இரவு ஆயிரம் சமாதனம் சொல்லி சதியை தேற்றியவன் ஊருக்கு புறப்பட்டு சென்றான். சதிக்கு குருவை விடவே மனமில்லை. ஆனாலும் போய் தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருப்பவனை தன்னிடம் எப்படி பிணைத்து வைத்துக்கொள்ளுவது என்று கலங்கி போனாள்.
“இங்க பாரு சதி ஒரே ஒரு மாசம் தான்.. அப்புறம் வாழ்நாள் முழுவதும் நான் உன் கூட மட்டும் தான்... இந்த பிரிவு நம்ம வாழ்க்கையில நடக்கவே கூடாதுன்னு தான் நினைச்சேன்... ஆனா முடியல... போய் தான் ஆகனும்.. நம்ம குழந்தை பிறக்கும் போது உன்கூட என்னால இருக்க முடியாதுன்னு நினைக்கும் போதே நெஞ்செல்லாம் அடைக்கிது.. அதனால தான் நான் போக வேணான்னு சொன்னேன்... நீ தான் வலுக்கட்டாயமா என்னை ஊருக்கு அனுப்பி வைக்கிறதுல முனைப்பா இருந்த...
ஆனா அப்படி இருந்தவ இப்படி போகும் போது இதை முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா என்னால எப்படி உன்னை விட்டுட்டு போக முடியும்...” என்று சொன்னவுடன்,
தன் கலக்கமான முகத்தை இயல்புக்கு கொண்டு வந்தவள்,
“இல்ல மாமா நீங்க இதுல கலந்துக்கிட்டே ஆகணும்... வெற்றியோ தோல்வியோ ஆனா நீங்க இதுல கலந்துக்கனும்...” உறுதியாக சொன்னாள்.
“உங்களை பிரியிறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு... ஆனா அதை விட உங்களை இன்னொரு படி உங்க கெரியர்ல முன்னேற முட்டுக்கட்டையா நான் நிற்க மாட்டேன்... நீங்க எனக்கு குடுக்க வேண்டியது உங்க வெற்றி மெடலை தான். அதே போல நானும் நல்லபடியா உங்க மகனை பெத்து எடுத்து உங்க கைல குடுப்பேன்... இது நமக்குள்ள இருக்க டீல்... யாரு முதல்ல அவங்க பரிசை குடுக்குறாங்கன்னு பார்க்கலாம்...” என்று சதி தன்னை தேற்றிக்கொண்டு குருவை இயல்புக்கு கொண்டு வந்து அவனை ஊருக்கு அனுப்பி வைத்தாள்.
“ஹேய்... இந்த டீல் நல்லா இருக்கே...!” என்று சிரித்தவன் “பார்க்கலாம் யாரு முதல்ல பரிசு குடுக்க போறங்கன்னு...” என்று அவளை அனைத்து நெற்றியில் முட்டி முத்தம் கொடுத்தவன், மனம் கனக்க சதியிடமிருந்து விடைபெற்று ஊருக்கு சென்றான்.
அதன் பின்பு வந்த நாட்கள் இருவருக்கும் மொபைல் போனிலே காலங்கள் கழிந்தது... நேரம் கிடைக்கும் போது விடியோ காலில் அழைப்பான் குரு...
மற்ற நேரம் சாதாரணமாக உரையாடி இருவரது நலனையும் கேட்டுக்கொள்ளுவான். தீபாவிற்கு உடல் நிலை இன்னும் மோசமாகி போக... அவளை நிரந்தரமாக மருத்துவமனையிலே வைத்திருக்க முடிவு செய்தார்கள்.
ஆனால் மருத்துவர்கள் இங்கு வைத்திருப்பது வீண் செலவு தான் என்று சொல்லிவிட, அவளை வீட்டிற்க்கே அழைத்து வந்துவிட்டார்கள்.
