Notifications
Clear all

அத்தியாயம் 28

 
Admin
(@ramya-devi)
Member Admin

குருவோடு ஆடிக்கொண்டு இருக்கும் போதே சதிக்கு பிரசவ வலி எடுக்க ஆரம்பித்தது... அதுவும் ஒவ்வொரு வலியும் அவளை உயிரோடு மரணிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது..

இது வரை கர்ப்பப்பை வாய் திறக்காமல் இருந்தாதால் பெரிதாக மாற்றம் இல்லை.. ஆனால் இந்த இரண்டு நாளாக கொஞ்சம் கூட ஒய்வு இன்றி தொடர்ந்து அலைந்த அலைச்சல், இப்பொழுது ஆடிய ஆட்டம் என எல்லாம் சேர்த்து, அவளது கர்ப்பை வாய் திறந்துக்கொண்டது...

ஆனந்த தாண்டவம் சற்று மெல்ல தான் ஆடுவார்கள்... அதனால் சதியால் நன்றாகவே ஆட முடிந்தது... ஆனால் அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் குழந்தை தன் தலையால் அவளது கர்ப்பை வாசலை முட்டிக்கொண்டு இருந்தது...

குழந்தை வெளியே வர வர சதிக்கு வலி உயிர் போனது... அதோடு அவள் அணிந்து இருந்த ஒட்டியாணத்தில் இருந்த சிறு பிசிறு அவளது வயிற்றை கிழிக்க தொடங்கியது...

கருவுற்று இருக்கும் பெண்ணின் உடம்பே பச்சை உடம்பு என்று தான் சொல்லுவார்கள்.. ஏனெனில் சிறு கீறல் விழுந்தால் கூட அவர்களால் அதை தாங்க முடியாது... அந்த புண் ஆறவும் ஆறது என்பதால்.

அதுவும் நிறைமாத பெண்ணின் வயிறு ஒரு பலூன் போன்றது.. அந்த அளவு உப்பி போய் இருக்கும்.. அதோடு வயிற்றின் மேல் தோள் ரொம்பவும் மெலியதாக இருக்கும்...

அந்த மெல்லிய தோளை தான் சதி இடுப்பில் அணிந்து இருந்த ஒட்டியாணத்தில் நீண்டு இருந்த சிறி அரும்பு சதி ஆட ஆட கிழிக்க தொடங்கியது...

முதலில் சதிக்கு ஒன்றும் தெரியவில்லை.. ஆனால் போக போக அந்த சிறு அரும்பு அவளது வயிற்றை ஆழமாக கீற தொடங்க வயிற்றிலிருந்து சொட்டு சொட்டாய் உதிரம் கசிய ஆரம்பித்தது...

அவள் கட்டி இருந்த அரக்கு நிற புடவை என்பதால் அவளது உதிரம் குருவின் கண்களுக்கோ இல்லை மற்றவர்களின் கண்களுக்கோ தெரியாமல் போனது...

ஒரு கட்டத்தில் குரு சற்று அழுத்தி பிடித்தில் அவளுக்கு அதிகமாய் உதிரம் வயிற்றிலிருந்து வெளியேற, கூடவே அவளின் காலிலிருந்து பணிக்குடம் உடைந்து ஈரமாகி போனது... சரியாய் அந்த நேரம் குருவும் சதியும் ஆனந்த தாண்டவம் முடித்து பிள்ளை பெற போவதற்காக சுற்றிலும் நீண்ட சேலையை போத்த குருவின் நாடக ஆட்கள் வந்து சூழ்ந்தனர்.

சதிக்கு பணிக்குடம் உடைந்ததை உணர்ந்தவன் இனி தாமதிக்க முடியாது என்று அவளை கரத்தில் அள்ளிய நேரம் சதிக்கு மின்னல் போல ஒரு வலி எடுத்து அவளை நிலை குலைய செய்ய, குருவின் கரத்திலிருந்து கீழே சரிந்தாள்.

