மருத்துவமனைக்குள் அவசரமாக உள்ளே நுழைந்தவள் தன் தந்தை இருக்கும் இடத்தை தென்னவன் வழி காட்ட ஓடினாள். அங்கே அதிக சேதாரம் எதுவும் இல்லாமல் படுத்து இருந்தார். கையில் மட்டும் சின்னதாக அடி. மற்றபடி அவளுக்கு ஒன்றும் இல்லை.
“டேடி” என்று பாய்ந்து வந்தவளின் சத்தத்திலே கண்ணை விழித்தவர் மகளை பார்த்து ஆதூராமாக சிரித்தார்.
“எனக்கு ஒன்னும் இல்லடா... நான் நல்லா இருக்கேன்.. நீ தான் ரொம்ப பயந்துட்ட போல” என்று அவளின் தலையை தடவி விட்டவரின் கையை பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவளின் பார்வை தன் தந்தையின் உடலை ஆராய்ந்தது.
கையில் மட்டும் தான் அடி. ஆனாலும் அவளது பார்வை விடாமல் அவரை ஸ்கேன் செய்ய அவளது கவனிப்பில் பூரித்துப் போனார்.
“வேற எங்கும் வலிக்குதா டாடி” தவித்துப் போய் கேட்டவளை வாஞ்சையாக பார்த்து,
“எனக்கு ஒன்னும் இல்லடா. ஐ ஆம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்.. நீ தான் ரொம்ப பதறிப்போய் இருக்க.. அப்பாவுக்கு நீ பயப்படும் படியா ஒண்ணும் இல்லடா” அவளை சமாதானம் செய்து இயல்புக்கு கொண்டு வந்ததார்.
அவரின் தோளில் சிறிது நேரம் வலிக்காமல் சாய்ந்துக் கொண்டவளுக்கு அதன் பிறகே படபடப்பு நீங்கியது. மருத்துவரை பார்த்து கிருஷ்ண மூர்த்திக்கு புல் பாடி செக்கப் செய்ய சொன்னாள்.
“நாட் நேசசரி மேடம்” மருத்துவர் சொல்ல,
“இருக்கட்டும் டாக்டர் ஒரு முறை எடுத்துக்குறது நல்லதுன்னு தோணுது. எடுத்துடுங்க” என்று அறிவுறுத்தி விட்டு தந்தையிடம் வந்து அமர்ந்து விட்டாள்.
“வீட்டுக்கு கூட்டிட்டு போக சொன்னாங்க டேடி.. கிளம்பலாம்” என்று தந்தையை கையோடு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தவள், அடுத்த நாளே தந்தையை முழு செக்கப்புக்கு கூட்டிக்கொண்டு போனாள்.
வீட்டில் இருந்தவர்கள் சற்றே பதட்டப்பட்டுப் போனார்கள். கிருஷ்ணனின் தம்பி வீட்டு ஆட்களும் வந்து இருக்க நலம் விசாரிப்பே நீண்டுக்கொண்டுப் போனது.
அது இது என்று பேசி அவரை அவரது அறையில் ஓய்வு எடுக்க விட்டுட்டு வெளியே வந்தவளின் மீது தென்னவன் லேசாக மோதி விட,
தீயாய் அவனை முறைத்தாள்.
“உரச ஆசை வந்தா.. அதான் வினோதினி இருக்காளே. அவளை போய் உரச வேண்டியது தானே.. ஏன் என் மேல உரசுற” கேட்டவளை அடிக்க கை ஓங்கியவன்,
“வார்த்தையை அளந்து பேசுடி. இல்லன்னா வாங்குவ” என்று முதல் முறையாக அவளிடம் கோவத்தை காட்டியவன் அதன் பிறகு அவள் கண்முன்னே வரவில்லை.
தமிழ் எதற்கும் அலட்டிக் கொள்ளவே இல்லை. அடுத்த நாள் தந்தையை மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு செல்ல,
பானுமதி “ஏன் எதற்கு?” என்று கேட்டார்.
அவள் விசயத்தை சொல்ல,
“அதை நேற்றைக்கே செய்து இருக்க வேண்டியது தானே இனியா... இன்னைக்கு தேவை இல்லாமல் இவருக்கு இன்னொரு அலைச்சல்” என்றார்.
“அவர் உடம்பு ஏற்கனவே ஆக்சிடென்ட் ஆனதுல தளர்ந்து போய் இருக்கு. இதுல எப்படி உடனே செய்ய முடியும். அதனால தான் ஒரு நாள் ரெஸ்ட் விட்டு இன்னைக்கு எடுக்க நினைச்சேன் மாம்” என்றவள் தந்தையை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்.
எங்கும் நிற்காமல் கடகடவென்று எல்லா செக்கப்பும் எடுக்கப்பட்டது. அவர்களின் கூடவே தென்னவனும் இருந்தான்.
“எல்லாரும் இங்கயே இருந்தா அலுவலகம் எப்படி நடக்கும்?” கேட்டவளை முறைத்துப் பார்த்தவன் இடத்தை விட்டு அசையவில்லை.
“திமிரு... திமிரு..” வாய்க்குள்ளே முணகிக்கொண்டாள்.
“நீ என்னவோ சொல்லிக்கோ.. என்ன வேணா திட்டிக்கோடி” என்று தென்னவன் அசையாமல் அப்படியே நின்று இருந்தான்.
