உடல் மெல்ல நடுங்கியது அந்த காரிருளில்... நெஞ்சமெல்லாம் பயத்தில் உறைந்துப் போய் இருக்க, கைகால்கள் எல்லாம் ஜில்லென்று ஆனது தயாழினிக்கு. படபடப்பு கொஞ்சமும் குறையவில்லை.
“அக்கா நீ எதுக்கும் பயப்படாத” என்று குறிஞ்சி சொன்னாலும் தயாழினிக்கு கொஞ்சமும் பயம் குறையவில்லை.
“எனக்கு என்னை நினச்சு பயம் இல்லடி.. உன்னை எப்படி இங்க இருந்து தப்பிக்க வைக்க போறேன்னு தான் பயமா இருக்கு. நான் மட்டும் மாட்டி இருந்தா கூட கவலை பட்டு இருக்க மாட்டேன். ஆனா வாழ வேண்டிய நீ மாட்டுனதுல தான் எனக்கு பயமே” என்று சொன்னவளை கட்டிக் கொண்ட தங்கையவள்,
“நீயும் வாழ வேண்டியவ தான் க்கா” என்று கண்ணீருடன் சொன்னவளை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தியவள், தங்கையின் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டவள்,
“இங்க பாரு குறிஞ்சி.. இங்க இருந்து நேரா என் பிரெண்ட் வீட்டுக்கு போயிடு. அங்க நம்ம அப்பா அம்மா ரெண்டு பேரும் இருப்பாங்க. எப்படியாவது அவங்களை கூட்டிட்டு பெங்களூர் போயிடு. என் பிரெண்ட் சிவா அங்க இருப்பான். உங்களை கூட்டிட்டு போயிடுவான்.அவனோட போன் நம்பர் அப்பா கிட்ட குடுத்து இருக்கேன்.. கவனமா போடி.. சின்னவளை நான் நேர பெங்களூர் வர சொல்லிடுறேன். அவளையும் கூட்டிட்டு எப்படியாவது கண் காணாம எங்காவது போயிடுங்க” என்றாள்.
“ஆனா அக்கா உன்னை மட்டும் எப்படி இந்த நரகத்தில் விட்டுட்டு போவோம்...” என்று கண்ணீர் வடிய சொன்னவளை காணுகையில் உள்ளம் இவளுக்கும் துடித்தது தான். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல்,
“யாராவது ஒருத்தர் தியாகம் பண்ணா தான் மத்த நால்வரும் உயிரோட இருக்க முடியும்டி. புருஞ்சுக்கோ” என்றாள்.
“ஆனா அக்கா... நீ மட்டும் இன்னும் எவ்வளவு தான் தாங்குவ.. நீயும் என்னோட வந்திடுக்கா.. நாம எல்லோரும் ஒண்ணா போயிடுவோம்” என்றவளை காண காண நெஞ்சு கலங்கியது.
“நானும் வந்துட்டா அந்த அரக்கனுக்கு சந்தேகம் வந்திடும்டி... அதனால கண்டிப்பா நான் இங்க தான் இருந்தாகணும்.. சொன்னா புரிஞ்சுக்கோடி. அவன் இப்ப தண்ணி அடிச்சுட்டு இருக்கான். இது தான் நல்ல சமயம். இங்க இருந்து எப்படியாவது தப்பிச்சு போயிடுடா” என்று கெஞ்சினாள்.
“அக்கா” என்று விடாமல் அவளை கட்டிக் கொண்டு அழுத தங்கையை மெல்ல மெல்ல சமாதனம் செய்து சுற்றி இருந்த காவலர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு இருள் நிறைந்த தோட்டத்தின் பின் பக்க கதவை திறந்து தன் தங்கையை தப்பிக்க விட்டவள்,
“ஏய்...” என்று அதிகார குரலில் அடித்து பிடித்துக் கொண்டு ஓடினாள்.
“சார்..” என்று வந்து நின்றவளை மேலிருந்து கீழாக பார்த்தான் தாயாகரன். பெயரில் மட்டும் தான் தயவு. ஆனால் அவனது குணம் அதற்கு நேர் மாறாக அரக்க குணம் நிறைந்தவானாக இருந்தான்.
