நடை தடுமாறி உயிரே போனது போல வந்தவளை தான் விழி எடுக்காது பார்த்து இருந்தான் ஏகப்பன். அவனது உறைந்துப் போய் இருந்த நிலையை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட தாய் மாமன் ஏகனை போட்டு பிரட்டி எடுத்தான்.
இது நேரம் வரை அவனிடம் வாங்கிய அடிகளை எல்லாம் திருப்பிக் குடுக்க ஆரம்பித்தான்.
அதற்கும் ஏகன் எந்த எதிர்விளைவையும் காட்டாமல் அப்படியே மரம் போல நின்று இருந்தான். கண்களில் வலியுடன் அவனை பார்த்தபடி வந்த நெடுங்குழலிக்கு அவன் அடிவாங்குவது இன்னும் வலியை குடுக்க விழிகளில் வலியுடன் சேர்ந்து கண்ணீரும் வழிந்தது.
“ஏன் அடிவாங்குறீங்க ஏகன்?” என்று அவள் உள்மனம் அரற்றியது.
பேசக்கூட அவளால் முடியவில்லை. இல்லை என்றால் இந்நேரம் தொண்டை கிழிய கத்தி இருப்பாள். ஆனால் அவளுக்கு தான் தொண்டையை அடைத்துக் கொண்டு இருக்கிறதே இதில் எங்கிருந்து கத்துவது. மூச்சே எடுக்க முடியவில்லை.
அவனை நோக்கி வேகமாக அடி எடுத்து வைக்க பார்க்க கால்களும் ஓய்ந்துப் போய் இருக்க அவளால் அவள் மனதின் வேகத்துக்கு எதையும் செய்ய முடியாமல் தட்டு தடுமாறி அவனிடம் சென்றாள்.
ஆனால் அதற்குள் அவளின் தாய்மாமன் தன் அடியாட்களுக்கு கண்ணை காட்ட, சுதாரித்து அவளை ஆளுக்கொரு பக்கமாக பிடிக்க வந்தார்கள்.
ஏகனின் பார்வை முழுக்க அவளின் முகத்தில் தான் இருந்தது. அதுவும் அவளின் கண்களில் தான் நிலைத்து இருந்தது. தன்னை பற்றி அவள் என்ன உணருகிறாள் என்று அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது. அதனால் கொஞ்சமும் அசையாமல் அவளை தான் பார்த்த வண்ணம் இருந்தான்.
விடாத அவனது பார்வையில் அவளுக்கு இன்னும் கண்ணீர் தான் வந்தது. தன்னை பெரும் ஆபத்து சூழ்ந்து இருப்பதை எல்லாம் அவளுக்கு கொஞ்சமும் உறைக்கவில்லை. அவளின் பார்வையும் ஏகனிடம் மட்டும் தான் இருந்தது.
அவளது கண்களில் இருந்த கண்ணீர் அவனை ஏகத்துக்கும் வதைக்க, “நீயுமாடி?” என்று தனக்குள் கேட்டவன், அவளின் கண்களில் வழிந்த கண்ணீரில் அவனுக்கு உயிர் போனது.
பெருமூச்சு விட்டவன், அவளிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டு அவளை சிறை பிடிக்க வந்த ஆட்களை காலுக்கு அருகில் கிடந்த கட்டையை காலாலே உதைத்து அவர்களை கீழே விழ வைத்தவன், அதுவரை குழலியின் தாய் மாமனிடம் அடி வாங்கியவன் விருட்டேன்று ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான்.
அதுவே அறைவது போல இருக்க திகைத்துப் போனான் எதிரி. சட்டென்று ஏகனை அடிப்பதை நிறுத்தி விட்டான். ஆனால் ஏகன் சகட்டு மேனிக்கு அவனை அடித்து துவம்சம் செய்து விட்டான்.
அவன் அடி வாங்குவதை பார்த்த மற்ற அடியாட்கள் விட்டால் போதுமென்று ஓட்டம் எடுக்க, ஒருவரையும் விட்டு வைக்காமல் எல்லோரையும் வளைத்து வளைத்து அடி பின்னி எடுத்து விட்டான். ஒருவரால் கூட எழுந்து நகரக் கூடா முடியாத அளவுக்கு செய்து போட்டவன் அதே ஆத்திரம் நிறைந்த விழிகளோடு பெண்ணவளை ஒரு பார்வை பார்த்தான்.
அந்த பார்வையில் குழலிக்கு மொத்த தேகமும் நடுநடுங்கிப் போனது. “என்னை ஏன் இப்படி பயமுறுத்துற மாதிரி பார்க்குறீங்க?” என்று அவளால் வாய் விட்டு கேட்கமுடியவில்லை.
காரணம் அவன் ருத்திர மூர்த்தியாக அவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தான்.
