எழுந்து உப்பரிகைக்கு சென்று நின்றுக் கொண்டான். அவன் எழுந்து செல்லும் அரவம் கேட்டது. சரி வந்து விடுவான் என்று எண்ணி இருந்தாள். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவன் வராமல் போக இவளும் எழுந்து அமர்ந்தாள்.
லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது. அந்த தூரலில் இரு கைகளையும் மார்பில் கட்டிக் கொண்டு தூரத்து இருளை வெறித்துக் கொண்டு இருந்தவனை காண காண இவளுக்கு உள்ளம் பிசைந்தது.
“போய் என்னன்னு கேட்கலாமா?” என்று எண்ணினாள்.
“வேணாம் மீண்டும் கன்னத்தை பெயர்த்து விட்டா என்ன செய்யிறது” என்று தன்னை தானே அடக்கிக்கொண்டு படுக்கையில் அமர்ந்தாள்.
எல்லாம் கொஞ்ச நேரம் தான். மெதுவாக காலடி எடுத்து வைத்து அவனிடம் விரைந்தாள். அவனுக்கு பின்னாடி போய் நின்றாளே தவிர அவனை கலைக்கவில்லை.
அவள் வந்து நின்றதை உணர்ந்தான். ஆனாலும் அவளை அவன் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.
அதில் லேசாக கடுப்பு வந்தது அவளுக்கு. அட்டிக்கிறதும் அடிச்சுட்டு வீம்பு பண்ணிட்டு இருக்கிறதை பாரு.. வாய்க்குள் முணகிக் கொண்டவள் திரும்பி போக பார்த்தாள்.
ஆனால் கால்களில் ஏதோ இரும்பு குண்டை வைத்து விட்டது போல அவளால் அசைய முடியவில்லை. அவனின் முகத்தில் என்றைக்கும் காணாத இறுக்கம் இன்று தென்பட அவனை நெருங்கினாள்.
அவள் தன்னை நெருங்குவதை உணர்ந்த ஏகன்,
“இங்க இருந்து போடி முதல்ல” அடிக்குரலில் கர்ஜித்தான்.
“என்னால உங்களை விட்டு போக முடியாது” என்று சொல்லி வேகமாய் அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள்.
அதில் அவனது உடல் இன்னும் இறுகியது.
“ஒன்னும் வேணாம் போடி..” என்று உடலை அவன் உதற,
“ப்ளீஸ்ங்க...” என்று கெஞ்சினாள்.
அத்தியாயம் 16
“ப்ளீஸ்ங்க...” என்று கெஞ்சியவள்,
“ஏன் இப்படி முரட்டு தனமா பிடிவாதம் பிடிக்கிறீங்க? உங்களுக்கு என்னை பிடிக்கலையா? அன்னைக்கு கூட உங்கள பத்தின செய்தியை குடுத்துட்டு கல்யாணத்துக்கு ரெடியான்னு கேட்டீங்க? ஆனா அதுக்கு பிறகு உங்களை காணவே காணோம். எங்க போனீங்க... ஏன் என்னை இத்தனை நாளா தனியா தவிக்க விட்டீங்க.. இன்னைக்கு மட்டும் ஜட்ஜ் இடத்துல உங்க அப்பா மட்டும் இருக்கலன்னா இன்னைக்கே செத்து போய் இருந்து இருப்பேன். அந்த இடத்துல உங்க அப்பாவை பார்த்த பிறகு தான் மனசுல தைரியமே வந்தது” என்று விசும்பலுடன் சொல்லிக் கொண்டே அவனை இன்னும் தன் நெஞ்சோடு இறுக்கி கட்டி பிடித்துக் கொண்டாள்.
அவனது தேகத்தில் சின்னஞ்சிறியதாய் மாற்றம் தெரிய,
“என்னை பிடிக்களையாங்க?” ஆதங்கமாய் கேட்டாள் குழலி.
“உனக்கு தான்டி என்னை பிடிக்கல.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல..” என்றான் இறுக்கமான குரலில்.
அவன் சொல்வதை கேட்டவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பட்டென்று அவனை கட்டி பிடித்ததை விட்டுவிட்டு அவனுக்கு முன்னாடி வந்து நின்றாள்.
“நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலயே” பாவமாய் சொன்னவளை கூர்ந்து பார்த்தவன்,
“பேப்பர்ல வந்த நியூஸ் எல்லாமே உண்மை” என்றான்.
“புரியல” என்றாள்.
“அதாவது நான் இந்த நாட்டுக்கு தேச துரோகம் பண்ணி இருக்கேன்...” என்றான்.
அப்பொழுது தான் அவன் எதற்காக கோவப்படுகிறான் என்றே புரிந்தது அவளுக்கு.
“நீங்க தப்பு செய்தீங்கன்னு நான் எப்போ நம்புனேன்” என்றாள் குழப்பமாய்.
“அழுதியே... அது ஒன்னு போதாதா?” என்றான் வெடுக்கென்று.
“ஏதே..” என்று விழித்தாள்.
“அழுதா உங்களை தவறா நினைக்கிறேன்னு பொருளா? லூசா நீங்க” என்று அவனை முறைத்தாள்.
ஏகனும் பதிலுக்கு அவளை முறைத்தான்.
“முறைக்கிறத விடுங்க முதல்ல.. எதுக்கு எடுத்தாலும் நீங்களே ஒன்னை நினைச்சுக்கிட்டு நீங்களே ஒரு முடிவை எடுக்காதீங்க” என்றாள்.
“அப்புறம் அன்னைக்கு எதுக்குடி அப்படி அழுத.. என்னவோ இப்பவே உயிர் போன மாதிரி” ஆத்திரத்தில் வெடித்தான்.
அவனது வெடிப்பு நிலையை பார்த்து தலையை பிடித்துக் கொண்டவள் அவனை இன்னும் பலமாக முறைத்துப் பார்த்தாள்.
“உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லங்க.. மனசு எல்லாம் கல்லா போச்சு போல” என்றவளுக்கு இப்பொழுதும் கண்கள் கலங்கியது.
“ஏய்...” என்றான் கடுப்பாக.
விழிகளில் நீர் நிறைந்துப் போய் அவனை நெருங்கியவள் அவனது சட்டையை இரு கையாளும் பற்றிக் கொண்டவள்,நேருக்கு நேராக அவனது முகத்தை பார்த்து
“ஏன் அழுதன்னு கேட்டீங்களே... அது உங்க நடத்தையை எண்ணி அழல... இப்படி என் புருசன் மேலா ஆபான்டமா பழியை போட்டு அவர் உயிரா நேசிச்ச வேலையை பிடுங்கிட்டாங்கலேன்னு தான் அழுதேன்” என்று சொன்னவளுக்கு இப்பொழுதும் கூட கண்ணீர் வந்தது. அவள் பேச பேச ஏகனுக்கு பெருமையில் நெஞ்சம் லேசாக விரிய ஆரம்பித்தது.
“அதுவும் அந்த நேரம் ஊரே நாடே உங்களை பழிப் போட்டு பேசுச்சே... அதை எப்படி நீங்க தாங்கிக்கிட்டீங்கன்னு நினச்சு தான் அழுதேன். ரொம்ப வலிச்சு இருக்குமேன்னு தான் அழுதேன். ஆனா நீங்க என்னை இவ்வளவு கேவலமா நினைச்சுட்டேங்கள்ள..” என்றவளை கண்கள் மின்ன பார்த்தவன்,
“குழலி” என்று அவளை ஆசையாக நெருங்கினான்.
அவனது கையை தட்டி விட்டவள்,
“ஒன்னும் வேணாம்... எந்த சமாதானமும் வேணாம். இவ்வளவு கேவலமா என்னை நினைச்ச பிறகு உங்களோட வாழ்ந்தா அது எனக்கு தான் அவமானம்.. எதுவும் வேணாம். இப்பவே இந்த நிமிடமே இந்த வீட்டை விட்டு போறேன்..” என்றவள் அவனை தள்ளி விட்டுட்டு அறைக்குள் நுழைந்து வெளியே போக பார்த்தவளை பின்னாடி வேக எட்டுடன் சென்று அவளை வளைத்துப் பிடித்தவன் தன் கைகளுக்குள் அவளை சிறை செய்துக் கொண்டு, கட்டிலில் போட்டவன் அறைக்கதவையும் உப்பரிகை கதவையும் அழுத்தமாக சாற்றி தாழ் போட்டவன்,
“இன்னொரு முறை சொல்லுடி” என்று அவளுக்கு மிக அருகில் நெருங்கிப் படுத்தான்.
