Notifications
Clear all

அத்தியாயம் 15

 
Admin
(@ramya-devi)
Member Admin

லண்டனில் இருந்த பொழுது தென்னவனோடு சேர்ந்து சில பல மீட்டிங் அட்டென் பண்ணி இருக்கிறாள். அப்பொழுது எல்லாம் அவனின் ஆளுமையை இரசித்து இருக்கிறாள். இப்பொழுது அதெல்லாம் நினைவுக்கு வர நடந்துக் கொண்டு இருந்த மீடிங்கை தென்னவன் மூலமாகவே முடிவெடுக்க சொல்லி வேடிக்கை பார்த்தவள் பிறகு கிளம்பி வெளியே போய் விட்டாள்.

என்னவோ நெஞ்செல்லாம் அடைப்பது போல இருந்தது.. எவ்வளவோ அவளும் முயன்று பார்த்து விட்டாள் ஆனால் அவளால் அவ்வளவு எளிதாக எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் தென்னவனை பார்க்க பார்க்க அவளுள் இருக்கும் ஏமாற்றம் விஸ்வரூபம் எடுக்கிறது. அதோடு அவன் தன் அக்காவின் கணவன் என்கிரா எண்ணமும் விருட்ச்சமாய் உயர்ந்து நிற்க இரண்டுக்கும் மத்தியில் அவாள் அல்லாடும் நிலையை வார்த்தையால் விளக்கவே முடியாது.

அதுவும் காதல் இல்லை என்று சொன்னவனிடம் மறுபடியும் நிற்கா மனமில்லை. அதுவும் அவன் இப்படி தனித்து நிற்கையில் அவளின் மனம் பெரிதும் அலைப்பாய்கிறது.

அதை எல்லாம் தவிர்க்கவே தன் சித்தப்பா மகளை அவனுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவை எடுத்தாள். அதை தன் தந்தையின் வாயிலாகவே நடத்த முடிவும் எடுத்து விட்டாள்.

இதோ இப்பொழுது அவளின் சித்தப்பா குடும்பம் தென்னவனை ரவுண்ட் போட்டு விட்டது... எதை எதையோ யோசித்துக் கொண்டு இருந்தவளின் முன்பு சின்னதாய் ரொம்ப சின்னதாய் ஒரு டின் பியர் வைக்கப்பட்டது.

அலுவலகத்தில் அவள் அறையில் தான் அமர்ந்து இருந்தாள். டேபிளில் ஏதோ வைக்கும் சத்தம் கேட்க, கண்களை மூடி நெற்றியை நீவிக் கொண்டு இருந்தவள் கைகளை விலக்கி விட்டு குனிந்து பார்க்க ஐம்பது எம்மல் கூட இருக்காது அந்த குட்டி டின் பியர்.

விலுக்கென்று நிமிர்ந்துப் பார்த்தாள். அவளை கொஞ்சமும் ஏமாற்றாமல் தென்னவன் தான் நின்று இருந்தான்.

“வாட் த ஹெல்” என்று ஆரம்பித்தவள், காது கூசும் அளவுக்கு ஏதோ சொற்களை போட்டு அவனை திட்ட,

“திட்டி முடிச்சுட்டு இதை குடி.. ஜில்னஸ் போயிட்டா கசக்கும்” என்றவன் தன் இடத்தில் அமர்ந்து வேலையை பார்க்க தொடங்கினான்.

“கசக்கும்னு உனக்கு எப்படிடா தெரியும்?” பத்ரகாளியாய் அவனை முறைத்தாள். அதுவரை அவனை திட்டியதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்.

தலையை தூக்கி அவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“என் பிரெண்ட் மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

“எனக்கு தெரியாம யார் அந்த பிரெண்ட்” இன்னும் அவனை முறைத்த வண்ணம் தான் இருந்தாள்.

“பிரெண்ட் அவ்வளவு தான் மேடம்..” என்று அவன் சொல்ல, அவன் மேடம் என்று சொன்னதில் கடுப்பானவள், வீம்புக்கு என்றே அவன் குடுத்த பியரை குடிக்காமல் அப்படியே வைத்து இருந்தாள்.

அவள் குடிக்காமல் போகவும் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன், “குடிடி” என்றான்.

ஒரே ஒரு வார்த்தை தான். ஆனால் அது குடுத்த அழுத்தம் அதிகம்.

