தன் முன் முந்தானை இன்றி நின்றவளை கண்கள் வெறிக்க பார்த்தவன்,
“சும்மா சொல்லக்கூடாதுடி ஒர்த் பீஸ் தான்” என்று அவளை பார்வையாலே மேய்ந்தான்.
அதில் அவளுக்கு நெருப்பு பற்றியது போல உடம்பெங்கும் காந்தியது. விழிகளை அழுந்த மூடிக்கொண்டு நின்றாள். அவளால் இந்த நிமிடங்களை கடக்கவே முடியவில்லை.
ஆனால் தன் தங்கைக்காக இந்த ஈன செயலுக்கு உடன் பட்டு தான் ஆக வேண்டி இருந்தது. இல்லை என்றால் அவளின் தங்கையை கண்ணால் கூட காண விடாமல் என்ன வேணாலும் செய்யுமே இந்த மிருகம்.
தன்னையே எரியும் மெழுகாக மாற்றிக் கொள்ள முடிவெடுத்து தானே தங்கையை இவ்விடம் விட்டு தப்பிக்க வைத்தது. அதன் பலன் என்ன வந்தாலும் அவள் ஏற்றுக் கொண்டு தானே ஆகவேண்டும். எரிகிற கொள்ளியை எடுத்து தலையை சொறிந்துக் கொள்ள சொன்னாலும் அவள் அதை செய்து தான் ஆகணும்.
கொள்ளியை எடுத்து தலையில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த மனித மிருகம் கேட்பது என்னவோ அவளை அல்லவா? அதை எப்படி தர இயலும். உள்ளத்தை கீறி விட்டு அதிலிருந்து சிந்தும் உதிரத்தை அல்லவா இந்த மனித மிருகம் ருசி பார்க்க துடிக்கிறது.
விழிகளில் நீர் நிறைந்துப் போனது. கனவில் கூட இப்படி ஒரு நிலை தனக்கு வரும் என்று ஒரு வாரம் முன்பு வரை நினைத்துக் கூட பார்த்து இருக்கவில்லை.
அழகான நீள விரல்கள் கணினியில் நர்த்தனம் ஆடும் வேளையில் அல்லவா இருந்தாள். படித்தது எம்சிஏ.. நன்றாக படித்தாள். கோல்ட் மெடல் எல்லாம் வாங்கினாள்.
வீட்டுக்கு அவள் தான் சிறந்த உதாரணமாக இருந்தாள். அவளுக்கு கீழ் இரண்டு தங்கைகள். ஒருத்தி குறிஞ்சி. இவளும் அக்காவை போல படித்து வேலைக்கு சென்றாள். இரண்டாவது தங்கை பிறைநிலா. அவாள் படிப்பு முடித்து வேலைக்கு முயற்சி செய்துக் கொண்டு இருந்தாள்.
தயாழினின் அம்மா அப்பா மலர், சந்தானம். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். முதல் இரண்டும் ஆண் பிள்ளைகள். அந்த இரண்டு பிள்ளைகளால் தான் இவர்களுக்கு இவ்வளவு கட்டலும்(கஷ்ட்டமும்).
ஆடம்பராமாக கல்யாணம் செய்யணும் என்று சொல்லி தயாகரனிடம் வட்டிக்கு ஆளாளுக்கு அம்பது லட்சம் வாங்கி நீராய் செலவழித்து திருமணம் செய்துக் கொண்டார்கள்.
ஆனால் அந்த கடனை வீட்டில் இருப்பவர்களின் தலையில் கட்டி விட்டு இருவரும் தம் தம் மனைவியர்களோடு கம்பி நீட்டி விட்டார்கள்.
ஒரு கோடி பணம் குடுத்தவன் சும்மா இருப்பானா? இதோ இரண்டு பெண்களை கட்டம் கட்டி தூக்கிட்டு வந்துட்டான்.
தயாழினி எவ்வளவோ கெஞ்சி பார்த்து விட்டாள். ஆனால் அரக்கன் மனம் இறங்கவே இல்லை. கொஞ்சமும் இரக்கமில்லாமல் அவர்களை அடுப்படியில் போட்டு வாட்டி வதைத்தான்.
