Notifications
Clear all

அத்தியாயம் 12

 
Admin
(@ramya-devi)
Member Admin

தந்தையோ தென்னவனை கை காட்ட, விடியோ காலில் தன் சந்தேகத்தை கேட்க ஆரம்பித்தவள் அப்பொழுது தான் தென்னவனை முதன் முறையாக பார்த்தாள் தமிழ்.

கணினி வழியாக அவனை பார்த்தாள் முதன்முறையாக. “ஹாய் மேம்.. ஐ ஆம் தென்னவன்...” என்று வரிசை பற்கள் தெரிய வெளிர் கருப்பட்டி வண்ணத்தில் இருந்தவனை கண்டு முதல் முறை பார்த்த பொழுதே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தான் தமிழினியாள் நெஞ்சில்.

அவள் பார்த்தது எல்லாம் வெள்ளைவெளேர் என்ற தோள். அதோடு மொழுக்கென்று இருக்கும் முகம். ஆனால் தென்னவன் மாநிறத்தில் அடர் மீசையோடு கண்களை நிறைக்கும் வண்ணம் இருந்தவனை கண்டு மேர்சலாகிப் போனாள். ஆண் என்றாலே மீசை தான் அழகு. அது இல்லாமல் இருக்கும் ஆண்களை கண்டு கடுப்பு தான் வரும் இவளுக்கு. ஆனால் தென்னவன் அப்படி இல்லாமல் ஆணுக்குரிய இலக்கணமாய் இருப்பவனை பார்த்து லேசாக தடுமாறினாள்.

அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

“ஹாய் மிஸ்டர் தென்னவன்.. ஐ ஆம் தமிழினியாள்” என்று தன்னை அறிமுகம் செய்துக் கொண்டாள்.

“ஹலோ மேம்” என்று அவன் ஆராம்பிக்க,

“ஹெலோ நான் ஒன்னும் உங்க பாஸ் கிடையாது... ஜஸ்ட் பேர் சொல்லியே கூப்பிடுங்க” என்றாள்.

“ஆர் யூ சுயர்” என்று கேட்டவனை முறைத்தவள்,

“சுயர் பேர் சொல்லியே கூப்பிடுங்க” என்றாள் இவள்.

“ஓகே மிஸ் தமிழி” என்றான். அவன் தமிழ் இல்ல இனியாள் என்று அழைப்பான் எதிர் பார்த்தாள். ஆனால் அவன் மிக வித்யாசமாக தமிழி என்று அழைக்கவும் திகைத்துப் போனாள்.

“ஏன் தமிழி? புதுசா இருக்கே” புருவம் சுருக்கி அவள் கேட்க,

“தமிழ் எல்லோரும் யூசுவலா கூப்புடுறது தானே.. பட் தமிழி இஸ் ஒரிஜினல் தமிழ். ரொம்ப பழமையானது கூட” என்றவன், “சோ ஐ கால் யூ தமிழி” என்றான்.

அவன் சொல்லும் விளக்கத்தில் இம்ப்ரெஸ் ஆனவள்,

“ஐ இம்ப்ரெஸ் யூ” என்று சிரித்தாள்.

“உங்க ஸ்மைல் க்யூட் தமிழி” என்றான்.

“பதிலுக்கு பதிலா?” என்று கேட்டு சிரித்தவள்,

“ஒர்க் ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று கேட்டாள்.

“எஸ்... சார் சொன்னாங்க.. உங்களுக்கு எதுல டவுட்.. நான் கிளியர் பண்றேன்” என்று ஆரம்பித்து அவளின் சந்தேகங்களை எல்லாம் தெளிவு படுத்தினான்.

அவன் தெளிவு படுத்தும் விதத்தை பார்த்து மயங்கி தான் போனாள்.

“சூப்பெரா கிளியர் பண்றீங்க மிஸ்டர் தென்னவன்.. ரொம்ப வருட எக்ஸ்பீரியன்ஸ் போல” என்றாள்.

“எஸ் தமிழி.. டென், டுவல் இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்” என்றான்.

“குட்” என்றவள் அதன் பிறகு அவனிடம் பெரிதாக காண்டேக்ட் இல்லை. சினேகாவே நேரம் இருக்கும் பொழுது எல்லாம் சொல்லி குடுத்துக் கொண்டு இருந்தாள்.

