Notifications
Clear all

அத்தியாயம் 5

 
Admin
(@ramya-devi)
Member Admin

 

தன் கற்பை தன் குடும்பத்துக்காக விலை பேசியவளுக்கு தெரியவில்லை, அவளின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் தன் காலுக்கு கீழ் கொண்டு வந்து விட்டான் என்று.

உதடுகள் நடுங்க, உடல் வெடவெடக்க அவனின் முன்பு முந்தானை இன்றி கூனி குறுகி நின்றாள் தயாழினி. அவளின் எழில் மிகுந்த கோலத்தை கண்ணார இரசித்துப் பார்த்த தாயாகரன் அந்த அழகுகளை எல்லாம் கொள்ளையிட பேராசை கொண்டவன் அவளை அடியெடுத்து வைத்து நாடினான்.

அவனது நெருக்கத்தில் இவள் பின்னுக்கு நகர்ந்தாள் பயத்துடன். அவன் முன்னேறி வர வர இவள் பின்னுக்கு நகர்ந்து சென்றாள்.

தயாவுக்கு இந்த அணுகள் கூட பிடித்துப் போக, போதை ஏறிய விழிகளால் அவளை ஆதி முதல் அந்தம் வரை பார்த்தான்.

இத்தனை நாட்களும் வெறும் முத்தத்தோடு மட்டும் முடித்துக் கொண்டவன், இன்றைக்கு அதையும் மீறி செல்ல அவனுக்குள் இருக்கும் உணர்வுகள் பேயாட்டம் போட, அவளை நெருக்கிப் பிடித்து விட்டான்.

சுவரோடு போய் முட்டி நின்றவளால் அதற்கு மேல் போக முடியாமல் போக, பயத்துடன் அவனை பார்த்தாள். அவளின் விழிகளில் தெரிந்த பயத்தை இரசித்துப் பார்த்தான்.

“இந்த கண்ணுல வெறும் பயம் மட்டும் தான் தெரியனும்... என்னை ஏமாத்த பார்த்தவளை அவ்வளவு ஈசியா விட்டுடுவேன்னு நினைச்சியா?” என்று அவளின் காதோரம் சரிந்து சொல்ல, அவளுக்கு பக்கென்று ஆனது.

“சார்” என்று அவள் பதற, அவளுக்கு நேராக இருந்த ஒரு டிவியை ஆன் செய்தான்.

அதில் அவளுடைய சின்ன தங்கச்சி பெரிய மாட்டு தொழுவத்தில் சாணி அள்ளிக் கொண்டு இருந்தாள் கிழிந்த உடையுடன். அப்பொழுது தயாகரன் போலவே கொஞ்சம் கொஞ்சம் மாறுதல் உள்ளவன் ஒருவன் அவள் மீது கழனி தண்ணீரை தலையோடு ஊற்றிவிட்டு,

கன்னத்தில் பொலிறேன்று ஒரு அரை விட்டு இருந்தான். அதை தாங்க முடியாமல் பிறைநிலா சுருண்டு போய் விழுந்தாள் மூலையில்.

“வேணாம்ப்பா அவளை அடிக்காத.. செல்லமா வளர்ந்த பிள்ளை அவ. உன் அடியை தாங்க மாட்டா” என்று கண்களில் வற்றாத நீருடன் அவனின் காலை பிடித்து கெஞ்சிக் கொண்டு இருந்தார்கள் அவளின் பெற்றோர் இருவரும்.

அதற்கு அவன் ஏகத்தாளமாக ஏதோ பேச கூனி குறுகிப் போனார்கள் இருவரும்.

“அப்பா அவன் கிட்ட போய் கெஞ்சிட்டு இருக்கீங்க... முதல்ல அவன் காலை விடுங்க ப்பா” என்று சீறினாள் பிறை நிலா.

அதற்கு இன்னும் அவனிடம் அடி வாங்கினாள் அவள். அதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த தயாழினிக்கு உயிரே போய் விட்டது.

“ஏன் சார் இப்படி பண்ணீங்க.. உங்களை நம்பி தானே நான் என்னை குடுக்க வந்தேன். இப்போ இப்படி பண்ணிட்டீங்களே.. அவ சின்ன பொண்ணு சார்.. அவளை அடிக்க வேண்டான்னு சொல்லுங்க” என்று அவனை கைக்கூப்பி கெஞ்சியவளை எகத்தாளத்துடன் பார்த்தவன்,

“நான் யாருன்னு தெரியுமா?” என்று கேட்டான்.