சதி தீபாவிடம் அதிக நேரம் செலவழிக்க தொடங்க அவளது அன்பை இன்னும் அதிகமாக உணர்ந்துக்கொண்டவள் வளைகாப்பு அன்று குருவிடம் தான் கேட்டதை அவள் சொல்லிவிட,
“இதுல என்ன இருக்கு க்கா.. உன்னோட வாழ்க்கை அது...” சொலும் முன்பே,
“ம்ஹும்... அப்படி மட்டும் குரு மாமா முன்னாடி சொல்லிடாத சதி... மாமா உன் மேல கண்ணு மண்ணு தெரியாத அளவு அன்பும் காதலும் வச்சு இருக்காரு... அவரை வேதனைபடுத்திடாத இந்த வார்த்தையை சொல்லி...” என்று சிரமப்பட்டு சொன்னவளை அன்புடன் பார்த்தவள், தன் மாமன் தன் மீது வைத்திருந்த காதலை எண்ணி மகிழ்ந்து போனாள்.
குரு சதி இருவரும் கலைக்கூடத்திற்கு வர முடியாத சூழலில் நவீனும் ராக்கியும் கலைக்கூடத்தை கவனித்துக்கொண்டார்கள்.
சதிக்கு வீட்டில் மிகவும் போரடிக்க ஒரு நாள் கிளம்பி கலைக்கூடத்திற்கு சென்றாள்.. நவீனே போகும் பொழுது அழைத்து சென்றான்.
இடையில் குரு இரு சுற்று முடிந்து பைனல் க்கு தேர்வாகி இருந்தான். அதை எல்லா சேனலிலும் ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தார்கள்.
பைனல்க்கு இன்னும் நாட்கள் இருந்ததால் குரு முழுவதும் ரிக்சலிலே இருந்தான். போன் கூட அதிகம் செய்ய முடியாமல் போனது... அப்படியும் தூங்கும் கொஞ்ச நேரத்திற்கு முன்பு வந்து அவளிடம் பேசிவிட்டே தூங்க செல்வான்.
கற்ப பை வாய் திறக்காத காரணத்தால் சதியை அதிகமாக நடக்க சொன்னார்கள். கூடவே மாடிப்படி ஏறி இறங்க சொன்னார்கள். அதன் படி கலைக்கூடத்தின் எல்லா பகுதியையும் ஓர் சுற்று வந்தாள்.
அப்படி வரும் பொழுது யோகேஷ் தன் அண்ணனுடன் பேசிக்கொண்டு இருந்தது அவளது செவியில் விழுந்தது...
அதை கேட்டவளுக்கு பகீர் என்றானது... இடுப்பில் சுரீர் என்ற வலி வேறு வந்தது... கண்களில் கண்ணீர் வேறு நிற்காமல் வழிய தொடங்கியது...
அடுத்து என்ன செய்வது என்கிற பதட்டம் வேறு வந்து ஒட்டிக்கொள்ள, ஒரு கணம் மருண்டு பயந்து போனாள்.
ஆனால் இதை இப்படியே விட முடியாதே... ஆனால் இது நிஜம் தானா என்று ஆராய தொடங்கியவள், யோகேஷ் அசந்து இருக்கும் நேரம் பார்த்து அவனது போனை எடுத்து சில தகவல்களை திரட்டியவளின் கண்களில் கண்ணீர் சூழ, மனதில் பயம் வந்து பீடித்துக்கொண்டது...
வேறு யாரிடமும் சொல்ல முடியாது... சொல்லி அவர்களை வேறு கலவரப்படுத்த மனம் வரவில்லை. அதும் இப்பொழுது தீபாவின் உடல் வேறு மிகவும் மோசமாக வேறு இருக்கிறது. அவளை கவனிக்கவே சரியாக இருக்கும் பொழுது இதை எப்படி சொல்வது...” என்று குழப்பம் கொண்டாள்.
தானும் மிக இக்கட்டான சூழலில் மருத்துவ உதவி தேவைப்படும் சூழலில் தான் இருக்கிறோம் என்பதை மறந்து போனாள்.
குரு எங்கு சென்றிருக்கிறான் என்று முழு தகவலும் அவளுக்கு தெரிந்து இருந்ததால் உடனடியாக கிளம்பிவிட்டாள்.
கையில் வெறும் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பியே விட்டாள். குருவிற்கு முன் தன்னுடைய உடல் நிலையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல இருந்தது அவளது செயல்... அதும் இரு உயிராய் இருக்கும் பட்சத்தில் அவளது இந்த பயணம் மிகப்பெரும் ஆபத்தில் போய் முடியும் என்பது கூட உணராமல் கண்ணை கட்டிய குதிரை போல இலக்கு ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு குருவை நோக்கி சென்றுவிட்டாள் நொடி கூட தாமதம் இன்றி...