தமிழ் கத்துக் குட்டி என்பதால் மிகவும் தடுமாறினாள். அவளின் தடுமாற்றத்தை பார்த்து கிருஷ்ணமூர்த்தி தான் ,

“எதுக்குடா இவ்வளவு கட்டல் படுற? இங்க வந்து நம்ம பிசினேசை பார்த்துக்க வேண்டியது தானே.. அக்கா மட்டும் தானே இருக்கா. அவளும் எவ்வளவு ஓட்டம் ஓடுவா? நீ வந்தா அவளுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் இல்ல” என்றவரின் பேச்சை காதிலே வாங்கிக்கொள்ளவில்லை.

“என்னால முடியும் டேட்.. முன் வச்ச காலை பின் வைக்க மாட்டேன்” என்று சொன்னவள் சொன்னது போல பல குட்டிகரணம் அடிச்சு அவள் ஆரம்பித்த பிசினேசை மெல்ல மெல்ல முன் நகர்த்தி சென்றாள்.

ஆனாலும் பல சிக்கல்கள் எழுந்த வண்ணம் தான் இருந்தது. ஏகப்பட்ட டவுட்ஸ். அத்தனைக்கும் ஊருக்கு போனை போட்டு கிளியர் பண்ணிக்கொண்டு நிர்வாகத்தை திறம்பட செய்தாள் தனியாளாக.

ஆனால் அவளே எதிர்பாராத ஒரு சிக்கல் வர,

“டேட்.. கொஞ்சம் ஹெல்ப் வேணும்.. நீங்க இல்ல அக்கா யாராவது வாங்க” என்று கேட்டாள்.

“டேய் என்னடா இப்படி சொல்ற.. இப்ப நாங்க ரெண்டு பேரும் நகரமுடியாத சூழல்ல இருக்கோம். ஆடிட்டிங் போயிட்டு இருக்கு. இன்னொரு பக்கம் ஐடி ரெய்டும் நடக்குது. சோ ரெண்டு பேராலையும் அசைய முடியாது” என்றவர்,

“சரி இரு தென்னவனை வர சொல்றேன்” என்று இவர்களுக்கு பதிலாக தென்னவனை அனுப்பி வைத்தார் லண்டனுக்கு.

லண்டன் ஏர்போட்டில் அவனை போய் பிக்கப் பண்ணிக் கொண்டாள் தமிழ்.

“ஹெலோ மிஸ்டர் தென்னவன்” என்று கையை நீட்டினாள்.

“ஹாய் மிஸ் தமிழி” என்று அவனும் கையை பிடித்து குலுக்கினான். இயல்பான பேச்சு வார்த்தையோடு அவர்களின் பயணமும் சென்றது.

தமிழ் ஏற்ற தாழ்வு பார்ப்பவள் தான். ஆனால் ஏனோ தென்னவனிடம் அவளால் அதை பார்க்க முடியவில்லை. அவன் தங்களது வசதிக்கு ஈடு இல்லாதவன் தான். ஆனால் அவனிடம் அவளே போய் பேசினாள். நட்பு வைக்க கூட தகுதி தராதரம் பார்க்கும் தமிழ் தென்னவனிடம் எந்த பாகுபாட்டையும் பார்க்கவில்லை.

எளிதாக தன் நட்பு வட்டத்தில் அவனை இணைத்துக் கொண்டாள்.

கிட்டத்தட்ட பத்து பதினைந்து நாள் அவன் லண்டனில் இருக்க நேர்ந்தது. வேலை நேரம் போக மற்ற நேரம் எல்லாம் அவனுக்கு அந்த ஊரை சுற்றி காண்பித்தாள்.

வாரத்தின் இரு நாட்களும் அவனை பப்புக்கு கூட்டிக்கொண்டு போனாள்.

அங்கே சின்ன சின்ன என்ஜாய்மென்ட் இருக்க அனைத்தையும் இரசித்தான். அவனும் அதில் எல்லாம் கலந்துக் கொண்டான். எதுவுமே வரைமுறை மீறியதாக இருக்கவில்லை. வேணும் என்றால் அடுத்த கட்டத்துக்கு போகலாம். ஆனால் தமிழும் சரி தென்னவனும் சரி அவரவர் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.

“ஹேவ் யூ ரிங்க்ஸ்” என்று கேட்டாள் தமிழ்.

