சதியிடம் தன் மன கிடங்கை கொட்டிவிட்டு வந்தவனால் இயல்பாகவே இருக்க முடியவில்லை... அவ்வளவு ஆத்திரமாக வந்தது... தானே மனமிறங்கி வந்தாலும் அவள் தன்னை ஒதுக்கி வைத்து, தன்னை தவறாக எண்ணியதோடு அல்லாமல் இத்தனை நாளும் தன்னருகில் வராமல் அவளுடைய முகத்தை கூட காணமுடியாமல் ஒதுங்கிபோன நிகழ்வுகளை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை...
கண்களை மூடி நிலை படுத்த எண்ணியவனால் அது முடியாமல் போக மீண்டும் அவளிடமே வந்தான். வந்தவன் அவளிருந்த நிலையை கண்டு கலங்கி தான் போனான்...
குரு கோவமாக கத்திவிட்டு சென்ற பின் எழுந்து நிலை கண்ணாடியின் முன் நின்று தன் சேலையை ஒதுக்கி தன் வயிற்றில் இருந்த தழும்பை பார்த்தாள்.
அதில் அவளுக்கு பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை... அப்போதிருந்த வலி கூட அவளுக்கு இப்போது இல்லை... ஆனால் அன்று தன்னை விட குரு துடித்த துடிப்பை அவளால் இன்றும் மறக்கவே முடியவில்லை..
அதை தடவிக்கொண்டே “இது என்னோட அடையாள சின்னம் மாமா... இதை பார்த்து நீங்க வேணா வருத்தப்படுவீங்க... ஆனா நான் இதை என் காதலோட சின்னமா தான் பார்க்கிறேன்... உங்களுக்காக நான் என்னால செய்ய முடிஞ்ச சின்ன குரு தச்சனை...” ரசித்து பார்த்தவளின் கைகள் மீண்டும் அந்த இடத்தையே வருடிக்கொடுத்துக்கொண்டு இருந்தது...
அப்பொழுது உள்ளே நுழைந்த குருவுக்கு அவளது செயலை கண்டு கலங்கி போனான். அந்த வடுவுக்கு பின் இருந்த நினைவுகளும் சில ஞாபகங்களும் சட்டென்று உலா வர கலங்கி போனான்...
கண்ணாடியில் அவளது கலங்கிய தோற்றம் கண்டவள் தனது புடவையை சரி செய்துக்கொண்டு அவனை நெருங்கினாள்.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விலகி கட்டிலில் போய் படுத்துக்கொண்டான். அவனது விலகல் வலிக்கவே குழந்தையை எட்டி பார்த்தவள் அது நன்றாக் தூங்கவே விளக்கை அணைத்துவிட்டு கீழே சென்று தன்னுடைய அறையில் தூங்க போக, வலிமையான உரமேறிய கரம் அவளை சுற்றி வளைத்தது...
அது யாரென்று தெரிந்ததால் எதற்கும் மறுப்பு சொல்லாமல் அவனுக்கு இசைய தொடங்கினாள். அன்றைக்கு போல கட்டிலில் படுக்காமல் இருவரும் தரையில் சரிய, சதியின் முந்தனையே இருவருக்கும் தரை விரிப்பானது...
கொத்தாய் தன்னிடம் அவளை இழுத்தவன் சம்மதமாய் அவளது முகத்தை நோக்கினான். அதில் முகம் சிவந்தவள் அவனது முகத்தோடு முகம் வைத்து மிக மென்மையாய் தன் இதழ்களை கொண்டு அவனது இதழ்களை ஸ்பரிசித்தவள் கண்களை மூடிக்கொண்டாள்.
அதன் பின் அங்கு பேச்சுக்கலற்று போக, விடிய விடிய அவளது கை வளையல்களும் கால் கொலுசுகளின் சத்தமும் இடைவிடாமல் கவிதை பாடிக்கொண்டு இருந்தது..
கலைத்து போய் சொக்கியவன் அவளை விட்டு விலகாமல் அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டே தூங்கினான்...
அவனது செயல்களில் முகம் சிவந்தவள் அவனோடு ஒன்றிக்கொண்டாள். காலையில் எப்பொழுதும் போல அவன் ஓட்ட பயிற்சிக்கு செல்ல, குழந்தையை கவனித்த சதி கிளம்பி கலைக்கூடத்திற்கு சென்றாள்.