“இங்க பாருங்க... இனி உங்களுக்கும் எனக்கு எந்த சந்காத்தமும் இல்ல. என்னை விடுங்க.. நான் போறேன்” என்று முரண்டு பண்ணினாள் குழலி.
“அப்போ அத்தன பேருக்கு முன்னாடியும் என் வாரிசு உன் வயித்துல வளர்றதா சொன்னியே.. எங்க காட்டு நான் பார்க்கிறேன்” என்று அவளின் முந்தானையை பிடித்து இழுத்து கீழே போட்டவன் அவளின் ஆலிலை வயிறை விழிகளால் கூர்ந்தான். விழிகளால் பார்த்தால் மட்டும் போதுமா ஆசை தீர கைகளால் அளந்து பார்க்க வேண்டுமே..
அது மட்டும் போதுமா இதழ்களால் ருசிக்க வேண்டுமே.. இரண்டையும் அவன் செய்ய முனைய, தன் மீது இருந்து ஏகனை தள்ளி விட்டாள் குழலி.
“சாரிடி” என்றான்...
“ஒன்னும் தேவை இல்லை.. இதுல கன்னமே பழுத்து போற மாதிரி அடி வேற...” என்று முறைத்தவள்,
“இங்க பாருங்க உங்க முரட்டு குணத்துக்கு என்னால எல்லாம் ஈடு கட்ட முடியாது. பெட்டர் நீங்க வேற ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி...” முடிக்கும் முன்பே அவளின் இதழ்களை சிறை செய்து விட்டான் ஏகன்.
அவனின் முரட்டு தனமான முத்தத்தில் தன்னை தொலைக்காமல் அவனை அடி அடி என்று அடித்தாள் குழலி. இருந்தாலும் அவன் கொஞ்சமும் அசையவே இல்லை.
அவளின் இதழ்களை தன் இதழ்களுக்குள் இழுத்துக் கொண்டவான் சற்றே வன்மையாக இதழ் முத்தத்தை கொடுக்க கொஞ்சமே கொஞ்சம் அடங்கிப்போனாள்.
அவளின் விழிகளின் ஓரம் கண்ணீர் கசிந்தது. அதை தன் விரல்களால் துடைத்துக் கொண்டே அவளின் இதழ்களை ஆழ்ந்து ருசித்தான்.
அதோடு பெண்ணவளை மெல்ல மெல்ல சமாதனம் செய்ய, விழிகளில் படர்ந்த கண்ணீரோடும் சிவப்போடும் அவனை ஏறிட்டுப் பார்த்தாள் குழலி.
“சாரிடி..” என்றவன் அவளை இழுத்து தன் மார்பின் மீது போட்டுக் கொண்டவன்,
“ஏற்கனவே ஒரு சூடு வாங்கி இருக்கேன்டி” என்றவன், தனக்கு திருமண ஏற்பாடு செய்ய பட்டு இருந்ததும் அது இந்ந்த நீயூசால் கைவிடப்பட்டு போனதையும் சொன்னான்.
அவ என்னை நம்பாம அத்தனை பேர் முன்னாடியும் அவமானமா பேசி அசிங்கப் படுத்திட்டாடி. என்னால தலையை நிமிரவே முடியல. என்னால என் அப்பா வேலைக்கும் நிறைய பிரச்சனை. தங்கச்சிக்கும் கூட வரனே அமையவில்லை. அது தான் என்னை நானே தனிமை படுத்திக்கிட்டேன். என்னால யாருக்கும் எந்த துன்பமும் வேண்டாம்னு என்றான்.
அவனது கடந்த கால காயங்கள் எல்லாம் அவளிடம் பகிர்ந்துக் கொண்டான் ஏகன். அவனை தன் மடியில் சாய்த்து மடி தாங்கிக் கொண்டவள் அவனுக்கு ஆறுதலாக இருந்தாள்.
