அவளது கண்களில் தெரிந்த பயத்தை கொண்டு தன்னை பார்க்க வைத்தவன், அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டு,
“அடுத்து வர்ற பத்து நிமிடமும் இந்த இடத்தை விட்டு கொஞ்சமும் அசையைக் கூடாது என் மேல சத்தியம்..” என்றவனை விக்கித்துப் போய் பார்த்தாள்.
“என்னங்க” என்று அவள் கதற,
“என் மேல நீயாச்சும் நம்பிக்கை வைடி” என்றவனின் வலி நிறைந்த வார்த்தையை கேட்டு திகைத்துப் போனாள். என்னவோ ஆறாத பழைய ரணங்களை அவளிடம் கோடிட்டு காட்டியது போல உணர்ந்தவள்,
“உங்க மேல உள்ள நம்பிக்கையில தான் இவ்வளவு நாளும் உங்க கைப்பிடிச்சு வந்தேன். நேற்றைக்கு அவங்களோட போனப்ப கூட எப்படியும் நீங்க வருவீங்கன்னு நான் நம்பினேன். ஏன்னா என் கண்ணுல வழியிற அதே காதலும் நேசமும் உங்க கண்ணுலையும் நான் பார்த்து இருக்கேன் ஏகன். உங்க வாய் வார்த்தை சொல்லாத காதலை உங்க அருகாமையும் நெருக்கமும் ஏன் உங்க கோவமும் கூட எனக்கு உணர்த்தி இருக்கு... இப்பன்னு இல்ல எப்பவும் உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றாள்.
அவளது கண்களை கூர்ந்துப் பார்த்தவன் தீர்க்க முடிவு எடுத்தவன் போல கண்களை மூடி ஒரு கணம் நிதானித்தான்.
பின் அவளை பார்த்து,
“வாழ்நாள் முழுக்க என் கூட வர உனக்கு சம்மதமா?” என்று கேட்டான்.
“செத்தாலும் உங்களை விட்டு என்னால இருக்க முடியாது ஏகன்” என்றாள் உறுதியாக.
அவளது உறுதியில் உற்று நோக்கியவன்,
“இதை படிச்சு பார்த்துட்டு அதுக்கு பிறகு கல்யாணத்துக்கு ஒத்துக்க.. எதுக்கும் அவசரப்படாத... நீ குடுத்த வாக்குறிதியை காப்பாற்றனும்னு எந்த அவசியமும் இல்ல...” என்று அவளின் உறுதியை நிலை குழைய வைக்கும் ஒரு தகவலை அவளிடம் கொடுத்து விட்டு வெளியே மரத்துக்கு மேல் ஜம்ப் பண்ணி சென்று விட்டான் அடியாட்களையும் குழலியின் குல வைரியையும் ஒழித்துக் கட்ட.
“அப்படி என்ன விசயம் இது...” என்று யோசித்துக் கொண்டே அவன் வீசி சென்ற காகிதத்தை பிரித்துப் பார்த்தாள். அது சில வருடங்களுக்கு முன்பான ஒரு பத்திரிக்கை.
“இதுல அப்படி என்ன இருக்கு. இதை போய் குடுத்துட்டு போய் இருக்காரு..” என்று கண்களை அதில் ஓட்டினாள்.
அதில் ஒரு பையன் புகைப்படம் போட்டு இருந்தது. நல்லா மொழுமொழுன்னு முகம். ஓட்ட வெட்டியா தலைமுடி, தலையில் அடர் பச்சையில் கேப். அந்த கேப்பில் சில சிம்பல்கள். அதோடு அடர் பச்சையில் காலர் வைத்த சட்டை. தோள் பட்டையில் அதே போல கோல்டன் பட்டன் அண்டு கூடவே சில பல நட்சத்திரம், அப்படியே சற்று கீழே இறங்கினால் வலது நெஞ்சின் ஓரம் கேப்டன் ஏகப்பன் என்று போட்டு இருக்க வேகமாய் முகத்தை பார்வை இட்டாள்.