குருவும் ஒரு டைரெக்டரை பார்க்கவேண்டி அங்கு சென்றவன் சில பல வேலைகளை கையேடு முடித்துக்கொண்டு ஒரு ஆபரோடு வந்தான்.
கலைக்கூடத்தில் இருந்த அத்தனை நடன ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒருங்கே கூட சொன்னான். அவர்கள் வந்த பின் குரு அந்த அரங்கில் நுழைந்து நடுநாயகமாக நின்றான்.
அவனது முகத்தில் இருந்த மகிழ்ச்சியே அங்கு இருந்த அத்தனை பேருக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது...
அதை இன்னும் அதிகரிக்கும் விதமாய், எடுத்த உடனே
“இந்த வருஷமும் பிலிம் பேர் அவார்டுல நாம கோரியோ பண்ண ஆபர் வந்து இருக்கு..” என்று சொல்லி முடிக்கும் முன்பே அந்த அரங்கு கூச்சலில் அதிர்ந்தது.
“ஹே கைஸ்... லிசின்.. இதுல இன்னொரு ட்விஸ்ட் என்னன்னா நாமக்கு மட்டும் எட்டு டான்ஸ் கிடைச்சி இருக்கு...” என்று சொல்ல இன்னும் ஆராவாரம் அதிகமானது...
“அதோட இல்லாம பாடும் போது பேக் ரவுன்ட் டான்சிங்க்கு நம்ம பசங்களையும் கேட்டு இருக்காங்க...” என்று சொல்ல இன்னும் மகிழ்ச்சி பெருகியது..
“குரு நிஜமாவா... ஹேய் ஜாலி...” என்ற குரல்கள் அங்கு பெரும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது...
“நிஜம் தான்... இன்னும் ஒரு மாசத்துல அந்த அவார்ட் ப்ரோகிராம் இருக்கு.. நம்மளோட இன்னும் சில பேமஸ் கோரியோக்ராபர் கலந்துக்குவாங்க... ஒன் வீக் அவார்ட் நடக்குற அந்த ஸ்டேஜ்ல ப்ராக்டிஸ் பண்ணனும்.. அதுக்கு பிறகு நாம இங்க அடிக்கலாம்.” என்று சொன்னவன் மேலும்
“அக்டர்ஸ் நிறைய பேர் வர இருக்காங்க.. சோ எல்லாருக்கிட்டயும் கவனமா இருங்க... முக்கியமா ஸ்டுடென்ட் நீங்க தான்.. எந்த வாழு தனமும் பண்ணாம இந்த ப்ரொக்ராம நல்ல படிய முடிக்கணும் ஓகேவா...?”
“எஸ் குரு...” ஒட்டு மொத்த குரலில் தங்களது ஒப்புதலை கொடுத்து மகிழ்ச்சி ஆராவரம் செய்தார்கள்.
அதை தொடர்ந்து “குரு” என்ற சத்தம் கேட்க, சட்டென்று அனைவரும் திரும்பி பார்த்தார்கள்.
அங்கே சினிமா துறையின் இன்னொரு டான்ஸ் லேட்ஜன்ட் நிற்பதை பார்த்து அனைவரும் கண்களை விரித்து வியந்து பார்த்தார்கள் அனைவரும்.
“வெல்கம் மச்சான்...” என்று குரு தன்னிடம் விடுத்து அவனை வரவேற்று, தழுவி, தனருகில் நிற்க செய்தவன் அவனை முறைப்படி அறிமுகப்படுத்தினான்.
“ஆல்ரெடி உங்களுக்கு தெரியும் இவரை பத்தி.. என்னோட மோஸ்ட் பேவர் டான்செர்.. அண்ட் மை பெஸ்ட் பிரெண்ட் மிஸ்டர் கேகே என்று அழைக்கப்படும் கார்த்தி கேயன்.” என்று சொன்னவுடன் கைதட்டல் பலமாக எழுந்தது.
“நம்மளோட கேகே யோட கலைக்கூடமும் சேர போகுது... அவங்களும் நம்மளோட டான்ஸ் ப்ராக்டிஸ் செய்ய போறாங்க... சோ லெட்ஸ் செலபிரெட்...” என்றவுடன் மீண்டும் ஒரு கைதட்டலோடு கேகேவின் குழுவும் வந்து சேர, இன்னும் அதிக மகிழ்ச்சி ஆராவரம் எழும்பியது.
