தன் முன் கிளம்புவதற்கு தயாராய் நின்றவளை வேதனையுடனும் கோவத்துடனும் பார்த்தான்...
“இப்போ எதுக்காக நீ வீட்டை விட்டு போறன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...? நேற்றைக்கு சண்டை போட்டதுக்கு இன்னைக்கு கிளம்பி போறியா...?” ஒரு மாதிரி ஏளனமாக கேட்டான்.
அவனது அந்த ஏளனத்தில் கோவம் கொண்டவள்,
“எனக்கு சண்டை போட்டு வீட்டை விட்டு போகணும்ன்ற எண்ணமெல்லாம் கிடையாது... ஆனா ஒரு சிலர் செய்யிற விஷயங்கள் எனக்கு பிடிக்கல... அதனால போறேன்.” என்றாள்.
“யாரது... என்ன விசயம் பண்ணாங்க... தெளிவா சொல்லுடி...”
“நீங்க தான்...” என்றாள் பட்டென்று.
“நானா நான் என்ன பண்ணுனேன்...”
“நீங்க தான்... அவார்ட் மேனேஜ்மென்ட்ல உங்களை ஆட சொல்ல சொல்லி இருந்தாங்களாமே... ஏன் மறுத்தீங்க...”
“ஆட முடியாது... அதனால நான் ஆட மாட்டேன்னு சொன்னேன்... அவ்வளவு தான் இத ஒரு இஷ்யுவா எடுத்துக்கிட்டு நீ ஆடாத...” என்றான்
“வாட் ஆடுரனா... இங்க பாருங்க பழசையே நினைச்சிக்கிட்டு இருக்குறதுல எந்த பிரயோசனமும் இல்ல... ஒழுங்கா ஆபர் வரும்போதே எல்லாத்தையும் யூஸ் பண்ணிக்கோங்க... இல்லன்னா நீங்க ஒரு நாள் அந்த ஆபரை எல்லாம் தேடி போகிற நிலைமைக்கு தள்ளப்படலாம்...” என்று ஞானி போல சொன்னவளை ஏளனமாக பார்த்தவன்,
“ஒரு நாள் நான் ஆசை பட்டு ஸ்டேஜ் ஏறுனதையே என்னால மறக்க முடியாத அளவுக்கு கொண்டு வந்துட்ட... இதுல நான் இன்னும் ஸ்டேஜ் ஏறனுமா...? இந்த ஸ்டேஜ் ன்னு இல்லடி.. இனி எந்த ஸ்டேஜ்ளையும் ஆட மாட்டேன்...” என்றான் உறுதியாக...
“ஓ... ரொம்ப தீர்க்கமான முடிவா எடுத்துட்டீங்க போல...?”
“ஆமா... நான் ஆடனும்னா அதுக்கு நீ வேணும்... ஆனா உன்னோட ஒரு ஸ்டேஜ் ஷோ கூட ஆட மாட்டேண்டி... அதான் முடியாதுன்னு சொல்லிட்டேன்...” என்றவனை கோவத்துடன் பார்த்தவள்,
“கண்டிப்பா உங்களை ஸ்டேஜ் ஏத்தி விட தான் போறேன்... அதை நீங்க பார்க்க தான் போறீங்க...” என்று சவால் விட்டவளை கூர்ந்து பார்த்தவன்,
“அப்படி ஒரு நிலை வந்தா நான் உயிரோடவே.....” சொல்லி முடிக்கும் முன்பே அவனது வாயை அடைத்தவள்,
“முடியாதுன்னு மறுக்குறது உங்க உரிமை. ஆனா அதுக்காக தகாத வார்த்தையெல்லாம் பேசாதீங்க... உங்களை வற்புறுத்தல... ஆனா என்னைக்கோ நடந்தை...” பேசி முடிக்கும் முன்பே
“நான் ஸ்டேஜ் ஏறாததுணால தான் நீ உன் அப்பன் வீட்டுக்கு போறன்னா போய்க்கோ... எனக்கு அதுல எந்த வருத்தமும் கிடையாது... எப்பவும் போல என் காதல் அனாதை தான்...” என்றவன் தன் அறையை விட்டு வெளியே கிளம்பி சென்றுவிட்டான்.
அவன் அப்படி கிளம்பி சென்றதை வலியோடு பார்த்தவளின் கண்கள் கண்ணீர் சொரிந்தது...