சுற்றிலும் சீலை மூடி இருக்க இந்த போராட்டம் யாருக்கும் தெரியாமல் போனது...

அவளுக்கு முடியாததை கண்ட குருவுக்கு கண்களிலிருந்து கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது... அப்பொழுது தான் பணிக்குடத்தோடு அவளுக்கு உதிர போக்கும் இருந்ததை கண்டுக்கொண்டவன் வேகமாய் அவளை கரத்தில் தூக்க முனைந்தான்..

அப்படி அவளை தூக்க முனைந்த பொழுது அவனது கரத்தை அவளது குருதி நிறைத்து போனது... அதை கண்டவனுக்கு நெஞ்சு கூடு பலமடங்கு துடித்தது...

“எப்படி இவளை காப்பாற்ற போகிறேன்...” என்று உள்ளமெல்லாம் நடுநடுங்கி போனது... விழிகளை கண்ணீர் மறைக்க அடுத்து என்ன செய்வது என்று ஒரே ஒரு நொடி திகைத்து தடுமாறி அடுத்து செய்ய இயலாமல் சிந்திக்க முடியாமல் அப்படியே நின்றான்.

அடுத்த நொடி சதி இருக்கும் நிலையை உணர்ந்து தன்னை தானே திடப்படுத்திக்கொண்டு வேகமாய் சதியை கையில் ஏந்த முனைந்தான்...

ஆனால் அவனது கைகளில் வந்தது என்னவோ அவனுடைய குழந்தை தான்... சத்தியமாக குரு இந்த நிகழ்வை எதிர் பார்க்கவே இல்லை... ரத்தமும் சதையுமாக “ங்கா.... ங்கா.... ங்கா...” என்ற குழந்தையின் சத்தத்தை கேட்டு கண்டவனுக்கு கைகால்கள் எல்லாம் நடுநடுங்கி போனது...

ஒரே நொடியில் கையில் வந்து விழுந்த குழந்தையை நெஞ்சோடு அணைத்தவன், பாதி உயிராய் கிடந்தவளை அள்ளி அணைத்துக்கொண்டான் தன் இன்னொரு பக்க நெஞ்சில்...

கண்களில் அவனுக்கு கண்ணீர் மட்டுமே... இதயமெல்லாம் ஒரே வலி... அதை சமாதானம் செய்ய கூட அவனால் முடியவில்லை...

இந்த நிகழ்வு இப்படி அமையும் என்று சற்றும் சிந்தித்து இராதவனுக்கு இதயமே காலியானது போல இருந்தது...

சுற்றி இருந்த சேலை துணி விலக்க, ரத்த கரையோடு இருந்த மூவரையும் அதும் குழந்தை பிறந்தே விட்டது என்று ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்தது... கையில் குழந்தையோடு நாட்டியம் முடிவது போல தான் நடனத்தை வடித்து இருந்தான். அதே போல கையில் குழந்தையோடு இருவரும் இருக்க, நாட்டியம் முடிவடைந்து விட்டது...

சதியின் நிலை உணர்ந்து ஏற்கனவே தயாராக இருந்த மருத்துவ குழு அவர்களை கைப்பற்றிக்கொள்ள, அந்த இடமே கலோபரமாகி போனது...

அதற்குள் கூட்டத்தி விலக்கி ராக்கி, நவீன், ராதிகா, மற்றும் குமார் நால்வரும் அவர்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

பிரசவிக்கும் கடைசி நேரம் கூட டான்ஸ் ஆடிக்கொண்டே இருந்தார்கள் என்கிற பெயரோடு கின்னஸ் சாதனையில் இடம் பெற்றார்கள் சதியும் அவளது குழந்தையும்...

இதை அனைத்து சேனல்களும் ஒளிபரப்பாக்கி தங்களது டிஆர்பி யை உயர்த்திக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால் இதில் குரு எந்த நிலைக்கு செல்வான் என்று அறியாமல் போனது தான் விதியா...? இல்லை சதியின் பிடிவாதத்தில் விளைந்த விதியா...?