மார்பு வரை இருந்த புகைப்படத்திலே அவன் அவ்வளவு கம்பீரமாக இருந்தான். அந்த உடை அவனுக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தி இருந்தது. இவனால் தான் இந்த உடைக்கு பெருமை என்று எண்ணினாள்.
அந்த உடையை பார்த்த உடனே புரிந்துப் போனது. அது இந்திய ராணுவத்துறையை சேர்ந்தது என்று. பரவயில்லையே நம்மாளு ராணுவத்துல பெரிய பதவியில எல்லாம் இருந்து இருக்காரு போலையே... அவனை கேலி செய்தாள்.
சோ அவரோட பெருமையை படிச்சு தெரிஞ்சுக்கிட்டு அதுல டெஸ்ட் வச்சு பாஸ் ஆனாதான் கல்யாணம்னு சொல்லுவாரோ அதனால தான் இந்த பேப்பரை குடுத்தது மனப்பாடம் செய்ய சொல்லி குடுத்துட்டு போயிருக்காரு.. சரியான ஸெல்ப் டப்பா.. என்று அவனை இன்னும் கேலி செய்துக் கொண்டாலும் அவனது முகத்தை ஆழ்ந்து இரசித்துப் பார்த்தாள்.
இது ஏகன் தானா? என்று அதிசயித்துப் போனவள் அவனின் இளவயதான புகைப்படத்தை மிக அதிக ஆர்வத்துடன் கண்டு களித்தாள்.
“சும்மா சொல்ல கூடாது இந்த மிலிடரி யூனிபார்ம்ல செம்மையா இருக்காரு.. அதும் இந்த மொழு மொழு கிளீன் சேவ்ல பத்து வயது குறைந்தது போல இருக்காரு... செல்லக் குட்டி.. செம்ம க்யூட்டா இருக்காரு. ஆனா அதுக்கு எதிர் பதமா இப்போ தாடியோடு தலைமுடி வெட்டக்கூட இல்லை. காட்டுவாசி போல இருக்காரு” என்று கமென்ட் பண்ணிக் கொண்டே அவனது படத்தை வெகு சுவாரஸ்யமாக பார்த்தாள். ஏனோ அவனின் முகத்தை விட்டு அவளால் பார்வையை விலக்கிக் கொள்ளவே முடியவில்லை.
“பேப்பர்ல வர்ற அளவுக்கு இவர் அவ்வளாவு பேமசா? என்ன சாதனை செஞ்சாரு.. ஒரு வேலை பல எதிரி நாட்டு வீரர்களை சுட்டு வீழ்த்தி இருப்பாரோ. இவரு தான் துப்பாக்கி சுடுறதுல மன்னனாச்சே... இவரு கையில என்னம்மா துப்பாக்கி சுழலுது... இவரு துப்பாக்கி சுடும் விதத்தை பத்தியே தனி கட்டுரை எழுதலாம்” என்று பெருமையாக எண்ணிக் கொண்டாள்.
ஆனாலும் இப்படி சொந்த பெருமையை காட்டி படிக்க வைக்கிறது எல்லாம் கொடுமை.. இது வேற பெரிய கட்டுரையா இருக்கு.. சுய தம்பட்டம் அடிக்காட்டி இந்த ஆண்களுக்கு தூக்கமே வராது போல.. பெரிய மேஜர்... கமேண்டர்..” என்று மேலும் ஏகனை நக்கல் பண்ணியவள் அவனை பற்றி இருந்த கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தாள்.
அவள் வாசிக்க வாசிக்க கண்கள் எல்லாம் சிவந்து கலங்கிக் கொண்டு வந்தது. நொடியில் மூச்சடைக்கும் உணர்வு... தொண்டை குழியை யாரோ ஒருவர் இறுக பற்றி அழுத்தி பிடித்த உணர்வு. மொத்த உடலும் பாரமாய் போனது.
