Notifications
Clear all

அத்தியாயம் 12

 
Admin
(@ramya-devi)
Member Admin

தன் உணர்வுகளையும், ஏமாற்றங்களையும் கொட்டி கவிழ்த்தவள் சட்டென்று அமைதியாகி போய் குருவின் பிடியிலிருந்து விலகி நின்றாள்.

அவளது அமைதியான முகத்தை கண்டவனுக்கு மனம் பாரமாய் போனது.

“மன்னிச்சிடுங்க... நான் என்னையும் அறியாம ஏதேதோ பேசி உங்களையும் கஸ்ட்டப்படுத்திட்டேன்... அழுத்தி வைக்க வைக்க அது எப்பவாவது இப்படி வெளியில வந்துடுது...” என்று முகத்தை அழுத்தி துடைத்தவள் வெளியே போக பார்த்தாள்.

அவளது கையை பிடித்து தடுத்தவன்,

“இதுல உன் தவறு எதுவும் இல்லடி... ஆனா நீயும் ஒரு பார்ட்... நடந்ததை எப்பவும் மாத்த முடியாது... ஆனா நடக்குறதை ஏத்துக்க பழகு... அது தான் நல்லது... எல்லாத்தையும் மறந்துட்டு இந்த அவார்ட் நிகழ்ச்சிக்கு உன்னோட பங்கை கொடு... எல்லாமே தானே சரியா போகும்...” என்று அவளை தேற்ற,

அவளுக்கு மட்டுப்பட்டு இருந்த சினம் தலை தூக்கியது... “நான் என்ன செய்தேன்.. என்னை ஏன் ஒரு காரணமா ஆக்குறீங்க... என்னோட அக்கா உங்களை ஆசைப்பட்டதுக்கு நான் என்ன பண்ணேன்.. இல்ல நீங்க அவ கழுத்துல தாலி கட்டுனதுக்கு என்னை ஏன் ஒரு காரணமா ஆக்குறீங்க... இதுல நான் எங்க இருந்து வந்தேன்... பண்ணது எல்லாமே எங்க அப்பா, என் அக்கா, நீங்க... ஆனா பழி கடைசியில என் மேல.. நல்லா இருக்கு உங்க நியாயம்.” ஒரு வேகத்தில் வெடித்தவள்,

அவனது சட்டை காலரை பிடித்து “என்ன காரணமாக்க உங்களுக்கு எப்படி மாமா மனசு வந்தது... உங்க மனசுல கொஞ்சம் கூட நான் இல்லையா...? என்னோட காதல் தான் உங்களுக்கு தெரியவே இல்லையா...?” வேதனையுடன் கேட்டவளை கண்டு அவ்வளவு ஆத்திரமாய் வந்தது குருவுக்கு.

“உன் காதலோட அளவு தெரிஞ்சதுனால தாண்டி இவ்வளவு நாள் உன்னை விட்டு தள்ளி இருந்தேன்... ஆனா நீ இருக்க இருக்க இதோ இப்படி வத்தி போனதை பார்த்து தான் உன்னை மறுபடியும் என் வீட்டுக்குள்ள உள்ள விட்டேன்...” என்றான் ஆத்திரமாக.

“வீட்டுக்குள்ள விட்டு என்ன பண்ண... என் புள்ளையை என்னை விட்டு தள்ளி தானே வச்சீங்க...” என்றாள் அவளும் ஆற்றாமையாக

“எப்போடி உன் பிள்ளையை உன்னை விட்டு தள்ளி வச்சேன்... அவன் பிறந்ததுல இருந்து உன் கிட்டக்க தான் அதிக நேரம் இருக்கிறான்...” என்றான்.

“என்னது...?” என்று அதிர்ந்தாள்.

“என் பிள்ளைக்கிட்ட இருந்து வர்ற உன் பால் வாசம் கூடவா எனக்கு தெரியாதுன்னு நினைச்ச...?” அவன் சொன்னதை கேட்டு இன்னமும் அதிகமாக அதிர்ந்தாள்.

“மாமா...” பெரும் அதிர்வுடன் அவனை அழைத்தாள். இன்று வரை இந்த விஷயம் அவனுக்கு தெரியாது என்றே எண்ணி இருந்தாள். ஆனால் அவன் சொல்வதை வைத்து பார்த்தால், இந்த விசயமே அவன் தான் செய்து இருப்பது போல் அல்லவா தோன்றுகிறது...