கலைக்கூடத்தில் இருந்து சதியை வீட்டில் நவீன் இறக்கிவிட்டுட்டு மீண்டும் கலைக்கூடத்திற்க்கே திரும்பிவிட்டான்.
அதே நேரம் தீபாவின் உடல் நிலை இறுதி கட்டத்தில் இருந்தது.. அவள் பேசாத பேச்சுக்களை எல்லாம் அந்த நேரத்தில் பேச, ராதிகாவும் ஆனந்தியும் அவளுடன் இருந்தார்கள்...
சேகரும், குமாரும் வேலைக்கு சென்று இருக்க சதி வீட்டுக்கு வந்ததே தெரியாமல் போனது. அதோடு வீட்டிலிருந்து அவள் வெளியே சென்றதும் தெரியாமல் போனது...
அதோடு சதிக்கு இன்னும் இரண்டு வாரம் நேரம் இருக்கு என்பதால் இருவரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை... எப்படியும் யாராவது ஒருவர் அவள் கூடவே இருப்பதால் முதலில் தீபாவை கவனிப்போம் என்று எண்ணினார்களோ என்னவோ..
இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு ஒரு கடிதம் மட்டும் எழுதி வைத்தவள் விரைந்து சென்றுவிட்டாள் வீட்டி விட்டு...
தான் செல்லாமல் இருந்தால் இருவருக்குள்ளும் பிரிவு நிரந்தரமாகி விடுமோ என்று பயத்துடன் கண்கள் எல்லாம் கலங்கி அழுகையோடே பயணம் ஆனாள்.
ஆனால் தான் இப்படி சென்று இருவருள்ளும் பிரிவு நிரந்தரமாகி போகும் என்பதை உணராமல் போனாளோ பேதை..
குருவிடம் வந்து சேர சதிக்கு முழுதாய் இரண்டு நாட்கள் ஆகி இருந்தது... ஆனால் அப்படி இருந்தும் அவளால் அவனை பார்க்கமுடியவில்லை...
இன்னும் ஒரு இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்தது குருவின் பைனலுக்கு... அறிவிப்பு வேறு வந்துக்கொண்டு இருந்தது ஒரு புறம்... அந்த அரங்கை சுற்றி அவளது கண்கள் நர்த்தனம் ஆடிக்கொண்டு இருந்தது...
அதில் குருவை ஒரு புறம் தேடியது என்றாலும் இன்னொரு புறம் இன்னும் சிலரை தேடினாள்.
அந்த அரங்கத்தினுள் வரும் முன்பே அந்த ஊரு காவல் நிலையத்தில் சில போட்டோக்களை காட்டி டான் வந்த விஷயத்தை சொல்லி, விழா குழுவை கலைக்காமல் அரெஸ்ட் பண்ணும்படி புகார் எழுதி கொடுத்தவள் அதன் பின்பே குருவை தேடி அங்கு வந்தாள்.
அங்கு வந்த பின்பு தான் தெரிந்தது குருவுடன் ஆடும் சக ஆள் யோகேஸ் அண்ணனின் ஏற்பாட்டின் படி விலகி சென்றது...
இதுவரை அவன் தனியாக தான் ஆடினான். ஆனால் இப்பொழுது ஆட போவது ருத்திர தாண்டவம், அது முடிந்து பார்வதியோடு சிவன் ஆனந்த தாண்டவம் ஆடுவது போல நடனத்தை புனைந்து இருந்தான்.
எப்பொழுதுமே போட்டியில் ருத்திர தாண்டவம் மட்டுமே இருக்கும்... ஆனால் குரு வித்யாசமாக ஆனந்த தாண்டவத்தை எடுத்து இருந்தான்.
எல்லோருக்குமே வியப்பு தான்... ஆனால் அதை எப்படி ஆடுவது என்கிற முறை இருக்கே... கடை கட்ட பணியில் இப்படி சொதப்பி இருந்ததை எண்ணி குரு ஒரே ஒரு கணம் மட்டுமே கலங்கி நின்றான்...