“ஏன் இப்படி ஒரு நியூஸ் உங்க மேல வந்தது? ஏதும் குறிப்பிட்ட காரணம் இருக்காங்க” அவனின் தலையை தடவிக்கொண்டே இவள் கேட்டாள்.
“எனக்கும் இன்னொரு கமேண்டருக்கும் அடிக்கடிகடி மோதிக்கும். ஆனா அவரு இதை செய்ய வாய்ப்பே இல்லடி” என்றான்.
“அப்புறம் எப்படிங்க? நல்லா யோசிச்சு பாருங்க...” என்று சொன்னவளிடம்,
“இப்போ அதை கிளறி என்ன ஆகப்போகுது விடுடி” என்றவன் அவளை தன் வசம் இழுத்துக் கொண்டான்.
“ப்ச் போங்க இன்னைக்கு எனக்கு மூடு இல்ல” என்று பிணங்கிக்கொண்டாள்.
“அதெப்படி மூடு வரமா போகும்னு நான் பார்க்கிறேன்டி. இன்னைக்கு தான் என் நெஞ்சுல இருக்குற பாரமெல்லாம் இறங்குன மாதிரி இருக்கு. சோ இன்னைக்கு கண்டிப்பா செலப்ரேட் பண்ணியே ஆகனும்” என்று அடமாக நின்றவன் அவளை சலுகையாக எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க, இவளும் அவனுக்கு இசைந்துக் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.
“படுத்துறீங்க” அவனை திட்டியபடியே இறுக்கமாக அணைத்தும் கொண்டாள் பெண்ணவள்.
“இன்னும் ஒண்ணுமே ஆரம்பிக்கல அதுக்குள்ள படுத்துறனாடி?” கேட்டவன் அவளின் உடைகளுக்கு விடை கொடுக்க, சிவந்துப் போனாள்.
வேகமாய் அவனை எடுத்து உடுத்திக் கொண்டவள்,
“விளக்கு அனைங்க” என்றாள்.
“இன்னைக்கு இப்படியே வேண்டும்டி” என்றவன் வெளிச்சத்தில் அவளை பார்த்து ரசிக்க ஆரம்பிக்க, அந்தி வானமாய் அவாளின் முகம் செம்மையுற ஆரம்பித்தது.
“வேணாமே... ப்ளீஸ்” என்று அவனை கெஞ்சலாய் கொஞ்ச,
“எனக்கு வேணும்டி” என்றவன் அவளை அளவுக்கு மீறி இரசிக்க வெட்கம் பிடுங்கி தின்றது அவளை.
“சீ...” என்று தலையணையில் பக்கவாட்டாக முகத்தை புதைத்துக் கொண்டாள். அவளின் வெட்கம் கண்டு வாய் விட்டு சிரித்தவன்,
“ஐ லவ் யூடி” என்று கொஞ்சினான்.
முரட்டு ஆசாமியின் வாயில் இருந்து வந்த லவ் யூவை திகைத்துப் போய் கேட்டவளுக்கு உள்ளம் பூரித்துப் போனது.
அவனை இழுத்து அவனின் இதழ்களை வன்மையாக சிறை செய்துக் கொண்டாள் இந்த முறை குழலி. அதில் அதிகமாகவே மயங்கியவன் விடியும் வரை அவளை விடவே இல்லை.
தன் மோகத்தால் அவளை திணறடித்தான். அவனது மையல் நேரம் கூட கூட அதிகரித்துக் கொண்டே போக குழலியின் பாடு தான் திண்டாட்டமாய் போனது.
போதுமே என்று அவள் கெஞ்சிய கெஞ்சல்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் தான் போனது. ஏகனின் காதில் எதுவுமே ஏறவில்லை. அவனது ஆசையையும் தாபத்தையும் மட்டுமே பார்த்தான்.
அவளின் தாபத்தையும் மோகத்தையும் இவன் தூண்டி துலங்கி விட பெண்ணவளுக்குள் பெரும் பூகம்பம் எழுந்தது. அதை அப்படியே ஆணவனிடம் காட்டினாள். அதில் மகிழ்ந்துப் போன ஏகன் அவளை கொண்டாடி தீர்த்தான்.
