அன்றைக்கு சதிக்கு பரதநாட்டிய வகுப்பு இருந்ததால் எப்பொழுதும் போல புடவையிலே கிளம்பினாள். ஆனால் அன்று அவளுக்கு கொடுத்ததோ பெல்லி டான்ஸ் வகையறாக்கள்...
இதையாரு மாற்றியது என்று யோசித்துக்கொண்டே அலுவலகத்தில் கேட்க, குரு தான் என்ற பதில் கிடைக்க, ஒன்றும் பேசாமல் வந்துவிட்டாள்... அவளையே இரு கண்கள் தொடருகிறது என்பதை அறியாமல் தன் போக்கில் இருந்தாள் சதி.
வகுப்பு எடுக்கும் போது அவளுக்குள் ஒரு மாதிரி இனம் புரியாத படபடப்பு ஏற்பட, வேகமாய் தன்னை சுற்றி பார்த்தாள். பார்த்த பொழுது தான் குரு அவளையே பார்த்துக்கொண்டு இருப்பது தெரியவந்தது... சட்டென்று அவளது முகம் சிவந்து போனது... கூடவே அவனை ஏறிட முடியாமல் தவித்து போனாள்.
அதற்கு அடுத்த வகுப்புகளையும் கண்டு கொள்ளாமல் அவனது பார்வையை சுமந்துக்கொண்டு பயிர்ச்சி கொடுத்தாலும் யார் கண்ணிலும் படாமல், குறிப்பாக அவனது கண்ணுக்கு தன் வெட்கத்தையும், படபடப்பையும் மறைத்துக்கொண்டு இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டு இருந்தாள். அது தான் தவறாகி போனதோ என்னவோ...
குரு பார்க்கும் பார்வைக்கு எந்த எதிர் பதமும் அவளிடம் இல்லாமல் போக அதிகமாக கோவம் கொண்டான்... அதுவும் அவளிடம் இருந்து ஒரு உணர்வு கூட வெளிப்படவில்லை என்றவுடன் அவனது சிறு சிறு கோவம் வளர்ந்து வளர்ந்து பெரிய சினமாய் உருவெடுத்தது...
அவளிடம் இருந்து ஒரு பார்வை கூட கிடைக்காததில் காதல் கொண்ட இதயம் சினத்தின் உச்சியில் இருந்தது. அதை அவன் கட்டுப்படுத்த பார்த்தும் முடியாமல் போனது...
அவனது அந்த கோவத்தை இன்னும் விசிறி விடுவது போல சதியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருந்தது...
மூன்று வகுப்புகள் தொடர்ந்து எடுத்தாள்.. அதில் பாதி நேரம் குருவும் வந்து அவள் எப்படி சொல்லி கொடுகிறாள் என்பதை மேற்ப்பார்வை இடுவது போல அவளை நோட்டம் விட, ஒரு கட்டத்துக்கு மேல் அவனது பார்வையை தாங்க முடியவில்லை...
இன்றைக்கு முழுவதும் இவன் இப்படி தான் செய்ய போகிறான் என்பதை உணர்ந்து விடுமுறை எடுத்து விடலாம்... அப்படி செய்தால் தான் குருவிடமிருந்து தப்பிக்க இயலும் என்று எண்ணினாள்.
ஆனால் பாதி வகுப்பிலே சதி சொல்லி தரும் ஜோடி டான்ஸ் தவறு என்று வேண்டுமென்ற சொல்லி, அதை ஆடி காண்பிக்க சதியிடம் தன் கரத்தை நீட்டி அவளை ஒரு பார்வை பார்த்தான்.
எப்பொழுதும் அவன் கை நீட்டினாலே உடனடியாக தன் கையை அவனது கையோடு சேர்த்து விடுபவள் இன்று பெரிதான தயக்கத்துடன் அவளது கையை நீட்ட, அடங்கி இருந்த சினம் அவனது விழிகளில் வெளிப்பட்டது.