அதை மெய்பிப்பது போலவே இருந்தது குருவின் கூற்று..

“எதுக்காக எல்லாம் தெரிஞ்சும் விட்டு வச்சேன்... உனக்கு உன் பிள்ளையாவது ஆறுதல் தரும்னு தான்... அவனாவது உன் கூட இருக்கட்டும்னு தான். ஆனா நீ என்னை குற்றம் சொல்ற இல்ல...” வேதனையுடன் கேட்டான்.

“இல்ல மாமா....” என்று இடையில் பேசிய சதியை கண்டுக்கொள்ளாமல்,

“என் அம்மா உன் கிட்ட ரகசியமா பிள்ளையை கொண்டு வந்து குடுக்குறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா...? இல்ல இங்க இந்த கலைக்கூடத்துல நீயும் பிள்ளையும் இது வரை ஒண்ணா இருக்குறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா...? இங்க நான் இருந்தா நீ பிள்ளையை இங்க வர சொல்லாம வெளி இடங்கள்ளான கோயிலு பார்க்குக்கு வர சொல்லி சொல்லுவியே... அது கூட எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா...?”

“இங்க எனக்கு தெரியாம எதுவும் நடக்காது... ஆனா நான் எதையும் கண்டுக்காம உனக்கு முழு அனுமதியும் குடுத்து இருக்கேன்... உன்னால தான் என்னோட காதலை புரிஞ்சுக்க முடியல... இப்போன்னு இல்ல எப்பவுமே உன்னால என் காதலை புரிஞ்சுக்கவே முடியாதுடி...”

“அப்படி சொல்லாதீங்க... உங்க காதலுக்கு இணையா என் காதல் எப்பொழுதும் குறைஞ்சி போயிடல... சொல்ல போனா ஒரு படி மேல தான் என் காதல் இருக்கு...” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவள், அவனை ஆழ்ந்து பார்த்து,

“ஏற்க்கனவே ஒரு முறை நிருபிச்சி இருக்கேன்... மறந்து போச்சா...?” என்றாள்.

“அதுக்கு பேரு காதல் இல்லடி... அது உன்னோட வறட்டு பிடிவாதம். நீ அதை காதல்னு நினைச்சா உன்னை விட முட்டாள் இந்த உலகத்துல வேற யாரும் இருக்க மாட்டாங்க...”

“என்னை பொறுத்த வரை அந்த சம்பவம் முழு முட்டாள் தனமான ஒண்ணு... அதை நீ என்கிட்டே நியாயப்படுத்த பார்க்காத... இப்போன்னு இல்ல எப்பவுமே அது என்னால ஏத்துக்கவே முடியாது...” என்று சீறினான்.

அவனது கோவத்தை பார்த்தவளுக்கு இன்னும் கோவமும் ஆற்றாமையும் வந்தது...

“என் உயிரை பணயம் வச்சேன்ல அதனால அது உங்களுக்கு முட்டாள் தனமா தான் தெரியும்...” என்று மேலும் அதை பற்றி பேச வந்தவளை கடுமையாக முறைத்தவன்,

“இங்க பாரு... இந்த விஷயத்தை பத்தி பேசவே கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல... அப்புறம் எதுக்கு ஊறுகா போல அதையே அப்பப்போ பேசி என் உயிரை எடுக்குற... இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை... என் முன்னாடி இந்த விஷயத்தை பத்தி இனி பேசாத... அவ்வளவு தான்..” என்று எச்சரிக்கை விடுத்தவன்,

“புரியாதவங்களுக்கு புரியவச்சுடலாம். ஆனா உன்னை மாதிரி பிடிவாதம் பிடிக்கிறவங்களுக்கு என்ன சொன்னாலும் ஏறாது... உன் கிட்ட கத்தி என் நேரத்தை நான் வேஸ்ட் பண்ண விரும்பல... சோ...” என்றவன் அந்த இடத்தை காலி பண்ண... சதிக்கு தான் கோவம் கோவமாய் வந்தது...

