“அதெப்படி சார் உங்களுக்கு தெரியும் எனக்கு கல்யாணம் ஆகலன்னு. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
அசோக் அதிர்ந்துப் போனான்.
“பொய் சொன்னா கூடுதல் தண்டனை கிடைக்கும் குழலி” என்று அவன் எச்சரிக்க,
“நான் பொய் சொல்லல அண்ணா.. உண்மையாவே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. சந்தேகம்னா நீ நம்ம ஜட்ஜ் மகன் கிட்ட கேளு” என்றான்.
“வாட் ஜட்ஜ் மகனா?” என்று நீதிபதியே அதிர்ந்துப் போனார். அசோக் அதற்கு மேல அதிர்ந்து போனான்.
“நீ என்னம்மா சொல்ற?” நீதிபதி கேட்க,
“இதுல நான் சொல்ல என்ன இருக்கு மாமா... நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டதே உங்க மகனை தான்” என்றாள்.
“வாட்?” என்று அவர் போட்டு இருந்த கண்ணாடியை கலட்டி விட்டு அவளை அதிர்ந்துப் போய் பார்த்தார்.
“ஆமாம் மாமா உங்க மகன் தானே மிஸ்டர் ஏகப்பன். அவர் தானே இந்திய ராணுவத்துல கேப்டனா இருந்தவரு. அவரை தான் சொல்றேன்” என்றாள் நிமிர்வாக.
அவள் சொல்ல சொல்ல நீதிபதியான சீதாராமனுக்கு பெரும் அதிர்வு. அசோக் வாயை பிளந்து நின்றான்.
தண்ணீரை எடுத்து குடித்து தன் தடுமாற்றத்தை போக்கிக் கொண்டவர், குழலி சொல்வதை முழுவதும் கேட்க ஆராம்பித்தார்.
“நீங்க கூடா ஒரு முறை எங்களை வீடியோ காலில் பார்த்து உறுதி பண்ணி இருக்கீங்க மறந்துட்டீங்களா மாமா” என்று அவள் உரிமையாக அழைக்க,
எதிர் தரப்பு வக்கீல்,
“எதுவா இருந்தாலும் சார்னு சொல்லி கூப்பிடு ம்மா” என்று திருத்தினார். அதை மாமனார் மருமகள் இருவருமே விரும்பவில்லை. ஆனாலும் நீதிமன்றத்துக்கு என்று ஒரு வரைமுறை இருக்கே... அதனால் சார் என்றே அழைத்தாள் அதன் பிறகு.
“இரண்டு ஹியரிங் க்கு முன்னாடி நான் உயிரோட இல்லன்னு சொல்லி என் மொத்த சொத்தையும் அபகரிக்க நினைச்சப்ப, என் தரப்பு வக்கீல் போன் கால் மூலமாக உங்கக்கிட்ட பேச வச்சாங்க இல்லையா... அப்பவே உங்க மகனோட நான் வாழ ஆரம்பிச்சுட்டேன்.. அதுக்கு சாட்சி இதோ உங்க மகனோட உயிர் என் வயித்துக்குள்ள வளருது..” என்றாள் அதிரடியாக.
இப்படி ஒரு ட்விஸ்ட் வரும் என்று அறிந்து இருக்காத எதிர் தரப்பு வக்கீல் திகைத்துப் போனான்.
“அய்யா இந்த பெண் சொல்றதை எதுவும் நம்பாதீங்க.. அந்த பெண்ணுக்கு இன்னும் கல்யாணமே ஆகல” என்று தாய்மாமன் காரன் வேறு கத்த, சீதாராமன் யார் பேச்சையும் கேட்காமல்,
“நீ சொல்லும்மா” என்றார்.
“ஆமாம் மாமா.. என்று சொல்ல வந்தவள்,
“ஆமாங்க சார். என்னோட கணவன் மிஸ்டர் ஏகப்பன். அவரோட வாரிசு இப்போ என் வயித்துல வளர்ந்துக்கிட்டு இருக்கு.. மெடிக்கல் செக்கப் பண்றதுன்னா கூட நீங்க பண்ணலாம்” என்றாள்.
