வெடுக்கென்று ஏகனை பார்த்தாள். அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்து விட்டான்.
“இங்க பாருங்க உங்க பாட்டி என்ன சொல்றாங்கன்னு” என்று கேட்டவளை முறைத்துப் பார்த்தான்.
“அங்க என்னடி என் பேரன் கிட்ட கொஞ்சுற.. இங்க என்னை பார்த்து பேசு” என்று அவளை வம்புக்கு இழுக்க, குழலி உதட்டை சுளித்தாள்.
“உங்களுக்கு ஒன்னும் நான் பதில் சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை.. என் புருசனுக்கு என்னை பிடிச்சா போதும். உங்களுக்கு பிடிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை” வெடுகென்று பேசினாள்.
“இங்க பார்த்தியாடா நீ கூட்டிட்டு வந்த பொண்ணை” என்று ஏகனிடம் பாட்டி கூற,
“எது கூட்டிட்டு வந்த பொண்ணா. நான் அவரோட பொண்டாட்டி” என்றாள் கடுப்பாக.
“நீ ஊரை வேணா ஏமாத்தலாம்டி. ஆனா என்னை ஏமாற்ற முடியாது” என்று சொன்னவர்,
தன் பேரனிடம் போய்,
“டேய் கண்ணா நீ இந்த லம்பாடியை கல்யாணம் கட்டிக்கல தானேடா” என்று ஏக்கமாக கேட்டார்.
“அங்க அவர் கிட்ட என்ன பேச்சு... எதுவா இருந்தாலும் என்கிட்டே பேசுங்க. அவருக்கு ஒன்னும் தெரியாது” என்று சொன்னவளை முறைத்துப் பார்த்தான் ஏகன்.
“பார்த்தியாடா கண்ணா நீ இருக்கும் பொழுதே இவ எப்படி பேசுறான்னு?”
என்று ஆளுக்கு ஒரு பக்கமாய் அவனை இழுத்து வச்சு பேச இருவரையும் முறைத்துப் பார்த்தான் ஏகப்பன்.
“நல்ல வேலைக்கு இனி இந்த கிழவி தொல்லை எனக்கு இருக்காது.. எங்க இருந்து வந்தாளோ மகராசி... நல்லா இருக்கணும்.” என்று ஜானகியை குறும்பு சிரிப்புடன் பார்த்தாள் பூவிதா.
“என்னம்மா அண்ணி வந்த உடனே உங்க மிகப்பெரிய பிரச்சனையை தீர்த்துட்டாங்க போல” என்று கேலி செய்தாள்.
“இல்லையா பின்ன... தினம் தினம் இந்த கிழவி எதுக்கு தான் என்கிட்டே வம்புக்கு வருதுன்னே தெரியாது. கைப்பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்னு எத்தனை வருடமா என்னை போட்டு படுத்தி எடுத்துருச்சு. அதுக்கு இன்னைக்கு தான் விடிவு காலம் வந்து இருக்கு என் மருமக ரூபத்துல. இனி கிழவியோட மொத்த கவனமும் என் மருமக மேல தான். என் பக்கம் திரும்பாது” என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.
“ம்மா இப்ப தான் மருமக வந்து இருக்கு... நீ மிரட்டி பேசி அந்த பெண்ணை இன்னக்கே பயம் காட்டாத” என்ன்று சீதாராமன் தான் பாட்டியிடம் இருந்து அவளுக்கு விடுதலை வாங்கி குடுத்தார்.
“ஆமா ஆமா அப்படியே பயந்துட்டாலும்.. இவ உன் பொண்டாட்டி மாதிரி இல்லடா.. அவ தான் நான் என்ன சொன்னாலும் வாயையே திறக்க மாட்டா. ஆனா இவா வாய்க்கு வாய் எதிரித்து பேசுறா.. எங்க இருந்து தான் இவளை உன் மகன் பிடிச்சானோ சரியான லம்பாடி” என்றார் பாட்டி.
“ஏதே மறுபடியும் லம்பாடியா?” நெற்றி கண்ணை திறந்தாள் குழலி.
“அவங்க அப்படி தான் அண்ணி.. நீங்க வாங்க...” என்று அவ்விடத்தை விட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்றவள்,
தன் உடைகளில் ஒன்றை குடுக்க,
“சேரி எதுவும் இல்லையா பூவி” என்று கேட்டாள்.
“உங்களுக்கு சேரி தான் பிடிக்குமா அண்ணி” கேட்டவள், அவள் கட்டாத சில புடவைகளை கொண்டு வந்து குடுத்தாள். இரவிக்கை மட்டும் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணனும். நீங்க குளிங்க. நான் செய்து குடுக்கிறேன்... என்று புடவைகளை எடுத்து குடுத்தாள்.
“சரி பூவி” என்று சொன்னவள் “உன் அண்ணன் அரை எங்க இருக்கு?” என்று கேட்டு அவனது அறையில் போய் குளித்தாள்.