கிருஷ்ணனுக்கு பாதி உதவி செய்தது தென்னவன் தான். சட்டை பட்டன் போட்டு விட்டுவது, கைத்தாங்கலாக அழைத்து வருவது என பலவிதங்களில் அவருக்கு அவன் உறுதுணையாக இருந்தான். அதை எல்லாம் பார்த்த பிறகும் தமிழ் முகத்தை சுளித்துக் கொண்டு தான் இருந்தாள். அதை தென்னவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.
அது இன்னும் அவளுக்கு கடுப்பை கொடுத்தது. அதுவும் அவளின் தந்தை அவனிடம் பேசிக்கொண்டே இருப்பதை பார்த்து இவளுக்கு இன்னும் கோபம் வந்தது. வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள்.
இருவரும் அவளை சட்டை செய்யாமல் தங்களது வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்க ஏகத்துக்கும் கடுப்பு ஏறியது தமிழுக்கு.
அவளின் முகத்தில் தெரிந்த கோவத்தை கண்டு கிருஷ்ணனுக்கு சிரிப்பு வர,
“பாருங்க தம்பி சின்ன பிள்ளை மாதிரி இன்னும் இந்த பிள்ளை கோவப்படுறதை” என்று மருமகனிடம் சொல்லி சிரிக்க, தென்னவன் திரும்பி தமிழை பார்த்தான்.
இவர்களை தான் முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்.
“சின்ன பிள்ளை மாதிரி இல்ல சார்... சின்ன பிள்ளை தான்” என்றான்.
அவனது வாய் அசைவில் என்ன சொல்கிறான் என்று புரிய,
“யாரு சின்ன பிள்ளை?” காலை உதைத்துக் கொண்டு அவனிடம் சண்டைக்கு நின்றாள்.
அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன்,
“நீ தான்” என்று மட்டும் சொன்னவன், அழுத்தமாக அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அவளின் தந்தை புறம் திரும்பிக் கொண்டான்.
அதில் கடுப்பானவள்,
“யோவ் உனக்கு கண்ணு இல்ல.. கண்ணு இருந்தா என்னை நல்லா பார்த்து சொல்லுய்யா... நான் சின்ன பிள்ளையா?” ஆவேசத்துடன் கேட்டவளை இன்னும் நன்றாக ஆழ்ந்துப் பார்த்தவன்,
“நீ இன்னும் சின்ன பிள்ளை தான்டி” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு அழுத்திச் சொன்னவன் அதன் பிறகு அவள் கத்துவதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அடுத்த செக்கப்புக்கு கிருஷ்ணனை அழைத்துச் சென்றான்.
“யூ இடியட்” என்று அவனை வசைமாரி பொழிந்தவளுக்கு தென்னவன் மீது அவ்வளவு கோவாம் வந்தது.
“போடா பண்ணி.. நீ தான் இன்னும் சின்னப்பிள்ளை.. நான் இல்ல” கடுப்படித்தவள் கிளம்பி அலுவலகம் போய் விட்டாள்.
அவள் போவதை குறுங்கண் வழியாக பார்த்து இருந்தவனுக்குள் பெருமூச்சு எழுந்தது. அதை வெளியிட்டவன் முயன்று தன் கவனத்தை திசை திருப்பினான்.
“ரொம்ப படுத்துறம தென்னவன்?” என்று கேட்ட மாமனாரை வெளியே தெரியாத புன்னகையுடன் ஏறிட்டவன்,
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்” என்று வெளியே வந்து நின்று விட்டான். அவருக்கு உள்ளே செக்கப் போய்க் கொண்டு இருந்தது.
அவனுள் பல போராட்டங்கள் எழுந்தது. அதை முயன்று அடக்கிக்கொண்டு நடப்பில் கவனம் வைத்தவன் கிருஷ்ணனை செக்கப் முடித்து விட்டு வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு அலுவலகம் கிளம்பி வந்தான்.
அலுவலகத்தில் அவனது வரவுக்காக காத்துக் கொண்டு இருந்தவள் அவன் வந்த உடன் அவனது தலையில் ஆயிரம் பைல்களை சுமத்தினாள். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக அவள் சொன்ன வேலையை செய்ய ஆரம்பித்தான்.
அவனது இந்த மௌனம் அவளை ஒரு வகையில் சுட்டது. வேலையை விட்டுட்டு அவ்வப்பொழுது அவனை நிமிர்ந்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவளின் பார்வையயை முதலில் சந்தேகிக்காமல் அவ்வன் வேலையை தொடர்ந்தது செய்துக் கொண்டு இருந்தான். போக போக அவளின் பார்வை வீரியமாக மாற, ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அவளை நிமிர்துப் பார்த்தான். அவன் அப்படி சடுதியில் பார்ப்பான் என்று அறியாதவள் திகைத்துப் போனாள்.
இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க சிலபல நிமிடங்கள் கடந்து சென்று இருந்தன தங்களை மீட்டுக் கொள்ள.
“இது ஏன் இப்படி நடக்குது” என்று இருவருக்கும் ஒன்றும் புறியவில்லை. ஆனால் பார்வையை மட்டும் விலக்கிகொள்ளவே இல்லை..
என்னமோ போ தமிழ்....அவனோட rejection தான் காரணமா இவளோ வெறுப்பை அவன் மேல காட்ட????