அவனை சுமந்த நெஞ்சில் பெரிய மலையை தூக்கி வைத்தது போல கனத்துப் போனது. மூச்சே எடுக்க முடியவில்லை. சற்று முன்பு வரை அவளின் முகத்தில் இருந்த சிரிப்பும் கேலியும் கிண்டலும் துணி வைத்து துடைத்தது போல சடுதியில் மாறிப்போனது.
இயல்பாக அவளால் மூச்சே எடுக்க முடியவில்லை. அவளை சுற்றி உலகமே சுற்றுவது போல இருந்தது. அந்த செய்தித்தாளில் உள்ள விசயங்கள் எல்லாம் பொய் என்று யாராவது சொல்லுங்களேன் என்று அவளின் உள்மனம் கதறியது.
இருக்காது... இருக்கவே இருக்காது... இது அத்தனையும் கற்பனை. நான் கற்பனை தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். எனக்கு இந்த கொடூரமான கற்பனை வேண்டாம். என்று அவளின் உள்மனம் புலம்பி தவித்தது.
ஆனால் உண்மை என்று அவளின் கையில் இருந்த காகிதம் காற்றில் படபடத்துக் கொண்டு இருந்தது.
என் ஏகனா இப்படி.. இருக்கவே இருக்காது... இதுல வந்து இருக்க செய்தி யாரோ தவறா பரப்பி இருக்காங்க.. கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தது.
தட்டாமளையாக சுற்றிய நிலம் இப்பொழுது எந்த அசைவும் இல்லாமல் நின்றது போல இருந்தது. அடித்துக் கொண்டு இருந்த அலைகள் எல்லாம் அப்படியே பாதியில் நின்றது போல தோன்றியது.
ஆழ மூச்செடுத்துக் கொண்டவளுக்கு விழிகளில் நீர் நின்றபாடே இல்லை.
மீண்டும் ஒரு முறை அந்த செய்தியை வாசித்தாள்.
“கமேண்டர் மிஸ்டர் ஏகப்பன் மீது வந்திருக்கும் தகவல்களை நம்பவே முடியவில்லை. அவர் எதிரிகளை சுட்டு வீழ்த்துவதில் வல்லவர். எத்தனை எத்தனையோ எதிரிகளை நேருக்கு நேராக நின்று சுட்டு வீழ்த்தி இருக்கிறார். இந்த நாட்டுக்காக அவர் செய்த சாதனைகளும் உழைப்பும் அளப்பரியது. சொல்லில் அடக்க முடியாது. ஆனால் அந்த உழைப்பும் சாதனையும் நம் நாட்டுக்கு எதிராக அவர் பயன்படுத்துவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நம் எதிரிநாட்டுடன் நட்பில் இருந்து நம் நாட்டுக்கு துரோகம் இளைக்கும் செயலில் ஈடுபட்டு இருக்கிறார். என்றதோடு ஏகனை பற்றி இன்னும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்துக் கொண்டே போனார்கள்.
அதில் சொல்லப்பட்ட அனைத்து தகவல்களையும் படித்து முடித்தவளுக்கு தலை கிர்ரென்று சுற்றியது. அப்படியே மயக்கம் போடும் நிலைக்கு சென்றாள். ஆனால் மயங்க கூடாது. இது மயங்க கூடிய சூழல் இல்லை என்று உதட்டை கடித்து ரத்தம் வர வைத்து தன் மயக்கத்தை தெளிய வைத்துக் கொண்டவள் அந்த மர பொந்தில் இருந்து வெளியே வர எண்ணி எழுந்து நின்றாள்.
காலெல்லாம் மறுத்துப் போனது. உடலெல்லாம் செயலிழந்து போனது போல ஆனது. இருந்தாலும் தன்னை சமன் படுத்திக் கொண்டு எழுந்து நின்றவளின் காதில் இடைவிடாமல் துப்பாக்கி சுடும் சத்தமும் அதை தொடர்ந்து ஆக்ரோஷமான சண்டை இடும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது.