கிட்டத்தட்ட கேகேவுக்கும் ஆறு டான்ஸ் கொடுத்து இருக்க, அவனும் தன்னுடைய பார்ட் ஒப் ஒர்க்கை சரிவர செய்ய தொடங்கினான்.
முதலில் தனி தனி க்ருப் செட் செய்தார்கள். அதன் படி பதினாலு க்ருப் கிரியேட் பண்ணி ஒவ்வொரு டான்சும் இந்த வகை பாடில் இருக்கும் படி அதற்குரிய கேட்டகரியை உருவாக்கி வைத்தார்கள்.
ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு டான்ஸ் வகையில் அமைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டு அதை அவார்ட் வழங்கும் மேனேஜ்மென்ட்டுக்கு தாயார் செய்து அனுப்பினார்கள்.
அதற்கே கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆனது... முதல் நாள் குழு பிரித்து முடித்து வைத்தார்கள். அதன் பின் அக்டேர்ஸ் வர, அவர்களுக்கு ஏத்த மாதிரி நடனத்தை தேர்வு செய்யவும், பாடல்களை தேர்வு செய்யவும், என்று மீதி இருந்த இரு நாட்களும் ஓடி போனது...
மூன்று நாட்களும் சரிவர ஒருவரும் தூங்கவில்லை. குரு சதியோடு, கேக்கேவும் இரு கலைக்கூடத்தில் இருந்த மொத்த நடன ஆசிரியர்களும் சேர்ந்து இரவு பகல் பாராமல் கண் விழித்து எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி அட்டவணை தயார் செய்தார்கள்.
அதை அடுத்த நாள் காலையில் அவார்ட் மேனேஜ்மெண்டில் சமர்ப்பித்து ஒப்புதல் வாங்கி ஒத்திகை பார்க்க தொடங்கிய போது கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிந்து இருந்தது...
பாடல்களுக்கு ஏற்றவாறு நடனம் புரிய இன்னும் இரு கலைக்கூடமும் பங்கேற்க, அதற்க்கு தேவையான மாணவர்களை குருவிடம் கேட்க, அவர்களுக்கு தேவையான மாணவர்களை கொடுத்து ஆதரித்தான்.
இந்த நிகழ்விலே அதிக கவனம் கொண்டு இருந்ததால் சதியை பற்றி அதிகமாக குருவால் என்ன முடியவில்லை. ஆனால் அவ்வப்பொழுது கண்களாலே அவளை சிறை எடுப்பதை மட்டும் தவற வில்லை.
அவ்வபொழுது தன்னை தாண்டி செல்லும்பொழுது குத்தும் பார்வையால் தன்னை தீண்டி செல்லும் குருவை பல நேரம் எதிர்க்கொள்ள முடியாமல் தலையை தாழ்த்திக்கொள்ளுவாள்.
பல நேரம் அவள் அப்படியே பண்ண ஒரு கட்டத்துக்கு மேல் குருவுக்கு கோவம் வர, கூடி இருந்த அத்தனை போரையும் ஒரு பார்வை பார்த்தான்.
அங்காங்கே எல்லோரும் ஆலோசனையில் குழுமி இருக்க, இது தான் சாக்கு என்று போகிற போக்கில் சதியை இழுத்துக்கொண்டு யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் அவனுடைய தனிப்பட்ட ஆடல் அரங்கிற்குள் சென்றான்.
அவன் அப்படி இழுத்துக்கொண்டு போக, திகைத்த சதி சத்தம் போட்டால் கண்டிப்பாக அங்கு குழுமி இருந்த முன்னூறு பேருக்கும் தாங்கள் காட்சி பொருளாய் இருப்போம் என்பதால் அவனுக்கு உடன்பட்டாள்.
ஆனால் கூடத்தின் உள்ளே வந்தவுடனே,
“என்ன இது இப்படி...” முடிக்கும் முன்பே அவளது இதழ்களை கவிக்கொண்டான். அவனது அந்த முரட்டு தனத்தில் திகைத்தவள், அவனிடமிருந்து திமிறினாள்.
“ப்ச்...” என்று ஆட்சேபனை செய்தவன், அவளின் இடையை இறுக பற்றி தன் உயரத்துக்கு தூக்கி வாகாக முத்தமிட சட்டென்று பயத்தில் அவனது கழுத்தோடு சேர்த்து தோளை கட்டிக்கொண்டாள். அதில் ஆணவனின் மோகம் பித்தம் கொள்ள மேலும் வன்மையாக முத்தமிட தொடங்கினான்.
