லேசாய் திறந்து இருந்த கதவின் வழியே குரு சதியின் நெருக்கத்தை பார்த்துக்கொண்டு இருந்த தீபாவிற்கு மனமெல்லாம் ஏக்கத்தில் துடித்து போனது...
இது நாள் வரை இல்லாத உணர்வுகள் எல்லாம் பீரிட்டு வெளிக்கிளம்ப தன்னை அடக்க பெரிதும் பாடுபட்டாள். ஆனால் அது முடியாமல் போனது தான் ரொம்ப கஷ்டமாய் போனது.
இயல்பாய் குரு சதிக்குள் இருந்த நெருக்கம் எப்பொழுது சதி கருவுற தொடங்கினாளோ அப்பொழுது இருந்து குரு அவளை கண்ணும் கருத்துமாய் தாங்கி, அவனது கைக்குள் வைத்துக்கொண்ட பின் தீபாவிற்க்குள்ளும் பெண்மையின் கதவுகள் தாள் திறக்க தொடங்க, சதியின் இடத்தில் தன்னை வைத்து பார்க்க தொடங்கினாள்.
அதன் பின் அடிக்கடி தீபாவின் பார்வை குருவிடம் சரணடைய, ஒரு கட்டத்துக்கு மேல் தீபாவின் பார்வையில் இருந்த வீரியம் குரு உணர தொடங்க, அவளது விழி பார்வையிலிருந்து அவன் நகர தொடங்கினான்.
அதுவும் தீபா உணராமலே... பாதி நேரம் ரிகசல் என்கிற பெயரில் கலைக்கூடத்திலே தங்கியவன் சதியையும் உடன் வைத்துக்கொண்டான்...
ஏனோ சதியை தீபா கொஞ்சம் பொறாமையுடன் பார்ப்பதை போல உணர்ந்தான். அதனாலே கருவுற்ற நேரம் சில கெட்ட எண்ணங்கள் அவள் மீது படிவதை தவிர்க்க எண்ணி அப்படி செய்தான்.
ஆனந்தியும் ராதிகாவும் குருவை கோபித்துக்கொள்ள, சதி அவனிடம் வந்து பேசினாள்.
யாருடைய கோவத்தையும் அவன் சட்டை செய்யவே இல்லை.
“இங்க பாரு எனக்கு என் பொண்டாட்டியும் புள்ளையும் நல்ல படியா இருக்கணும் அவ்வளவு தான்... அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்... இது நாள் வரை நான் செய்த தியாகம் போதும்... நானும் சராசரி மனிதன் தான். எனக்குள்ளும் ஆயிரம் கனவுகள் இருக்கு... அதுல முதல்ல இருக்கிற கனவே உன்னோட நான் பரிபூரணமா வாழணும்... அது மட்டும் தான். அதனால என்னை என் போக்குல விடு சதி...” என்று ஒரேடியாக மறுத்துவிட்டான்.
அவனது ஆசையும் புரிய சதி அவனுக்கு உடன்பட்டு தான் போனாள். அவனது ஆசையை சொன்ன பொழுது சதிக்கு ரெக்கை கட்டாத குறை தான்...
அவளுக்கும் அவனுடன் இருக்க வேண்டும் என்று ஆசை தானே... அதனால் அவனுக்கு மறுப்பு சொல்லவில்லை. குருவுடன் உடனாகிப் போனாள் சதி...
அதை எல்லாவற்றையும் எண்ணி பார்த்த தீபாவிற்கு காரணத்தோடு தான் சதியை தன்னிடமிருந்து பிரித்து இருக்கிறான் குரு என்று புரிய தொடங்கியது அந்த நிமிடம்.
எங்கிருந்தோ சத்தம் வர சட்டென்று அவர்களது அறையை விட்டு விலகிச்சென்றாள். நோய் வேறு அவளை படுத்த போய் படுத்துக்கொண்டாள்.
ஆனால் உள்ளுக்குள் அவளது ஆசை அதிகரித்துக்கொண்டே இருந்தது... கண்களை மூடும் போதெல்லாம் குரு சதியின் நெருக்கமான தோற்றமே வந்து செல்ல படுக்க கூட அவளால் முடியவில்லை.
