அதிகாலை நேரம் சதி தன் மூச்சு காற்றால் தன்னவனை மிக தீவிரமாக எழுப்பிக்கொண்டு இருக்க, குருவோ அவளை இழுத்து தன் மீது கிடத்தி இறுக அணைத்துக் கொண்டவன் அவளது சீண்டலில் வன்மையாகவே தன்னுடைய தேடலை அவளிடம் தொடங்கினான்...
அவனது தேடலில் சின்ன ஊடல் கொண்டாலும் முழுதாகவே தன்னை அவனுக்கு கொடுத்து அவனை தன்னுள் வாங்கிக்கொண்டாள்.
நிறைவான மன நிலையில் சதியின் நெற்றியில் இதழ் பதித்து அவளை பார்த்தான் காதலாக... அந்த நேரம் தலையணைக்கு அடியில் இருந்த சின்ன பொருளை அவனுக்கு காட்டினாள்.
அதை பார்த்தவனுக்கு கண்கள் இரண்டும் கலங்கிக்கொண்டு வந்தது...
“ஹேய்... நிஜமவாடி...” நெகிழ்ந்து போய்க் கேட்டான்.
அவனது நெகிழ்வை மகிழ்வுடனும் அன்புடனும் பார்த்தவள்,
“ஆமாங்க...” என்றாள் முகத்தில் ஏறிய சிவப்புடன்.
“ஓஹோஒஒஓ...” என்று உற்சாகத்தில் கத்தியவன் இன்னும் இறுக அணைத்துக்கொண்டான் சதியை.
அவனது உற்சாகத்தை கண்ட சதிக்கு அவ்வளவு காதல் பிறந்தது அவன் மீது...
“வீட்டுல சொல்லிட்டியா...?” அவள் சொல்லி இருக்க மாட்டாள் என்று அறிந்தும் கேட்டான்...
“ம்ஹும்... முதல்ல உங்கக்கிட்ட அதுக்கு பிறகு தான் மத்தவங்க கிட்ட...” என்றவளை காண காண காதல் அலை கடல் போல திரண்டு வந்தது...
“இந்த அன்பு தாண்டி உன்கிட்ட என்னை பைத்தியமாக்குது...” என்று உணர்வின் மிகுதியில் அவளின் இதழ்களை சிறை செய்து காவியம் படிக்க தொடங்க,
ஓரளவு அவனை அனுமதித்தவள்,
“போதும் காலையில ஏற்கனவே ஒரு கோட்டா முடிச்சுட்டீங்க... இதுக்கு மேல நோ...” என்றவள் அவனை குளிக்க அனுப்பி விட்டு கீழே வந்து அவனுக்கு காபி எடுத்துக்கொண்டு மேலே வந்தாள்.
சின்ன ஏமாற்றம் என்றாலும் அவளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு புன்னகையுடன் குளிக்க சென்றான்.
காபி எடுத்து வந்தவளை பின்னோடு அணைத்துக்கொண்டவனுக்கு ஏனோ இன்று முழுதும் அவளை தன் கைக்குள்ளே வைத்துக்கொள்ள முரண்டியது...
“இன்னைக்கு ஏதும் ஸ்பெஷல் வொர்க் இருக்கா..?” என்றபடி அவளது ஈரமான கூந்தலை இடது கழுத்தில் போட்டுவிட்டு, வலது புறம் தன் முகத்தை புதைத்துக்கொண்டு கேட்டான்.
அதில் சதிக்கு கூச்சம் ஏற்பட்டது... ஆனாலும் அடக்கிக்கொண்டு வலது கை கொண்டு அவனது சிகையை கோதிய படியே..
“இல்லை...” என்றாள்.
ஒரு கரம் அவளது இடையின் மென்மையை சோதித்து விட்டு, தன் மகவு குடிக்கொண்டு இருக்கும் அவளது வயிற்றை தடவி விட்டுக்கொண்டு இருக்க, அதில் ஏற்படும் உணர்வுகளை அடக்க முடியாமல் தடுமாறி தான் போனாள்.
“ஆமா எதுக்கு கேக்குறீங்க...” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்.