தமிழின் விரல்கள் மெதுவாய் தன் கையை கொண்டு போய் அந்த குட்டி டின் பியரை எடுத்தது. தொடும் போதே அதனுடைய ஜில்னஸ் அவளை தாக்கியது.

மெல்ல அதை சுழற்றி விட்டு வேடிக்கை பார்த்தவள் நிமிர்ந்து தென்னவனை பார்த்தாள். அவன் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

பார்வையை மாற்றிக் கொண்டவள் மீண்டும் அதை சுற்றி விட்டு விளையாட, “அக்கவுன்ட் செக்ஷன்ல ஒரு வேலை இருக்கு போயிட்டு வந்திடுறேன் மேடம்” என்று விட்டு போக, பெருமூச்சு விட்டவள் அந்த டின் பியரை குடிக்காமல் அப்படியே வைத்து விட்டாள்.

தான் இருந்தால் குடிக்க மாட்டாள் என்று எண்ணி அவன் போக, அவன் போனதாலே அவள் குடிக்காமல் போனாள்.

அரைமணி நேரம் கழித்து வந்தவன் அவள் குடிக்காமல் இருப்பதை பார்த்து தன்னை அவள் எப்பொழுதும் மன்னிக்க மாட்டாள் என்று எண்ணிக் கொண்டவன் அதன் பிறகு அவாளிடம் எந்த உரிமையையும் எடுத்துக் கொள்ளவே இல்லை.

ஆனால் சற்றே வீங்கிப் போய் இருந்த அவளின் கன்னத்துக்கு மட்டும் இன்னொரு முறை மருந்து போட்டு விட்டான்.

அன்றைய பொழுது அப்படி இப்படியுமாக கழிய வீட்டுக்கு மகனோடு சென்றாள். அங்கே இவளுக்கு தலை வலி வரவைக்கவே தென்னவனோடு ஒட்டி உரசிக் கொண்டு இருந்தாள் வினோதினி.

அதுவும் அவள் போடும் உடைகள் எல்லாம் அவனுக்காகவே பிரத்யேகாமாக தைத்து போட்டது போலவே இருந்தது. இவளும் மாடர்ன் உடைகள் எல்லாம் போடுபவள் தான். ஆனால் மற்றவரை மயக்க தமிழ் ஒரு பொழுதும் உடுத்தியது இல்லை. ஏன் தென்னவன் லண்டனுக்கு வந்திருக்கும் போது கூட மாடர்ன் உடை தான். ஆனால் அவனை மயக்க அவள் ஒரு பொழுதும் உடை இறக்கி போட்டது இல்லை.

தமிழ் அணியும் உடைகளில் எல்லாம் ஒரு கண்ணியம் இருக்கும். ஆனால் வினோதினி அணியும் உடைகளில் அது இல்லை.

ஆனாலும் யாரும் அவளை எதுவும் சொல்லவில்லை. எப்படியாவது தென்னவனுக்கு அவளை திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று குறியாய் இருந்தார்கள்.

ஆனால் அதை எல்லாம் பார்க்க பார்க்க ஒருத்திக்கு தான் பற்றிக் கொண்டு வந்தது. அறையை விட்டு வெளியே போனா தானே கண்டதும் கண்ணுல விழும். நான் வெளிய போகவே மாட்டேன் என்று குழந்தையோடு உள்ளேயே இருந்துக் கொண்டாள்.

எவ்வளவு நேரம் தான் பிள்ளை நான்கு சுவாருக்குள்ளே இருக்கும். அது அழ ஆரம்பிக்க,

“உனக்கு தோட்டத்துக்கு போகனுமாடா.. வர வர அடம் பண்ற” என்று பிள்ளையை செல்லமாய் திட்டியவள் தன் தோளில் போட்டுக் கொண்டு வெளியே வர,

“மாமா உங்களுக்கு காபி கொண்டு வந்தேன்” என்று சொல்லி வினோதினி தென்னவனிடம் கப்பை நீட்டினாள். ஆனால் அடுத்த நிமிடமே அவன் மீது அப்படியே விழுந்து விட்டாள் அவள்.

“ஹேய் என்னம்மா?” என்று பதறி தென்னவன் அவளை பிடிக்க வர, இருவரையும் தீயாய் முறைத்து விட்டு தோட்டத்து பக்கம் போய் விட்டாள் தமிழ்.