எவ்வளவு பெரிய வார்த்தையை அசால்ட்டாய் சொல்லி விட்டான்... அவளால் அதை தானகவே முடியவில்லை... அவளுடைய அப்பாவையும் அம்மாவையும் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைத்தவள் அவனுடைய அறையிலே படுத்துக்கொண்டாள்.
நேற்றைக்கு போலவே இன்றைக்கும் தாமதமாக வந்தவன் விடிவிளக்கை போட்டான். அந்த மெல்லிய வெளிச்சத்தில் கட்டிலுக்கு கீழே அவள் படுத்து இருப்பதை கண்டவன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்து அவளிடம் படுத்துக்கொண்டான்.
அவனது வருகையை உணர்ந்தவளோ அவனை திரும்பி கூட பார்க்கவில்லை. அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் எப்பொழுதும் போல அவளை அனைத்து தன் வேலையை தொடங்க விழிகளின் ஓரம் கண்ணீர் நிரம்பியது...
அதை தன் இதழ்களால் ஒற்றி எடுத்தவன்,
“பிடிக்கலையா...?” என்றான் விலகியபடியே.
“இல்ல...” என்றவள் அவனை இழுத்து அவனின் தோள் வளைவில் தன் முகத்தை பதித்துக்கொண்டாள் வேதனையுடன்.
“ப்ச்... அப்புறம் வேற என்ன...” கடுப்படித்தான்.
“எதுக்காக அப்படி சொன்னீங்க...” என்றாள்.
“எப்படி சொன்னேன்...” என்றவன் அவளது உடைகளை கலைக்க தொடங்க... அவனுக்கு ஒத்து இசைந்த படியே
“அனாதைன்னு... தான். என்னால அதை தாங்கவே முடியல தெரியுமா...? அவ்வளவு எளிதா சொல்லீட்டீங்க...” என்றவளின் கண்ணீர் அவனது தோளை நனைக்க,
“நீ செஞ்சதை விட அதிகமா நான் எதுவும் செய்யலடி... வெறும் வாய் வார்த்தையா சொன்னதுக்கே உனக்கு இந்த அளவுக்கு வலிக்கிது... ஆனா நான் என் கையாலேயே உன் உதிரத்தை தாங்கியவன்டி... அப்போ எனக்கு எப்படி வலிச்சு இருக்கும்னு நீ யோசிச்சு பார்த்தியா...? இல்லையே...”
“உனக்கு உன்னோட வறட்டு கெளரவம் தான் முக்கியமா போச்சு... என்னால இன்னும் அந்த நொடியில இருந்து மீளவே முடியலடி... அர்த்த ராத்திரியில கனவுல பாதி நேரம் உன்னோட உதிரம் தான் வருது... அதை பார்த்து அடிச்சி பிடுச்சி எழுந்து பல நாள் என்னோட தூக்கத்தை தொலைச்சி இருக்கேன் தெரியுமா...? ஆனா உனக்கு ஒரு வார்த்தையை கூட தாங்கிக்க முடியல...”
“ஆனா நான் மட்டும் உயிர் போற வலியை ஒவ்வொரு நாளும் தாங்கிக்கிட்டு இருக்கணும் இல்ல... இதுல பெருசா காதல் காதல்னு வேற சொல்ற... என்னடி உன் காதல்ல இருக்கு... ஒரு மண்ணும் கிடையாது... வெறும் திமுரு மட்டும் தான் இருக்கு...” என்றவன் வலிக்க வலிக்க தன் ஆத்திரம் தீரும் வரை அவளை உண்டு இல்லை என்று பண்ண தொடங்கியவன், அதை முழுவதும் செயல் படுத்த முடியாமல் விலகி படுத்துக்கொண்டான்.
அவ்வளவு ஆத்திரம் வந்தது அவனுக்கு. ஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அவளை காயப்படுத்த முடியாமல் அவனின் காதல் வந்து விழ, விலகி படுத்துக்கொண்டான்.
அவன் எப்படி விட்டானோ அப்படியே அந்த நிலையிலே இருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் அது பாட்டுக்கு வழிந்துக்கொண்டு இருந்தது..