அந்த நெருக்கம் தனக்கும் வேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது... சரி வெட்கத்தை விட்டு குருவிடமே கேட்டுவிடலமா...? என்ற எண்ணம் பிறக்க அதை நடைமுறைப்படுத்த அவனது இயலாமையை கூட ஓரம் கட்டிவிட்டு அவனது அறைக்கு விரைந்து சென்றாள்.
இருவரது பெற்றவர்களும் நவீனும் ராக்கியும் வந்தவர்களை சிறப்புடன் வழியனுப்பும் வேளையில் ஈடுபட்டு இருக்க தீபாவின் இந்த செயல் ஒருவருக்கும் தெரியாமல் போனது...
குரு தன் கைவளைவில் சதியை தூங்கவைத்துக்கொண்டு இருந்தான்... மெல்லிய பாடல் ஒன்றை அறையில் ஒலிக்க விட்டவன் அவளது தலையை கொதிக்கொடுக்க சுகமாய் தன்னவனின் நெஞ்சில் முகம் புதைத்து சுகமாய் துயில் கொள்ள தொடங்கினாள்.
நிர்மலான அவளது முகத்தை கண்டவன் அவளை அதிகம் கலைக்காமல் நெற்றியில் தன் இதழ்களை அழுத்தமாக புதைத்து எடுத்தவன் அறையின் உள் நிழல் ஆட சட்டென்று திரும்பி பார்த்தான்.
அங்கே தீபா நின்றிருப்பதை கண்டவன் நெற்றி சுருக்கினான்... ஏனெனில் இது வரை அவள் அவனது அறையின் உள் நுழைந்தது கிடையாது... நுழைய குரு விட்டதும் கிடையாது..
சதியிடமே உன் அக்காவை மாடி படி ஏற விடாமல் நீ போய் உன் அக்காவுடன் இரு என்று நாசுக்காக அவன் சொல்லி இருந்தான்... அதென்னவோ தீபா அவனது அறையின் உள் நுழைவது ஒருவித ஒவ்வாமையை கொடுத்தது...
அத்தை மகள் தான்... ஆனாலும் கல்யாணம் ஆனதிலிருந்து, அதுவும் சதி எப்பொழுது உரிமையாக தீபாவே அவனது அறையில் கொண்டு வந்து விட்டாளோ அப்போதிருந்து ஏனோ ஒருவித சொல்லறியாத மனநிலை அவனுக்கு வந்து இருந்தது...
அதை மெய்பிப்பது போல தீபா வந்து நின்றாள்.
சட்டென்று சதியிடமிருந்து விலகியவன், அவளுக்கு அணைவாக பிரக்னன்சி மெத்தையை சுருட்டி சுற்றி வைத்தவன் எழுந்து வெளியே வந்தான்.
அப்பொழுது கூட சதியின் மீது அவன் காட்டும் அக்கறையை கண்ட தீபாவிற்கு அந்த அக்கறை தன் மீது காட்ட மாட்டானா என்று தோன்றியது..
தீபாவை உள்ளே வரவிடாமல் குரு வெளியே வந்து கதவை நன்கு சாத்திவிட்டு,
“என்ன தீபா இவ்வளவு தூரம் மேலே ஏறி வந்து இருக்க... சதிக்கிட்ட பேசணுமா...? அவ இப்போ தான் அசந்து தூங்குறா...” என்று சொன்னவனை ஆழ்ந்து பார்த்து,
“நான் உங்க கூட பேசணும்னு தான் வந்தேன் மாமா...” என்றாள்.
“அப்படியா... ம்ம்ம் பேசு..” என்றவன் சுவரில் சாய்ந்து நின்றுக்கொண்டான்.
“இங்க வேணாம் மாமா... என்னோட அறையில போய் பேசலாம்...” என்று சொன்னவள் அவன் மறுக்கும் முன்பே கீழே இறங்கி சென்றுவிட்டாள்.
குருவும் வேறு வழியில்லாமல் அவளை தொடர்ந்து சென்றான். அதற்க்கு முன் சதியை ஒரு பார்வை எட்டி பார்த்தான்...
அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்... அதன் பின்பே தீபாவின் அறைக்குள் நுழைந்தான்.
