“தண்ணி அடிக்கும் பெண்ணுக்கு காதலிக்கும் உரிமை இல்லையா? இருக்கக்கூடாதா?” தமிழின் சிந்தனையில் எழுந்த கேள்வியை இருளில் மெல்ல முணுமுணுத்தாள்.
“தகுதி இருந்தா தான் காதலிக்கணுமா?” மீண்டும் அவளது வாய் முணுமுணுத்தது.
தன் கையில் இருந்த பியரை உதடு பிதுக்கி பார்த்தாள் தமிழ். உன்னை அவனுக்கு பிடிக்காது. எனக்கு அவனை பிடிக்காது. அதனால உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று உலரியவள்,
“ஸ்காட்ச் வேணுமே” என்று சற்றே தடுமாறிக் கொண்டே ரக ரகமாய் அடுக்கி வைத்திருந்த அலங்கார ஸ்டேண்டுக்கு வந்து ஆள் காட்டி விரலை நீட்டி கண்களை சுருக்கி அங்கும் இங்குமாய் தேடியவளை பார்க்க ஸ்பாயில் சைல்டு என்றே தோன்றியது.
ஆனாலும் அவளின் அந்த தோற்றம் மனதை மிகவும் ஈர்க்கவே செய்தது. ஸ்காட்சை எடுத்துக் கொண்டு மீண்டும் உப்பரிகைக்கு வந்தவள் இந்த முறை ஊஞ்சலில் அமராமல் கீழே தரையில் கால் நீட்டி அமர்ந்து எதிரே தெரிந்த நிலவை வெறித்துப் பார்த்தாள்.
அவளை போலவே அந்த நிலவும் ஒற்றையாய் துணையின்றி ஊர்ந்துக் கொண்டு இருந்தது.
“என்ன போல உனக்கும் லவ் பெயிலரா? அது தான் எப்பவும் சோலோ பெர்பாமன்ஸ் பண்ணிட்டு இருக்கியா?” என்று நிலாவே கேலி செய்தவள் தொண்டையில் ஸ்காட்ச்சை சரித்தாள்.
“என்னோட பெயின்க்கு இந்த எரிச்சல் எவ்வளவு துணையா இருக்குன்னு யாருக்கும் தெரியாது” மீண்டும் அவளின் உளறல் தொடங்கியது.
அவளின் தொண்டையோடு சேர்த்து மனதும் லேசாக எரிந்தது.
“என்னை வேணான்னு சொல்லிட்டல்லடா... நான் எவ்வளோ நல்ல பொண்ணு தெரியுமா? ஒரு பாய் பிரெண்ட் கூட வச்சுக்கிட்டது இல்ல. சலிச்சு எடுத்துப் பார்த்தாலும் என்ன மாதிரி தங்கமான காதலி உனக்கு கிடைக்கவே மாட்டா.. உன்னை தேடி வந்தவளை உதாசீனப்படுத்தின இல்ல... போ போ உனக்கு என்னை மாதிரி கோல்டன் பிளவர் எவளும் கிடைக்க மாட்டா..” என்று காற்றோடு பேசிவிட்டு எதோ ஒரு உந்துதலில் திரும்பி பார்த்தாள்.
அங்கே கையை கட்டிக் கொண்டு ஒரு ஆடவன் நின்று இருந்தான். அவனை பார்த்த உடன்,
“ஐ..யோ ஆபிசெர்.. நீ...ங்க எங்...க இ...ங்க. உ...ங்களு...க்கும் இந்..த பா..ட்டிலுக்கு..ம் தான் ரொ......ம்ப தூ..ரமாச்...சே.. இ..து இரு..ந்தா ஒ..ரு மை...ல் தூ...ரம் த..ள்ளி நி...ற்பீங்க..ளே மிஸ்...டர் நெடு...மரம்..” அந்த போதையிலும் வாய் குழறியபடியே நக்கல் பண்ணியவள் மெல்ல எழுந்து அவனை நோக்கி நடந்தாள்.
தன்னை நோக்கி நடந்தவளை நிலையில் சாய்ந்து கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தான் எந்த சலனமும் இல்லாமல்.
இன்னும் அவனை நெருங்கியவள்,
“ஆபி...செர்” என்று அழைக்க அவனிடம் எந்த உணர்வும் இல்லை. அவளை பார்த்தபடியே நின்று இருந்தான்.