“ஆர் யூ சுயர்”
“ஆமா சார் ஹன்ரட் பெர்சென்ட் சுயர்” என்று நிமிர்வாக சொன்னவளை மெடிக்கல் செக்கப்புக்கு உட்படுத்த சொன்னார்.
மருத்துவரும் செக் பண்ணி ரிப்போர்ட் குடுத்தார். அதை வாங்கிப் படித்த ஜட்ஜ் திகைத்துப் போய் குழலியை பார்த்தார்.
அவளின் கன்னி தன்மை பறிபோய் இருந்ததோடு ஒரே ஆணோடு பலமுறை உறவு கொண்டு இருந்ததாக இருந்ததே தவிர அவள் சொன்னது போல கரு இல்லை.
தலையை பிடித்துக் கொண்டார்.
அவளுக்காக அவனின் மகன் அவரிடம் பேசியது நினைவுக்கு வந்தது. அவன் தான் முழு காரணம் என்று ஒரு மனது எண்ணினாலும் ஆனால் சரியான ஆதாரம் எதுவும் இல்லாமல் எப்படி இந்த வழக்குக்கு தீர்ப்பு சொல்வது என்று எண்ணியவர் அவளை குறுக்கு விசாரணை செய்ய மனம் தடுத்தது.
அதோடு தன் மகன் யாரோ ஒருவருக்காக கண்டிப்பாக தன்னிடம் பரிந்துரைக்கு வர மாட்டானே.. அப்பொழுதே இந்த பெண் மீது காதல் இருக்க போய் தான் தன்னிடமே சிபாரிசுக்கு வந்து இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டார்.
ஆனால் மகன் இவ்விடம் இல்லையே.. இந்த பெண் மட்டும் தானே இருக்கிறாள். இந்த பெண்ணை குறுக்கு விசாரணை செய்தே ஆகவேண்டிய நிலை.
கேள்விகள் எல்லாம் வேறு மாதிரி வந்து விழுமே. இந்த சின்ன பெண் தாங்குவாளா? ஏகன் இருந்தால் இங்கு நிலையே வேற... ஆனால் அவன் இங்க இல்லையே.. பெருமூச்சு விட்டவர், வாழ்க்கை ஆரம்பிக்கும் பொழுதே
“உன் கணவன்னு சொல்கிற மிஸ்டர் ஏகப்பன் இப்போ எங்க இருகாரு ம்மா...? அவரை வர சொல்லு.. நாங்க பார்க்கணும்” என்று எதிர் தரப்பு வக்கீல் ஏழரையை இழுத்து விட்டான்.
“இல்ல அவரு இங்க இல்ல” என்று தலையை குனிந்தாள்.
“இங்க இல்லையா? இல்ல இந்த உலகத்துலையே இல்லையா?” நக்கல் செய்தான் அவன்.
“சார்” என்று கத்தியே விட்டாள்.
“இங்க சும்மா கத்தாதம்மா... இங்க சாட்சி மட்டும் தான் பேசும். ஒன்னு உன் கணவன்னு சொல்ற ஆளை வர சொல்லு. இல்லையா இந்த சொத்து முழுவதையும் என் கட்சி ஆளுக்கு குடுத்துட்டு போயிட்டே இரு” என்றான்.
அதோட, “நீ இங்க நிரூபிக்கலன்னா.. உன்னை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கேவலப்படுத்துவேன். ஒழுங்கா மூடிட்டு இந்த கோர்ட்டை விட்டு போ” என்று மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் மிரட்டினான் வக்கீல்.
குழலி இன்னும் அதிர்ந்துப் போனாள்.