இரு பெண்களையும் அவனது வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போகாமல் அவனது அடியாட்கள் இருக்கும் இடத்துக்கு கொண்டு வந்து போட்டுவிட்டு,
“இங்க இருக்குற வேலையாட்களோடு சேர்ந்து தங்கிக்கங்க.. ஆனா நீங்க ரெண்டு பெரும் தான் இங்க இருக்குற எல்லாருக்கும் சமைச்சு போடணும்.. இது தான் உங்க வேலை” என்று சொல்லிவிட்டு முதல்நாள் போய் விட்டான்.
ஆனால் தலைகளின் எண்ணிக்கையை எண்ணி பார்க்கும் பொழுது சின்னவள் அழுதே விட்டாள். பெரியவள் தான்
“இதுக்கே அழுதா எப்படிடி.. விடு சமாளிப்போம்” என்று சொல்லி அங்கு இருந்த அறுபது எழுபது பேருக்கு யாருடைய உதவியும் இல்லாமல் சமையல் செய்ய ஆரம்பித்தாள்.
அதுவும் விறகு அடுப்பு. சொல்லவும் வேண்டுமா? காலையில் ஆரம்பித்த வேலை சாயங்காலம் ஐந்து மணிக்கு தான் முடிந்தது.
வீட்டு வேலைக்கு இன்னும் சில பெண்கள் இருக்கவும் பெரிதாக பயம் இருக்கவில்லை.
குறிஞ்சிக்கு கால் வலிக்கவும் ஒரு கட்டத்துக்கு மேல் அமர்ந்து விட்டாள். ஓடியாடி தயாழினி தான் செய்தாள்.
அதை எல்லாம் மேல இருந்து பார்த்துக் கொண்டு இருந்தவன்,
குறிஞ்சியை மேல வர சொல்லி ஆள் மூலம் அனுப்பிவிட,
குறிஞ்சியும் பயந்துக் கொண்டு மேலே வந்தாள். ஆனால் அவளுக்கு முன்பு அவளை மறைத்தபடி தயாகாரனுக்கு முன்னாடி வந்து நின்றாள் தயாழினி.
தங்கையை அவள் பாதுகாப்பதை கண்டு கண்கள் சுறுக்கினான்.
“அவ சின்ன பிள்ளை.. அவளை எதுவும் செஞ்சிடாதீங்க.. சமைக்கணும் அவ்வளவு தானே.. அதை தான் நான் செய்யிறேனே.. அவளை விட்டுட்டுங்க..” என்றவளை தலை சாய்த்துப் பார்த்தவனின் விழிகளில் மின்னிய காமத்தை கண்டு உடல் நடுங்கிப் போனது தயாழினிக்கு.
ஆனால் தங்கையை விட்டுவிட முடியாதே... துணிந்து நின்றாள்.
“சரி போ” என்று மட்டும் சொன்னான். அவன் சொன்னது போதும் என்று தங்கையை கூட்டிக்கொண்டு போய் விட்டாள். ஒரு வழியாக ஆறு மணிக்கு எல்லாவாற்றையும் எடுத்து வைக்க, தயாகரன் வந்து நின்றான்.
“எத்தனை மணிக்கு சமைக்க சொன்னா எத்தனை மணிக்கு சமைச்சு வச்சு இருக்கீங்க.. ஹாங்” என்று கத்தியவன் அவற்றை அப்படியே மண்ணில் தள்ளிவிடப் போக பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
“ப்ளீஸ் சார்.. இவ்வளவு உணவையும் மண்ணுல போட்டுடாதீங்க.. நாளையில் இருந்து நான் சரியான நேரத்துக்கு சமைச்சு வச்சுடுறேன். ஆனா இப்போ இதை வீணாக்காதீங்க” என்று கெஞ்சியவளை மீண்டும் தலை சாய்த்துப் பார்த்தவன் சின்ன புன்னகையோடு போய் விட்டான்.
“பரவாயில்ல க்கா நாம நினைச்ச மாதிரி இவரு ரொம்ப மோசமான ஆளா இல்ல.. எடுத்து சொன்னா புருஞ்சுக்குறாரு... இதே மாதிரி நீ அவர்கிட்ட பேசு.. நாம அவரை ஏமாற்ற மாட்டோம். எப்படியாவது காசு குடுத்துடுறோம்னு சொல்லு” என்று தங்கை சொல்ல, தயாழினிக்கு தான் மனமே இல்லை.