“எ..ன்ன... ஆபி...செர் இ...வ்வள...வு தூ...ரம்..?” வாய் குழறியது அவளுக்கு. ஆனாலும் அவனிடம் பேசாமல் அவளால் இருக்க முடியவில்லை.
அவன் பதிலேதும் பேசவில்லை.
“பேச மாட்டியா ஆபிசெர். என் கூட பேச மாட்டியா ஆபிசெர்... நான்...” என்று தடுமாறியவள்,
“லவ் யூ ஆபிசெர்.. லவ் யூ சோ மச்” என்று அப்படியே சுவரில் சரிந்தாள். எதிரில் வெற்று வெளியே நிறைந்து இருந்தது. அவளின் கருத்தில் இருந்த உருவம் எதிரில் தென்படவே தன் மனக்கிடங்கில் உள்ளதை கொட்டி தீர்த்தாள். ஆனால் அது வெறும் காணல் என்று தெரியாமல் மயங்கிப் போனாள்.
அன்றிரவு முழுவதும் உப்பரிகையிலே இருந்தவள் அடுத்த நாள் காலையில் ஹேங்ஓவர் அதிகமாகவே இருந்தது.
ப்ச்... என்று தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். தலைவலி அதிகமாக எடுத்தது. எப்பொழுதும் கொஞ்சம் லைட்டாகவே எடுத்துக் கொள்வாள். இன்றைக்கு சற்று அதிகமாக போய் விட்டது.
நேரத்தை பார்த்தாள். ஒன்பது மணி என்று காட்ட, முதல் வேலையாக தென்னவனுக்கு போனை போட்டாள்.
“எஸ் மேம்” என்று அந்த பக்கம் கம்பீரமான குரல் கேட்க,
“இன்னைக்கு பத்தினொரு மணி வரை இருக்கும் எல்லா மீட்டிங்கையும் கேன்சல் பண்ணிடு” என்றாள்.
“பட் வொய் மேம்?” அவன் விசாரிக்க,
“ஜஸ்ட் டு வாட் ஐ சே” என்றவள் வைத்து விட்டாள்.
“பெரிய பொறுப்பு பருப்பு... ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்டுட்டு இருக்கான்” வாய்க்குள் அவனை திட்டியவள் எழுந்து குளிக்க சென்றாள்.
இந்த பக்கம் தனக்கு பேசிக் விளக்கம் கூட சொல்லாமல் கட்டளை போட்டு விட்டு போனை டொக்கென்று வைத்தவளின் மீது லேசான கோவாம் வந்த பொழுதும் அவளிடம் காட்டாமல் தனக்குள் புதைத்துக் கொண்டான் தென்னவன்.
ஷவருக்கு அடியில் நின்ற பிறகே தலைவலியும் ஹேங்ஓவரும் மட்டுப் பட்டது. கொட்டும் பூந்தூரலின் அடியில் நின்று தன்னை சுத்தம் செய்துக் கொண்டவள் மகனிடம் ஓடினாள் அடுத்த நிமிடம்.
குழந்தை சமத்தாக தூங்கிக்கொண்டு இருக்க, பிள்ளையை பற்றி பணிப்பெண்ணிடம் விசாரித்துக் கொண்டவள் படுக்கையில் போய் விழுந்தாள். என்னவோ அவளின் நெஞ்சில் சில நீங்காத வடுக்கள் இருக்க, அதை மறுபடியும் கீறி விட்டு ரணபட்டுக் கொள்ள விருப்பம் இல்லாததால் மிடுக்காக அலுவலகம் கிளம்பி வந்தாள்.
அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்தவள் அன்றைக்கும் இங்கேயே தங்கினாள். வீட்டுக்கு போகவில்லை.
கிருஷ்ண மூர்த்தி மகளுக்கு அழைத்து,
“நான் வரவாடா” என்று ஆதுரமாக கேட்டார்.
“நோ நீட் டேட்.. ஐ வில் மேனேஜ் மை ஸெல்ப்... அண்ட் ஐ வான்ட் ப்ரைவசி” வைத்து விட்டவள் இன்றைக்கும் நீச்சல் குளத்துக்கு சென்று நீச்சலடிக்க ஆரம்பித்தாள்.
