எடுத்து வந்த பாதாம் கீரை குடிக்காமல் போன தென்னவன் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது வினோதினிக்கு.. அதை காட்ட கூட விடமால் அவனின் அறைக்குள் சென்று விட தன் ஆத்திரத்தை பக்கோடா கொண்டு வந்த தாயிடம் காண்பித்தாள்.
“விடுடி.. இந்த முறை வேணா வீம்புக்கு போகலாம். ஆனா அடுத்த முறை உன் கிட்ட மயங்கி தான் ஆகணும்.. நீ கொஞ்சம் ஸ்லீவ்லெஸ் போட ஆரம்பிடி.. எப்படியும் பொண்டாட்டி ருசி காட்டி இருப்பா. இப்ப தான் அவ இல்லையே. அதனால கண்டிப்பா உன் கிட்ட கவிழ்ந்து விடுவான்” என்று தாய் யோசனை குடுக்க, அதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த தமிழுக்கு பெட்ரோலை ஊத்தி தீ வைத்தது போல இருந்தது.
ச்சீ.. என்று கடுப்பாகி முகத்தை சுளித்து விட்டு போய் விட்டாள்.
அடுத்த நாள் காலையில் அலுவலகத்தில் தென்னவனை வைத்து செய்து விட்டாள்.
“என்ன வேலை செய்யுற நீ எல்லாம்.. இதுல பத்து வருடம் பதினஞ்சு வருடம் எக்ஸ்பீரியன்ஸ்னு ரெக்கமெண்டேஷன் வேற உன் மாமனார்... ஆனா ஒரு வேலைக்கும் லாயக்கு இல்ல...” என்று சரமாரியாக திட்டிக் கொண்டே இருந்தாள்.
தென்னவனும் பொறுத்துப் போனான். மத்திய உணவுக்கு கூட அவனை விடாமல் வேலை பிழிந்து விட்டாள். கூட இருந்த பணி பெண்ணுக்கு கூட தென்னவன் படும் அவஸ்த்தையை கண்டு பரிதாபம் தோன்றியது.
ஆனால் தமிழ் மட்டும் இலகவே இல்லை. மத்திய உணவுக்கு பிறகு அவள் இன்னும் உக்கிரமாய் மாறிப்போனாள்.
“சம்பளம் மட்டும் வாங்குனா போதாது. அதுக்கு தகுந்தார் போல வேலையும் செய்யணும்... வீட்டோட மாப்பிள்ளைன்னு ரொம்ப தான் சலுகை எடுத்துக்க வேண்டியது. ஆனா எல்லாத்துலையும் ஓ ப்ளஸ்.. ஒரு வேலையில திருத்தம் இருக்கா.. இப்படி இருந்தா எப்படி உன்னை வேலையில வச்சுக்குறது..” ஏக வசனத்தில் வேறு பேசினாள்.
“வேலையிலையே திருத்தம் இல்ல. இதுல இன்னொரு கல்யாணம் பண்ணி எப்படி தான் குடும்பம் நடத்த போறியோ.. அதும் அவ செய்யிற செலவுக்கு நீ பிச்சை தான் எடுக்கணும்” என்று இன்னும் அவள் கேவலமாக பேச, தென்னவன் நெற்றியை நீவி விட்டான் இரு விரலால்.
அப்பொழுதும் அவன் எதுவுமே பேசவில்லை. அமைதியாக தான் போனான். ஆனால் அடுத்து அவள் வீசிய சொல்லில் பொங்கி எழுந்து விட்டான் தென்னவன்.
“உனக்கென்ன சுகம் கிடைச்சா போதும்னு அவ குடுக்குற சுகத்துக்கு மயங்கி அவ கேட்கிற பொருளை பிச்சையா எடுத்து கூட குடுப்ப” என்ற நேரம் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான்.
முகம் அநியாத்துக்கு சிவுசிவுத்துப் போனது தென்னவனுக்கு.
“உன்னோட லிமிட்ல இருந்துக்க... இல்ல அவ்வளவு தான்.. வாங்கி கட்டிக்குவடி” அடிக்குரலில் எச்சரித்தான்.