அதை உணர்ந்தவள் தன்னையே நொந்துக்கொண்டாள்.. ‘இது நாள் வரை தள்ளி தானே இருந்தான்... இப்பொழுது மட்டும், அதும் இத்தனை பேரின் மத்தியிலும் அவன் என்ன செய்துவிடுவான் என்று நீ இப்படி பயந்த சதி... போச்சு சாமி மலையேற போகுது...’ நினைத்துக்கொண்டே அவனை பார்க்க, அவனும் அப்படி தான் இருந்தான்.
வேகமாக சுழற்றி அவளை இழுத்து தன் கரங்களுக்குள் வைத்துக்கொண்டவன் அதி வேகமாக நடனம் ஆட, அதும் வீசும் காற்றை கிழித்துக்கொண்டு அவன் சுழல, அவனோடு சேர்ந்து சதியும் சுழன்றாள்...
அவன் இடையில் கொடுத்த அழுத்தமே பெண்மையை சோதிக்க தொடங்கியது... பெண்மையின் உணர்வுகளை தட்டி எழுப்ப அவனது மூச்சுக்காற்றே போதுமானதாய் இருக்க... கண்களை இறுக மூடி அவன் கொடுக்கும் உணர்வுகளை உள்வாங்க தொடங்கினாள்..
அனிச்சை செயலாக உடல் அவனுக்கு ஒத்துழைத்து ஆடிய போதும், மனம் அவனது நெருக்கத்தின் பிடியிலே இருந்தது... முழுதாக ஒரு நிமிடம் அவனை தன்னுள் கிரகித்தவள், அதன் பின்பே உணர்ந்தாள் ‘அய்யய்யோ மாணவர்கள் முன்பு அல்லவா ஆடிக்கொண்டு இருக்கிறோம்’ என்பதை...
உடனடியாக தன் மயக்கத்தை உதறிவிட்டு சுற்றிலும் பார்க்க, மாணவர்களின் முகத்தில் எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் போகவே ‘அப்பாடி’ என்ற நிம்மதி எழுந்தது சதிக்கு...
அதன் பின் குரு சொல்லி தந்த படி அந்த வகுப்பை நடத்தினாள். முடியவும், மாணவர்கள் அனைவரும் சென்ற பின்பும் அசையாமல் அங்கு சுவரில் ஒரு காலை பதித்து, இன்னொரு காலை நிலத்தில் ஊன்றி குத்தும் விழிகளால் அவளையே பார்த்துக்கொண்டு இருந்த குருவிடம் வந்து,
“பாதி நாள் விடுப்பு வேணும்...” என்று கேட்டாள் பெரும் தயக்கத்துடன்...
அவள் தன்னை நெருங்கி வரவும், அவனது பார்வை இன்னுமின்னும் அவளை ஆராய்ந்து துளைத்து எடுத்தது...
காதோரம் ஆடிய ஜிமிக்கியும், கழுத்தில் இருந்த மெல்லிய சங்கிலியோடு, அவன் அணிவித்த சங்கிலியும் சேர்ந்து பின்னிக்கொண்டு அவளின் மார்பில் விழுந்து கிடந்ததையும், கண்ணுக்கு தீட்டியிருந்த மையும், கைகளில் அணிந்து இருந்த தங்க வளையல்களோடு, கண்ணாடி வளையல்களும், அணிவகுத்து அவளின் கைகளுக்கு அழகு சேர்த்துக்கொண்டு இருந்ததை விழி அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தான்...
காற்றில் பரந்த முடிகற்றைகளும், அதில் சூடி இருந்த மல்லிகை சரங்களும் அவனை பெரிதும் மயக்க அவளது கூந்தலில் தன் முகத்தை வைத்து புதைத்துக்கொள்ள துடித்தான்.
அவள் கிட்ட நெருங்கி அவள் பேசும் பொழுது அசைந்து நர்த்தனமாடிய அவளது உதடுகளின் மென்மைகளை தன் இதழ் கொண்டு உணர வேண்டும் என்கிற வேட்கை எழுந்தது...