“அப்போ இன்னைக்கு கலைக்கூடத்திற்கு விடுப்பு விடலாமா...?” என்றபடியே அவளது வெற்று தோளில் இதழ் பதிக்க,
“ஹும்....” ஏதோ முணகியவள் பின் சுதாரித்து,
“ஏன்...?” என்று கேட்டாள்.
அவளது ஒரு நிமிட தடுமாற்றம் ஆணவனை கர்வம் கொள்ள வைக்க, சற்று அழுந்தி அவளது தோளை ஒரு கடி கடித்தவன், சட்டென்று இரு கையாளும் அவளை தூக்கிக்கொண்டான்.
“இதுக்கு மேல ஒரு நொடி கூட என்னால வெயிட் பண்ண முடியாதுடி...” என்று சன்னல் திரை சீலையை இழுத்து விட்டவன், கட்டிலில் அவளை கிடத்தி தன் தேடலை தொடங்கினான்...
அப்படியே சற்று எட்டி தன் போனை எடுத்து,
“ராக்கி டுடே ஹோல் ஸ்டுடென்ட்ஸ் அண்ட் மாஸ்டர்ஸ் அத்தனை பேருக்கும் லீவ்... ரிகசல் எல்லாமே நாளைக்கு பார்த்துக்கலாம்னு சொல்லி கன்வே பண்ணிடு... குயிக்...” என்று வைத்துவிட்டவன் தன்னையே ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டு இருந்த சதியை கண்டுக்கொள்ளாமல், தன் வேலையை தொடர,
அவனை தொடர விடாமல்,
“இப்போ என்ன ஆச்சுன்னு சார் இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க...” சிரிப்புடன் கேட்டாள்.
“ஏதோ ஆச்சு... ஜஸ்ட் லீவிட் சதி..” என்றவன் அவளை அன்று முழுவதுமே விடவில்லை...
காலை உணவை உண்டுவிட்டு கலைக்கூடத்திற்கு அழைத்து வந்தவன், தன் கை பிடியிலே அவளை வைத்துக்கொண்டான்...
அவனது நடவடிக்கையை கண்ட சதி,
“நீங்க நார்மலாவே இல்ல மாமா... நிஜமா சொல்லுங்க என்ன ஆச்சு... எதுக்கு ஓவரா இப்படி எக்சைட் ஆகுறீங்க...” அவனது கண்களோடு கண்களை கலக்க விட்டு கேட்டாள்.
அவளது கண்களை ஆழ பார்த்தவன்,
“ஏன்னு சொல்ல தெரியல சதி... ஆனா நீ என் கைக்குள்ளே இருக்கணும்னு தோணுது.. உன்னை விட்டு ஒரு நொடிக்கூட பிரிய முடியல.. என்னவோ ஏதோன்னு மனசு அடிச்சுக்குது... இதை உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல... உன் கவனம் முழுசும் நான் மட்டுமே இருக்கணும்னு வெறியாகுது...”
“நாம விரிச்சி படுத்து இருந்த போர்வையை நீ மடிச்சி வைக்கிறத கூட என்னால தாங்க முடியல... அந்த நேரம் கூட நீ என்னை பார்க்கனும்னு தோணுதுடி...”
“பச்சையா சொல்லுட்டா...? என் இமை கூட எனக்கு தூரோகம் செய்யிற மாதிரி இருக்கு உன்னை பார்க்கும் போது... இதை தான் கவிஞகர்கள்
‘இமை கூட சுமையாகும் உன்னை பார்க்கும் நேரம்னும்’,
‘இமைகள் இரண்டும் நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்னு’ எழுதி வச்சு இருக்காங்க போல...”
