சற்று நேரத்துக்கு முன்பு அவளின் இடையை பிடித்ததே இப்பொழுது வரைக்கும் வலிக்கிறது.. இதில் மொத்தமும் என்றால்... ஐயோ கடவுளே என்னை காப்பாத்து.. என்று முணுமுணுத்தாள்.
“எந்த சாமியும் வந்து காப்பாத்தது... போ போய் பெட்ல படு” என்றவன் லிமிட்டாக சரக்கை அடித்து விட்டு அவளிடம் வந்து விழுந்தான்.
“என்னை விட உனக்கு இந்த சட்டை ரொம்ப நல்லாவே இருக்கு. ஆனா இன்னொரு ஆள் கூட உள்ள நுழைஞ்சுக்கலாம் போலையே” என்றவன் அவள் அணிந்து இருந்த சட்டையின் பொத்தான்களை கழட்ட ஆரம்பிக்க, கண்களை அழுந்த மூடிக் கொண்டாள் தயாழினி.
அவள் கண்களை அழுந்த மூடிக் கொண்டு இருந்ததை பார்த்தவன் அவளின் கண்களை வருடி விட, அந்த செயலில் அவளின் கண்களில் உள்ள சுருக்கம் எல்லாம் நீங்கிப் போனது. வெறுமென அவள் மூடி இருந்தாள்.
மூடி இருந்த போதும் அவளின் கண்கள் அங்கும் இங்கும் அலை பாய்வதை பார்த்தவன் குனிந்து அதில் முத்தம் வைத்தான்.
அவன் இதழ்களின் ஈரம் அவளின் இமைகளில் ஒட்டிக் கொள்ள அவளின் தேகம் தூக்கி வாரிப்போட்டது.
“ஏன்டி சின்ன பிள்ளை முத்தத்துக்கே உன் தேகம் இப்படி தூக்கிப் போடுதே.. மத்ததுக்கு எல்லாம் என்ன பண்ணுவ” என்று அவளின் காதோரம் மீசை உரச கேட்க, இன்னும் நடுங்கியது அவளுக்கு.
அவளின் நடுக்கத்தை பார்த்தவனின் விழிகள் அவளின் இதழ்களுக்கு நகர்ந்தது. ரோசா நிறத்தில் ஈரப்பசையுடன் துடித்துக் கொண்டு இருந்த இதழ்களை கண்டு அவனது கண்களில் ஆசை வந்தது.
முதல் முறையாக ஒரு பெண்ணை அவன் கையாளப் போகிறான். முதல் முறையாக முத்தமிடப் போகிறான். அது அவனுக்குள் ஒரு பரவசத்தை குடுக்க, அவளின் முகத்துக்கு நேராக தன் முகத்தை வைத்தவன் மூச்சுக் காற்றால் அவளை மோதி, மெல்ல மெல்ல அவளின் தேனூறும் இதழ்களை மென்மையாக சிறை செய்தான்.
அவளின் உடல் துள்ளி அடங்கியது ஒரு கணம். ஏதோ மின்சாரம் தாக்கியது போல இருவருமே உணர்ந்தார்கள். அதை மற்றவர்களின் உடல் மூலம் அறிந்துக் கொண்டார்கள். முதல் முத்தம் உச்சிக்கு ஏறியது உணர்வுகள்.
அதில் அவள் துள்ள, அவளை துள்ள விடாமல் தன் கைக்கொண்டு இடையை இறுக்கிப் பிடித்தவன், அதற்கு நேர் மாறாக அவளின் இதழ்களை மிக மிருதுவாக கவ்விக் கொண்டான். அந்த மின்சார தாக்கம் மீண்டும் வேண்டும் போலவே தோன்றியது.
முதல் மின்சார முத்தம் கொஞ்சமில்லை நிறையவே தடுமாற்றத்துடன் அரங்கேறியது.
இவளும் கொஞ்சம் ஒத்துழைக்க தான் செய்தாள். இவள் சம்மதிக்க வில்லை என்றால் எங்கே தங்கையிடம் போய் விடுவானோ, அவளின் வாழ்க்கையை அழித்து விடுவானோ என்று பயந்துப் போய் அவனுக்கு ஒத்துழைப்பு குடுத்தாள்.
அதுவரை முரட்டு தனமாக பேசி அவளை இறுக்கிக் கொண்டவன் அவளின் இதழ்களை மட்டும் மிக மிருதுவாக பூவை பறிப்பது போல நிதானத்துடன் கையாண்டான்.
அவன் தடுமாற்றாத்துடன் முத்தமிடுகையிலே புரிந்துப் போனது அவனுக்கும் இது தான் முதல் முத்தம் என்று. அது ஒரு வகையில் அவளுக்கு விடுதலையாக இருந்தது.
பல பெண்களை பார்த்தவனோ என்று உள்ளுக்குள் அச்சப்பட்டுக் கொண்டு இருந்தாள். அவர்களை முத்தமிட்ட உதடு தானே தன்னையும் அசிங்கப்பட்டுதுகிறது என்ற எண்ணம் தொன்றியது.