“சார்” என்று நெற்றியில் வடிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு நின்றவளை அடி கண்களால் அளந்துப் பார்த்தான். அவனது பார்வையில் தேகம் மொத்தமும் கூசிப் போனது. அவன் முன்பு நிற்கவே வெறுப்பாய் வந்தது.
ஆனாலும் கால்களை நிலத்தில் ஊன்றிக் கொண்டு அசையாமல் அவன் முன்பு நின்று இருந்தாள் தயாழினி.
“என்னடி ரொம்ப வேர்க்குது.. எனக்கு தெரியாம தப்பு எதுவும் செஞ்சியா?” கேட்டுக் கொண்டே கையில் இருந்த ஸ்காட்ச் பாட்டிலை வாயில் சரித்தான்.
அவான் அப்படி கேட்கவும் தூக்கிவாரிப் போட்டது.
“அய்யய்யோ அப்படி எல்லாம் எதுவும் இல்ல சார்... உங்களை மீறி என்னால என்ன தப்பு செய்ய முடியும். அடுப்படியில நின்னதுல கொஞ்சம் வேர்த்து இருக்கும் சார்... மத்தபடி வேற ஒண்ணும் இல்ல” என்றவள் வழிந்த வியர்வையை முந்தானையில் துடைத்துக் கொண்டாள் அழுத்தமாக.
“அப்படியா? நீ சொன்னா சரியா தான் இருக்கும்..” என்றவன், இருக்கையில் இருந்து மெல்ல எழுந்தவன்,
“ஆமா அடுப்படியில எனக்காக என்ன செஞ்ச.. பேப்பர் சிக்கெனா?” என்று கேட்டான்.
“அது... அது.. முட்டை செஞ்சேன் சார்” என்றாள் தடுமாற்றமாக.
“அப்படியா சரி போய் எடுத்துட்டு வா” என்றான் நிதானமாக.
“ஐயோ சாவடிக்கிறானே” மனதுக்குள் புலம்பிக் கொண்டே அடுப்படிக்கு சென்றவளின் உடல் பயத்தில் உதறல் எடுத்தது.
“கடவுளே அவன் எதையும் கண்டு பிடிச்சுட கூடாது... உனக்கு புண்ணியமா போகட்டும்” என்றவள் வேக வேகமாய் அடுப்பை பற்ற வைத்து கல்லை வைத்தவள் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றிய நேரம் அவளின் காதோரம் அவனின் மீசை முடி உரசியது.
அடி மனம் வரை அருவெறுத்துப் போனாள். ஆனாலும் நூல் அளவு கூட நகராமல் அப்படியே நின்று இருந்தாள். லேசாக நகர்ந்தாலும் அவனின் அடுத்த மூவ் எப்படி இருக்கும் என்று அவளால் கணிக்கவே முடிந்து இருக்கவில்லை இங்கு வந்த நாளில் இருந்து. ஆனால் தண்டனை மட்டும் பாராபட்சம் இல்லாமல் அவள் யோசித்துக் கூட பார்க்காத வகையில் இருக்கும். அதனால் அசையாமல் அப்படியே நின்று இருந்தாள்.
“ஆம்ப்லேட் போட்டன்னு சொன்ன.. இங்க வந்து பார்த்தா இப்ப தான் போட்டுட்டு இருக்க” என்றவன் மீது இருந்து வந்த மது வாடை உமட்டிக் கொண்டு வந்தது. வாயை திறந்தாள் நிச்சயம் வாந்தி எடுத்து விடுவாள் என்பதால் வாயை திறக்கவே இல்லை.
அவள் பதில் எதுவும் சொல்லாமல் போகவும் மெல்ல மெல்ல அரக்க அவாதாரம் எடுக்க ஆரம்பித்தான் தயாகரன்.