அவனது தீவிரம் புரிய தன்னை மிகவும் தேடுகிறான் என்பதை புரிந்துக்கொண்டாள். அவனது வேகம் கண்டு திகைத்து தான் போனாள். மூன்று நாளும் அவளிடம் கிட்ட கூட நெருங்கவில்லை...
ஆனால் இன்று அவனால் சுத்தமாக முடியவில்லை... அதனாலே இழுத்துக்கொண்டு வந்துவிட்டான்.. இதழ்களில் இருந்து அவளின் கழுத்தில் முகம் புதைத்த போது,
“இந்த ஆறு மாதமும் என்னை சீண்ட கூட இல்லை... ஆனா இப்போ இந்த மூணு நாள்ல...” அவள் முடிக்க கூட இல்லை வேகமாய் அவளது இதழை சிறை செய்தான்.
நீண்ட நெடிய நிமிடங்களுக்கு பின் அவளை விடுத்தவன், சட்டென்று அவளின் இடையை பிடித்து ஆட ஆரம்பித்தான். அதில் தடுமாறியவள்
“என் கேள்விக்கு பதில் சொல்லலியே...” என்றபடியே இனைந்து ஆட ஆரம்பித்தாள்.
அதி வேகமான பீட்சை வைத்தவன் அவளை ஆழ்ந்து பார்த்த படியே தன் கைகளில் அவளை சுழற்றி சுழற்றி ஆட ஆரம்பித்தான்.
“ம்ம்... சொல்லு மாமா..” எப்பொழுதும் அழைப்பது போல மாமா என்று அழைக்க அவன் இன்னும் வேகம் கூட்டி அவளது இடையில் அழுத்தம் கொடுத்து ஆடியவன்,
“இப்படி தான் இத்தனை மாசமா என்னோட தாபத்தை உன்கிட்ட தனிச்சுக்கிட்டு இருக்கேன்...” என்றவன் முத்தாய்ப்பாய் அவளது இதழை சிறை செய்து மேற்கத்திய நடனத்தை முடித்து வைத்தான்.
அவனது பதிலில் வியந்து போனவள் “பிராடு மாமா..” என்றபடியே அவனது இதழ் யுத்தத்துக்கு தன்னை கொடுத்து நின்றாள்.
அவனது இயல்பான தோரனையை கண்டு மெல்ல
“அப்போ என் மேல இருந்த பிணக்கு மாறிடுச்சா மாமா... உங்க மனசு மாறிடுச்சா...?” பெரும் தயக்கத்துடனே கேட்டாள். அவளிடம் புதைந்து இருந்தவனிடம் சட்டென்று ஒரு மாற்றம் ஏற்பட கலங்கி தான் போனாள்.
இயல்பாய் இருந்த அவனது தேகம் சடாரென்று இறுகி போவதை உணர்ந்தவளால் தன்னை இப்போதைக்கு மன்னிக்க மாட்டான் என்று தோன்றியது...
அவளிடமிருந்து விலகாமலே “மாறக்கூடிய அளவுக்கோ இல்ல மறக்க கூடிய அளவுக்கோ நீ அவ்வளவு சாதரணமா நடந்துக்கலையே... உனக்கு என்கிட்டே மன்னிப்பே கிடையாது டி... மன்னிக்க கூடிய செயலை நீ செய்யலன்னு உனக்கே தெரியும்...” இரும்பாய் ஒலித்தது அவனது குரல்.
அவனது குரலில் இருந்த உறுதியும் அவன் சொன்ன வார்த்தையும் அவளை வெகுவாக காயப்படுத்தியது.
அவனை தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டே
“நீங்க மன்னிக்க கூடிய அளவுக்கு நான் எந்த தவறும் செய்ததா எனக்கு நினைவு வரல... உங்க பார்வையில என் செயல் தப்பா இருந்தா அது உங்க பார்வையோட குறைபாடு... என் மேல எந்த தவறும் கிடையாது... இப்போன்னு இல்ல எப்பவும் நான் தவறு செய்ய மாட்டேன்...” என்று சொல்லிய அடுத்த கணம் அவளது பிடியிலிருந்து விலகி நின்று எரிப்பது போல பார்த்தான் அவளை.