“திடிரென்று எதுக்கு இவ்வளவு கோவம்” என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அதை அவனிடம் கேட்டு தெளிவு பெற அவளுக்கு தைரியமும் வரவில்லை.
அடுத்து வந்த பொழுதுகள் எல்லாம் மிகவும் இறுக்கமாகவே நகர்ந்தது அவளுக்கு. தன் பயத்தையும் மீறி அவனிடம் பேச முன்வர, அதற்கு அவன் இடமே குடுக்கவில்லை. வெறும் கண் பார்வையிலையே அவளை எட்டி நிறுத்தி இருந்தான்.
“ஏங்க” என்று அவாள் எவ்வளவோ பேச வந்த பொழுதும் அவளை ஒரு வார்த்தை கூட பேச விடாமல் சினமான ஒரு பார்வையில் அவளை அடக்கியவன் அசோக்கை வர வைத்து அவனிடம் அவளை ஒப்படைத்தவன் கிளம்பி விட்டான்.
குழலி அவனை தடுக்க பார்க்க ஒரே ஒரு முறை தான். அவனது அந்த முறைப்பில் தேகம் மொத்தமும் நடுங்கிப் போனது அவளுக்கு. எங்கு போனான் என்று யாருக்கும் சொல்லவில்லை. விடிந்தால் அவளுக்கு கல்யாணம் என்கிரா நிலை.
ஆனால் ஏகன் வரவில்லை. சுரேந்தர் தயாராக இருந்தான் அவளை கல்யாணம் செய்துக்கொள்ள. ஆனால் இவளுக்கு தான் எதுவுமே மனதுக்கு ஒப்பவில்லை.
“ப்ளீஸ் என்னை இதுக்கு மேலா தொந்தரவு செய்யாதீங்க” என்று அவள் கை எடுத்து கும்பிட,
“அம்மாடி இது உன் நல்லதுக்கு தான். இந்த கல்யாணம் மட்டும் நடக்கலன்னா உன் சொத்து மொத்தமும் போயிடும் டா” என்று சுரேந்தரின் தந்தையும் நண்பனும் சொல்ல,
“எனக்கு என் சொத்தை விட என் வாழ்க்கை ரொம்ப முக்கியம் அங்கிள்.. ப்ளீஸ்.. சுரேந்தரை என்னால இப்பன்னு இல்ல எப்பவுமே கல்யாணம் பண்ணிக்க முடியாது.. சாரி... ப்ளீஸ் அண்டர்ஸ்டென்ட்..” சொன்னவளை அதன் பிறகு யாராலும் கொஞ்சம் கூட அசைக்கவே முடியவில்லை.
ஏமாற்றத்தோடு திரும்பி போய் விட்டார்கள் மூவரும்.
சுரேந்தர் மட்டும் அவளுக்கு ஆள் த பேஸ்ட் சொல்லி விட்டு வந்தான்.
அவர்கால் போவதை பார்த்து விட்டு அசோக்கிடம் ஏகனை பற்றி விசாரித்தாள். ஆனால் அவனுக்கு எதுவுமே தெரியாவில்லை ஏகனை பற்றி.
“நல்லா கொஞ்சம் யோசிச்சு பாருங்க அண்ணா. அவரு வேற யார் கிட்டையாவது பேசி பார்த்து இருக்கீங்களா?” என்று தவிப்புடன் கேட்டவளை பார்த்து,
“அவனுக்காக நீ ஏன்மா இப்படி துடிக்கிற?” புரியாமல் கேட்டான்.
“ப்ளீஸ் ண்ணா இப்போ என்னால எதுவும் சொல்ல முடியாது.. நேரம் வரும் பொழுது நானே எல்லாவற்றையும் சொல்றேன். அதுக்கு முன்னாடி அவரை பற்றி எனக்கு தெரியனும்” என்று அவள் சொல்ல,
அசோக்கும் மண்டையயை போட்டு உருட்டினான். ஆனால் ஏகன் யாரிடமும் பேசி அவன் பார்த்ததே இல்லையே... ஏகனுக்கு போனை போட்டு பார்த்தான். அது அனைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று வந்தது.
“அவன் யார்கிட்டயும் பேசி நான் பார்த்ததே இல்லம்மா. அவன் ஒரு தனிப்பிறவி” என்று அவன் சொல்ல சோர்ந்துப் போனாள். விழிகளில் நீர் நிரம்பியது.
“இப்போ எங்கன்னு போய் நான் இவரை தேட” வாய் விட்டு புலம்பியவள் தன் வீட்டின் அறையில் அடைந்துக் கொண்டாள். நீண்ட நாட்கள் கழித்து அவளின் வீட்டுக்கு வந்து இருந்து இருக்கிறாள். ஆனால் அதை அனுபவிக்க கூட அவளால் முடியவில்லை.