என்னவோ அவளது மனம் மிகவும் சோர்வுற்றது..

“இல்லடா கண்ணா எனக்கு நீ மட்டும் போதும்” என்று மகனை லேசாக தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டாள். இதுநாள் வரை அடக்கி வைத்து இருந்த உணர்வுகள் எல்லாம் வெளியே பீரிட்டு வர ஆரம்பிக்க, அவளால் அதை எல்லாம் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

விழிகள் விண்மீனாய் மின்னியது ஏமாற்றத்தில். எல்லாவற்றில் இருந்தும் மீண்டு வந்தவளால் இந்த தென்னவனின் நினைவுகளில் இருந்தது மட்டும் மீளவே முடியவில்லை. தான் இன்னும் மூன்று வருடத்துக்கு முன்பு இருந்த அதே தமிழியாக தான் இருக்கிறோம் என்ற நிதர்சனமே அவளை சுட்டு பொசுக்கியது.

ஆனால் தென்னவன் அடுத்து அடுத்து என்று நகர்ந்துக் கொண்டே இருக்கிறான் என்று புரிந்தவளுக்கு இன்னும் ஏமாற்றம் அதிகம் ஆனது.

தோட்டாத்தில் கண்டதையும் கடையதையும் போட்டு உழப்பிக் கொண்டு இருந்தவளிடம் வந்த பானுமதி,

“நீ இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்க போற இனியா. உனக்கு ஒரு ப்ரபோசல் வந்து இருக்கு. போன வாரம் நீ எக்கனாமிக் டேபிள்ஸ் க்கு குடுத்த இண்டர்வியூவ பார்த்து இந்த அலைன்ஸ் வந்து இருக்கு.. அப்பாவுக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்சு இருக்கு. இன்னைக்கு லஞ்சுக்கு அவங்க பேமிலியை மீட் பண்ணோம்.. நம்ம வசதியா விட ஒற்று மடங்கு அதிகம். எந்த நசனசத்தலும் இல்லை. ஒரே பையன் தான்” என்று அவர் விவரம் அடுக்க, அவளுக்கு இன்னும் தலை வலி அதிகம் எடுத்தது.

“மாம் ப்ளீஸ்” என்று அவள் ஆரம்பிக்கும் முன்பே,

“எந்த சாக்கு போக்கும் சொல்லாம நாளைக்கு மாப்பிள்ளையை லஞ்சுக்கு மீட் பண்ற.. டேபிள் புக் பண்ணிட்டேன்” என்று எழுந்து போனவரை இயலாமையுடன் பார்த்தாள்.

அவளுள்ளே பெரும் குழப்பம். இதில் இன்னொன்று வேற என்று தான் இருந்தது அவளுக்கு.

கிருஷ்ணன் வேறு,

“இத ப்ரபோசல பார்க்கம  ஜஸ்ட் கம்பெனி மீட்டிங்கா மட்டும் பாரு” என்று அட்வைஸ் பண்ண வேறு வழியில்லாது அடுத்த நாள் உச்சி வேளையில் தென்னவனோடு பானுமதி ரிசேர்வ் பண்ணி வைத்து இருந்த ஹோட்டலுக்கு சென்றாள்.

தென்னவனிடமும் கிருஷ்ணன் சொல்லி இருந்தார். “நீங்க தான் மாப்பிள்ளை பக்கத்துல இருந்து இந்த மீட்டிங்கை நல்லபடியா நடத்தி குடுக்கணும். இல்லன்னா இந்த பொண்ணு அவசரத்துல ஏதாவது வேலை பார்த்து வச்சிட்டு வந்திடுவா...” என்று அவனிடம் வற்புறுத்த அவனும் அவளுடன் கூட வரவேண்டிய நிலை.

ஆனாலும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பது போல தமிழுடன் வந்தான் தென்னவன்.

இவர்கள் இருவரும் வரும் முன்பே அங்கே மாப்பிள்ளை பையன் அமர்ந்து இருக்க, அறிமுகப்படலம் ஆரம்பம் ஆனது.

“ஹாய் இனியா... ஐ ஆம் அர்ஜுன்” என்று கையை நீட்டினான்.

“ஹாய் மிஸ்டர் அர்ஜுன்..” என்று கையை நீட்டியவள், “திசிஸ் மை மா...மா.. மிஸ்டர் தென்னவன்” என்று தன்னோடு வந்தவனை முறையாக அறிமுகப்படுத்தினாள்.