அதை எதையும் சட்டை செய்யாமல் மரத்தின் மீது காலை வைத்து ஏற முடியாமல் ஏறி தடுமாறி மரத்தின் மீது வெளிப்பக்கமாக குதித்து கீழே விழுந்தாள்.
அவள் வெளியே வரவும் அதுவரை தீவிரமாக சண்டை போட்டுக் கொண்டு இருந்தவர்கள் சற்றே நிறுத்தி அவளை வேடிக்கை பார்த்தார்கள்.
ஏகனுக்கு கடும் சினம் துளிர்த்தது.
“வரவேண்டான்னு சொல்லியும் எதுக்காக இப்போ வெளியே வந்து ஏழரையை இழுத்து விட்டுட்டு இருக்கா. கொஞ்சம் கூட அறிவே இல்லை. மரமண்டை. இங்க என்ன மாதிரியான சூழல் இருக்கு. அதுக்கு ஏற்ற மாதிரி நடந்துக்க வேண்டாம்... புத்தி கெட்டவ” என்று சரமாரியாக அவளை திட்டியவன் அப்பொழுது தான் அவளை ஊன்றிப் பார்த்தான்.
அவளிடம் முன்பு இருந்த உற்சாகம் இல்லை. கீழே விழுந்து எழுந்து நின்றவளின் தோற்றம் ஏதோ பல ஆண்டுகள் பஞ்சத்தில் அடிபட்டு இருந்தவள் போல இருந்தாள். மெல்ல அடி எடுத்து நடந்தவளின் நடையில் மிகப்பெரிய தோய்வு...
கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது. உயிரே இல்லாதவள் போல அவனை நோக்கி வந்தாள். அவாளின் கையில் இருந்த காகிதத்தை உயிரை விட பெரிதாக இறுக்கிப் பிடித்துக் கொண்டு வர, அப்பொழுது தான் ஏகனுக்கு புரிந்துப் போனது. அவளிடம் ஏற்பட்ட மாற்றம் எதனால் என்று.
அவள் தன்னிடம் கேட்கப்போகும் கேள்விகளை எண்ணி பெருமூச்சு விட்டவனுக்கு சூனியமான எதிர்காலம் கண்ணில் பட்டது. இதழ்களில் விரக்தி புன்னகை அரும்பியது.
எதற்ககவும் கலங்கமாட்டேன் என்று தன்னை தானே நிதானித்துக் கொண்டவன் அவளை கூர்மையான விழிகளோடு எதிர்நோக்கினான். அவள் எந்த முடிவு எடுத்தாலும் சரி தான் என்று எண்ணினான். ஆனாலும் அவளுடன் வாழ்ந்த வாழ்க்கை இனி கனவு தான்.. நினைத்து பார்க்க மட்டுமே முடியும். அவளுடனான ஒரு வாழ்க்கை தனக்கு வாய்க்கப் போவது இல்லை என்று எண்ணியவனுக்கு இதயத்தை யாரோ கை விட்டு பிசைந்து வெயிலில் தூக்கிப் போட்டு நெருப்பில் சுட்டது போல இருந்தது.
எதற்கும் கலங்காதவன், யாரின் முடிவுக்கும் அச்சப்படாதவன் தன்னவளின் முடிவுக்காக உள்ளுக்குள் பெரிதும் கலங்கிப் போனான். அவளின் தோற்றமே அவளின் முடிவை அவனுக்கு உணர்த்தியது போல...
இனி என்ன ஆகுமோ...
கண்டிப்பா தப்பா நினைக்க மாட்டா.....
இது ஏதோ வீண் பழி தான்....யாரோ செய்து இருக்காங்க.....
அது தான் சொல்லிட்டு போனான் இல்ல...
நீயாவது என்னை நம்புனு.....