அவளுக்கு அவனை பற்றி ஒன்றுமே தெரியாது. அவனை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய எந்த அவசியமும் அவளுக்கு இதுநாள் வரை ஏற்பட்டதே இல்லை.

“முழுமையா தெரியாது.. ஆனா நீங்க வட்டிக்கு விடுறீங்கன்னு மட்டும் தெரியும்” என்றாள்.

அவளின் விரல்களை பற்றி நீவி விட்டவன், அவளை பார்த்துக் கொண்டே,

“நான் கட்ட பஞ்சாயத்து பண்ணும் பக்கா வில்லன்.. யாரு நல்லா இருந்தாலும் எனக்கு பிடிக்காது.. குறிப்பா உன் குடும்பம்..” என்றவனை புரியாமல் பார்த்தாள்.

“ஏன் என் குடும்பம் மட்டும்?” தயங்கி தயங்கி கேட்டாள்.

“ஏன்னா நானே பக்கா கிரிமினல். ஆனா என் மேலையே கை வைக்க பார்த்தா சும்மா விடுவேன்னு நினைச்சியா?” நக்கலுடன் கேட்டவன் அவளின் சுண்டு விரலை பிடித்து அப்படியே பின்னால் வளைத்து உடைக்க,

“ஐயோ.. அம்மா” என்று வலியில் அலறித்துடித்தாள் தயாழினி.

“கத்து இன்னும் கத்து... நீ கத்த கத்த காதுல தேன் வந்து பாயுற மாதிரி இருக்குடி” என்றவன் அவளின் அடுத்த விரலையும் பின்னால் வளைக்க பார்க்க வேகமாய் அவனின் கையில் இருந்து தன் கையை உருவிக்கொள்ள பார்த்தாள். ஆனால் அவனது முரட்டு பிடியில் இருந்து அவளால் விரல்களை இழுத்துக் கொள்ளவே முடியவில்லை.

“ப்ளீஸ்.. என்னை விட்டுடுங்க.. ஏன் இப்படி சித்தரவதை பண்றீங்க? உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? மனுசன் தானா நீங்க எல்லாம்” கத்தியவளின் குரல்வளையை அழுத்திப் பிடித்தவன்,

“என்னடி சொன்ன?” என்று இன்னும் அவளின் குரல் வளையை இன்னும் நெருக்கிப் பிடிக்க அவளுக்கு கண் முழிகள் எல்லாம் பிதுங்கி வெளியே வந்து விடும் போல இருந்தது. கால்களால் அவனை எட்டி உதைத்து தன்னை விடுவித்துக் கொள்ள பார்க்க, அவனின் கால்களால் அவளின் கால்களை சிறை பிடித்துக் கொண்டவன் அவளை வெறுப்பு கக்கும் விழிகளால் பார்த்தான்.

“என்கிட்டே பகுமானமா இருக்குற மாதிரி நடிச்சுக்கிட்டு இந்த பக்கம் நான் அசந்த உடனே உன் தங்கச்சிங்க மூலமா போலீஸ் கம்ளைன்ட் குடுத்து விட்ட உன்னை எல்லாம் உயிரோட விட்டா நான் என்னடி ஆம்பளை” என்று கேட்டவன் அவளை இன்னும் இறுக்கிப் பிடித்தான்.

அதில் உயிருக்கு போராட ஆரம்பித்தாள் தயாழினி. அவள் படும் உயிர் அவஸ்த்தையை பார்த்து இரசித்தவன், போனா போகுதென்று அவளின் கழுத்தில் இருந்து கைகளை எடுத்துக் கொண்டான்.

அவன் கை எடுத்த அடுத்த நிமிடம் இருமல் தொடங்கியது அவளுக்கு. இருமி இருமி ஏற்கனவே புண்ணாய் போய் இருந்த தொண்டை இன்னும் புண்ணாகிப் போனது.

விழிகளில் நீர் நிரம்பி விட்டது வலியிலும் தொடர் இருமலிலும். அவள் படும் அவஸ்த்தையை கண் குளிர பார்த்து இரசித்தவன் இதழ்களில் வஞ்சக புன்னகை சூழ்ந்தது.

இருமி ஓய்ந்தவள் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“சத்தியமா நான் எந்த கம்ப்லைன்டும் எழுதி குடுக்கல சார்..” என்றவளை நக்கலுடன் பார்த்தவன் அவள் முன்னாடி சில ஜெராக்ஸ் பேப்பரை வீசினான்.

அதை எடுத்துப் பார்த்தவள் விக்கித்துப் போனாள். அது அவள் எழுதிய புகார் கடிதம் தான். ஆனால் இது எப்படி இவன் கையில.. மிரண்டுப் போனாள்.