“நோ ஐ ஆம் டீடோட்லர்” என்று அழகாக சிரித்தான்.

“பட் நான் அப்படி இல்ல மிஸ்டர் தென்னவன்” என்றவள் அவன் கண் பார்க்க ஒரு பாட்டில் பியரை அப்படியே வாயில் சரித்து சாகசம் காட்டினாள்.

“அடிப்பாவி குடிகாரியாடி நீ” என்று தென்னவன் வாயை பிளந்தான். இதுநாள் வரை மிஸ் தமிழி, தமிழி, மேடம், மேம் என அழைத்துக் கொண்டு இருந்தவன் இன்றைக்கு அடிப்பாவி என்று அழைக்கவும் அவனை பார்த்து சிரித்தாள்.

“என் நட்பு வட்டத்துக்குள்ள வந்துட்ட போல தென்னவன்” ஏக வசனத்தில் கூப்பிட்டாள்.

அவளின் இந்த அழைப்பில் மனம் விட்டு சிரித்தவன்,

“பிரெண்ட்” என்று கையை நீட்டினான்.

“நானும்” என்று சொல்லி அவனின் கையை பிடித்துக் கொண்டாள்.

“தண்ணி எல்லாம் அடிக்காம எப்படிடா இவ்வளவு நல்லவனா இருக்க?”

“என்னடி பண்றது.. எனக்குன்னு யாரும் இல்ல.. தாப்பான வழிக்கு போனா கூட கூப்பிட்டு வச்சு சொல்லி திருத்த யாரும் இல்ல.  சோ எனக்கு நானே சுய கட்டுப்பாடு போட்டுக்கிட்டேன். இன்னொன்னு  இந்த மாதிரி விசயத்துல எல்லாம் எனக்கு ஈடுபாடே இல்லை” என்றான்.

அவள் இயல்பாக டா போடவும் இவனுக்கும் இயல்பாகவே டி போட வந்தது.

“உன் பிரெண்ட் நான் இருக்கேன்டா” என்றாள் லேசாக போதை ஏறியது அவளுக்கு. கொஞ்சமே கொஞ்சம் தடுமாறினாள்.

“மேடம் முதல்ல ஸ்டெடியா நில்லுங்க” என்று நக்கல் பண்ணினான்.

“ஹேய் கிண்டல் பண்ற பத்தியா?” என்று சொன்னவள்,

“ஸ்விம் போலாமா?” கேட்டாள்.

“இங்க இருக்கா?” என்று கேட்டான்.

“ம்ம் இருக்கு பட் எனக்கு ப்ரைவசி வேணும்... நம்ம வீட்டுல இருக்கு.. வா அங்க போய் மீதியை கண்டினியூ பண்ணலாம்” என்றவள் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனவள்,

நீச்சல் உடைக்கு மாறினாள். ஆனாலும் தென்னவன் கண்கள் அவளின் முகத்தை தாண்டி எங்கும் பயணிக்கவில்லை. சற்றே போதையில் இருந்தாலும் அவளுக்கு அவனின் கண்ணியம் பிடித்துப் போக,

“இந்நேரம் வேற ஒரு ஆம்பளையா இருந்து இருந்தா என் முகத்தை மட்டும் விட்டுட்டு கழுத்துக்கு கீழ பார்த்துட்டு இருப்பானுங்க” என்றாள்.

“பார்க்கிற மாதிரி அங்க எதுவும் இல்லையேடி” வேணும் என்றே அவன் நக்கல் பண்ண,

“போ எருமை” என்று நீரில் குதித்தாள். அவளோடு அவனும் குதித்தான். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நீந்தினார்கள்.

“நல்ல உடற்பயிற்சி இல்ல” என்றான்.

“ம்ம்... மேக்சிமம் வீக் டேஸ்ல டைம் இருக்காது.. சோ இப்படி வீக் எண்ட்ல ரெண்டு மணி நேரம் நீர் யானையா தண்ணியில மிதந்துட்டு இருப்பேன்” என்றாள்.

“எனக்கு பெருசா ஒர்க் எதுவும் இருக்காது. சோ மார்னிங் ஒரு மணி நேரம் ஜாகிங் பண்ணுவேன்” என்றான் தென்னவன்.