அவ்வளவு உணர்வு குவியலாய் இருந்த பொழுதும் தன் மூச்சு காற்று கூட அவள் மீது படாமல் தள்ளி தான் இருந்தான். தள்ளி இருந்த போதும் தன் பார்வையால் அவளை வாதம் செய்துக்கொண்டே,
“எதுக்கு...” என்றான் ஒற்றை சொல்லாக...
‘உன் பார்வை என்னை வன்மையாக குத்தி திண்ணுகிறது... உன் பார்வை வளையத்திலிருந்து தப்பிக்கவே இந்த விடுப்பு...’ என்று சொல்ல முடியாமல்,
“தலைவலிக்குது... அதான்...” என்றாள் அவனை பாராமலே...
“ஓ...” என்ற ஒற்றை சொல்லை மட்டும் உதிர்த்தவன் அவளை இன்னும் ஆழ்ந்து பார்த்தான்... அவனது பார்வையில் தேகம் மொத்தமும் ஜில்லிட்டு போனது போல உணர்ந்தாள் சதி...
‘இது என்ன பதில்.. ஒண்ணும் போன்னு சொல்லணும், இல்லையா இருன்னு சொல்லணும்... அதுவும் இல்லாம இதுவும் இல்லமா இதென்ன... ‘ஓ’ என்று சொல்லுவது...’ என்று மனதுக்குள்ளே புலம்பினாள்.
அவளால் புலம்ப மட்டுமே முடிந்தது... நினைத்ததை வாய் விட்டு கேட்டுவிட்டால் அவ்வளவு தான் ‘எங்கயோ போற ஆத்தா என் மேல வந்து ஏறாத்தான்ற’ கணக்குல இருக்குற வேகத்தில் அவன் தன்னை என்னவேணாலும் செய்வான் என்று அறிந்தவள் வாயே திறக்கவில்லை.
‘பார்வையாலே ஆளை வசியம் செய்ய இவரால தான் முடியும் போல... என்ன பார்வை டா சாமி... விட்டா ஆளையே சுருட்டி உள்ள வச்சுக்குவாரு போல...’ முணகிக்கொண்டாள்.
அவன் பதில் சொல்லும் வரை அப்படியே நின்று இருந்தாள். அவனும் சளைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்...
ஊசியாய் குத்தி கிழிக்கும் அவனது வன்மையான பார்வையில் அவளது தேகம் மெல்லிய நடுக்கம் கொண்டது.. அதை கண்ணுற்றவனுக்கு சொல்லறியா சினம் எழுந்தது.. ஆனாலும் தன்னுடைய கட்டுப்பாடற்ற சினம் அவளை வதைக்கும் என்பதால் அமைதியாகவே இருக்க முனைந்தான்.
ஆனால் அவனை அப்படி இருக்க விட மாட்டேன் என்பது போல சூழல் மாறி போக காத்துக்கொண்டு இருந்தது.
தன் பார்வையில் அவள் நெளிந்துக்கொண்டு இருப்பதை அறிந்து “போ...” என்று சொன்னான்.
அவன் அப்படி சொன்னவுடன் வேகமாய் வெளியே சென்றாள்.. அதன் பின்பே அவளுக்கு மூச்சு வந்தது...
‘அப்பா என்ன பார்வை டா சாமி... ஏற்கனவே நான் அவரு மேல பித்தாகி போய் இருக்கேன்... இப்போன்னு பார்த்து மனுஷன் இப்படியா பார்க்கணும்.... அய்யய்யோ இப்படியே ரெண்டு நாலு போச்சு நானே அவருக்கிட்ட போய்டுவேன் போல... ச்சை... உனக்கு கொஞ்சம் கூட கட்டுப்பாடே கிடையாது சதி..’ தன்னை தானே திட்டிக்கொண்டு அலுவலக அறைக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு வீடு போக முனைந்தாள்.