கழுத்தை மட்டும் திருப்பி அவனை பார்த்தாள். கட்டுப்படுத்திக்கொண்ட கோவத்துடன் கண்களின் மேல் கையை வைத்து படுத்து இருந்தவனின் தோற்றமே சொன்னது அவனுடைய ஆத்திரத்தின் அளவை...
அவள் திரும்பி பார்ப்பதை உணர்ந்தும் எதுவும் செய்யாமல் கோவத்துடன் இருந்தவனை கண்டவளுக்கு வேதனையாய் இருந்தது...
“நான் திமிருல இருந்தனா... என்னோட காதல் வெறும் திமிர் தானா...? அப்போ நீங்க ஒரு முறை கூட என் காதலை உணரவே இல்லையா...? இல்ல என் காதல் தான் உங்க கண்ணுக்கு தெரியவே இல்லையா...?” கண்களினாலே வேதனையுடன் அவனை பார்த்து கேட்டாள்.
இருவரது வேதனைக்கும் காரணமான சம்பவமோ கடந்து போன நிகழ்வுகளில் இறுதியில் நிறைந்து இருந்தது...
குருவுக்கோ அன்றைய நாளின் கோரம் கண் முன் வரவே அவனால் இயல்பாக இருக்கவே முடியவில்லை... வாழ்நாள் முழுமைக்குமான வேதனையை அன்றைய ஒரு நாளில் சதி குருவுக்கு கொடுத்து இருந்தாள். ஆனால் சதியோ அன்றைய நாளை பொக்கிசமாய் பொதித்து தன் உயிரல் வைத்து இருந்தாள்.
ஒரே சம்பவம் தான் ஆனால் இருவரது கருத்திலும் வேறு வேறுவிதமாய் பதிந்து போனது...
மெல்ல மெல்ல விடியலை எதிர்பார்த்து இருந்த இரு ஜீவனும் கடந்த கால நினைவுகளில் பயணம் போக தொடங்கினார்கள்.
குருவுக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது தான் ஆர்வம்.. அதனாலே குமாரின் பிசினெஸ் தம்பி நவீனிடம் ஒப்படைத்துவிட்டு தனக்கு பிடித்தமான நடனத்தில் கவனமானான்..
கிராமப்புற கலைகளில் இருந்து, பரதம், குச்சிப்புடி, கதகளி, மோகினி ஆட்டம், ஒடிசி, மணிபூரி, பாலே, டிஸ்கோ, போல்கா, லம்பாடா, லிம்போ, சால்சா, தாங்கோன்னு பல நடனங்களை பயின்று மிக பெரும் நடன கலைஞர் ஆனான்...
அவன் எவ்வழியில் சென்றானோ அதே வழியில் சதியும் செல்ல, வீட்டில் பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லை... எப்படியும் குரு சதியை பார்த்துக்கொள்ளுவான் என்று தெரியும் அதலால் பெரிதாக யாரும் கண்டுக்கொள்ளவில்லை...
முதலில் அரங்கேற்றம் பண்ண ஆரம்பித்தவன், அதன் பின் தான் கற்ற நடனங்களை பயிற்றுவிக்க தொடங்கினான்... அதன் கூடவே முத்தமிழ் மன்றம், செம்மொழி மன்றம், கலாச்சார நிகழ்வுகளில் என்று தொடங்கி பல மேடைகளில் அவன் ஆட தொடங்கினான்.
அவனது சிறப்பான நடனத்தை கண்ட சினிமா துறையினரும் அவனது திறமையை தங்கள் படத்தில் பயன்படுத்திக்கொள்ள தொடங்கினார்கள்.
அதன் படி அவனது நடனம் இன்னும் வேறு ஒரு பரிமாணத்தில் மிளிர ஆரம்பித்தது... அவனிடம் நடனம் கற்க வென்றே பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் விரும்ப, அவர்களுக்கும் தனியாக நடனம் சொல்லி கொடுக்க ஆரம்பித்தான்.
இந்திய அளவில் நடக்கும் அனைத்து நடன போட்டிகளிலும் கலந்துக்கொண்டு பரிசுகளை வாங்க தொடங்கினான். அதோடு இல்லாமல் பல ஆசிய படங்களுக்கு கோரியோ பண்ண தொடங்கினான்... அதன் படி சில வெளிநாட்டு பாரம்பரியமான நடனங்களையும் கற்க தொடங்கி பல விருதுகளை வாங்கி குவித்தான்.