அடுத்த கணமே இதை எப்படி தனியாக ஆடுவது என்று தனக்குள்ளே ஒரு முறை வடிவமைத்தவன் அதை ஆடி பார்க்க தொடங்கிவிட்டான்...
இன்னும் ஒரு மணி நேரமே உள்ளது... என்கிற பதட்டம் கொஞ்சம் கூட இல்லாமல் மிக நிதானமாக ஆட தொடங்கினான்.
இதற்கு இடையில் அந்த ஊர் காவல் துறை வந்து சதி அடையாளம் காட்டிய மர்ம நபர்களையும் அவர்கள் கையில் வைத்து இருந்த கத்தி துப்பாக்கி போன்றவற்றையும் கைப்பற்றி அவர்களை இழுத்து சென்றார்கள்.
அதன் பின்பே ஆசுவாசமானவள் மீண்டும் தேவேந்திரன் செய்த சதி செயலை கண்டு திகைத்து போனாள்.
குரு இந்த போட்டியில் தோற்கவே கூடாது என்று மனதில் உருப்போட்டவள் இடையில் மின்னல் போல ஒரு வலி வந்ததை உணர்வே இல்லை...
குரு ரொம்ப தீவிரமாக தனி அரங்கில் நடன பயிற்சி மேற்கொள்ள, அவனுக்கு தெரியாமலே அவனுக்கு ஒதுக்கி இருந்த அறையில் நுழைந்து குளித்து பார்வதிக்கு உரிய அலங்காரங்களை செய்ய தொடங்கினாள்.
கலைக்கூடத்தில் குரு ரிகசல் பார்த்த நடனத்தை கண் முன் ஓட்டி பார்த்தவள், ஒரு முறை ஆடி பார்த்தாள். அதன் பின்பு குருவுடன் மேடையேற காத்திருந்தாள்.
முறைப்படி விழா கமிட்டியிடமும் ஒப்புதல் வாங்கி இருந்தாள். அவர்களும் கின்னஸ் சாதனைக்காக நிறைமாத கற்பினியின் ஆடல் என்கிற செய்தியை அனைத்து செய்தி ஊடகங்களிலும் வெளிவர செய்து இருந்தார்கள்.
அதை டிவியில் பார்த்துக்கொண்டு இருந்த சேகருக்கும், ஆனந்திக்கும் உயிரே கையில் இல்லை என்பது போல இருந்தது...
நவீன் வீட்டுக்கு வந்து அண்ணி எங்கே என்று கேட்க, அதன் பின்பே சதி வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது... அதும் அவளது அறையில் இருந்த துண்டு காகிதம் அனைவரின் உயிரையும் அரை நொடியில் குலைத்து சென்றது...
நவீன் உடனடியாக ராக்கிக்கு போன் செய்து தகவல் சொல்ல, ராதிகா குமாரோடு இவர்கள் இருவரும் உடனடியாக பயணம் செய்ய தொடங்கினார்கள்.
அதற்க்கு இடையில் குருவிற்கு தகவல் சொல்ல முயல... குரு போனே எடுக்கவில்லை... எடுத்து பேசினால் எங்கே தன் வேதனை சதி கண்டு பிடித்துவிடுவாளோ என்று பயந்து அவன் போனை சுவிட்ச் ஆப் செய்து இருந்தான்.
ஏற்கனவே தேவேந்திரன் ஏற்பாடு செய்த குழு குருவை அங்கும் இங்கும் என்று சில ஊமை காயங்களை ஏற்படுத்தி இருந்தார்கள். வெளியே காயங்கள் இல்லையென்றாலும் வலி அவனுக்கு உயிர் போனது...
அதனாலே சதியை அவன் தொடர்புக்கொள்ளவில்லை. தொடர்புக்கொண்டு இருந்தால் வரும் காலத்தில் சில காயங்களை தவிர்த்து இருக்கலாமோ...?
காலம் யாருக்கு என்ன வைத்துக்கொண்டு காத்திருக்கிறது என்று யாருக்கு தெரியும்...
அவன் எந்த சூழ்நிலையையும் சந்திப்பான் அப்படினு ஏன் இவளுக்கு நம்பிக்கை இல்ல....
இவளை எனக்கு பிடிக்கவே இல்ல....
அப்படி என்ன நொக்கா பாசம் வேண்டி இருக்கு....
கடுப்பா வருது