அவன் நுழைந்த உடனே வேகமாய் தீபா அவனிடம் வந்தாள். அவள் வந்த வேகத்துக்கு அவன் மீது மோதியிருப்பாள் குரு மட்டும் சுதாரித்து விலகவில்லை எனில்...
அவளது உடல் மொழியிலேயே அவளது நோக்கம் புரிந்துக்கொண்டவன் சட்டென்று விலகிக்கொண்டான்.
அவனது விலகலை கண்டு தீபாவின் முகம் இன்னும் சிறுத்து போனது...
“ஏன் மாமா... என்னை கண்டு ஒதுங்கி போறீங்க... நான் உங்க பொண்டாட்டி தானே...” என்று கண்கள் கலங்க கேட்டவளை அழுத்தமாக பார்த்தான்.
“தீபா இப்போ எதுக்கு நீ தேவையில்லாம பேசிட்டு இருக்க... என்ன விசயமோ அதை மட்டும் சொல்லு...” என்றான் காரராக...
“ஏன் மாமா இப்படி கொஞ்சமே பாசம் இல்லாம பேசுறீங்க. அவளை மட்டும் அப்படி தாங்குறீங்க... என்னையும் அது போல தாங்கலாம் தானே... அவளுக்கு மட்டும் அத்தனை முத்தம் குடுக்குறீங்க... எனக்கு அதுல ஒண்ணு கூட குடுக்க மாட்டிக்கீறீங்க... முத்தம் கூட பரவால, ஏன் என்னை ஒழுங்கா பார்க்க கூட மாட்டிக்கிறீங்க... என் கிட்ட இப்படி இருக்காதீங்க மாமா...”
“எனக்கு உங்க அன்பு வேணும்.. உங்க நெஞ்சு சூடு வேணும்... உங்க ஈரமான இதழ் முத்தம் வேணும்...” என்று அவனது நெஞ்சில் சாய வந்தாள்.
அப்பொழுதும் விலகிச்சென்றானே தவிர அவளது விரல் நுனி கூட தன்னை தீண்ட அவன் அனுமதிக்கவில்லை...
அதை பார்த்து அவளது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது ஆற்றாமையில்...
“மாமா...” அதுவரை கெஞ்சிக்கொண்டு இருந்தவள் இயன்றளவு தன் குரலை உயர்த்தி கத்தினாள்.
“இதுக்கு தான் வர சொல்லி இருந்தா அது ஒரு நாளும் என்கிட்டே நடக்காது தீபா... நான் வரேன்...” என்று விலகிச்செல்ல போனான்.
தீபா வேகமாய் அவனது வழியை மறைத்துக்கொண்டு,
“ஏன் மாமா என்கிட்டே இப்படி நடந்துக்குற... எனக்கு உன்னோட இதழ் முத்தம் வேணும்.. ப்ளீஸ் மாமா...” என்று கெஞ்சியவளை அழுத்தத்துடன் பார்த்தவன், அவள் மீது கொஞ்சமும் இறக்கம் காட்டாமல்,
“தீபா என்னோட இதழ் இல்ல நிழல் கூட உன்னை தொடாது... இது சதிக்கு மட்டும் சொந்தமான உடம்பு... இதை நீ தொட்டு கலங்கப்படுத்த நினைக்காத... என்னை விடு...” என்றவன் விலகிச்செல்ல,
“மாமா நான் உங்க மனைவி... என்னை தொட உங்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கு...” என்று ஆவேசம் வந்தவளாய் அவள் கத்த,
இகழ்ச்சியாக ஒரு புன்னகையை சிந்தினான் குரு...
“என்னது மனைவியா...? அதும் நீயா...?” என்று நக்கலாக கேட்டான்.
“மாமா இது நீங்க கட்டுன தாலி மாமா...” என்று தன் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை எடுத்து காண்பித்தாள்.
“எது இது தான் தாலியா...? இது தாலின்னா இந்த தாலிக்கு உண்டான மதிப்பை நீ ஒரு நாளாவது குடுத்து இருக்கியா...?” என்று கேட்டவனை புரியாமல் பார்த்தாள்.
“நான் என்ன சொல்ல வரேன்னு கூட உனக்கு புரியல தானே...?” என்று நக்கலாக கேட்டவன்,
“இதோ பாரு நான் சொல்ல வராது உனக்கு புரியாமலே போகட்டும்.. இப்போ வழிய விடு... எனக்கு வேலை இருக்கு நான் போகணும்...” என்று கதவை நோக்கி சென்றான்.