அங்கே கணக்கில் ஏதோ குளறுபடி என்று சொல்ல, வேகமாய் அந்த கணக்கை டேலி செய்து பார்த்து என்ன சிக்கல் என்பதை கண்டுக்கொண்டு அதை சரி செய்தவள் நிமிர்ந்த பொழுது மணி மூன்றை காட்டியது...
‘பசிக்குதே...’ எண்ணியவள் தண்ணீரை குடித்துவிட்டு அலுவலகம் விட்டு வெளியே வரும்பொழுது கலைக்கூடமே அமைதியாய் இருந்தது...
பாட்டு சத்தம், ஜதி சத்தம், மாணவர்களின் நாட்டிய சத்தம், ஆசிரியர்கள் அடவு சொல்லி தரும் சத்தம் என்று எதுவுமே கேட்கவில்லை...
‘என்ன இது... இவ்வளவு அமைதியாக இருக்கு...’ என்று சுற்றிலும் பார்த்தவள், கொஞ்சம் முன்னோக்கி வகுப்பறைக்குள் சென்று பார்த்தாள்.
ஒரு வகுப்பில் கூட மாணவர்களே இல்லை... பார்க்கிங் ஏரியாவை இங்கிருந்தே பார்த்தாள். அங்கு அவளின் இருசக்கர வாகனமும், குருவின் காரும் மட்டுமே நின்றுக்கொண்டு இருந்தது...
வேகமாய் அலுவலகம் செல்லும் பாதைக்கு திரும்பிய போது அலுவலக அலுவலர்கள் கிளம்பி சென்றுக்கொண்டு இருந்தார்கள்.
‘என்ன ஆச்சு... எதுக்காக லீவ் விட்டு இருக்காரு இவரு...’ என்று எண்ணிய படியே குருவை தேடி அவனது பிரதான கூடத்திற்குள் நுழைந்து தேடினாள்.
அங்கே கைகளை கட்டிக்கொண்டு நடராஜரையே விழியகற்றாமல் பார்த்துக்கொண்டு இருந்தான்... அவனது தோற்றத்தில் மனம் பக்கென்று இருக்க, அந்த சூழலில் அவனை விட்டு போக மனமில்லாமல் அவனை நெருங்கி வந்து, கைகளால் அவனை அசைத்து,
“என்னாச்சுங்க... எதுக்காக எல்லாருக்கும் லீவ் குடுத்து இருக்கீங்க...” என்று கேட்டாள்.
அவளது தொடுகையில் கலைந்தவன் “நீ தானே லீவ் கேட்ட, அதான்...”
“அது நான் எனக்கு மட்டும் தானே கேட்டேன்... ஆனா நீங்க...”
“தனியா இருக்கணும் அதான்...” என்றவன் அங்கிருந்து நகர்ந்து குருங்கன்னிடம் வந்து நின்றான்...
அவனது முகத்தில் தெரிந்த ஏதோ ஒரு உணர்வில் அவளால் அங்கிருந்து விலகி செல்ல முடியாமல் தடுமாற்றத்துடன் அவ்விடமே நின்றாள். நின்றவளின் கண்கள் முழுவதும் குருவின் பிம்பமே பதிந்து கிடந்தது...
அவனோ அவளை சிறிதும் ஏறெடுத்து பாராமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க... சதி அவளையும் அறியாமல் அவனை நெருங்கி வந்தாள்.
வந்தவள் அவனது தோளை தொட போக... மனதுக்குள் சற்றே தயக்கம்... தொடலாமா...? வேண்டாமா...? என்று.
அவள் தொட போகும் முன் சட்டென்று குரு திரும்பிவிட அவளது கை அந்தரத்தில் அப்படியே நின்றது...
அவளையும் அவளது கையையும் பார்த்தவன்,
“என்னை தொட்டா உன்னோட கற்பு போய்டுமாடி... சும்மா தொடுறதுக்கே இவ்வளவு சீன போடுற...” எரிமலையாய் காய்ந்தவனை கண்டு மனதுக்குள் அச்சம் சூழ்ந்தது...