ஆனால் அவனின் தடுமாற்றத்தில் நிம்மதி பிறந்தது. அவளின் வாசம் வேறு அவனை மயக்க, கண்களை மூடி அவளின் இதழ்களில் முழுமையாக தொலைந்துப் போனான். மீண்டும் மின்சாரம் தாக்கியது அவனுக்கு. அவளுக்கோ சரக்கின் ஸ்மெல் வந்தது.
சுவிங்கம் போல இழுத்தவனின் செயலில் அதிர்ந்துப் போனாள். மிக லேசாக அவளிடம் இருந்து விலகி,
“செம்மையா இருக்குடி.. பர்ஸ்ட் டைம்.. அதுவும் அந்த சின்ன அதிர்வு ஐ லைக் இட்” என்றவன் மீண்டும் ஆவலுடன் அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான். இந்த முறை தடுமாறாமல் அவன் முத்தம் குடுக்க இவளுக்கு தான் அவஸ்த்தையாகிப் போனது.
விடாமல் மீண்டும் மீண்டும் அவளை நாட அவளின் இதழ்கள் எரிய ஆரம்பித்தது.
அதுவும் போக போக அவன் வன்மையாய் அவளை சிறை பிடிக்க தவித்துப் போனாள். இதழ் முத்தத்துக்கே என்னை இந்த பாடு படுத்துறானே... இன்னும் மத்ததுக்கு எல்லாம் என்ன ஆவேனோ... உள்ளுக்குள் பயந்துப் போனாள்.
அவனுக்கு இந்த இதழ் முத்தமே பெரும் நிறைவை கொடுத்தது போல இருக்க, அவள் மீது இருந்து எழுந்துக் கொண்டவன்,
“இன்னைக்கு இது போதும்” என்றான்.
அவனை நம்ப முடியாமல் திகைத்துப் போய் பார்த்தாள். இரண்டு பட்டன் மட்டும் கழண்டு இருந்தது. மீதி மொத்தமும் அப்படியே இருந்தது.
அவளின் பார்வையை பார்த்து,
“என்னடி போக விருப்பம் இல்லையா? எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.. நான் இப்பவே ரெடி தான்” என்று அவள் சட்டை மீது கை வைக்க,
“இல்ல இல்ல... இன்னைக்கு இது போதும்.. மீதியை அப்புறம் பார்த்துக்கலாம் சார்.. நான் வரேன்” என்று எழுந்து ஓடினாள் அவனது குளியல் அறைக்குள்.
அவளின் புடவையை மிக அவசரமாக கட்டிக் கொண்டு அவனின் அழுக்கு கூடையில் போட்டு விட்டு வெளியே வந்தாள். நொடியில் இந்த அறையில் இருந்து தப்பிக்க பார்த்தவளை ஏளன புன்னகையுடன் பார்த்தவன்,
“நாளைக்கு காலையில நான் கண் விழிக்கும் பொழுது நீ எதிர்ல இருக்கணும். இல்லன்னா அங்க ஊர்ல இருக்குற உன் குடும்பம் உனக்கு இல்ல” என்று எச்சரித்தான்.
அதுவரை கொஞ்சம் மிருகமாய் தெரிந்தவன், இப்பொழுது அரக்கனாய் தெரிந்தான்.
“இல்ல சார்.. நான் எழுந்த உடனே வந்திடுறேன். ப்ளீஸ் அவங்களை எதுவும் செஞ்சிடாதீங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக கதவை திறந்தாள்.
திறந்தவளின் கையை பிடித்து இழுத்தவன், அவள் எதிர்பாரா சமயம் அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான். அவனின் இந்த அதிரடி முத்தத்தில் மூச்சடைத்துக் கொண்டு வந்தது.
ச்ச போக சொல்லிட்டு இதென்ன இப்படி பண்றான் என்று புலம்பியவளை விடுதலை செய்தவன், அவளின் இடுப்பை ஒரு பிடி பிடித்து விட்டு,
“காலையில மறந்துடாத” என்று நினைவு படுத்தினான்.
தலையை ஆட்டிவிட்டு ஓடி வந்து விட்டாள். அடுத்த நாள் காலையில் எழுந்து குளித்து விட்டு வேகமாய் அவனது அறைக்கு தான் ஓடினாள்.
நல்ல வேலைக்கு அவன் எழுந்திரிக்கவில்லை. அவன் எழுந்திரிக்கும் வரை எதிரில் நின்று இருந்தாள்.
தயாகரன் நன்றாக தூங்கி எழுந்தவன் கண் விழித்துப் பார்க்க எதிரில் நின்று இருந்தாள்.
அவளின் கடமை உணர்ச்சியை பார்த்து உதடு பிதுக்கியவன், அவளின் கையை பிடித்து இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்து மெல்ல அவளின் உடம்பில் தன் கையை ஓட்டினான்.
“சார் ப்ளீஸ்” என்று அவள் பதறிப்போய் அவனது கையை தடுக்க பார்க்க, அவன் ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான். அதிலே உயிர் பயத்தை வர வைத்து விட்டான்.