“இல்ல முடியாது மாமா... எனக்கு நீங்க வேணும்... சொல்லுங்க நான் புரிஞ்சுக்குறேன்...” என்று அடவாடியாய் நின்றவளை கண்டு எரிச்சல் வந்தது குருவிற்கு...
“இங்க பாரு நான் ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன்... என் பொறுமையை ரொம்ப சோதிக்காத சொல்லிட்டேன்... ஒழுங்கா நகரு..” என்று சொல்லிவிட்டு அவன் விலக பார்க்க,
“அப்போ எனக்கு முத்தம் குடுத்துட்டு நீங்க இங்க இருந்து போங்க...” என்று திமிராய் சொன்னாள்.
அவளது அந்த செயலில் கோவம் உச்சிக்கு ஏறியது. அதை கண்களை மூடி கட்டுப்படுத்தியவன் மிக நிதானமாக,
“எந்த உரிமையில நீ என்கிட்டே இப்படி கேட்டுட்டு இருக்க...” கேட்டான்.
“உங்க மனைவின்ற உரிமையில தான்... இதோ அதுக்கு சாட்சியா இந்த தாலி இருக்கு...” என்று மீண்டும் தன் தாலியை தூக்கி காண்பித்தாள்..
அதை பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை...
“எது பொண்டாட்டியா...? நீயா... அப்போ என் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காளே அவளை என்ன சொல்றது... எனக்கு ஒரே பொண்டாட்டி அது என்னோட சதி மட்டும் தான்... நீ கிடையாது...” என்று அழுத்தமாக சொன்னான்...
“மாமா அப்போ நான்...” என்று அதிர்ந்து விழித்தாள்.
“அதை என்கிட்டே கேக்குற...” நக்கலாக பதில் சொன்னான்...அதை கேட்டு இருக்கிற கொஞ்ச குருதியும் ஏகத்துக்கும் எகிறி அவளுக்கு ரத்த அழுத்தத்தை கொடுக்க தொடங்கியது..
“மாமா...” வீறிட்டாள்.
“ஷ் தேவையில்லாம கத்தாத... தேவையில்லாம நான் எதையும் பேசல... நடந்த சில விசயங்களை தான் பேசுறேன்...” என்றவன்,
“கல்யாணம் பண்ண அன்னைக்கே உன் தங்கச்சியை உனக்கு தாலி கட்டினவன் அறையில கொண்டு வந்து விட்டியே உன்னால எப்படி அப்படி செய்ய முடிஞ்சுது... எந்த ஒரு பொண்டாட்டியாலயும் நீ செஞ்ச செயல செய்ய முடியாது... ஆனா நீ செஞ்ச...”
“ஏன்னா உன்னால என்னை விட்டுக்குடுக்க முடிஞ்சுது... அப்பவும் நாங்க சேரல தனியா தான் இருக்குறோம்னு தெரிஞ்சி உன்னோட குழந்தை ஆசையை சொல்லி எங்களை கார்னர் பண்ண... எப்படி ஒரு பொண்டாடியால தன் புருஷன் இன்னொரு பொண்ணோட படுக்கையில ஒண்ணா இருக்கிறதை விரும்புவா..? ஆனா நீ அதையும் விரும்பின...” என்று சாட்டை அடியாக அழுத்தமாக கேள்வி கேட்டான்.
அவனது கேள்வியில் தலைக்குனிந்து கூனி குறுகி போனாள் தீபா...
“ஆத்மார்த்தமா சதியோட வாழ்ந்துக்கிட்டு இருக்கும் போது இப்போ வந்து அது என்னோட வாழ்க்கை எனக்கு நீங்க வேணும்னு வந்து கேட்டா எப்படி உன்னோட வந்து வாழுவேன் நானு... இங்க பாரு எனக்கும் ஒரு மனசு இருக்கு... அதுல சில உணர்வுகளும் இருக்கு... எல்லோரையும் என்னால கிஸ் பண்ண முடியாது... எல்லோர் கூடவும் வாழ முடியாது...” என்று உறுதியாக மறுத்தான்..