எங்கும் தென்னவனின் மரியாதையை விட்டுக் குடுக்க மாட்டாள். ஆனால் அவனை எவ்வளவு திட்டி தீர்க்க முடியுமோ அந்த அளவுக்கு திட்டித் தீர்ப்பாள் தனிமையில்.

மாமா என்று அவளால் இயல்பாக சொல்ல முடியவில்லை. நிறுத்தியே சொன்னாள். அதை தென்னவன் உணர்ந்துக் கொண்டான். ஆனால் அர்ஜுனுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டாள்.

இருவரும் கைக்குடுத்துக் கொண்டதை தென்னவன் எந்த உணர்வும் இல்லாமல் பார்த்து இருந்தான் அமைதியாக.

“உங்க போல்ட்னாஸ பார்த்து நான் ரொம்ப அட்மையர் ஆகிட்டேன் இனியா.. என்னோட லைப் பாட்னர்னா அது நீங்க தான்னு நான் முடிவு பண்ணிட்டேன். உங்க விருப்பம் என்னன்னு வெளிப்படையா சொன்னா நான் ஹேப்பியா இருப்பேன்.. என்னடா எடுத்த உடனே கேக்குறேன்னு நினைக்காதீங்க. உண்மையா எக்சைட்மென்ட அடக்க முடியல அது தான் எந்த அலங்கார வார்த்தையும் இல்லாம கேட்டுட்டேன்” என்றான்.

அவனது கண்களில் இருந்த உண்மையை கண்டு பெருமூச்சு விட்டவள்,

“அதுக்கு முன்னாடி என் கண்டிஷனை நான் சொல்லவா அர்ஜுன்” என்று கேட்டாள்.

“ம்ம்.. ப்ரோசிட்” என்றவனிடம் “நான் குடிப்பேன்...” என்றாள்.

அர்ஜுன் அதிர்ந்தான்.

“மந்திலி ஒன்சா...?”

“இல்ல தினமும்” என்றாள் அலுங்காமல் குலுங்காமல். அர்ஜுன் தென்னவனை பார்த்தான். அதுவரை அவனை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் இருந்தவன் இப்பொழுது அவனை பார்த்தான்.

“சார் இவங்க சொல்றது..” என்று அவனிடம் கேட்க,

“அவருக்கு தெரியும்... ஆனா வீட்டுல யாருக்கும் தெரியாது” என்று தமிழே சொன்னாள்.

“சோ என்னால குழந்தை பெத்துக்க முடியாது.. லிவர் டேம்ஜ் ஆகும் நிலையில இருக்கு...” என்று அவள் அடுக்க,

அர்ஜுனுக்கு வேர்த்து கொட்டியது.

“மிஸ் நீங்க சொல்றது எல்லாம்..”

“நூத்துக்கு நூறு சதவீதம் உண்மை, இதோ மெடிக்கல் செக்கப் பேப்பர்.. நீங்களே படிச்சு பாருங்க. இதை எல்லாம் என் பெத்தவங்க கிட்ட சொன்னா இருக்கிற ரெண்டாவது பிள்ளையும் நம்மளை விட்டு போயிடுமேன்னு பீல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. அது தான் உங்க கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டேன். ஏன்னா என்னை வச்சு உங்க எதிர்கால கனவு கண்டு இருப்பீங்கல்ல.. அது தான் சொல்லிடலாம்னு” என்றாள்.

டேபிளுக்கு அடியில் தென்னவனின் கையை இறுக பற்றி இருந்தாள் தமிழ். அதோடு ஹீல்ஸ் காலை வைத்து அவனின் காலை மிதித்துக் கொண்டு எதிரில் இருந்த அர்ஜுனுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

தென்னவன் அடிப்பாவி என்று அவளை பார்த்து இருந்தான். உணமையை சொன்ன வந்தவனை தான் இப்படி அரெஸ்ட் பண்ணி வச்சு இருக்கிறாளே. பிறகு எங்கிருந்து அவன் உண்மையை சொல்வான்...

Loading spinner
This topic was modified 23 hours ago by Admin
Quote
Topic starter Posted : June 19, 2025 4:22 pm
(@gowri)
Estimable Member

சூப்பர் சூப்பர்🤣🤣🤣🤣

Loading spinner
ReplyQuote
Posted : June 19, 2025 10:04 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top