‘இதென்ன பழக்கம் பாதியிலே பேச்சை முடித்துக்கொண்டு போறது.. எதா இருந்தாலும் பேசி தீர்க்க வேண்டாமா...?’ மனம் முரண்ட அந்த கோவத்தை கூட அவனிடம் காட்ட முடியாமல் போனவனை பார்த்து கருவினாள்..

வெளியே வந்த குரு மற்றவர்களுடன் இணைந்து கொள்ள, சிறிது நேரம் கழித்தே சதி அவர்களுடன் இணைந்துக்கொண்டாள்.

முகம் முழுவது இருந்த கோவத்தை மறைத்து போலியாக சிரித்துக்கொண்டு இருந்தாள் அனைவரிடமும்..

எல்லோரும் வேலையில் மூழ்கி இருக்க, மத்திய பொழுது கரைந்து கொண்டிருக்கும் இறுதி தருவாயில் கேகே வந்தான்.

வந்தவன் குருவுக்கும் சதிக்கும் அங்கே நடந்த நிகழ்வுகளை சொல்ல, இருவருக்கும் சற்றே மகிழ்ச்சியாய் இருந்தது...

அதே மகிழ்வுடன் வீடு திரும்புபினார்கள். குரு அன்று விரைவாக வீடு திரும்ப அனைவரும் கூடத்திலே அமர்ந்து இருந்தார்கள்.

கேகே எல்லா விசயமும் சொல்லி இருந்தாலும் வீட்டின் தலை மகனாக தன் பொறுப்பை கையிலெடுத்து,

குமாரிடமும் ராதிகாவிடமும் “என்னாச்சு... கல்யாணம் எப்ப வச்சுக்கலாம்னு எதுவும் சொன்னாங்களா...? ” முறைப்படி விசாரித்தான். அங்கே தன் அவனுடைய அத்தையும் மாமாவும் இருந்தார்கள்.

நாளைக்கு போகலாம் என்று ராதிகா அழைத்துக்கொண்டு வந்துவிட, அவர்களும் பிகு பண்ணாமல் வந்துவிட்டார்கள்.. அவர்களை ஒரு பார்வை பார்த்து வரவேற்பாய் தலை அசைத்தவன்,

தன் அம்மா சொன்ன செய்தியில் கவனத்தை வைத்தான்.

“ஆமாண்டா... கல்யாணத்தை சீக்கிரமாவே வச்சுக்கலாம்னும், அதோட உங்க அவார்ட் பங்சன் வருதாமே... அதனால கார்த்தி பையன் தான் அவார்ட் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்துக்கலாம்.. னு சொன்னார். எங்களுக்கும் அது தான் சரின்னு பட்டது...” அவர் சொல்ல,

“எங்களுக்கு ஒகே தான்... நவீனை ஒரு வார்த்தை கேட்டீங்களா...?” யோசனையுடன் அவனை பார்த்தான். முகத்தில் ஏற்பட்ட திடிர் கல்யாண கலையுடன் அமர்ந்து இருந்தான் அவன்.

“உனக்கு ஒண்ணும் இதுல வருத்தம் இல்லையே நவீன்... அப்படி இருந்தா சொல்லு... தேதிய மாத்தி வச்சுக்கலாம்...” என்று கேட்டான்.

“இல்லண்ணா அப்படியெல்லாம் அவசரமில்ல... உன் வேலை முடியட்டும்... அதுக்கு பிறகு வர்ற முகுர்த்தத்துல தேதி வச்சுக்கலாம்...” என்று சொன்னான்.

“ம்ம்... சரி.. முகுர்த்த பட்டு மட்டும் வெளில எடுத்துக்கலாம்... மத்ததுக்கெல்லாம் நம்ம டிசைனர் இருக்காங்க... அவங்க கிட்ட ரெடி பண்ணிக்கலாம்... உனக்கு ஓகே வாடா...” ஒப்புதல் கேட்டான் தன் தம்பியிடம்.