“இப்போவாச்சும் தெரியுதா இல்லையா? இது நீ எழுதியது தானே?” கேட்டவன் ஒரு சிகரெட்டை எடுத்து ஊதியவன் அவளின் முகத்திலே புகையை விட்டான்.

ஏற்கனவே இருமலில் இருப்பவள் இன்னும் இருமினாள். தொண்டை அநியாயத்துக்கு புண்ணாய் போனது. இருமி இருமி அவளின் விழிகளும் சிவந்துப் போய் விட்டது. இது போதாது என்று போன் போட்டு சாம்பிராணி போடும் தூபக்காலில் நெருப்பு கங்குகளை வைத்து எடுத்து வர சொன்னவன்,

அதில் பட்ட மிளக்காயயை போட்டு இவளின் முகத்துக்கு நேராக வைத்து மூச்சை இழுக்க சொல்ல அவள் மாட்டேன் என்பது போல தலையை ஆட்ட, அவளின் பின்னந்தலை பிடரியை பிடித்து தூபக்காலுக்கு நேராக அவளின் முகம் வருவது போல குனியவைத்து மிளகாய் நெடியை அவளுக்கு காட்ட, அவளின் இருமல் இன்னும் அதிகம் ஆகியது. இருமி இருமி வாந்தி வருவது போல ஆனது.

இது போதாதென்று அவளின் முகம் முழுக்க மிளகாய் நெடி பட காரத்தில் துடித்துப் போனாள் தயாழினி. கண்களெல்லாம் ஒரே எரிச்சல் அப்பியது.

இப்போ குளுகுளுன்னு இருக்கா? எகத்தாளமாக கேட்டவனின் பிடியில் இருந்து அவளின் தலையை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை.

“ஐயோ ஏன் இப்படி சித்ரவதை பண்றீங்க..? சத்தியமா இதை நான் தான் எழுதினேன். ஆனா நான் என் தங்கச்சிங்களை கம்ளைன்ட் பண்ண சொல்லவே இல்ல.. எங்களை நம்புங்க. என் தங்கச்சிங்களும் இந்த செயலை செய்து இருக்க மாட்டாங்க” கெஞ்சியவளின் கெஞ்சல்களை கண்டு கொள்ளாமல் அவளுக்கு மீண்டும் ஒரு வீடியோ போட்டு விட்டான்.

அதில் இரண்டு வீடியோ கம்பெயின் பண்ணி ஓடியது. அதுவும் அவளின் இரண்டு தங்கைகளும் தனி தனியாக போலீசில் போய் புகார் அளிப்பது போல இருந்தது.

ஒரு வீடியோவில் சின்ன தங்கை நேரடியாக காவல்நிலையம் போய் புகார் செய்த வீடியோ இருந்தது. இன்னொன்றில் இங்கிருந்து தப்பித்து போன குறிஞ்சி அக்கா சொன்னபடி வீட்டுக்கு போகாமல் எதிரில் வந்த காவல்துறை வாகனத்தை மறைத்து புகார் தந்துக் கொண்டு இருந்ததை சுடசுட படம் எடுத்து இருந்ததை காட்ட, தலையில் அடித்துக் கொண்டாள் தயாழினி.

“நான் என்ன பண்ண சொன்னேன். இவளுங்க ரெண்டு பேரும் என்ன காரியம் பண்ணி வச்சு இருக்காளுங்க.. கடவுளே” என்று தலையில் அடித்துக் கொண்டவள் அப்பொழுது தான் அந்த வாகனத்தில் இருந்து இறங்கியவனை கண்கள் சுருங்க பார்த்தாள்.

அவனும் இந்த தயாகரன் போலவே இருந்தான் சாயலில். அடக்கடவுளே மீண்டும் மீண்டும் இவனுங்களிடமே என் குடும்பம் சிக்கி தவிக்கிறதே என்று நொந்துப் போனாள்.

சின்னவளாவது தாய் தந்தையோடு இருக்கிறாள். ஆனால் பெரியவள் என்னை போல தனியாக அல்லாவா மாட்டிக் கொண்டாள்... அவள் வேறு எல்லாவற்றிற்கும் அவசரப் படுவாளே.. கடவுளே அவளுக்கு எந்த ஆபத்தும் சூழாமல் பார்த்துக் கொள். சின்னபிள்ளை வேற என்று கலங்கி நின்றாள்.