ஆனால் அவனுக்கு ஆசிய அளவில் நடக்கும் நடன போட்டியில் கலந்துக்கொண்டு விருது வாங்க வேண்டும் என்று ஆசை...
அதனால் அந்த போட்டிக்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டான்.
கூடவே சதியை தன்னுடைய அசிஸ்டெண்டாக வைத்துக்கொண்டு, அவளுக்கும் முழுமையாக நடனங்களை பயிற்றுவித்தான்.
அவன் நடன போட்டிக்காக வெளியே செல்லும் போது கலைக்கூடம் முழுவதும் அவள் மேற்ப்பார்வையில் தான் இருக்கும்.
அவனது நோக்கம் எல்லாமே நாட்டியம் தான். அதனால் சதி தான் முழுமையாக கலைக்கூடத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் சரி பார்த்து, முறையாக அட்டவணை போட்டு சீர் செய்து அழகாக வடிவமைத்தாள்.
அவள் கைவசம் வந்த உடன் இன்னும் பல அட்மிசன் ஆனாது... அவள் பல நேரம் குருவுடன் ஷூட்டிங் போவது போல இருந்தால் ராக்கி அனைத்தையும் மேற்பார்வை செய்வான்.
அதன் படி அவனுக்கு பழக்கி இருந்தாள் சதி.
இருவரும் நடனத்திலே முழு கவனத்தையும் வைத்து இருக்க, இரு வீட்டின் பெரியவர்களும் அவர்களை கல்யாணம் செய்துக்கொண்டு என்ன வேணாலும் செஞ்சுக்கோங்க என்று கண்டிப்புடன் சொல்லிவிட,
குரு சதியை ஒரு பார்வை பார்த்தான். சிறுவயதிலிருந்தே இருவருக்கும் ஒருவரின் மேல் ஒருவருக்கு பிடித்தம் அதிகம்... அதனால் தான் சதியே குருவினை பின் பற்றினாள்.
அதில் குருவுக்கு அவ்வளவு பெருமை... தன் மனம் கவர்ந்தவள் தன்னை போலவே ஆசைக்கொள்ளுவதை பார்த்து ஆர்வத்துடன் அவளுக்கு நடனத்தை பயிற்று வித்தான்.
அதே போல எத்தனை பேர் அவனுக்கு உதவி நடந் இயக்குனராக இருந்தாலும் அவனுக்கு சதி வேண்டும்...
அவனுக்கு அவள் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்று ஒரு மாயை... அவள் இல்லாத நடனங்கள் எல்லாமே உயிர் இழந்ததை போல தான் தோன்றும்... அதனாலே சின்ன மூவ் என்றாலும் சதி அவனுக்கு வேண்டும்...
அவனது எண்ண போக்கை உணர்ந்தவளோ முழுவதுமாக அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தாள். அதனாலே அவனுக்கு எந்த ஒரு சிரமமுமே இருந்தது இல்லை. அந்த அளவுக்கு சதி தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்துக்கொண்டு இருந்தாள்...
இப்பொழுதும் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறாள். இனி எப்பவும் கொடுப்பாள்.
குரு சம்மதமாய் அவளை பார்த்தான்.
அவள் “ம்ம்ம்” என்று சொல்லிவிட, அவர்களுக்குள் பகிர படதா காதல் அப்படியே இருந்தது... கல்யாண வேலைகளும் தொடங்கியது...
அப்பொழுது தான் சதியின் அக்கா தீபா வந்து
“எனக்கும் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசையா இருக்கு... மாமா நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா...?” என்று குருவிடம் கேட்டாள்.
அழ அப்படி கேட்பாள் என்று தெரியாத குரு திகைத்து தான் போனான்... குரு என்று இல்லை... வீட்டிலிருந்த அத்தனை பேரும் திகைத்து தான் போனார்கள்.
“தீபா நீ என்ன கேக்குறன்னு உனக்கு புரியுதா...?” சேகர் தான் எல்லோரையும் முந்திக்கொண்டு கேட்டார் அவளிடம்.
“புரியுது ப்பா... ஆனா எனக்கு குரு மாமாவோட கல்யாணம் நடக்கணும்...” என்று உறுதியாக சொன்னாள்...
இவ என்ன திடீர்னு வந்து இப்படி கேட்கறா?????