அடுப்படிக்கு முன்னாள் நின்று கொண்டு இருந்தவளின் கையை முரட்டு தனமாக பிடித்து தன் பக்கம் திரும்பியவன்,
“நான் பேசுனா மதில் பேசன்னும்டி” என்று அவளின் தாடையை இறுக்கிப் பிடித்தான். அதில் இரு பக்க கன்னமும் வலி எடுக்க, கண்கள் கலங்கிப் போனது.
“இந்த திமிரு டேஷேல்லாம் என் கிட்ட காட்டிட்டு இருந்த தொலைச்சு கட்டிடுவேன்.. இன்னும் என்னை பத்தி முழுசா மேடம்க்கு தெரியலையோ... அப்போ தெரிய வச்சுடலாமா?” கேட்டவனின் கேள்வியில் அதிர்ந்துப் போனவள், வேகமாய் இரு பக்கமும் தலையை மட்டும் ஆட்டினாள். வாய் தான் அவன் வசம் இருக்கிறதே பிறகு எங்கிருந்து வாயை திறந்து பதில் பேசுவது. அதனால் தலையை ஆட்டி வேகமாக மறுத்தாள்.
“அவ்வளவு பயம் இருக்கிறவ எதுக்குடி பதில் சொல்லாம இருந்த” என்ற நேரமே அவள் வாமிட்டிங் வருது என்று சைகை செய்ய,
“நடிக்கிறியாடி?” கண்களில் அடர் சிவப்பு படிந்தது அவனுக்கு. அதை கண்டவளுக்கு நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது பயத்தில்.
“இல்ல...” என்று கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
“அப்போ இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த?” என்று மீண்டும் கேட்டான். அவன் கேட்க கேட்க இவளுக்கு பயம் கூடிக் கொண்டே போனது.
அவள் பதில் பேசுவதற்காக அவளின் இருபக்க கன்னத்தில் இருந்தும் விரல்களை எடுத்தான். ஆனால் அவளுக்கு தான் வாய் பசை போட்டு ஒட்டியது போல ஒட்டிக் கொண்டது.
உண்மையை மட்டும் அவனிடம் சொன்னால் அவ்வளவு தான் ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் சங்கு ஊதி விடுவான் பாவி.
அதனால் அவள் எதுவும் பேசமால் அப்படியே நின்று இருந்தாள்.
அவளின் அழுத்தத்தை பார்த்து மெல்ல சிரித்தவன், அவளின் நீண்ட கழுத்தை விரல்களால் லேசாக வருடியபடியே தொண்டையை பிடித்தான். அதில் திகைத்துப் போய் அவனை பார்த்தாள்.
அவளுக்கு வலிக்கும் அளவுக்கு எல்லாம் பிடிக்கவில்லை. ஆனால் அழுத்தி பிடித்து விடுவானோ என்று பயத்தில் அவளை உழல விட்டான். ஏனெனில் இதற்கு முன்பு பல முறை அவனின் ஐந்து முரட்டு விரல்களும் அவளின் தொண்டையை அழுத்தி பதம் பார்த்து இருக்கிறதே... அதனால் தானாகவே பயம் வந்து ஒட்டிக் கொண்டது அவளுக்கு.
“சீக்கிரம் ஆம்லேட் எடுத்துட்டு வா.. கொலை வெறியில இருக்கேன்” என்றான். அவள் திகைத்துப் போய் பார்க்க,
“கொலை பசியில இருக்கேன்” என்று கண்ணடித்து விட்டு போனவனை கண்டு கொஞ்சம் கூட நிம்மதியே எழவில்லை. ஆனால் தங்கை இங்கே இல்லாததை அவன் கண்டு பிடிக்கவில்லை. அதுவரை மகிழ்ச்சி என்று எண்ணிக் கொண்டவள்,
வேக வேகமாய் முட்டையை போட்டுக் கொண்டு மேலே அவனது அறைக்கு சென்றாள்.
போகும் பொழுதே இன்றைக்கு என்ன ஏழரையை கூட்டுவானோ என்று பயந்து பயந்துப் போனாள். தினம் தினம் ஒரு சம்பவம் செய்வான்.