அவளின் வயிற்றில் இருந்த பெரும் காயம் கண்டு இன்னும் துடித்து போன குரு அவளை தன் கரத்தில் தூக்கி ஆம்புலன்சில் கொண்டு சென்று சேர்த்தான்...

அருகே இருந்த மருத்துவ மனையில் உடனடியாக மருத்துவம் பார்க்க தொடங்க, குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருப்பதாக சொல்ல, ராதிகா தன் கையில் குழந்தையை வாங்கிக்கொண்டார். ஆனால் சதிக்கு தான் கான்சியஸ் வரவில்லை என்று சொன்னார்கள்...

அதைக்கேட்டவர்களுக்கு அழுகை ஒரு பக்கம் என்றால் ஆத்திரம் ஒரு பக்கம் வந்தது... என்ன பெண் இவள் என்று... இவ்வளவு கடினமான சூழலில் யாராவது இப்படி முட்டாள் தனமாக நடந்துக்கொள்ளுவார்களா...? என்றே எண்ணி அவளை திட்டிக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால் குரு எதுவும் பேசவில்லை... அவனால் எதையும் பேச முடியவில்லை... தன் கைகளை தூக்கி பார்த்தான்.

அதில் சதியின் உதிரம் காயாமல் அப்படியே பச்சையாக இருந்தது... அதை கண்டவனுக்கு மனதில் இருந்த பல நரம்புகள் அறுந்து போனது போல இருந்தது...

உயிர் முடிச்சே அறுந்து போனது போல அப்படி ஒரு வலி குருவின் மனதில்... அதுவும் சொன்னாலே ஒரு வார்த்தை

“இப்போ நீங்க என்னை காப்பாத்துறதா நினனைச்சிட்டு மொத்தமா என்னை கொன்னுடாதீங்க மாமா...” என்று இப்பொழுது நினைக்கும் பொழுது கூட நெருப்பு கூடையை அப்படியே தலையிலிருந்து உடம்பு முழுவதும் கொட்டியது போல இருந்தது...

மூச்சு கூட விட முடியவில்லை அவனுக்கு... நெஞ்செல்லாம் எரிந்துக்கொண்டு இருந்தது...

மூன்று நான்கு நாட்களுக்கு சதிக்கு நினைவே வரவில்லை... அதோடு தீபா இறந்து போன விஷயம் வேறு இவர்களுக்கு தெரிய... குமாரை மட்டும் ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு மற்ற மூவரும் குழந்தையை வைத்துக்கொண்டு சதி கண்ணு விழிப்பதற்க்காக காத்துக்கொண்டு இருந்தார்கள்.

அதற்குள் போட்டி நடந்த இடத்தில் குருவை அழைக்க, சதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கு சென்றான்.

ஆசிய அளவில் நடந்த நடன போட்டியில் குரு சதி தான் முதல் இடத்தை பிடித்து இருந்தார்கள். அதற்க்கான ட்ராபியும், மெடல், சீல்டு, சர்டிபிகேட் மற்றும் பரிசு தொகை அத்தனையையும் வாங்கிக்கொண்டு தன் அறைக்குள் வந்து வீசி அடித்தவன் இரு கரத்தாலும் தன் தலையை தாங்கிக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

கண்ணை மூடினாலே சதி ரத்த வெள்ளத்தில் இருந்த நொடிகள் தான் கண் முன் வந்தது...

“மாமா...” என்று அவள் அலறின அலறல் அவனது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது... அடுத்து வந்த மூன்று நாளும் அன்னம் தண்ணி தொடாமல் விரதம் காத்தவன் இயல்பாய் இருக்கவே முடியவில்லை...

மண்டைக்குள் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டே இருந்தது அவனுக்கு...