“நீ பார்த்து செஞ்சா ஓகேதான் ண்ணா...” என்று சொல்ல குரு சற்றே நெகிழ்ந்து தான் போனான்... ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல்,

“சரி அப்போ ப்ரீயா இருக்குற நேரம் பார்த்து நீயும் லேக்கவும் நிச்சையம், ரிசப்சன் ரெண்டுத்துக்கும் அளவு குடுத்து, ட்ரெஸ் கலரையும் காட்டி பேசிட்டு வந்துடுங்க...” என்று சொல்லிவிட்டு,

காலையிலிருந்து ஆடிய ஆட்டத்தில் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள குளிக்க சென்றான்... சதி அங்கு தான் ஓரமாக அமர்ந்து இருந்தாள். ஆனால் அவளை ஒரு பொருட்டாக கூட கவனிக்காமல் தன் வேலையை செய்ய ஆரம்பித்தான்.

“போங்க.. ஆனா என் காதல் உங்களை என்கிட்டே இழுத்துக்கிட்டு வரும்...” என்று கருவியவள் இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்க சென்றாள்.

இவ்வளவு நாளும் குருவின் அறையிலே தூங்க, இன்றைக்கும் அவனது அறைக்கு சென்று கீழே படுக்கை விரித்து உறங்க தொடங்கினாள்.

குரு போன் பேசிவிட்டு உள்ளே வர, எப்பொழுதும் போல அவள் தரையில் படுத்து இருப்பதை கண்டு விளக்கை அணைத்துவிட்டு, தன் மகனை கொஞ்சி முத்தமிட்டுவிட்டு அவளுடன் கீழே படுத்துக்கொண்டான்.

அவன் அவளிடம் வரும் வரை திக் திக்கென்றே இருந்தது... ஏனோ முதல் நாள் இரவு போல அவள் புது பெண்ணாய் மிகுந்த படபடப்பாய் இருந்ததை போலவே இப்பொழுதும் இருந்தது...

சண்டை போட்டுட்டு கொஞ்சம் தைரியமாகவே அவனது அறைக்கு வந்து படுத்துக்கொண்டாள் தான். இருந்தாலும் மனதுக்குள் ஒருவித பயம் இருந்துக்கொண்டே இருந்தது...

எங்கே தன்னை ஒதுக்கி வைத்துவிட்டு அவன் மேலே படுத்து விடுவானோ என்று... ஆனால் குழந்தையை கொஞ்சிவிட்டு அவளின் அருகில் படுத்துக்கொண்டவனை எண்ணி மனம் நெகிழ்ந்து போனது...

அதனாலே அவள் மிகவும் படபடத்து போனாள். ஆனால் குரு வந்து படுத்துவிட, நிறுத்தி வைத்திருந்த மூச்சை வெளியிட்டவள்,, நிம்மதியாக கண்களை மூடிக்கொண்டாள்.

ஆனால் குரு அடுத்து செய்த செயலில் சதியின் தூக்கம் கலைந்து போனது முற்றிலுமாக...

அவளிடம் நெருங்கி படுத்தவன் காதோரம் தன் மூச்சுக்காற்றை வைத்து சில்மிஷம் செய்தவன், அவளின் இடையில் தன் கரங்களை போட்டு தன்னுடன் இறுக்கிக்கொண்டான் இன்னும் நெருக்கமாக...

அதில் அவள் திடுக்கிட்டு போக, வியந்து தான் அவனை பார்த்தாள்.

அவளது பார்வையை கண்டுக்கொள்ளாமல்,

“ஐ நீட் பிசிக்கல் அட்ராக்ஷன்...” என்று சொல்லி முடித்த அடுத்தட நொடி, அவனது கைகளும், உதடுகளும் அவளை ஆக்கிரமிக்க, சதியால் விட்டுக்கொடுக்கத் தான் தோன்றியது...

அன்றைய இரவையும் தூங்க இரவாக மாற்றியமைத்தார்கள் இருவரும். அடுத்த நாள் தன் அப்பா அம்மாவுடன் வீட்டிற்கு செல்வாதற்க்காக அனுமதி கேட்டு நின்றாள் சதி... அதை எப்படி எடுத்துக்கொள்ளுவது என்று புரியாமல் குரு அவளையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டு நின்றான்....

Loading spinner
Quote
Topic starter Posted : June 1, 2025 9:26 am
(@gowri)
Estimable Member

எதே 😳😳😳😳😳

சதி அக்காவை குரு கல்யாணம் செய்தானா????

அப்ப அவ எங்க???

இல்லையா????

இவங்களுக்கு எப்ப கல்யாணம் நடந்தது????

Loading spinner
ReplyQuote
Posted : June 13, 2025 11:17 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top