ஏனெனில் தயாகரன் தலை சாய்த்து பார்த்த பார்வையில் நிச்சையம் கண்ணியம் இருக்கவில்லை. அதோடு அவன் தங்களை அப்படி எல்லாம் விட்டு விட மாட்டான் என்று தான் தோன்றியது.
ஆனால் அதை குறிஞ்சியிடம் சொல்லி அவளை கலவரப்படுத்த வேண்டாம் என்று எண்ணி அமைதி காத்தாள்.
அவள் கணித்தது போல அன்று இரவு தயாழினியை வர சொன்னான் அவனது அறைக்கு. பயம் கவ்விக் கொண்டது அவளுக்கு.
“ஐயோ கடவுளே... இந்த நேரம் எதுக்கு வர சொல்லணும். அவன் சரியான அயோக்கியனா இருப்பான் போல க்கா. நீ போகாத” என்று குறிஞ்சி கெஞ்ச,
“நான் போகலன்னா அவன் உன்னை டார்கெட் பண்ணுவான்டி” என்றவள்,
“கதவை உள் பக்கமா தாழ் போட்டுக்க.. நான் வந்தா மட்டும் தான் அதும் என் குரல் கேட்டா மட்டும் தான் கதவை திறக்கனும்” என்று தங்கைக்கு எச்சரிக்கை சொன்னவள் தைரியமாக அவனை எதிர் நோக்க சென்றாள்.
நடுங்கிய மனதை திடப்படுத்திக் கொண்டு அவனது அறையை கை காட்டியதில் அவனது அறைக்கே நேரடியாக சென்றாள்.
உள்ளே நுழைந்தவளை கண்கள் வெறிக்கப் பார்த்தான் தயா.
“சார் கூப்பிட்டீங்க” என்று வந்து நின்றாள். அவளின் யாக்கையை மேலிருந்து கீழாக பார்வை இட்டவன், அவள் வியர்த்து வடிவதை கூட இரசித்துப் பார்த்தான்.
அதுவும் அந்த வியர்வையை அவள் முந்தானையால் துடைக்கும் அழகை கண்கள் சிவக்கப் பார்த்தவன், அந்த வியர்வையோடையே அவளை அடைய எண்ணினான்.
எழுந்து அவளருகில் வந்தவன், அவளின் கழுத்தோரம் முகம் கொண்டு வந்து அவளின் வியர்வை வாசத்தை ஆழ்ந்து சுவாசிக்க, பக்கென்று ஆனது அவளுக்கு.
“சார்” என்று குரல் நடுங்கிப் போனது.
“உன் வாசமே போதை ஏத்துடி...” என்று அவளை இன்னும் நெருங்கி வந்து அவளின் கழுத்தில் முகம் புதைக்க வர,
“ஐயோ ப்ளீஸ் சார்... நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்ல.. ப்ளீஸ் என்னை விட்டுட்டுங்க” என்று கெஞ்சியவளை ஏளனமாக பார்த்தவன்,
“நீ அந்த பொண்ணு இல்லன்னு எனக்கு தெரியும். ஆனா என்கிட்டே கடன் வாங்குனா நான் இதெல்லாம் உண்டுன்னு ஸ்க்ரிப்ட்ல இருக்கே. படிக்கலையா?” எள்ளுடன் கேட்டான்.
“சார் எங்களுக்கு கடன் வாங்குனதே தெரியாது” என்றவளை நக்கலுடன் பார்த்தவன்,
“ஆனா படுக்க தெரியும்ல அது போதும்” என்றான் எகத்தாளமாக. தயாகரன் பேச பேச இவளுக்கு உடல் நடுங்கியது பயத்தில்.
“ப்ளீஸ் சார்” என்று முடிக்கும் முன்பே அவனின் முகம் அவளின் கழுத்தில் மிக அழுத்தமாக பதிந்தது. அதுவும் அவனின் முகம் இன்னும் இன்னும் கீழிறங்க, விக்கித்துப் போனாள் அழுகையில் நெஞ்சு முட்டிப் போனது பெண்ணவளுக்கு.
அட பாவி நீங்க எல்லாம் அண்ணன்களா டா பக்கி பயலே 🤬🤬🤬🤬🤬😬