“ஐயோ போங்க.. நீங்க ரொம்ப மோசம்...” என்று அவனின் மார்பிலே முகத்தை புதைத்துக் கொண்டாள் குழலி.
அடுத்த சில நாட்களில்...
ஏகனுக்கு தெரியாமலே அவனின் தந்தையோடு சேர்ந்து ஏகன் மீது யார் பழிப் போட்டது எதற்காக போடப்பட்டது என எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கண்டு பிடித்தவர்கள், அதை ஏகனின் உயர் அதிகாரியிடம் சமர்பித்தர்கள்.
ஏகனுக்கு கீழ் பணி புரிந்த திறமை வாய்ந்த ஒருவர் தான் இந்த வேலையை செய்து இருந்தார். ஏகனுக்கு பிறகு அந்த பதவி கிடைக்கும் இடத்தில் இவர் இருந்ததால் ஏகனை பதவி நீக்கம் செய்தால் தனக்கு அந்த வேலை கிடைக்கும் என்று எண்ணி பேராசை கொண்டு இந்த சதி வேலையை செய்து இருக்கிறார் என்று கண்டு பிடித்து, அவருக்கு தக்க தண்டனை வாங்கிக் குடுத்தார் சீதாராமன்.
அதோடு தன் மகனுக்கு ராணுவ வேலை வாங்கி குடுக்கவும் செய்தார். யார் அவனை பணி நீக்கம் செய்தார்களோ அதே அதிகாரிகள் அவனை வேலைக்கு அழைத்தார்கள்.
ஆனால் ஏகப்பன் மறுத்து விட்டான்.
“நான் இங்கயே காவல்துறை வேலை பார்த்துக்குறேன் சார்... உங்க அழைப்புக்கு நன்றி” என்று சொல்லி விட்டு காவாளர் தகுதி தேர்வுக்கு சென்றான் ஏகன்.
அவனின் இந்த முடிவை மதித்தார்கள் எல்லோருமே. அதோடு அன்றைக்கு யார் யாரெல்லாம் பழித்துப் பேசினார்களோ இன்று அவர்களே அவனை நாடி நட்புறவு வளர்க்க ஆசை பட்டார்கள்.
ஏகனுக்கு முதல் முறையாக பார்த்த பெண் கூட அவனுக்கு போன் போட்டு பேசி மன்னிப்பு கேட்டாள். ஏகன் பெருந்தன்மையாக நடந்துக் கொண்டான் எல்லோரிடமும்.
அவனது மொத்த கவனமும் காவல் துறை அதிகாரி பதவியிலே இருந்தது. மறைமுகமாக ராணுவம் அவனுக்கு உதவி செய்தது. அதனால் எடுத்த உடனே அவனுக்கு காவல் துறை உயர் அதிகாரியாகவே வேலை கிடைத்தது.
வீட்டில் இருந்த அனைவருக்கும் அவ்வளவு கொண்டாட்டம் மகிழ்ச்சி... தன்னவளை தூக்கி சுற்றி தன் மகிழ்ச்சியை தெரிவித்தான்.
காக்கி உடை போட்ட பிறகே குழலியின் கழுத்தில் தாலி கட்டினான். அதே போல தன் தங்கைக்கும் நல்ல இடமாய் பார்த்து திருமணம் செய்து வைத்தான்.
வீட்டில் பழைய மகிழ்ச்சி திரும்பி வந்தது. இதற்கு இடையில் பாட்டிக்கும் குழலிக்கும் வாய் தகராறு தினமும் அரங்கேறும். இவர்களுக்கு இடையில் தினமும் பஞ்சாயத்து பண்ணியே ஓய்ந்துப் போனார்கள்.
தங்களின் அறைக்குள் நுழைந்த குழலி,
“இன்னைக்கு உங்க பாட்டி என்னை என்ன சொன்னாங்க தெரியுமா?” என்று கேட்டவளை மேற்கொண்டு பேச விடாமல் அவளின் வாயை அடைத்தான் தன் முரட்டு முத்தத்தால்.
இல்லை என்றால் இன்றைய இரவு முழுவதும் அவள் பேசிக்கொண்டே தான் இருப்பாள் என்ற அபாயம் இருப்பதால் எடுத்த உடனே நல்ல கணவனாக முத்தமிட்டு தன் செவிகளை காப்பாற்றிக் கொண்டான்.