இவளின் நிலையே இங்கு மிகவும் பரிதாப நிலையில் இருக்க இவளோ மற்றவர்களை பற்றி பரிதாபம் கொள்கிறாள் எங்கு போய் சொல்ல..

அண்ணன்கள் வாங்கிய பணத்துக்கு ஈட்டிக்காரனாய் பணத்தை வசூலிக்க வந்த உடனே மலர் தன் மூத்த மகளுக்கு போன் போட்டு விசயத்தை சொல்லி இருந்தார். அடுத்த பேருந்திலே ஊருக்கு வந்தவள் கடன் வசூலிக்க வந்த கையாட்களிடம் கொஞ்ச நாள் கொடுக்கும்படி கெஞ்சி கேட்டு வட்டி பணத்தை மட்டும் குடுத்து அனுப்பி வைத்தாள்.

இதே போல ஒவ்வொரு மாதமும் கடந்துப் போனது. கடன்காரர்கள் முதலை கேட்க ஆரம்பித்தார்கள். இதற்கு இடையில் கடனுக்கு பயந்து போய் ஊரை விட்டு காலி செய்த அவளின் அண்ணன்களை தேட ஆரம்பித்தாள். ஆனால் அவர்கள் இருவரும் எங்குமே சிக்கவில்லை.

ஆட்கொணர்வு மனு குடுத்து பார்க்கலாம் என்று புகார் கடிதம் எழுதி காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்து விட்டு வந்த நேரம், கடன் வசூலிக்க வந்த ஆட்கள் வீடு புகுந்து அவளின் இரண்டு தங்கைகளிடமும் தவறாக நடந்துக் கொள்வதை பார்த்து அதற்கும் புகார் கடிதம் எழுதி வைத்தாள்.

ஒன்று உள்ளூர் காவல் நிலையத்துக்கும் இன்னொன்று கமிஷனரிடம் குடுக்கவும் எழுதி வைத்து இருந்தவள், அலுவலகத்தில் அவசர வேலையாக அழைக்கவும் பெங்களூர் போய் விட்டாள் தயாழினி.

அதை சின்னவள் ஒன்றை எடுத்துக் கொண்டு கோயில் போவதாக சொல்லி விட்டு காவல் நிலையத்துக்கு போய் புகார் அளித்து விட்டாள்.

அந்த நேரம் தான் குறிஞ்சிக்கு இண்டர்வியூ ஒன்று வர, அவளை அழைத்து இருந்தாள் தயாழினி. அதனால் இவள் தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு பெங்காளூர் வந்து இருந்தாள். அதில் தெரியாமல் தயாழினி எழுதி இருந்த கடிதம் விழுந்து இருந்தது.

அதை அங்கு போய் தான் பார்த்தாள் குறிஞ்சி. சரி அது அது பாடுக்க இருக்கட்டும் என்று வந்த வேலையை பார்த்தாள்.

ஆனால் அதற்குள் பிறைநிலா குடுத்து இருந்த புகார் விசயம் அண்ணன் தம்பி மூவருக்கும் போய் விட, தயாளன் தான் களத்தில் இறங்கினான் முதலில்.

“நான் பெங்களூர் போய் முதல்ல அவளுங்களை அள்ளிட்டு வர்றேன்.. நீ இங்க பார்த்துக்க” என்று சின்னவன் பிரபாகரனிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

போனவன் தயாழினி மற்றும் குறிஞ்சியை அள்ளி போட்டுக்கொண்டு வந்து விட்டான் தன் இருப்பிடத்துக்கு. சரியாக  இவர்கள் இருவரும் இங்கு வந்த ஆறாம் நாள் சின்னவளை குடும்பத்தோடு அள்ளி இருந்தான் பிரபாகரன்.

தன் வீட்டில் வைத்து அவர்களை செய்யக்கூடாத சித்ரவதை எல்லாம் வைத்து செய்ய ஆரம்பித்து விட்டான். இது தெரியாமல் தயாழினி தன் குடும்பத்தை காப்பாற்ற ப்ளான் போட்டாள். அத்தனையும் ஓட்டை பானையில் நீர் அள்ளிய நிலையானது.

Loading spinner
Quote
Topic starter Posted : June 23, 2025 10:55 am
(@gowri)
Estimable Member

பாவம் பா....

Loading spinner
ReplyQuote
Posted : June 23, 2025 12:30 pm
Admin
(@ramya-devi)
Member Admin

Posted by: @gowri

பாவம் பா....

ஆமாம் ரொம்ப பாவம் தான் 🥺

 

Loading spinner
ReplyQuote
Topic starter Posted : June 23, 2025 12:33 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top