ஏகனையும் போய் குளித்து விட்டு வர சொல்ல, பெருமூச்சு விட்டவன் எழுந்து அவனது அறைக்கு சென்றான். அங்கே குழலி இருப்பது தெரியாமல் இவனும் உள்ளே வந்து உடைகளை கலைந்து விட்டு குளியல் அறைக்குள் நுழைந்தான்.
அவன் இப்படி பட்டென்று வருவான் என்று அறியாதவள் மார்போடு நழுவிய பாவாடையை இறுக்கி பிடித்துக் கொண்டவள் அவனை முறைத்தாள்.
அதுவரை அவளை பற்றி எண்ணி இறாதவன் அவளை இங்கே தன் அறையில் பார்த்தவனுக்கு மறைந்து இருந்த கோவம் சடுதியில் அதிகம் ஆனது.
“ஏய் இங்க என்னடி பண்ற? அது தான் கோர்ட்டுல உன்னை காப்பாத்தி விட்டுட்டேன் ல அப்படியே போக வேண்டியது தானே. எதுக்குடி என் வீட்டுக்குள்ள வரை வந்து இருக்க” கடுப்படித்தான். அவன் இப்படி கேட்கவும் கோவப்பட்டவள்,
“ஹலோ மிஸ்டேர் ஏகப்பன் இங்க கோவமா இருக்க வேண்டீயது நான்.. நீங்க இல்ல... அதென்ன எப்போ பாரு நீங்களே எல்லா இடத்திலும் கோவப்படுறீங்க. அதென்ன உங்க ப்ராப்பெர்ட்டியா? எங்களுக்கும் கொஞ்சம் விட்டு வைங்க” நக்கல் பண்ணினாள்.
“என்னடி இங்க வந்த பிறகு வாய் ரொம்ப தான் பேசுற? என்ன பயம் விட்டு போச்சா?” கடுப்படித்தான். அவனது பார்வை மொத்தமும் அவளிடம் தான். அதுவும் இப்படி அறையும் குறையுமாக குளித்துக் கொண்டு இருப்பவளை காணுகையில் இவனுக்கு தான் மூச்சு இறைந்தது.
“நான் எப்பவும் போல தான் இருக்கேன். நீங்க தான் இடத்துக்கு தகுந்த மாதிரி அப்பப்போ பச்சோந்தி மாதிரி மாரிக்கிறீங்க மிஸ்டர்” என்று முடிக்கும் முன்பே அவளை ஓங்கி அறைந்து இருந்தான் அவன்.
“யார பார்த்துடி பச்சோந்தி ன்னு சொன்ன.. பொண்ணுங்க நீங்க தான்டி இடத்துக்கு தகுந்த மாதிரி சூழலுக்கு தகுந்த மாதிரி உங்க மனசை மாத்திக்கிறீங்க. ஆம்பளைங்க நாங்க தான் உங்களையே நினைச்சுக்கிட்டு இருக்கோம்” என்றவன்,
“போடி” என்று விட்டு அவன் வெளியே போய் விட்டான்.
அவன் அடித்த அடியிலும் பேசிய பேச்சிலும் பெரிதாக அதிர்ந்துப் போனவளுக்கு கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.
அதன் பிறகு குளித்து விட்டு வெளியே வர பூவி நின்று இருந்தாள்.
குழலியின் ஒரு கன்னம் அப்பட்டமாய் வீங்கி இருந்தது. அதோடு கை விரல் அச்சு அப்படியே படிந்து இருக்கக் கண்டு பதறிப் போனவள் தாயிடம் சொல்ல கீழே ஓடினாள்.
புடவை மாற்றிக் கொண்டு கீழே வந்தவளை படி ஏறி வந்தவன் பாதியிலே எதிர்க் கொண்டான். அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் தலையை குனிந்துக்கொண்டே கீழே இறங்கி வந்து விட்டாள்.
வந்தவளை ஏகனின் மொத்த குடும்பமும் சூழ்ந்துக் கொண்டது.
“அந்த முரட்டு பையன் உன்னை அடிச்சனா தங்கம்” என்று பாட்டி அவளின் கன்னத்தை வருடி விட, கண்களில் மீண்டும் கண்ணீர் குளம் கட்டியது.
“அவன் கிடக்குறான்.. சரியான காட்டான்.. நீ வா தங்கம் அவனை அடிச்சுடுறேன்” என்று சொன்னவரை பார்த்து லேசாக சிரித்தவள் அவரின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
“என் தங்கம்...” என்று அவளை கொஞ்சியவர்,
தன் மகனிடம் கண்ணை காண்பித்தார் செண்பகம். சீதாராமன் தலையை ஆட்டியவர் மகனிடம் பேச சென்றார். அதற்குள் மாமியாரும் நாத்தனாரும் அவளுக்கு மருந்தை எடுத்துக் கொண்டு வந்து பூசி விட்டார்கள்.
அவர்களின் அன்பில் நெகிழ்ந்தவளுக்கு அவளின் குடும்பம் நினைவுக்கு வந்தது. அவளின் கண்ணீரை துடைத்து விட்ட பாட்டி,
“உன் கதையை என் மகன் சொன்னான் தங்கம். நீ எதுக்கும் கவலை படாத... உன் குடும்பமா எங்களை நினைச்சுக்க. நாங்களும் உன் குடும்பம் தான் த்தா” என்று சொன்னவர் அவளை தன் மடியில் சாய்த்துக் கொண்டார்.
ஏகனை பார்க்க வந்த சீதாராமன் அவன் குறுங்கண் ஓரம் நின்று இருப்பதை பார்த்து,
“தம்பி” என்று அவனின் கவனத்தை திருப்பினார்.
“ப்ச்...” என்று சலித்தவன் “நான் அவசரப் பட்டுட்டேன் போதுமா?” என்றான் கடுப்பாக.
“தம்பி” என்று அவர் மேலும் எதோ சொல்ல வரா,
“கொஞ்ச நேரம் என்னை தனியா விடுங்க.. ப்ளீஸ்” என்று அவரை பேசவே விடாமல் மொட்டை மாடிக்கு போய் விட்டான்.
பெருமூச்சு விட்டவர் கீழே வந்து விட்டார்.
இரவு உணவுக்கு எல்லோரும் ஒன்றாக கூடினார்கள். குழலி அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. அதே போல அவனும் அவளை பார்க்கவே இல்லை. இருவரும் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டே இருந்தார்கள்.
இருவரும் எதிரெதிர் திசையில் இருப்பதை பார்த்து மற்றவர்களும் எதுவும் பேசவில்லை.
ஜானகி குழலியை தன்னோடு படுக்க வைத்துக் கொண்டார். ஆனால் பாட்டி தான் அதட்டி ஏகனின் அறையில் விட்டார்.
“வேணாம் பாட்டி” என்று இவளும் மறுக்க,
“அவன் உன் புருசன் தானே” என்று கேட்டார் விடாபிடியாய். அவள் ஆமாம் என்பது போல தலையை ஆட்ட,
“அப்போ உங்க பிரச்சனையை நீங்க தான் பேசி தீர்த்துக்கணும். உங்க பிரச்சனை இந்த நாலு சுவரை தாண்டி வெளியே வரக்கூடாது. அதோட புருசன் பொண்டாட்டி பிரச்சனை உளை வைக்கும் பொழுது இருந்தா அது சோறு வடிக்கிறதுக்குள்ள தீர்ந்து போயிடனும்..” என்று அறிவுரை கூறி விட்டு சென்றார்.
ம்கும் உங்க பேரனை வச்சுக்கிட்டு எங்க இருந்து சமாதனம் ஆவது.. எண்ணிக் கொண்டவள் அவன் வரும் முன்பே கட்டிலில் ஏறி படுத்து கண்களை அலுத்தமாக மூடிக் கொண்டாள்.
ஏகன் உள்ளே வந்தான். வந்தவன் அவள் தூங்குவதை ஒரு பார்வை பார்த்தவன் விளக்கை அனைத்து விட்டு அவளுக்கு அருகில் படுத்துக் கொண்டான்.
அவன் அருகில் படுக்கும் அரவம் கேட்டு உள்ளுக்குள் பல பூகம்பங்கள் கிளம்பியது. இது தான் முதல் முறை இருவரும் ஒன்றாக ஒரே இரவில் படுத்து துயில் கொள்வது. இதற்கு முன்பு எல்லாம் இரவு முழுக்க முழுக்க பயிற்சி மட்டும் தான் நடக்கும்.
அதன் பிறகு பயிற்சியோடு சில நேரம் கூடல் நடக்கும். ஆனாலும் ஒரு முழு இரவு இருவரும் ஒன்றாக படுத்து இருந்ததே இல்லை. இப்பொழுது அந்த சந்தர்ப்பம் வாய்க்க அவளுக்குள் பெரும் பிரலயம் வந்தது.
இந்த பக்கம் படுத்து இருந்தவனுக்கு தூக்கம் எட்டா தூரம் போக எழுந்து அமர்ந்தான். அவனால் படுக்கவே முடியவில்லை. ஏனோ படுக்கை எல்லாம் முள் விரித்தது போல இருந்தது. தன் அருகில் எந்த கவலையும் இல்லாமல் படுத்து இருப்பவளை கண்டு லேசாக கோவம் கூட வந்தது.
எழுந்து உப்பரிகைக்கு சென்று நின்றுக் கொண்டான். அவன் எழுந்து செல்லும் அரவம் கேட்டது. சரி வந்து விடுவான் என்று எண்ணி இருந்தாள். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவன் வராமல் போக இவளும் எழுந்து அமர்ந்தாள்.
லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது. அந்த தூரலில் இரு கைகளையும் மார்பில் கட்டிக் கொண்டு தூரத்து இருளை வெறித்துக் கொண்டு இருந்தவனை காண காண இவளுக்கு உள்ளம் பிசைந்தது.
அட ஏகா, பேசு டா எப்ப பாரு....இப்படி இருக்காமவே இருக்காத