“நிஜமா காண்டாகுதுடி... நமக்கு இடையில வர்ற காத்து கூட எனக்கு வில்லனா தான் தெரியுறான்...” என்று ஒரு வித தவிப்புடன் தலையை அழுந்த கொத்திக்கொண்டு சொன்னவனின் காதலை உடல் சிலிர்க்க உணர்ந்தவள்,
“எனக்கும் பல நேரம் அப்படி தான் தெரியுது...” முணகியவள்,
“நான் அந்த காத்து கூட வேணான்னு தான் சொல்றேன்...” என்று முகம் சிவக்க சொல்லிவிட்டு எழுந்து செல்ல, ஒரு கணம் தன் காதுகளை நம்ப முடியாமல் திகைத்தவன், அதன் பின் அவள் சொன்ன வரிகளின் ஆழம் புரிய,
“ஏய்...” கண்கள் மின்ன தாவி போய் அவளை இழுத்து நிறுத்தியவன்,
“என்னடி சொன்ன... இன்னொரு முறை சொல்லு...” என்று ஆர்வத்துடன் கேட்டவனை தீவிரமாக பார்த்து,
“எனக்கும் நீங்க உணர்ற உணர்வுகள் எல்லாம் இருக்குன்னு சொன்னேன்...” என்றவள், அவனது முகத்தை தன் இரு கைகளாலும் தாங்கியவள்,
“என் மனசு முழுசும் கொஞ்சம் கூட இடமே விடாம முழுசும் நிரம்பி இருக்கீங்க மாமா... ஊசி முனையளவு கூட வெற்று இடம் இல்லை...” என்று சொன்னவளின் காதல் குருவை அதிகம் நெகிழ செய்ய... தன் நெஞ்சோடு இறுக அணைத்துக்கொண்டான்.
“என்னோட மனசுலயும் நீ அப்படி தான்டி இருக்க... என்னவோ மனசெல்லாம் சொல்லாத சில உணர்வுகளின் பிடியில இருக்கு... உன்னை தவிர வேற எதையும் என்னால யோசிக்க கூட முடியாத அளவுல இருக்கேன்... உன் பார்வை என்னை தீண்டிக்கிட்டே இருக்கணும், உன் மூச்சு காத்து என் மேல பட்டுக்கிட்டே இருக்கணும், உன் உடல் என்னை உரசிக்கிட்டே இருக்கணும் அப்படின்னுல்லாம் இருக்கு...” என்றவன் சிறு மௌன இடைவேளைக்கு பிறகு,
“இது வெறும் படுக்கையோட சம்மந்தப்படுத்தாதடி....” என்று தவிப்புடன் சொன்னவனின் உணர்வுகளை முழுமையாக உள் வாங்கியவள்,
“ச்ச என்னங்க இப்படி பேசுறீங்க... இது காமம் இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும்... உங்கள மாதிரி தான் உங்க நினைப்புல தானே நானும் இருக்கேன்... எனக்கு தெரியாதா...?”
“அப்புறம் எப்படி உங்களை மட்டும் நான் தவறா நினைப்பேன்... காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் எனக்கு நல்லாவே தெரியும்... வெறுமென உரசிக்கிட்டு இருக்குறதெல்லாம் காமத்துல சேராதுங்க... என்னோட ப்ரெசென்ட்டை நீங்க உணரனும் அது தானே நீங்க பீல் பண்றீங்க... இதுக்கெதுக்கு இவ்வளவு தவிப்பு...” என்றவள் விரும்பியே அவனை இன்னும் இறுக அணைத்துக்கொண்டாள்.
தன்னை சரியாக புரிந்துக்கொண்டவளின் அன்பை எண்ணி மகிழ்ந்தவனுக்கு வேறு எதுவும் வேண்டாம் என்றே தோன்றியது... அதன் பின்பு மௌனம் மட்டுமே குடி இருந்தது...
நூலிழை கூட இடைவெளி இல்லாமல் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு பிணைந்தே இருந்தார்களே தவிர அங்கு வேறு எந்த சில்மிசமும் இல்லை...
அப்படியே இருந்தார்கள் மத்தியம் வரை... அதன் பின் வீட்டில் இந்த விஷயத்தை எப்பொழுதும் சொல்லலாம் என்று கேட்டாள்.
“இன்னைக்கு வேண்டாம்.. இன்னைக்கு முழுசும் இப்படியே இருக்கலாம்... நாளைக்கு வேணா சொல்லிக்கலாம்...” என்றவன் அவளை மெல்ல உணர ஆரம்பித்தான்...
அதன் பின்பு அன்றைய இரவு பொழுதும் அங்கேயே தங்கியவர்கள் அடுத்த நாள் காலையில் மருத்துவரிடம் சென்று உறுதி பண்ணிக்கொண்டு வீட்டில் இருந்த அனைவருக்கும் சொன்னார்கள்.