கண்கள் சிவந்து அவன் பார்த்ததில் தயாழினியின் நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. மீண்டும் அவளை வன்மையாக கையாள கண்களை மூடிக் கொண்டு பயத்தில் மூச்சடக்கி படுத்து விட்டாள்.
அவளின் பயத்தை பார்த்து மீசையை முறுக்கியவன் அவளின் இடையை இறுக்கிப் பிடித்தபடியே அவளின் முகம் நோக்கி குனிந்தான். முத்தமிட வருவதை உணர்ந்தவள் தயாராக இருக்க,
ஏளன சிரிப்பை ஒன்றாய் உதிர்த்தவன்,
“என்னடி நேத்திக்கு குடுத்த முத்தம் ரொம்ப போதையா இருக்கா.. அதுக்கு தான் தயார் ஆகுரியா?” என்று கேட்க, உயிர் துடித்துப் போனாள். சடுதியில் கண்கள் கலங்கி அவனை பார்த்தாள்.
அவளின் துடிப்பை பார்த்து இரசித்தவன், “நீ என்னோட அடிமை.. உன்னால எனக்கு தான் இன்பம் கிடைக்கணுமே தவிர, என்னால உனக்கு கிடைக்க கூடாது...” என்றவனின் ஏளன பேச்சில் மனம் வெறுத்துப் போனாள்.
மரக்கட்டையாக தன்னை மாற்றிக் கொண்டவள் அவன் என்னவாவது செய்து தொலையட்டும் என்று அமைதியாகி விட்டாள். அவளிடம் அவனுக்கான எந்த இளகளும் எழவில்லை. அதை பார்த்தவன்,
“என்னடி உடம்பை இரும்பாக்கிக்கிறியா? மரியாதையா என் தொடுகைக்கு இளகி நிக்கிற இல்ல.. அங்க நிம்மதியா இருக்கிற உன் குடும்பத்தை உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்” என்று அவளை பாடாய் படுத்தி எடுத்தான்.
அப்படியே அவளை முழுமையாக தொடாமல் அவளை சீண்டி விட்டு, அவளிடம் கிடைக்கும் மின்சாரா முத்தாங்களை மட்டும் களவாடிக் கொண்டவன் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அதுவும் அவளின் உணர்வுகளை தீ வைத்து கொழுத்தாத அளவுக்கு செய்துக் கொண்டு இருந்தான்.
அத்தனையையும் அவள் தாங்கிக் கொண்டு இருந்தவள் எப்படியாவது தன் தங்கையை மட்டும் இங்கிருந்து தப்பிக்க வைத்து விடலாம் என்று எண்ணி இதோ தப்பிக்க வைத்து விட்டாள்.
குறிஞ்சியை தப்பிக்க வைத்து விட்டு வர, இதோ அவளை காவு வாங்க அரக்கன் துடிக்கிறான். இவளும் அவனை நம்பி இதோ அவனின் முன்பு முந்தானை இன்றி நிற்கிறாள்.
ஆனால் அவன் தான் அரக்கன் ஆயிற்றே..
“ட்ரஸ ரிமூவ் பண்ணு” என்று அவளுக்கு கட்டளை போட்டவன், அவள் உடைகளை கலைவதை பார்த்துக் கொண்டே யாருக்கோ போன் போட்டான்.
“ஆடு வந்துட்டு இருக்கு...” என்றான். அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ வைத்து விட்டான். தயாகரனின் விழிகளில் அவனை ஏமாற்றி விட்டு இரு பெண்களும் போட்ட திட்டத்தில் பழி வெறி எழுந்தது.
இங்கு இவளை வேட்டையாட இருந்த அதே நேரம் தயாழினியின் தங்கை குறிஞ்சியை தயாகரனின் தம்பி குணாதரன் கைது பண்ணி அவனின் தனிப்பட்ட வீட்டுக்கு கூட்டிட்டு போய் சிறை வைத்து விட்டான்.
அவன் போட்ட காவல் சீருடை மக்களுக்கு பயன் பட்டதோ இல்லையோ அண்ணனின் அராஜாகத்துக்கும் அயோக்கிய தனத்துக்கும் துணை போகிறது. போய்க்கொண்டு இருக்கிறது..
இது ஒரு பக்கம் இருக்க, பெரிய அக்காவிடம் இருந்து தகவல் வரவும் மூட்டை முடிச்சு கட்டிட்டு பெற்றவர்களை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பிய கடைக்குட்டி பிறைநிலா தயாகரனின் கடைசி தம்பியான பிரபாகரனிடம் வசமாக சிக்கி அவன் வீட்டில் அடிமாட்டு வேலையாளாக மாற்ற வைத்து இருந்தான் தயாகரன்.
தயாழினியின் மொத்த குடும்பத்தையும் சிறை செய்து விட்டு, இங்கே அவளிடமோ ‘உன் குடும்பத்தை விட்டுடுறேன் உன்னை குடு’ என்று பிளாக்மெயில் பண்ணி அவளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டான் அரக்கன்.
தயா -- தயா....
குணா - குறிஞ்சி....
பிரபா - பிறை.....
நல்ல குடும்பம் டா ....தயா உங்களது 🤣🤣🤣🤣🤣