“மாமா நான் நாளைக்கு சாக கிடக்குறேன் அப்போ கூட என்னோட ஆசையை நீங்க நிறைவேற்ற மாட்டீங்களா...?” அதுவரை ஆத்திரத்துடன் கத்தியவள் இப்பொழுது நிதானமாக கேள்விக்கேட்டாள்.
“கண்டிப்பா நிறைவேற்றி இருந்து இருப்பேன் தீபா.. சதியை என் அறைக்குள்ள நீ அனுப்பாம இருந்து இருந்தா... உன்னோட வாழ்நாள் இறுதி வரை உன்னை என் தோள்ள சாச்சி உனக்கு வலி எடுக்கும் நேரமெல்லாம் சின்ன சின்ன கதை சொல்லி உன்னை தூங்க வச்சி இருப்பேன்...”
“ஆனா அதையெல்லாம் நீ செய்ய விடாம உன் ஆசையை மட்டும் முன்னாடி நிறுத்தி உன்னை நீயே என்கிட்டே இருந்து விலக்கி வச்சுக்கிட்ட... இனி அது உன்னோட கடைசி ஆசையா இருந்தாலும் அதை என்னால நிறைவேற்ற முடியாது தீபா...”
“நான் செத்து போன பின்னாடி அது உங்களுக்கு உறுத்தலா இருக்க போகுது மாமா...” சாபம் போல சொன்னாள்.
அதைக்கேட்டு புன்னகைத்த குரு,
“சத்தியாமா எனக்கு நீ கேட்டு அதை நான் மறுத்தது இருந்தா அது என்னோட வாழ்நாள் முழுவதும் உருத்தலாவே இருந்து இருக்காது... சப்போஸ் என் மனசு மாறி உனக்கு நான் அதை (முத்தம்) குடுத்து இருந்தா தான் சதிக்கு நான் துரோகம் செய்துவிட்டேன்னு உறுத்தலா இருக்குமே தவிர உனக்கு குடுக்காம விட்டது எனக்கு எந்த விதத்துலையும் உருத்தலாவே இருக்காது... நான் ப்ராஸ்டியுட் கிடையாது... நான் ஒருத்திக்கு ஒருத்தனா வாழணும்னு ஆசை படுறேன்... என்னோட தவத்தை சில்லி விஷயத்தை காட்டி கம்பெல் பண்ணி கலைக்க பார்க்காத... அப்புறம் நீ வேற ஒரு குருவை தான் பார்ப்ப...” என்று தெளிவாக சொன்னான்.
அதைக்கேட்டு தீபாவின் கண்கள் கலங்கியது.. அவளது கண்ணீரை கண்டவன், மனசு கொஞ்சம் கூட கலங்காமல், இதழில் உறைந்த புன்னகையுடன்...
“நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்...
சேரும் நேரம் வந்தது மீதி தூரம் பாதியே...
பாதை ஒன்று ஆன போதும் திசைகள் வேறம்மா...
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா...
மீராவின் கண்ணன் மீராவிடமே...
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே...
வாழ்க நீயும் வளமுடன்..
என்றும் வாழ்கவே...” என்று அழகாக பாடியவன் அதை அவளுக்கு தன் வாய் வார்த்தையாகவே புரியவைத்தான்.
“இங்க பாரு தீபா நீ எப்பவும் என்னோட அத்தை பொண்ணு தான்... அதை தாண்ட நீ என்னைக்கும் முனையாத... உன் முடியாமையை வைத்து என் வாழ்க்கையை பலியாக்க நான் விரும்பல்... இது வரை நீ எங்க வாழ்க்கையில விளையாண்டது போதும்.. எனக்கு உன் மேல எப்பவும் அன்பு இருக்கு... அத்தை மகளா... உன்னை தாங்க நான் எப்பவும் இருப்பேன்... ஆனா அதை வேற விசயத்துக்கு பணையம் வைக்காத... கண்டிப்பா உனக்கு மசியமட்டேன்...” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
அவனது பேச்சை கேட்ட தீபா குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். எப்படியாப்பட்ட அன்பை உதறி தள்ளிவிட்டோம் என்று புரிய அவளது மனம் வேதனையில் சுருண்டு போனது..
அப்பாடா ரொம்ப சரியா பேசிட்டான் குரு🤩🤩🤩🤩