இதில் தீபாவிற்கு தான் அதிக சந்தோசமாய் இருந்தது... அவளுக்கு கண்களே கலங்கிவிட்டது...
“ரொம்ப சந்தோசமா இருக்கு சதி... இன்னும் எட்டு மாசம் எப்படி போகும்னு இருக்கு... இப்பவே குழந்தையை கொஞ்சனும்னு ஆசையா இருக்கு...” என்று சொல்லி அவளது சுருங்கிய கைகளால் சதியின் வயிற்றை தடவி பார்த்தாள்.
அவளது அன்பும் ஆசையும் எல்லோரையும் நெகிழ செய்தது...
அதன் பின் அதிக நேரம் சதியோடே இருந்தாள் தீபா. அவள் கூட இருக்கவும் குருவால் சதியுடன் அதிக நேரம் இருக்க முடியாமல் போனது... அதில் குரு ஒரு மாதிரி ஆகிப்போனான்...
அதை வெளிக்காட்டிக்கொள்ள வில்லை என்றாலும் அவன் உள்ளுக்குள் அதிகமாய் உடைந்து போனான்.
சதிக்கு அவனது உணர்வுகள் புரிந்தாலும் தீபாவின் நெருக்கத்தால் அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
கருவுற்றதால் கலைக்கூடத்திற்கும் போக வேண்டாம் என்று சொல்லி விட குருவிற்கு மூச்சு முட்டி போனது தனிமை கண்டு...
தீபாவிற்க்கே உடம்பு சரியில்லை. இதில் சதியையும் அவள் கவனித்துக்கொண்டது அனைவருக்குமே ஆச்சர்யமாய் போனது.
மருத்துவருமே வியந்து தான் போனார்... “இவரை இப்படியே இருக்க விடுங்க... அப்போது தான் தன்னோட வலிகள் எதுவும் தெரியாது அவங்களுக்கு...” என்று சொல்லிவிட பெரியவர்களும் எதுவும் சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.
இரவு பொழுதும் பாதி நாட்கள் தீபாவிடமே தூங்கி போனாள் சதி.. காலையில் எழுந்துக்கொள்ள முடியாமல் மசக்கை வேறு அவளை பாடாக படுத்தியது...
முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது குருவிற்கு... அதன் பின் அந்த கஷ்டம் வலியாகி போனது. அந்த வலியே சதியின் மீது கோவத்தை விதைக்க போதுமானதாய் இருக்க... அளவுக்கு அதிகமாய் அவள் மீது கோவம் வந்தது...
ஆனால் சதியால் தனன்வன் மீது கோவம் கொள்ள முடியாமல் அவன் படும் வேதனையை புரிந்துக்கொண்டவள் தன் மசக்கையை ஓரம்கட்டி விட்டு அவனுக்கு காலையில் காபியை கொண்டு போய் கொடுத்தாள்.
காலை ஏழுமணிக்கே கலைக்கூடத்திற்கு கிளம்பியவனின் முன் காபியை நீட்டினாள் சதி. அவளையும் காபியையும் ஒரு பார்வை பார்த்தவன் விருட்டென்று விலகிச் சென்றான்..
அவனது விலகளை தாங்க முடியாமல் “மாமா...” என்று அழைத்தாள் அவனை நிறுத்தும் விதமாக.
நின்றானே தவிர திரும்பி கூட பார்க்கவில்லை அவளை. அதிலே அவனது கோவத்தின் அளவு புரிய,
“காபியாவது குடிக்கலாம்ல... நீங்க வீட்டுல சாப்பிட்டு மூணு மாசமாச்சு மாமா...” என்று தவிப்புடன் சொன்னவளை திரும்பி கூர்மையாக பார்த்தவன், ஏளனமாய் சிரித்தான்.
“அது உனக்கு இப்போ தான் தெரியுதா...?” உதாசீனத்துடன் கேட்டவனை கண்கள் கலங்க பார்த்தவள்,
“அப்படி இல்ல மாமா...” தன்னை விளக்க முயல,
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே...?” அதிக ஏளனத்துடன் கேட்டவனுக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றாள் விழிகளில் தேங்கிய கண்ணீருடன்.
ரொம்ப possessive வா இருக்கான் குரு....