கன்னத்தில் வாங்கிய அடியில் விழிகள் நீரில் மின்னியது. ஆனாலும் அதை அடக்கி விட்டு அடிபட்ட பாம்பாய் சீறி அவன் முன் நின்றாள்.
“இப்ப ஒரு அறையோட விட்டேன்.. இதுக்கு மேல என்னோட பெர்சனல் பேசுன சாவடி அடிச்சுடுவேன்டி” என்றான்.
“அப்படி தான்டா பேசுவேன்.. அவ என்னவோ உன்னை மயக்க அரைகுறை உடையோட இன்னைக்கு டார்கெட் பண்றேன்னு நின்னுட்டு இருக்கா.. நீயும் மயங்கி தானே போவ... அப்போ அப்படி தான்டா பேசுவேன்” என்றவளை முறைத்தவன்,
“லூசாடி நீ... எனக்கு அவளை கட்டி வச்சா இதெல்லாம் இயல்பா நடக்கும்... அதுக்கு தான் அப்பன் மவ ரெண்டு பேரும் ஆளா பறக்குறீங்களே.. அப்புறம் எதுக்கு இவ்வளவு கோவம்” என்றான்.
கன்னத்தை பொத்திக் கொண்டு அவனை பார்த்தவள்,
“அப்படி தான்டா கோவாப்படுவேன்... இன்னொரு முறை அவ நிழல் உன் மேல பட்டுச்சு... சாவடுச்சுடுவேன்” என்று மிரட்டினாள்.
“யார என்னையவா இல்லை அவளையா?” நக்கலாக கேட்டான்.
“அவளோட சேர்த்து உன்னையும் தான்டா” என்றவள் தன் இருக்கைக்கு போய் அமர்ந்துக் கொண்டாள்.
அவளின் ஒரு கன்னம் பன் மாதிரி வீங்க ஆரம்பித்தது. அதை பார்த்து பெருமூச்சு விட்டவன், எழுந்து போய் ஒரு மருந்தை கொண்டு வந்து அவளிடம் நீட்டினான்.
“தேவையில்ல.. உன் அக்கறை கூந்தலை எல்லாம் அவ கிட்டயே வச்சுக்க” என்று எரிந்து விழுந்தாள்.
“ஏய்.. இன்னைக்கு முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இருக்குடி.. இப்படியே போனா கேவலமா இருக்கும்.. அப்புறம் உன் விஷ்” என்று டேபிளில வீசிவிட்டு தன் இருக்கைக்கு போய் அமர்ந்து விட்டான்.
கடுப்புடன் அவனை பார்த்தவள் போடா... என்று விட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
ஆனால் ஒரு பக்கத்து கன்னம் அதிகமாக வலி எடுக்க ஆரம்பித்தது. சுரீர் என்று வலிக்க தொடங்க, அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் மெல்ல மெல்ல அவளின் கன்னத்தில் இறங்கியது.
அதை துடைக்க கூட இல்லாமல் தன் வேலையை அவள் மும்மரமாக பார்க்க, எதார்த்தமாக நிமிர்ந்து அவளை பார்த்த தென்னவனுக்கு அவளின் கன்னத்தில் இறங்கிய கண்ணீரை கண்டு வேதனை கொண்டவன்,
“அப்படி என்னடி உனக்கு பிடிவாதம்” என்று கேட்டுக் கொண்டே அவளை நெருங்கியவன், மருந்தை எடுத்து அவாளின் கன்னத்தில் போட வர,
அவனது கையை பற்றிக் கொண்டவள் நிமிர்ந்தது அவனை பார்த்தாள். தென்னவன் அவளது கண்களை தான் ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனது பார்வையில் முகத்தை திருப்பிக் கொள்ள பார்க்க, அவளின் மோவாயை பற்றி தன்னை பார்க்க வைத்தவன்,
“ஏன்டி இப்படி இருக்க?” வேதனையுடன் கேட்டான்.