இந்த முறை உப்பரிகையை நாடாமல் குளத்துக்குள் வைத்தே பியர் அடிக்க, பணிப்பெண் குழந்தையை வைத்துக் கொண்டு அவளை தான் ஆவென்று பார்த்தார். திரும்பி தமிழ் ஒரு முறை முறைக்க, பதறியடித்துக் கொண்டு ஓடினார் குறுங்கண்ணை விட்டு.
அதன் பிறகு மிக சுதந்திரமாக தண்ணியடித்துக் கொண்டே தண்ணீரில் நீந்த ஆரம்பிக்க, அவளின் காதுக்கு வெகு அருகில் “ஏய் குடிகாரி” என்று சத்தம் கேட்டது.
திரும்பி பார்த்தாள். அதே ஆண் தான்.
“வேற வேலையே இல்லையாடா உனக்கு... எப்போ பாரு என் பின்னாடியே சுத்தி வர்ற” அலுத்துக் கொண்டவள், நீச்சல் குளத்துக்கு உள்ளேயே போட்டு இருந்த நாற்காலியில் ஏறி அமர்ந்தாள்.
“இப்ப என்னடா பிரச்சனை. எதுக்கு என்கிட்டே வர்ற” கேட்டவள் பியரை எடுத்து வாயில் சரித்துக் கொண்டாள்.
“நீ தான்டி என் பிரச்சனை” என்றான் அவன்.
“ப்ச் உனக்கு எப்போ தான் நான் பிரச்சனை இல்லாம இருந்தேன்” வெறுத்துப் போனவள் அவனை தண்ணீருக்குள் தள்ளி விட்டாள். இந்த முறை அந்த உருவம் உண்மையாகவே தண்ணீருக்குள் மூழ்க போதை ஏறிய கண்ணை பிரிக்க முடியாமல் பிரித்து தலையை உலுக்கி நீரின் அடி ஆழத்தை தொட்டு விட்டு வந்தவனை நிதானம் இல்லாமல் பார்த்தாள்.
அதோடு நீரில் நின்று இருந்ததால் அவளால் நேராக நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டே இருந்தாள்.
“ஹேய் அறிவு இல்லையாடி” நீருக்கு மேலே வந்தவன் அவளை திட்ட தொடங்க,
“அறிவு இருந்தா உன்னை எல்லாம் யாருடா பிரெண்டா வச்சுக்கிட்டு இருப்பா” என்று சொன்னவளுக்கு, பட்டென்று சிந்தனை ஒரு புள்ளியில் குவிய,
தடுமாறிய பேச்சையும் குரலையும் ஒருங்கே சேர்த்து, “வாட் யூ வான்ட் மிஸ்டர் தென்னவன்.. இங்க உனக்கு என்ன வேலை...? கெட்அவுட்” என்றாள்.
பார்முக்கு வந்துவிட்டவளை கூர்ந்து பார்த்தவன்,
“உங்க அப்பாவுக்கு சின்னதா ஆக்சிடென்ட்” என்றான் எந்த உணர்வும் இல்லாமல். தமிழுக்கு தான் திகைப்பாய் போனது. கொஞ்சம் லைட்டாக ஏறிய போதை சடுதியில் வடிந்து விட,
“யாருன்னு தெரியுமா?” கேட்டவளிடம் இருந்த நிதானம் கண்டு பெருமூச்சு விட்டவன்,
“நத்திங் திசிஸ் மெக்கானிக்கல் ப்ராப்ளம்” என்றான்.
“ஓ தட்ஸ் ரைட்.. டேடி ஓகே தானே” ஏனோ இதயம் பதறியது.
“ம்ம்” என்று மட்டும் சொன்னான் தென்னவன்.
அதன் பிறகு உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவள் மகனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள் தன்னுடைய காரில்.
தென்னவனை உடன் வா என்று எல்லாம் சொல்லவில்லை. அவள் பாட்டுக்க சென்று விட தென்னவன் தன்னுடைய காரில் அவளை பின் தொடர்ந்தான் நனைந்த உடையுடன்.
கண்டிப்பா இவ இவனை லவ் பண்ணி இருக்கா....
ஆன தென்னு சேரல...அப்பறம் எப்படி அவ அக்கா கூட கல்யாணம்????