“என்னை என்னன்னு நினைச்சீங்க...” என்று உருமியவனிடமிருந்து விலகி போக முனைந்தாள்.
அவள் அப்படி போகவும் அடக்கி வைத்திருந்த சினம் எல்லாம் ஒட்டு மொத்தமாய் கிளம்பி வெடிக்க தொடங்கியது...
வேகமாய் அவளின் முன்பு வந்து நின்றவன் தீயாய் அவளை உருத்து விழித்தான்.
அவனது விழியில் படர்ந்து இருந்த சினத்தை பார்த்தவளுக்கு நெஞ்சு கூடு பக்கு பக்கென்று அடித்துக்கொண்டது.
“உன்னை டான்ஸ் ஆட தானே கூப்பிட்டேன்.. ஏதோ உன்னை ரேப் பண்ண கூப்பிட்ட மாதிரி அவ்வளவு தயக்கமா வர்ற... இதோ இப்ப கூட என்னை தொட அவ்வளவு யோசிக்கிற... என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல...”
“என்னை பார்த்தா கிறுக்கனா தெரியுதாடி...? நீ என்னவோ என்னை தூக்கி உன் அக்காக்கிட்ட குடுக்குற... அவ என்னடான்னா உன் கிட்ட குடுக்குறா...? என்னை என்ன பொம்மைன்னு நினைச்சீங்களா...? நீங்க வச்சி விளையாடுறதுக்கு... எனக்கும் மனசு இருக்கு, அந்த மனசுல காதல் இருக்குன்னு தெரியும் தானே... தெரிஞ்சு இருந்தும் ஆளாளுக்கு பந்தை உதைச்சி தள்ளுற மாதிரி எத்தி விட்டு விளையாண்டுக்கிட்டு இருக்கீங்க...”
“இது இல்லாம குழந்தை வேற வேணும்னு உன் அக்கா காரி கேட்டுக்கிட்டு இருக்கா...? நீ என்னவோ விரோதி கூட இருக்குற மாதிரி ஒவ்வொரு நைட்டும் என் கூட இருக்க...? என்னடி கொஞ்சம் விட்டா எல்லாரும் ரொம்ப தான் ஆடுறீங்க... நான் ஆட ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க...”
“லந்தா இல்ல லந்தான்னு கேக்குறேன்... என்னோட கோவத்தை நீ இன்னும் முழுசா பார்க்கல... இப்படியே நீ என்னை விட்டு தள்ளி போய்க்கிட்டே இருந்தா அதையும் நீ பார்ப்ப... இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை. இது போல என்னை விட்டு தள்ளி போன அவ்வளவு தான் நீ என்னை மனுசனாவே பாக்க மாட்ட பார்த்துக்க..” உறுமினான்.
அவனது கோவத்தில் மிரண்டவள், சட்டென்று ஓரடி பின்னால் எடுத்து வைத்துவிட்டாள். அதை கண்ணுற்ற குருவுக்கு அதுவே பெரிய அவமானமாய் பட்டுவிட பொங்கி எழுந்துவிட்டான்...
“இவ்வளவு தூரம் சொல்றேன்... மறுபடியும் மறுபடியும் அதே போலவே பண்ற... எது நீ நடக்க கூடாதுன்னு இவ்வளவு நாளும் ஒதுங்கி போனியோ அது இன்னைக்கு நடத்தி காட்டுறேண்டி....” என்று உருமியவன் வன்மையாய் அவளது இதழ்களை கவ்விக்கொண்டான்...
அவனது வன்மையான இதழ் ஒற்றுதலிலும், அடாவடியாய் அவளை உணர தொடங்கியவனின் கைகளின் உரமும் சதியின் தேகத்தை நிலைக்குலைய வைத்தது...
குருவின் காதல்
கோபத்தின் நிறம்....
சதியின் காதல்
சிவனின் வரம்....