“பார்த்தாலே தெரியுது.. பாடி செம்மையா மேயின்டேன்யின் பண்றன்னு” என்றாள். அவளின் பார்வை அவனது வெற்று உடம்பை நன்றாகவே மேய்ந்தது. அவள் பார்ப்பதை பார்த்து தன் கையை மடக்கி வேறு காட்ட,

அவள் அவனது கையை தொட்டுப் பார்த்தாள். இறுகிப் போய் இருந்த அவனின் சதை கோலங்களை பார்த்து, “சூப்பர் தென்னவன்” பாராட்டினாள்.

“தேங்க்ஸ் மிஸ் தமிழி” பாவனையாக அவன் சொல்ல, அவனது தோளிலே இரண்டடி போட்டவள்,

“எனக்கு இன்னும் குடிக்கணும் போல இருக்கு.. கம்பெனி தர்றியா?” கேலி செய்தாள்.

“நக்கலு” முறைத்தவன் அவளோடு நீரில் நின்றபடி,

“நான் சால்ட் சோடா எடுத்துக்குறேன்” என்றவன்,

“இரு நானே உனக்கு மிக்ஸ் பண்ணி குடுக்குறேன்” என்று சொல்லி அவளுக்கு மிக்ஸ் பண்ணி குடுத்துட்டு தானும் ஐஸ்க்யூப் போட்ட சால்ட் சோடாவை எடுத்துக் கொண்டு அவளோடு நீரில் நின்றான்.

“எப்படிடி இப்படி லைபை என்ஜாய் பண்ற? செம்மையா வாழுறடி” என்றான்.

ஏனெனில் அவள் வாழும் முறையை இங்கு வந்த இந்த நான்கு நாட்களாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.

“நீயும் வாழ்ந்து பாரு தென்னவன்.. ஒரு லைப் தானே.. அதை நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்றதுல என்ன தப்பு” என்று கேட்டவள், அங்கு இருந்த அத்தனை நாட்களையும் அவனை மகிழ்வாக வைத்துக் கொண்டாள் தமிழ்.

ஊரை விட்டு கிளம்பிய அன்று,

“என் வாழ்க்கையில நான் ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்த நாள்கள்னா அது உன்னோட இங்க இருந்த நாள்கள் தான் தமிழி... ரொம்ப தேங்க்ஸ்” என்றான்.

“நீ ஹெப்பின்னா நானும் ஹேப்பிடா டீடோட்லர்” என்றவள், “ஐ லவ் யூ தென்னவன்” என்றாள் பட்டென்று.

தென்னவன் திகைத்துப் போனான்.

“குடிகாரி விளையாதடாடி..” என்றான்.

“என்னை அப்படி கூப்பிடாதடா எருமை..” என்றவள்,

“குடிகாரி காதலிக்க கூடாதாடா?” கேட்டவளின் கேள்வியில் இருந்த உண்மை தென்னவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது.

“தமிழி” என்றான் தவிப்பாக,

“இட்ஸ் ஓகே தென்னவன்.. நான் குடிகாரி தான். அதுக்காக என் காதலை அசிங்கப்படுத்த வேண்டாம். நீங்க கிளம்பலாம்” என்று அவனை ஏர்போட்டில் விட்டவள் அதன் பிறகு அவனிடம் எதற்காகவும் பேசவில்லை.

அவன் அழைக்கும் பொழுது கூட அவள் அழைப்பை ஏற்கவில்லை. ஒரே சொல்லில் நின்று விட்டாள் பெண்ணவள்.

அடுத்து அவள் ஊருக்கு போனது அவளின் அக்கா திருமணத்துக்கு தான். அதுவும் அங்க போய் தான் தெரிந்தது தென்னவன் தான் மாப்பிள்ளை என்று.

உள்ளுக்குள்ளே சுக்கு நூறாய் உடைந்து சிதறிப் போனாள் தமிழினியாள்.

தொடரும்...

Loading spinner
Quote
Topic starter Posted : June 17, 2025 10:42 am
(@gowri)
Estimable Member

இப்படி பண்ணி இருக்க வேணாம் தென்னு நீ....

அவளை வேணாம்னு சொல்லிட்டு....அவ அக்காவையே கல்யாணம் செய்வியா நீ?????

 

Loading spinner
ReplyQuote
Posted : June 17, 2025 12:01 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top