கூடவே நல்ல கூடலையும் நிகழத்திக் கொண்டான்.
“நீங்க சீட் பண்றீங்க” என்றவளை பார்த்து கண்ணடித்தவன்,
“நீயும் சீட் பண்ணுடி... நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்று வசீகரமாக சிரித்தான்.
“போலீஸ் காரனா இருந்துட்டு இப்படி சீட் பண்றது தப்பு இல்லையா?” அவனை முறைத்தாள்.
“லவ்ல எது வேணாலும் செய்யலாம் யூ நோ” என்று கேட்டவன் அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டு அவனுக்கு இடைஞ்சலாய் இருக்கும் அவளின் உடைகளை கலைக்க ஆரம்பித்தான் மீண்டும்.
“எத மறுபடியுமா?” என்று அவள் அலற,
“எனக்கு வேணுமடி தர மாட்டியா?” முறைப்புடன் கேட்டவனுக்கு எங்கிருந்து தராமல் போவது.. தன்னை முழுமையாக அவனுக்கு ஏந்தி கொடுத்தாள்.
அவளின் சொத்துக்களை எல்லாம் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி கொடுத்து விட்டு மேற்பார்வை மட்டும் பார்த்துக் கொண்டாள். அவள் எடுத்த முடிவுக்கு பக்க துணையாக இருந்தான் நெடுங்குழலியின் ஏகப்பன்.
யாருக்கும் கிடைக்காத அரியவகை முத்து திரள் அவள். அவள் மீது தன் ஒட்டு மொத்த காதலையும் நேசத்தையும் காமத்தையும் மையலையும் வைத்து இருந்தான் ஏகன்.
அவனின் மையல் எல்லாம் அவனது முத்து திரள் மீது மட்டுமே..
யார் வந்து அசைத்தாலும் அசையாத நேசம் பூண்டு இருந்தார்கள் ஒருவர் மீது ஒருவர். அவர்களின் நேசத்தின் சாட்சியாக மகவுகள் உண்டாகி அந்த வீட்டையே இன்னும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டது.
இதுவரை இறுக்கமாக இருந்த அந்த வீடு இப்பொழுது முற்றிலும் கலகலப்புடன் காட்சி தந்தது. பூவுக்கு வீட்டோடு மாப்பிள்ளை தான் பார்த்தான் ஏகன்.
அதனால் அவளும் வீட்டோடு இருக்க மகிழ்ச்சிக்கு சொல்லவும் வேண்டுமா? பிரிந்தவர்கள் கூடினால் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது..
ஆனால் இந்த பாட்டி பேத்தி சண்டை மட்டும் ஓயாமல் நீண்டுக் கொண்டே தான் போனது. ஏகனுக்கு அதை கேட்டு கேட்டு காது வலியே வந்தது என்றாலும் இருவரும் சொல்லும் கதையை காது குடுத்து கேட்பான் சலிக்காது.
அன்பான குடும்பம் அமைவது எல்லாம் இறைவன் குடுத்த வரம்.. அந்த வரத்தை இத்தனை நாள்களாக ஒதுக்கி வைத்து இருந்தான் ஏகன். ஆனால் குழலி அவன் வாழ்க்கைக்குள் வந்த பிறகு அந்த வரத்தோடு சேர்த்து காதலையும் கொடுத்து விட்டாள் வாழ சொல்லி.
ஏகனும் வாழ ஆரம்பித்து விட்டான் எந்த வித மன சிக்கலும் இல்லாமல். அதற்கு காரணமான தன் மனைவியை கொஞ்சி கொஞ்சி காதலால் மோகத்தால் மையலால் சிதரடித்தான் தினம் தோறும்..
அனைவருக்கும் நன்றி...!
வளமுடன் வாழ்க..!
ஏகனின் மகிழ்ச்சியை பார்த்துக் கொண்டே நாமும் கிளம்புவோம். அடுத்த புது கதையோடு சந்திக்கிறேன். ஆதரவு குடுக்கும் அணைத்து தோழமைகளுக்கு எனது நன்றிகள்...!
Aww super, nice ending🤩