“எல்லாம் உன்னால தான்டா” என்று அவனை விட்டு விலகி எழப் பார்க்க, அவாளை மீண்டும் சீட்டில் அமர்த்தியவன் அவளை நோக்கி குனிந்தான்.
இவள் பக்கவாட்டில் முகத்தை திருப்பிக் கொள்ள,
“ப்ச் கன்னத்தை காட்டுடி... ரொம்ப வீங்கி இருக்கு.. கை அச்சு அப்படியே இருக்கு” என்று வலுக்கட்டாயமாக அவளின் முகத்தை பிடித்து தன்னை பார்க்க வைத்தவன், மருந்தை எடுத்து அவளின் கன்னத்தில் போட்டு விட்டான்.
அவனது தொடுகையில் தானாகவே கண்களை அழுத்தாமாக மூடிக் கொண்டாள். அவளின் மயக்க நிலையை கண்டு பெருமூச்சு விட்டவன் அவாளின் முகத்தில் வந்து விழுந்த முடி கற்றைகளை எடுத்து காதோரம் சொருகி விட்டவன், அவளின் கன்னத்தில் வாயை குவித்து ஊதி விட்டான்.
அந்த செயலில் பட்டென்று கண்களை விழித்தாள் பெண்ணவள்.
அவளின் பார்வையை பார்த்தவன், “சீக்கிரம் சரி ஆகிடும்டி” என்றான்.
“உன்கிட்ட கேட்டனா?” என்று கேட்டவள் அவனை விட்டு எழுந்து நிற்க, இவனும் நிமிர்ந்து நின்றான்.
“என்ன தான்டி பிரச்சனை? நீயும் மருந்து போட மாட்ட, நானும் மருந்து போடக் கூடாது. ஆனா வலியோட அழுதுட்டு இருப்ப அப்படி தானே..” பொறுமையாவே கேட்டான்.
“ப்ச்” என்றவள், அறையை விட்டு வெளியே போக,
“மீட்டிங் நான்கு மணிக்கு” என்றான்.
“மூணு அம்பதுக்கு ஞாபகப் படுத்து” என்றாள் திமிராக.
“கொழுப்புடி” என்றவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். கிளைன்ட் மீட்டிங்கை தங்களது அலுவலகத்திலே ஏற்பாடு செய்து இருந்தான் தென்னவன்.
வருகிறவர்களின் மாடியூல்சை அக்செப்ட் பண்றதா இல்லையா என்பதற்கு தான் இந்த மீட்டிங். ஏற்கனவே அவர்கள் அனுப்பிய மாட்யூல்ஸை பத்தின குறிப்புகளை எடுத்து வைத்து இருந்தான்.
அதை எல்லாம் சரி பார்த்துக் கொண்டு இருந்த நேரம், குழந்தை அழ ஆரம்பித்து இருந்தான். பட்டென்று அவனது கை செய்துக் கொண்டு இருந்த வேலையை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்க்க,
திறந்து இருந்த கதவின் வழியே குழந்தையை பார்க்க முடியுமா என்று அவன் விழிகள் தேட ஆரம்பிக்க, சரியாக அந்த நேரம் தமிழ் உள்ளே நுழைந்தாள்.
“எப்படி தான் பிள்ளை அழறது இவளுக்கு தெரியுமோ தெரியல.. சரியா வந்திடுறா.. பிள்ளையை கண்ணுல கூட பார்க்க விட மாட்டிக்கிறா” என்று முணுமுணுத்துக் கொண்டவன் தன் வேலையில் கவனமானான்.
அவனை ஒரு முறை முறைத்து விட்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். அவளது முறைப்பில் கடுப்பானவன்,
“ராட்ச்சசி” என்று அவளை திட்டிவிட்டு முழுமையாக தன் கவனத்தை வேலையில் வைத்துக் கொண்டான் தென்னவன்..