மீண்டும் மருத்துவமனைக்கு வந்தவன் யாரிடமும் எதுவும் பேசாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்துக்கொண்டான். பேசவும் அவனால் முடியவில்லை.. அந்த அளவு இறுகிப்போய் இருந்தான்...

குழந்தையை கூட அவனால் தூக்க முடியவில்லை.. கையெல்லாம் நடுநடுங்கிக்கொண்டு இருந்தது இப்போது வரையிலும்...

வயிற்றிலிருந்த சின்ன காயம் பிரசவத்தின் போது தெரியாமல் அவளின் கை அங்கிருந்த ஒட்டியாணத்தின் மீது பட, சிறிதாய் இருந்த காயம் கையை மேலிருந்து கீழே குழந்தையை பிடிக்க வருவதாக எண்ணி கீழே கொண்டு வந்த பொழுது கையேடு ஒட்டியாணமும் அவளது வயிற்றை கிழித்துக்கொண்டு கீழே வந்தது...

அதில் அவளது வயிறு கிழிந்தே போனது... அதை கண்ணோடு பார்த்தவனுக்கு நெஞ்சில் துடிப்பே இல்லாமல் போனது...

கண்கள் முழுவதும் கண்ணீர் தான் குருவிற்கு... இந்த நிலையை கடக்க முடியாமல் தனக்குள் இறுகி போனான்... ஏற்க்கனவே குரு அப்படி தான். அதும் இந்த சம்பவத்துக்கு பின் முற்றிலும் இருக்கமானவனாக மாறி இருந்தான்..

இந்த ஒரு வாரம் முழுவதும் எல்லோரையும் படுத்தி எடுத்து, குருவை உயிரோடு சமாதி கட்டிவிட்டு கண்விழித்தாள் சதி...

அசைய கூட முடியவில்லை... அவ்வளவு ரணமாய் இருந்தது அவளது உடல்... கண்களை மற்றும் சுழற்றி பார்த்தாள்.

குருவை தவிர மற்ற மூவரும் நின்று இருந்தார்கள்... பேசவே முடியவில்லை அவளால்.

“என்ன ஆச்சு...” என்று மிகவும் சாதாரணமாக கேட்டு வைத்தவளை வெட்டவா குத்தவா என்பது போல மூவரும் பார்த்தர்கள். ஆனால் நடந்ததை ராக்கி விளக்கி சொல்லிவிட்டு,

“நீ உடம்பு தேறி வா உனக்கு இருக்கு...” என்று கத்தினான்.

ராதிகாவும் அதையே சொல்ல,

“அத்தை மாமா எங்க... ஆளையே காணோம்..” என்று ஆவலாய் குருவை தேடினாள்.

“அவருக்கு தானே முதல் பரிசு குடுத்தாங்க...” கேட்டாள் அப்பொழுதும். அவளது ஆர்வத்தை கண்ட அனைவருக்கும் ஐயோ என்று இருந்தது..

“அண்ணனுக்கு தான் அண்ணி கிடைச்சது...” என்ற நவீன் வெளியே வந்து குருவிடம் சொல்ல, முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு

“அப்போ சரி எல்லா ப்ரோசிஜரையும் முடிச்சுட்டு, அவளை அவங்க வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு குழந்தையை நம்ம வீட்டுக்கு தூக்கிட்டு வந்திடுங்க...” என்று சொன்னவன், தன் கிரிடிட் கார்டை அவனது கையில் கொடுத்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்துவிட்டான்.

அவனது இந்த ஒதுக்கம் சதிக்குள் பயத்தை கொடுத்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் எப்பொழுதும் போல இயல்பாய் இருந்தாள். ஓரளவு உடல் தெரிய பின் அவனை நேரில் சந்தித்தாள்..

 

Loading spinner
Quote
Topic starter Posted : June 13, 2025 3:00 pm
(@gowri)
Estimable Member

சரியான பிசாசு இந்த சதி😬😬😬😬

Loading spinner
ReplyQuote
Posted : June 19, 2025 4:38 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top