“சொன்னா நீ கேட்க மாட்ட..” என்று ஏளனமாக சிரித்தவன்,
“சார் இந்த பொண்ணு சொத்துக்காக அவங்க குடும்பாத்தை செர்ந்தவங்கலையே கொன்னு போட்டு இருக்கு சார். அந்த பழியை தன் மேல் வரமா இருக்க என் தரப்பு ஆள் மேல போட்டு இருக்கா. இப்போ கல்யாணமே ஆகாம கல்யாணம் ஆகிடுச்சுன்னு பொய் சொல்லுது. இந்த பெண் சரியான ஊதாரி. இந்த போட்டோசை பாருங்க... எத்தனை பாய் பிரெண்டோட சுத்தி இருக்குன்னு. இதுல யாரோ தான் இந்த குழந்தைக்கு அப்பனா இருக்க முடியும்” என்று இல்லாத பொல்லாத பழியை எல்லாம் அவாள் மீது போட்டு, இயல்பாக பழகிய ஆண் நண்பர்களை எல்லாம் அவளுடன் இணைத்து வைத்து பேசி அவளின் கற்பை கொச்சைப் படுத்திய வக்கீலை கண்டு பேச முடியாமல் கண்ணீர் நிறைந்து வாயடைத்துப் போய் நின்றாள் நெடுங்குழலி.
அதுவும் ஏகனின் தந்தை முன்பு இப்படி ஒரு பழிச்சொல் வரும் என்று எத்திர்பாராதவளுக்கு காலுக்கு கீழ் நிலம் உடைந்து விலகியது போல தோன்றியது. எப்படி அவரை ஏறெடுத்துப் பார்ப்பேன்.. கலங்கி நின்றாள்.
“அது மட்டும் இல்ல சார்... உங்க மகனை இழுத்து வைத்து பேசினா இந்த வழக்கில் இருந்து சுலபமா வெளியே போகலாம்னு நினைச்சுட்டு இந்த பெண் தேவையில்லாத வேலை எல்லாம் பார்த்து வைக்கிது. இதுல உங்க கௌரவத்துக்கும் இழுக்கு சேர்க்க நிநினைக்கிறா. இந்த பெண்ணை சும்மா விடாதீங்க சார்... இவ ஒழுக்கம் இல்லாத பெண்” என்று அவன் மேலும் மேலும் குற்றம் சுமத்திக் கொண்டே போக,
குழலிக்கு எதிர்த்து பேசவே முடியவில்லை. மறுக்கக் கூட முடியாமல் அவள் மீது சுமத்திய குற்றங்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே போக அவளால் நிமிரவே முடியவில்லை. கூனிக்குறுகிப் போனாள்.
சற்று முன்பு வரை நிமிர்வாக நான் தான் உங்க மருமகள் என்று சொன்ன பெண்ணவளுக்கும் இப்பொழுது இருக்கும் பெண்ணுக்கும் இடையே இருந்த மாற்றம் கண்டு சீதாராமனுக்கு நெஞ்சில் வலி எடுத்தது.
போதும் என்று அவரால் சொல்ல முடியவில்லை. எதிர் தரப்பு வக்கீல் இது தான் வாய்ப்பு என்று மேலும் மேலும் குற்றங்களை சுமத்திக் கொண்டே போக, அசோக்கே திகைத்துப் தான் போனான்.
அவனும் எவ்வளவோ மறுத்துப் பேச முடியற்சி செய்தாலும் அதை எல்லாம் ஒன்றுமே இல்லாமல் செய்து விட்டான் எதிர் தரப்பு வக்கீல்.
“இந்த பெண் விபச்சாரியை விட மோசமானவ... யார் கூடவோ படுத்து பிள்ளையை சுமந்துட்டு வந்து..” முடிக்கும் முன்பே கர்ஜனையாக ஒரு குரல் அந்த வழக்கு மன்றத்தில் ஒலித்தது.