கண் முன் ஏகனின் சோர்ந்த முகமும் அதை ஒட்டி சினம் நிறைந்த முகமும் தான் மாறி மாறி வந்தது.
எதுக்காக சோகமா இருந்தாரு.. பின் எதுக்காக கோவாமா இருந்தாரு.. இதுல நான் என்ன பண்ணுனேன் எதுக்காக என்னை பாதியில விட்டுட்டு போனாரு. என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டு இப்படி பாதியில விட்டுட்டு போயிட்டாரே என்று எல்லாவற்றையும் யோசித்து குழப்பிக் கொண்டே இருந்தாள்.
அடுத்த இரண்டு நாளில் கேஸ் ஹியரிங் வர இந்த முறை இவளே நேரடியாக சென்றாள்.
அசோக் தான் பதறிப்போனான். “உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே குழலி... இப்போ சொத்து முழுதும் அவனுக்கு இல்ல போகும்” என்று பதட்டம் கொள்ள,
இவளுக்கும் உள்ளுக்குள் பெரும் கலக்கம் சூழ்ந்தது தான். ஆனால் எப்படியும் சமாளிப்போம் என்று தன்னை தானே சமாதனம் செய்துக் கொண்டு,
“பார்த்துக்கலாம்அண்ணா” என்று சொல்லி விட்டு நீதிமன்றத்துக்கு கிளம்பினாள் அவனோடு.
இவர்களின் கேஸ் வந்தது. இவளின் பெயர் சொல்லி அழைக்க, நெடுமூச்சு விட்டு எழுந்து நின்றவள் கூண்டுக்குள் போய் நின்றாள்.
வழக்கு இரு பக்கமும் ஆரம்பிக்க,
இவளிடம் குறுக்கு விசாரணை செய்தார் எதிர் தரப்பு வழக்கறிஞர்.
அவர் கேட்க கேட்க எல்லா உண்மைகளையும் சொன்னாள்.
“விசாரித்த வரையில் இவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை... அப்போ சொத்து முழுவதும் என் கட்சி காரருக்கு தான் சொந்தம் என்று இதுலையே நிருபணம் ஆகி விட்டது ஐயா... இதுக்கு மேல இந்த வழக்கை இழுத்து அடிக்க எதுவும் இல்லை. இதற்கு மேல் வாய்தாவும் தர தேவையில்லை” என்று நீதிபதியிடம் சொல்லி விட்டு அவர் அமர்ந்துக் கொள்ள,
“அவர் சொல்வது போல உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா ம்மா?” என்று நீதிபதி கேட்க அவரை நிமிர்ந்து பார்த்தவளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
தன் கண்களை அவளால் நம்பவே முடியவில்லை.
“உன்கிட்ட தான்மா பேசிட்டு இருக்கேன். எதுவா இருந்தாலும் சொல்லுங்க... இப்படி மௌனமா இருந்தா வழக்கு சாதகமா அவங்க பக்கம் போயிடும்” என்றார் அவர்.
அப்பொழுதும் அவளால் எதுவும் பேச முடியவில்லை. திகைத்துப் போய் அவரை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“மிஸ் குழலி... உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” என்று அவர் சற்றே எரிச்சலாக கூற, சற்றே சுதாரித்தாள்.
“சார்...” என்று அவள் கொஞ்சம் திருதிருத்தாள்.
“சுத்தம்” என்று அவர் அசோக்கை பார்க்க,
“டூ மினிட்ஸ் சார்” என்று கேட்டவன் வேகமாய் குழலியிடம் வந்து,
“குழலி உனக்கு என்ன ஆச்சு? ஜட்ஜ் உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்காரு.. ரெஸ்பான்ஸ் பண்ணு” என்று அதட்டினான்.
“அண்ணா...” என்று அவள் ஏதோ சொல்ல வர,
“உன் குழப்பத்தை எல்லாம் ஓரம் கட்டி வச்சுட்டு அவர் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு ம்மா” என்று சொன்னவன் போய் அம்ந்து விட்டான்.
அதுவரை குழப்பத்துடன் இருந்தவள் நீண்ட மூச்செடுத்துக் கொண்டு நீதிபதியை பார்த்து நின்றாள்.
“சொல்லு ம்மா உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா? இந்த நேரம் உனக்கு கல்யாணம் ஆகி இருந்தா இந்த சொத்து முழுவதும் உனக்கு வந்து இருக்கும். ஆனா உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. அதனால இந்த சொத்து முழுவதும் உன் தாய் மாமனுக்கு தான் போய் சேரும்” என்று அவர் சொல்ல,
“அதெப்படி சார் உங்களுக்கு தெரியும் எனக்கு கல்யாணம் ஆகலன்னு. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
அசோக் அதிர்ந்துப் போனான்.
Wow, ஏகன் ஓட அப்பாவை கண்டு பிடிச்சிட்டா🤩🤩🤩🤩🤩