தன் தலைவிதியை எண்ணிக் கொண்டே படி ஏறியவள் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அங்கே அவளின் முதல் தங்கை இந்த வீட்டை விட்டு தப்பித்து போகும் காட்சி மிகப்பெரிய எல்டி டிவியில் ஓடிக் கொண்டு இருக்க அப்படியே கல்லாய் சமைந்து நின்று விட்டாள் தயாழினி.
விழிகள் ஏகத்துக்கும் பயத்தில் சிவந்துப் போனது அவளுக்கு. நாக்கு வறண்டுப் போனது. இப்பொழுதே மரணம் வந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும் என்ற அளவுக்கு எண்ண வைத்து விட்டான்.
“வாங்க மிஸ் தியாகி அம்மையாரே...” என்று ஏளனமாக அவளை வரவேற்றவன்,
“படம் செம்ம கிளியர்ல.. சுட சுட வந்துச்சு.. வா ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்கலாம்” என்றான் ஏளனமாக.
அவள் உயிர் உறைந்துப் போய் அவனை பார்த்தாள்.
“வாடி...” என்று ஆங்காரமாய் அவளின் கையை பிடித்து தன் அருகில் அமரவைத்து அவளின் தோளில் தன் முரட்டு கரத்தை போட்டு அழுத்திப் பிடித்துக் கொண்டான்.
அதில் அவளுக்கு வலி உயிர்ப்போனது. அதை சொல்லக் கூட முடியாமல்,
எச்சில் விழுங்கி தன் வேதனையை அடக்கிக் கொண்டவள்,
“ப்ளீஸ் சார்... என் தங்கச்சியை மட்டும் விட்டுட்டுடுங்க... உங்களுக்கு புண்ணியமா போகும்.. அவ சின்ன பிள்ளை. அவ வாழ வேண்டிய பிள்ளை” என்று பயத்துடன் கெஞ்சியவளை இதழ் வளைத்து சிரித்தவன்,
“அப்போ உன்னை எனக்கு குடு” என்றான்.
“சார்” என்று அவள் அதிர,
“நானும் இங்க வந்ததுல இருந்து உன்னை கேக்குறேன். நீ கற்பு கண்ணகின்னு டைலாக் விட்டுட்டு இருக்க.. சோ இது நல்ல சான்ஸ்.. உன் தங்கச்சியை நான் விடணும்னா எனக்கு நீ வேணும்... நீயாவே உன்னை தரணும்” என்றான் மோகத்தில் விழிகள் சிவக்க.
அவன் கேட்டதில் மொத்த தேகமும் அதிர்ந்துப் போனது தயாளினிக்கு.
“சார்” என்று அவள் அழ,
“ப்ச்.. முடிவு உன்னோடது.. இஷட்டம் இருந்தா வா. இல்லன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல. உன் தங்கச்சி இன்னும் இந்த ஊர் எல்லையை தாண்டி இருக்க மாட்டா.. இப்பவே என் ஆளுங்களுக்கு போன் போட்டா போதும். உன் தங்கச்சியை மூட்டை கட்டிட்டுட்டு வந்திடுவாணுங்க” என்றான்.
“ஐயோ சார்.. ப்ளீஸ்.. அப்படி மட்டும் செய்துடாதீங்க...” என்று அவனை கை எடுத்து கும்பிட்டாள்.
“ப்ச் நான் என்ன சாமியா? எதுக்கு என்னை பார்த்து கும்பிடுற.. நான் ஆசாமிடி.. உன்னை குடு போதும்..” என்றான் நக்கலாக.
“சார்” என்று அவள் கதற, அவளின் கதறலை பார்த்து போனை கையில் எடுத்தான். அதில் இன்னும் கதறியவள், வேகத்துடன் அவனது போனை வாங்கி சோபாவில் வீசியவள் தன்னையே வெறுத்து அவனின் முன்பு தன் முந்தனையை விலக்கி நின்றாள் தயாழினி.
ஓ நோ.....என்ன ஆரம்பமே இப்படி😳😳😳😳😳
யாழினி பாவம்🥺🥺🥺🥺🥺
ஏன் இப்படி????