“யாரை பார்த்துடா விபச்சாரின்னு சொன்ன?” அவ்வளவு ஆளுமையுடன் ஒலித்த குரலை கேட்டு விலுக்கென்று நிமிர்ந்துப் பார்த்தாள் குழலி. அவன் தான். கண்களெல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது.
பரிதவித்துப் போய் அவனை பார்த்தாள். அவளின் விழிகள் முழுக்க ஏகப்பனின் உருவம் தான் நிறைந்து இருந்தது. அந்த மன்றத்தையே நிறைத்து நின்று இருந்தான் ஏகன். ஏகப்பன்..
தன் மகனை நேரில் பார்த்த சீதாராமனுக்கு உடலெங்கும் புல்லரித்துக் கொண்டு வந்தது. எத்தனை நாள் ஆச்சு மகனை பார்த்து.. நாள் கணக்கா... இல்லையே வருடக்கணக்கா ல்ல ஆகிபோச்சு.. சீதாராமனின் விழிகளில் அன்பும் பாசமும் பரிதவிப்பும் பொங்கி பெருகியது.
“டேய் கண்ணா” என்று அவரின் உதடுகள் யாரும் அறியாமல் முணகியது.
கண்களாலே அவனை ஆசை தீர வருடி விட்டுக் கொண்டார்.
“நீ யாரு மேன்... வழக்கு போயிட்டு இருக்கும் போது இடையில நுழையிற” கேட்ட வக்கீலை வெட்டும் பார்வை பார்த்தவன்,
அங்கே ஒரு ஓரமாக தன்னிடம் அடிவாங்கி முகம் உடம்பு எல்லாம் வீங்கிப் போய் அமர்ந்து இருந்த குழலியின் தாய் மாமனை ஒரு பார்வை பார்த்தான். அவ்வளவு தான் அவன் உள்ளுக்குள் அப்படியே பதுங்கி விட்டான்.
அவன் பதுங்குவதை பார்த்த எதிர்தரப்பு வக்கீல்
“யாருடா அவன்” என்று சைகையில் கேட்க,
“நான் இந்த நிலையில இருக்க காரணம் ஆனவன்” என்று சொல்ல ஜெர்க்காகிப் போனான். அவ்வளவு நேரம் வாய் சவடால் விட்டு குழலியை அசிங்கப்படுத்திக் கொண்டு இருந்தவனுக்கு குளிர் காய்ச்சல் எடுக்க ஆரம்பித்தது.
எச்சில் விழுங்கியபடி ஏகனை பார்த்தான்.
ஏகன் அவனை முறைத்துக் கொண்டே குழலியோடு கூண்டில் ஏறி நின்றான்.
“இவ என்னோட பொண்டாட்டி.. என்னோட தான் இத்தனை நாளும் ஒண்ணா இருந்தா..” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன்,
தன் பெக்கேடில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்தது நீட்டினான் அசோக்கிடம். அதை வாங்கி பார்த்த அசோக் திகைத்துப் போய் நின்று இருந்தான் சில கணங்கள்.
எதற்காகவும் தன் கூட்டை விட்டு வெளியே வராத ஏகன் இன்று குழலிக்காக இவ்வளவு தூராம் வருவான் என்று எதிர் பார்க்கவே இல்லை. அதுவும் அவளோடு ஒன்றாக ஒரே கூண்டுக்குள் ஏறி நின்று தானே சாட்சியாக மாறுவான் என்று கொஞ்சமும் எண்ணவில்லை.
இதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு குழலிக்கும் ஏகனுக்கும் கல்யாணம் ஆன ரெஜிஸ்டர் பத்திரம் வேறு..
மெய்மறந்து போய் போய் பார்த்துக் கொண்டு இருந்தவனை தலையை திருப்பி ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான் ஏகன். அதில் அடித்து பிடித்துக் கொண்டு சுதாரித்தவன், தான் அணிந்து இருந்த கோட்டை சரி செய்துக் கொண்டு,
செம்ம....வெறித்தனம்🤩🤩🤩🤩🤩