அவே..” என்று முகத்தில் அறைவது போல பேசியவளை ஆத்திரத்துடன் பார்த்தார் பானுமதி.
அவரும் கிளி பிள்ளைக்கு சொல்வது போல சொல்லி பார்த்து விட்டார். ஆனால் தமிழ் மனம் இறங்கவே இல்லை. இனியும் மனம் இறங்க மாட்டாள் என்று பாவம் அவருக்கு தெரியவில்லை.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த வினோதினிக்கு விபரீத ஆசை ஒன்று எழ, யாருக்கும் தெரியாமல் அந்த அர்ஜுனன் யாரு என்று பார்த்து அவனுடன் பழக சந்தர்ப்பாம் பார்த்துக் கொண்டாள்.
அதை பானுமதி மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள எண்ணி,
“பெரியம்மா அக்கா கிட்ட கேட்டா, அக்கா வேணான்னு தான் சொல்லுவாங்க, நாம வேற ஐடியா போடுவோம்” என்று பானுமதிக்கு தூபம் போட ஆரம்பித்தாள்.
“வெளில வச்சு பார்த்தா தானே அக்கா அவரை விரட்டி அடிக்கிறாங்க.. நாம இன்னைக்கு ரெண்டு போரையும் நம்ம வீட்டுலயே மீட் பண்ண வச்சா என்ன? உங்க முன்னாடி அக்கா அநாகரீகமா எதுவும் நடந்துக்க மாட்டாங்க இல்லையா பெரிம்மா. அதனால அந்த அர்ஜுன் சாரை வீட்டுக்கு வர சொல்லி சொல்லுங்க.. நம்ம வீட்டுலையே இன்னி இவங்க ரெண்டு பேரையும் பழக விடலாம்” என்று ஐடியா சொல்ல, பானுமதிக்கும் அது சரியாகப் பட அர்ஜுனுக்கு போன் பண்ண போய் விட்டார்.
இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த வினோதினியின் தாய் தேவிக்கு குழப்பமாக இருந்தது.
“என்னடி ஐடியா பண்ற? ஒன்னும் புரியலையே..”
“ம்மா ரெண்டாந்தாரமா அதுவும் இவனை கட்டிக்கிட்டா பாதி சொத்து தான் கிடைக்கும். அதே அர்ஜுனை கட்டிக்கிட்டா இந்த மொத்த சொத்தை விட ஒரு மடங்கு கூடுதல் சொத்து கிடைக்கும். அதுக்கு தான் ப்ளான் பண்றேன்” என்று கண்ணடித்தாள்.
“அடியே என் அறிவு செல்லமே.. உனக்கு மூளை அபாரமா வேலை செய்யுதுடி. நீ சொன்ன மாதிரி அந்த அர்ஜுனை எப்படியாவது கவுத்து போட்டுடுடி.. பிறகு நம்ம வாழ்க்கை ஆகா ஓகோ தான்” என்று பேராசை கண்ணில் மின்னியது தேவிக்கு.
அன்று மாலை நான்கு மணி போல அர்ஜுன் வந்து விட தன் உடையை கண்ணாடியில் பார்த்தாள் வினோதினி. சேலை தான். ஆனால் கவர்ச்சியாக கட்டி இருந்தாள். அவளை பார்ப்பவர்களின் கண்கள் அவளின் செழுமையில் படியாது மீலாது. ஏனெனில் கொஞ்சம் அப்பட்டமாகவே காட்டிக் கொண்டு இருந்தாள்.
அதை இன்னும் லாவகமாக எடுத்து காட்டும் விதமாக புடவையை சரி செய்தவள் அடுப்படிக்குள் நுழைந்து கையில் பழச்சாறுடன் வெளியே வந்தாள்.
அவனுக்கு எதிரில் பானுமதி மற்றும் கிருஷ்ணன் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க,
“இந்தாங்கா.. எடுத்துக் கோங்க மாமா” என்று சொல்லி நீட்டியவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்தான் அவன். அவன் அப்படி பார்வையிடும் பொழுதே வீட்டுக்குள் நுழைந்தாள் தமிழ்.
வினோதினி நின்று இருந்த தோரணையும் அவளை கண்ணெடுக்காமல் பார்த்த அர்ஜுனையும் ஒரு பார்வை பார்த்தவள் ஏலனமாக பார்த்தவள் கண்டு கொள்ளாமல் மாடி ஏறிவிட்டாள்.
பானுமதி அவளை அழைக்க,
“பிரெஷ் ஆகிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு மேலே மாடியில் நின்று கீழே நடக்கும் கூத்தை பார்த்தாள். தென்னவனும் பின்னாலே வந்தான்.
அவன் மரியாதை நிமிர்த்தமாக ஹலோ என்று அர்ஜுனுக்கு கையை கொடுத்து விஷ் பண்ணி கூடத்திலே அமர்ந்துக் கொண்டான்..
அவளுக்கும் சூசை நீட்டினாள் வினோ. ஆனால் அவளை எறேடுத்துக் கூட பார்க்காமல் “தேங்க்ஸ் மா. நான் இப்போ டீ குடிச்சுட்டு வரேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்துக்குறேன்” என்றவனின் பார்வை ஒரு மரியாதைக்கு கூட அவளை பார்க்கவில்லை.
“ம்ம் இதே பிகேவியர்ர்ல தான்டா உன்கிட்ட விழுந்தேன்” என்று சொன்னவள், உள்ளே போக பார்க்க,
“சார் இன்னையோட மூணு மாசம் முடிஞ்சு போச்சு.. நான் என் வீட்டுக்கு போறேன். பிள்ளையை தூக்கிட்டு உங்க மகள் வந்தாலும் சரி இல்ல நீங்க யார் வந்தாலும் சரி எனக்கு ஓகே தான்” என்று அவன் சொன்னதை காதில் வாங்கிய தமிழுக்கு நெஞ்சின் ஓரம் வலி எழுந்தது.
கிளம்ப அவனது அறைக்கு உள்ளே நுழைந்தான். சிறிது நேரத்தில் பெட்டியில் தன் துணிகளை அடக்கி எடுத்துக் கொண்டு வர, அவனுக்கு முன்னாடி தமிழ் கிளம்பி நின்னரு இருந்தாள் பிள்ளையோடு.
அர்ஜுன் இது சரி இல்ல....
சரி இனியாவது, இனியா ஹேப்பியா இருக்கட்டும்
அர்ஜுன் இது சரி இல்ல....
சரி இனியாவது, இனியா ஹேப்பியா இருக்கட்டும்
அப்படியெல்லாம் ஹேப்பியாக விடமாட்டோம் 🤣