“நீங்க நெற்றி கண்ணை திறந்து என்னை பயமுறுத்துவது போல பார்த்தாலும் என் மேல எந்த தவறும் இல்லை... நான் செஞ்சது என்னை பொறுத்த வரை சரி தான்...” என்றாள் திடமாய்..
“எதுடி சரி... இல்ல எது சரின்னு கேக்குறேன்... நீ ஒரு உயிரோட விளையாடல... ரெண்டு உயிரோட விளையாண்டு இருக்க... அன்னைக்கு அந்த கோலத்துல... மை காட்.. அந்த நிமிடத்தை என்னால இன்னும் மறக்கவே முடியல டி... ஆனா நீ அதை ரொம்ப சர்வ சாதாரணமா எடுத்துக்கிட்டல்ல...” மேலும் பொறிந்தவனை ஆழ்ந்து பார்த்தவள்
“எனக்கு நீ ரொம்ப முக்கியம் டா... உன்னை எதுக்காகவும் யாருக்கிட்டயும் என்னால விட்டு குடுக்க முடியாது... என் குரு எப்பவும் எல்லாத்துலையும் குருவாதான் இருக்கணும்..” சொன்னவள்
“என்னோட காதலின் அளவு உங்களால வரையறுக்க முடியாது குரு...” கண்ணீர் வழிய சொன்னவள், வேகமாய் அவ்விடத்தை விட்டு வெளியே செல்ல, அவளது கையை பற்றி தடுத்தவன்,
“உனக்கு உன்னோட குரு முக்கியம்னா எனக்கு என்னோட சதி ரொம்ப ரொம்ப முக்கியம்... அது ஏண்டி உனக்கு தெரியாம போச்சு... எனக்கு நீன்னா ரொம்ப புடிக்கும்னு உனக்கு தெரியும் தானே... அப்படி இருந்தும் நீ செய்த காரியம்... என்னால நினைச்சி கூட பார்க்க முடியலடி... அந்த அளவுக்கு அந்த சம்பவம் என் கண்ணு முன்னாடி நிக்கிது... கண்ணை மூடி தூங்குனாலே ரத்த கரை படிந்த அந்த நினைவுகள் தான் கண்ணு முன்னாடி நிக்கிது... ஆனா உனக்கு அவ்வளவு ஈசியா போச்சு இல்ல...” என்றவன் அவளை கூர்மையாக பார்த்து,
“என்னோட காதல் உனக்கு எப்போ புரியுமோ அப்போ நான் உன்னை மன்னிக்கிறேன் அந்த விஷயத்தையும் மறந்தர்றேன்... ஆனா அதுவரை என்கிட்டே வந்து மறந்துட்டியா..? மன்னிச்சுட்டியா அப்படின்னு கேக்காத...” என்று கடுப்படித்தான்.
“ஹலோ நீங்க அந்த விஷயத்தை மறக்க தான் கேட்டேனே தவிர, என்னை மன்னிக்க சொல்லி நான் கேக்கல... ஏதோ இவ்வளவு நாள் கோவத்துல இருக்கீங்கன்னு பார்த்தா மன்னிக்கிற அளவுக்கு யோசிச்சு வச்சு இருக்கீங்க... இங்க பாருங்க இப்பவும் சொல்றேன்... என்னை நீங்க மன்னிக்கிற அளவுக்கு நான் எதுவும் பண்ணல... நீங்க சொன்ன அதே தான் என் காதலோட அளவு உங்களுக்கு புரியல...”
“காதல் எதையும் சுயநலமா பார்க்காது... அது தான் காதலோட முதல் படியே... அதுவே உங்களுக்கு புரியல...” என்றவளை கோவத்துடன் பார்த்தவன்,
“ஹே உன் மனசுல என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க... ரொம்ப தான் பண்ற... எனக்கு காதல பத்தி தெரியாதா...? அப்போ வா வந்து ரெண்டு நேரமும் டியுசன் எடு...” கடுப்படித்தான்.
“இங்க பாரு உன்னை எதோ சுண்டக்கான்னு நினைச்சி இவ்வளவு நாள் விட்டு வச்சேன்...” என்றான் இடக்காக.
“வாட் சுண்டக்காயா... ஹலோ... என்ன நக்கலா...?” இவளும் போர் கொடி பிடிக்க அங்கே ஒரு சண்டை உருவானது...
அப்படியே நல்லா சண்டை போட்டு.... பாஸ்ட்லா என்ன ஆச்சுன்னு சொல்லுங்க பார்க்கலாம்🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣😁