Notifications
Clear all

அத்தியாயம் 3

 
Admin
(@ramya-devi)
Member Admin

 

தன் மார்பில் முகம் புதைத்து இருந்தவனை தள்ளி விட பார்த்தாள். ஆனால் அவளால் கொஞ்சமும் முடியவில்லை.

“ஏன் இப்படி கூட்டிட்டு வந்து அடிச்சு வச்சு இப்படி கொடுமை படுத்துறீங்க? எங்க அண்ணனுங்க தானே கடன் வாங்குனானுங்க. நாங்க என்ன பண்ணுனோம். அவனுங்களை பிடிக்க வேண்டியது தானே...” என்று ஆற்றாமையுடன் கேட்டவளின் கழுத்துக்கு கீழ் மார்புக்கு மேல் தன் பற்கள் பட கடித்து வைத்தான்.

“அம்மா” என்று அலறினாள். விழிகளில் நீர் பெருகியது.

“என்னை எதிர்த்து பேசுற வேலை வச்சுக்கிட்ட இப்ப இங்க கடிக்கிறேன். நீ மேற்கொண்டு பேசுன எங்க கடிப்பேன்னே தெரியாது.. ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு நில்லுடி. எனக்கு தெரியும் எது செய்யணும் செய்ய கூடாதுன்னு..” என்று கத்தியவன் அவளை முரட்டு தனமாக அழுத்திப் பிடிக்க, வலியில் உயிர் போனது தயாழினிக்கு.

அவளின் மென்மையான உடம்பு அவனின் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகி போக, கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது. ஆனால் அதை வழிய விடாமல் தனக்குள் இழுத்துக் கொண்டவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு தீக்குளிக்கும் உணர்வோடு அவனிடம் நின்று இருந்தாள்.

அவளின் முக பாவனையை ஏளனமாக பார்த்தவன், அவளின் இடையில் இருந்து தன் கைகளை விலக்கிக் கொண்டவன்,

“அங்க சோப் இருக்கு போய் குளிச்சுட்டு ரெடியாகி வா” என்றான்.

அதை கேட்டு இன்னும் நொறுங்கிப் போனாள். “ப்ளீஸ் என்னை விட்டுடுங்களேன்.. எப்படியாவது உங்க பணத்தை உழைச்சி திரும்ப குடுத்திடுறேன்” என்று கைக்கூப்பி கேட்டவளை கால் மேல் கால் போட்டு அமர்ந்தது நிதானமாக பார்த்தவன்,

“ஒன்னும் பிரச்சனை இல்ல... நீ போ” என்றான். அவன் சொல்வதை நம்ப முடியாமல் பார்த்தவள்,

“உண்மையாவா சார் சொல்றீங்க?” சற்றே ஆசையுடன் கேட்டாள். எப்படியாவது இந்த நரகத்தில் இருந்து தப்பித்தால் போதும் என்று இருந்தது.

“ம்ம் உண்மையா தான் சொல்றேன்.. நீ கிளம்பு” என்றான்.

“ரொம்ப ரொம்ப நன்றி சார்.. நிச்சயமா உங்க பணத்தை உங்களுக்கு திருப்பி குடுத்துடுவேன் சார்.. ஏமாற்ற மாட்டேன்” என்று அழுகையுடன் அவனுக்கு நன்றி சொன்னவள், கதவை திறந்து வெளியே போக இருந்தவளை,

“போறதுக்கு முன்னாடி ஒரே ஒரு உதவி பண்ணிட்டு போயேன்” என்றான்.

“என்ன சார் உதவி.. நீங்க கேக்குற எந்த உதவியா இருந்தாலும் நான் செய்யிறேன்” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே கேட்டாள்.

தயாகரன் அவளை இதழ் வளைத்து பார்த்தவன்,

“ஒண்ணும் இல்ல.. உன் தங்கச்சியை மட்டும் என் அறைக்கு வர சொல்லிட்டு நீ கிளம்பிடு. இந்த சின்ன உதவி செஞ்சா மட்டும் போதும். மத்தபடி உன் கிட்ட இருந்து எனக்கு எந்த உதவியும் வேண்டாம்” என்றான்.

“அடப்பாவி அவ சின்ன பிள்ளைய்யா.. அவளை போய் படுக்கைக்கு கூப்பிடுறீங்க? உங்களுக்கு எல்லாம் மனசாட்சி இருக்கா இல்லையா? இப்படியா பச்சை பிள்ளையை போய் கேட்பீங்க” என்று ஆவேசப்பட்டாள்.

“ஏய் அவ உன்னை விட ஒரு வயசு தான்டி கம்மி.. என்னவோ அவ இப்ப தான் பொறந்தவ மாதிரி பச்சை பிள்ளைன்னு சொல்லிட்டு இருக்க” முறைத்தான்.

“எனக்கு அவ பச்சை பிள்ளை தான்” என்றாள் வெடுக்கென்று. அவளின் தாய் மலர் அப்படி சொல்லி தான் வளர்த்து இருந்தார்.

“கண்ணு இங்க பாரு அண்ணனுங்க ரெண்டு பேரும் ரொம்ப சுயநலமா அவனுங்க நலனை மட்டும் தான் பார்த்துப்பானுங்க.. இந்த குடும்பத்துக்கு நீ தான் தலைமகள். எங்க எல்லோருக்கும் நீ தான் வழிகாட்டி. உனக்கு கீழ இருக்குற இரண்டு தங்கச்சிங்களும் உனக்கு மக மாதிரி தான். நீ தான் பிள்ளைகளை நல்லா பார்த்துக்கணும் எங்க காலத்துக்கு பிறகு” என்று தயாழினியிடம் சொல்லி வளர்த்தவர்,

அதே போல மற்ற இரண்டு மகள்களிடமும் “உங்களுக்கு எல்லாமே உங்க அக்கா தயாழினி மட்டும் தான். அவ தான் இந்த வீட்டுக்கு பெரியவ. நீங்க அவ சொல் பேச்சை கேட்டு தான் வளரனும். அவ எது சொன்னாலும் உங்க நல்லதுக்கு மட்டும் தான் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் அவளை தனிச்சு மட்டும் விட்டுடவே கூடாது. அவளுக்கு எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அதை நீங்களும் சரி சமமா ஏத்துக்கணும்” என்று தயாழினியின் தங்கைகளிடமும் சொல்லி வளர்த்து இருந்தார் மலர்.

அதனாலே சகோதரிகள் மூவரின் நெஞ்சிலும் ஒற்றுமை குவிந்து கிடந்தது. தயாழினி ஒரு வார்த்தை சொல்லி விட்டால் ஏன் எதற்கு என்று கூட கேட்க மாட்டார்கள் அவள் சொல்வதை மட்டுமே வேதமாக எடுத்துக் கொள்வார்கள்.

மூவருக்குமே ஒரு வயது தான் வித்தியாசம்.. ஆனாலும் தயாழினியிடம் இருக்கும் நிதானம் மற்ற இருவரிடமும் இருக்காது. அதற்காக வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள் என்று இல்லை.

இவளிடம் இருக்கும் பக்குவம் இல்லையே தவிர, மற்றபடி இரண்டு சகோதரிகளும் தயாழினி கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்கள். அவள் மேல் உயிரையே வைத்து இருந்தார்கள் இருவரும். இவளும் அதே அன்பை கொண்டு இருந்தாள்.

அதனால் தான் தயாகரன் குறிஞ்சியை கேட்கும் பொழுது ஆவேசம் ஆனாள்.

“அப்போ நீ இரு” என்றான் திமிராக.

“உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? கடனுக்காக கற்பை கேட்குறீங்களே.. எங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு... ப்ளீஸ் சார் அதை கேடுத்துடாதீங்க”

“ம்ஹும்..” என்று உம்காரம் போட்டவனின் நக்கலில் இவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

“ப்ளீஸ் சார்... இதை மட்டும் என்னை செய்ய சொல்லாதீங்க”

“உனக்கு விருப்பம் இல்லன்னா விடுன்னு சொல்லிட்டேன். நான் ஒன்னும் உன்னை கம்பெல் பண்ணலையே..”

“ஆனா என் தங்கச்சியை கேட்பது எந்த விதத்தில் நியாயம்”

“நான் நியாயம் அநியாயம் எல்லாம் பார்க்கிறது இல்லடி.. ஒன்லி பணம் மட்டும் தான். அடுத்து சுகம்” என்று கண் சிமிட்டினான். அதில் உயிர் வரை பற்றி எரிந்தது அவளுக்கு.

“இருக்கிற சாய்சை சொல்லிட்டேன். இனி டிசிஷன் நீ தான் எடுக்கணும்” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே. அழுகையில் கூட மினுங்கிய அவளின் அழகை விழி எடுக்காது இரசித்தான்.

இதுவரை பெண்களை அவன் நாடியதே இல்லை. அதென்னவோ அந்த அயோக்கிய தனம் மட்டும் செய்யவில்லை இதுவரை. ஆனால் மற்ற எல்லா கிரிமினல் வேலைகளையும் செய்வான் தயாகரன். இப்பொழுது இவளை தயாழினியை பார்த்த பிறகு அவளை அடைந்தே ஆகவேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

அவளின் எழில் மிகுந்த கோலங்களா? இல்லை தங்கைகளுக்காக தன் குடும்பத்துக்காக நிற்கும் அவளின் நிமிர்வையா? சேலையில் பாங்காக இருக்கும் அவளின் தோற்றத்தையா என பிரித்து அறிய முடியாத வகையில் அவனை வெகுவாக ஈர்த்து இருந்தாள்.

அதை அவன் காமம் என்று புரிந்துக் கொண்டு இதோ கட்டிலில் அவளை துகில் உரிக்க காத்துக் கொண்டு இருக்கிறான்.

இவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் கைகளை பிசைந்துக் கொண்டு இருந்தவள் தன்னையே  அவன் பார்ப்பதில் எரிச்சல் வந்தது.

“முன்ன பின்ன பெண்களையே பார்த்தது இல்ல போல.. இப்படி பார்த்து வைக்கிறான்” மனதுக்குள்ளே திட்டினாள்.

“திட்டுனது போதும்டி... போய் குளிச்சுட்டு ரெடியா இரு” என்றவனை இறைஞ்சளுடன் பார்த்தாள்.

“நீ சுத்தப்பட்டு வர மாட்ட. நான் உன் தங்கச்சிட்டயே போறேன்” என்று அவன் எழுந்துப் போக, அவசரமாய் அவனின் வழியை மறைத்து நின்றாள்.

“ப்ச் கடுப்பாயிடுவேன்டி..” பல்லைக் கடித்தவனை கண்டு கண்களை மூடிக் கொண்டவள்,

“நான் குளிச்சுட்டு ரெடியாகுறேன்.. ப்ளீஸ் தங்கச்சிட்ட மட்டும் போயிடாதீங்க” என்று கையை கூப்பினாள்.

“என் கூட படுக்க உனக்கு அவ்வளவு ஆசையா? சொல்லவே இல்லையேடி” என்று அவளின் கன்னத்தை வருடி விட்டவன் விரல்களை அப்படியே கீழே இழுத்துக் கொண்டு போக,

பட்டென்று கழுத்துக் கீழ் போக விடாமல் பிடித்துக் கொண்டவள்,

“ப்ளீஸ் நான் குளிச்சுட்டு வரேனே” கெஞ்சினாள். அவளின் கெஞ்சலை பார்த்தவன்,

“சரி சீக்கிரம் போயிட்டு வா... லேட் பண்ணா அப்புறம் நீ இருக்க வேண்டிய இடத்துல உன் தங்கச்சி இருப்பா” என்றவனின் மிருக குணத்தில் அவனை கழுத்தை நெரித்து அப்படியே கொல்ல வேண்டும் போல வந்தது.

வேக வேகமாய் வெளியே போக,

“எங்கடி போற?”

“குளிக்க சொன்னீங்களே”

“இங்கயே குளி”

“இங்கயா?” எச்சில் விழுங்கினாள்.

“ஏன் இங்க குளிக்க என்ன இருக்கு.. போய் சொன்னதை செய்டி” என்றான்.

“சேலை அங்க இருக்கு” என்றாள் தயங்கி தயங்கி..

“இன்னைக்கு என் சட்டையை போடு” என்று அலமாரியில் இருந்த அவனது சட்டையை எடுத்துப் போட்டான் அவளது தோளில்.

“பேன்ட்” என்று அவள் இழுக்க,

அவன் முறைத்தான் கடுப்பாக.. உன் ட்ரசை கழட்டவே இந்த ராத்திரி முடிஞ்சு போயிடனும் அதுக்கு தானேடி ப்ளான் பண்ற... ஒழுங்கா இந்த சட்டையை மட்டும் போட்டுட்டு வா” என்று கடித்து துப்பினான் அவளை.

இப்படி எரிந்து விழுபவனிடம் மாட்டிக் கொண்டவளுக்கு ஏகத்துக்கும் அச்சம் எழுந்தது நெஞ்சில்.

வேறு வழி இல்லாது அவனது குளியல் அறைக்குள் நுழைந்து கதவை வேகமாக சாற்றிக் கொண்டாள். பின்னே அவன் வந்து விடுவானோ என்கிற பயம் தான்.

அவசர அவசரமாய் குளித்து விட்டு அவன் குடுத்த ஒற்றை சட்டையை மட்டும் அணிந்துக் கொண்டவளுக்கு இந்த நிமிடமே இறந்து விடலாமா என்று தோன்றியது. ஆனால் அவளை நம்பி நான்கு உயிர் இருக்கிறதே..

அவர்களுக்காக இந்த இழி செயலை செய்து தான் ஆகவேண்டும் என்று எண்ணியவள் மெதுவாக கதவை திறந்து வெளியே வந்தாள்.

வந்தவளின் கண்களில் இருக்கையில் அமர்ந்து தண்ணி அட்டித்துக் கொண்டு இருக்கும் தயாகரன் தன் விழுந்தான். வெற்று மார்புடன் கடோத்கஜன் மாதிரி இருந்தவனை கண்டு பயம் எழுந்தது. அவனின் முரட்டு பிடி நினைவுக்கு வந்து அவளை மேலும் அச்சுறுத்தியது.

சற்று நேரத்துக்கு முன்பு அவளின் இடையை பிடித்ததே இப்பொழுது வரைக்கும் வலிக்கிறது.. இதில் மொத்தமும் என்றால்... ஐயோ கடவுளே என்னை காப்பாத்து.. என்று முணுமுணுத்தாள்.

“எந்த சாமியும் வந்து காப்பாத்தது... போ போய் பெட்ல படு” என்றவன் லிமிட்டாக சரக்கை அடித்து விட்டு அவளிடம் வந்து விழுந்தான்.

“என்னை விட உனக்கு இந்த சட்டை ரொம்ப நல்லாவே இருக்கு. ஆனா இன்னொரு ஆள் கூட உள்ள நுழைஞ்சுக்கலாம் போலையே” என்றவன் அவள் அணிந்து இருந்த சட்டையின் பொத்தான்களை கழட்ட ஆரம்பிக்க, கண்களை அழுந்த மூடிக் கொண்டாள் தயாழினி.

Loading spinner
Quote
Topic starter Posted : June 19, 2025 11:32 am
(@gowri)
Estimable Member

🥺🥺🥺ithu enna da நியாயம்?????

Loading spinner
ReplyQuote
Posted : June 19, 2025 12:59 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top