உள்ளே போனவள் குழந்தையின் தேவையை மேற்பார்வை பார்த்தவள் கொஞ்ச நேரம் பிள்ளையை டான் மார்பில் போட்டு தன் இதய துடிப்பை பிள்ளைக்கு கேட்க செய்தவள் அவன் தூங்கும் வரை டான் நெஞ்சிலே போட்டு தட்டி குடுத்து தூங்க வைத்தாள்.
அவாளின் இந்த பரிமாணத்தை கண்டு பணி பெண்கள் தான் குழம்பி போனார்கள்.
“இந்தாம்மா பிள்ளைன்னு வந்துட்டா பனியா உருகி போயிடுறாங்க.. அதே மத்தவங்க பிள்ளையை பறிக்க பார்த்தா கடும் பாறையா இறுகி போயிடுறாங்க... அதுவும் இவங்களுக்கு பிடிக்கலன்னா சுத்தம். எவ்வளவு அசிங்கப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கப் படுத்துறாங்க.. என்ன குணமோ இவங்க குணம்.. இவங்களை புரிஞ்சுக்க தனி டிக்ஷனரி வேணும் போல” தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
பிள்ளையை தூங்க வைத்து விட்டு வெளியே வர, தென்னவன் மீட்டிங்குக்கு எல்லாவற்றையும் தயார் செய்து சரியாக அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தான்.
அவனை தான் பார்த்துக் கொண்டே வந்தாள். அவன் நிமிர்ந்தும் அவளை பார்க்கவில்லை. அதில் லேசாக கடுப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டு,
“என்ன மிஸ்டர் எல்லாம் ரெடியா?” என்று கேட்டாள்.
“எஸ் மேம்” என்றவன் மீட்டிங் ஹாலுக்கு போக, போகும் அவனை வெறித்துப் பார்த்தாள். போனவன் அவளின் பார்வையை உணர்ந்து என்ன என்பது போல திரும்பி பார்த்தான்.
“போய்யா” என்று வாயை அசைத்தாள்.
அது வரை இறுக்கமாக இருந்தவனின் முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை வந்தது.
அதை அவளுக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டவன், “மீட்டிங்க்கு ஆட்கள் வந்துட்டாங்க.. சீக்கிறம் வந்து சேருங்க மேடம்” என்று சொல்லி விட்டு அவன் போக, பெருமூச்சு விட்டு தன்னை தானே சமாதனம் செய்துக் கொண்டு மீட்டிங் ஹாலுக்கு சென்றாள்.
அங்கே யார் யார் மாட்யூல்ஸ் செலக்ட் என்பதை தென்னவன் மூலமாகவே சொல்ல வைத்தவள் எழுந்து வெளியே போய் விட்டாள்.
அவளின் கண் முன் இதே போல ஒரு மீட்டிங் நினைவுக்கு வந்தது. இவள் லண்டனில் டிகிரி முடித்து விட்டு அங்கு தன் பிசினசை ஆரம்பித்த சமயம் அவளின் தந்தைக்கு போன் போட்டு சில பல விசயங்களை கைட் பண்ண சொல்லுவாள்.
அவளின் தந்தையோ தென்னவனை கை காட்டி விடுவார். அவருக்கு நிற்க கூட நேரம் இருக்காது.. ரொம்ப பிசியான நேரம் அது. அவளின் அக்கா சினேகாவும் தகப்பனுக்கு உதவியாக அலுவலகம் வந்து விடுவாள்.
மேக்சிமம் தங்கச்சிக்கு அவாளே கைட் பண்ணி விடுவாள். அவளும் முக்கியமான வேலையாக இருந்தாள் மட்டுமே தந்தையிடம் போக சொல்வாள். அன்றைக்கு அப்படி தான் தந்தையை கை காட்டி விட்டு ஒரு டெண்டர் விசயமாக வெளியே போய் விட்டாள் சினேகா.
தந்தையோ தென்னவனை கை காட்ட, விடியோ காலில் தன் சந்தேகத்தை கேட்க ஆரம்பித்தவள் அப்பொழுது தான் தென்னவனை முதன் முறையாக பார்த்தாள் தமிழ்.
இந்த தமிழ் ரொம்ப பேசற😬😬😬😬😬