அவள் நிம்மதி அடைவதை ஆழமாக ஊன்றி பார்த்தவன் “வயல்ல வேலை இருக்கு. இவ வெட்டியாதானே இருக்கா, இவள சாப்பாட்டை எடுத்துக்கிட்டு அங்க வரசொல்லு நான் போறேன்” என்று பருவதம் தடுக்க தடுக்க பழமலை நாதன் சென்றுவிட்டான்.
அவனது பேச்சில் மனம் திக்கென்று இருக்க வேறு வழி இல்லாமல் அத்தைக்கு சாப்பாடு போட்டு தானும் இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு அவனுக்கு எடுத்துக்கொண்டு வயலுக்கு சென்றாள்.
சாப்பாட்டை நீர் இறைக்கும் இயந்திர அறையில் வைக்கலாம் என்று கதவை திறக்கும் சமயம் ஒரு இள வயது பெண் வெட்கத்தோடு வெளியே வர பின்னாடியே தன் உடையை சரிசெய்தபடி பழமலை நாதனும் வர அதிர்ந்துப்போனாள் முகிலாம்பிகை.
அந்த பெண்ணோ அவளை பார்த்து சிரித்துவிட்டு செல்ல, நிமிர்ந்து அவனை வெட்டும் விழியால் பார்த்தாள் முகில். அவனது முகத்தில் அப்பட்டமாய் ஏளனம் நிறைந்திருந்தது. உள்ளுக்குள் அருவருத்தவள் சாப்பாட்டை அங்கேயே வைத்துவிட்டு திரும்ப அவளது முகத்தில் படிந்த உணர்வை சரியாக புரிந்துக்கொண்டவன்
சொடக்கு போட்டு திமிராக அவளை அழைத்தான்.
“உனக்கும் என் கூட படுக்கனும்னா சொல்லு படுக்குறேன். அதை விட்டுட்டு இப்படி கோவிச்சுக்கிட்டு போனா எப்படிடி. பாரு நீ கோவிச்சுக்கிட்டதுனாலா மாமன் மனசு வாடிப்போச்சு” என்றான் விஷமமாய்.
அதில் உடல் தூக்கிவாரிப்போட அதை அவனிடம் காட்டாமல் ரொம்ப அழுத்தமாக அவனை ஏறிட்டவள் “நான் படுக்கனும்னா அது எனக்கு மட்டும் உடமையானதா இருக்கணும். எச்சில் இலை போல கண்டவளும் உபயோகித்த பொது நூலகம் போல இருக்கக்கூடாது” என்றாள் பட்டென்று.
“ஏய் யாராடிப்பார்த்து எச்சில் இலைன்னு சொன்ன” என்று கை ஓங்கீனான் பழமலை நாதன்.
அதில் கொஞ்சம் கூட மிரளாமல் “இப்ப தான் கொஞ்ச நேரம் முந்தி அவக்கூட படுத்து எழுந்தீங்க, அதுக்குள்ள என்னைய கூப்பிட்டா நான் உங்களை எச்சில் இலைன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது மச்சான்.” என்று ஏளனம் செய்தவள்
“நீங்க எச்சில் இலையா இருக்கலாம். ஆனா நான் எச்சில் இலையில் சாப்பிடுறது இல்ல. கை கழுவீட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” என்று கொஞ்சமும் அடி பணியாமல் வாழை இலை அறுக்க சென்றாள்.
செல்லும் அவளை ஆழ்ந்து பார்த்தான். அவளது அந்த நிமிர்வு அவனை உசுப்பி விட அவளின் பின்னே சென்றான். எட்டி இலை அருத்துக் கொண்டிருந்தவளின் வனப்பை கண்டு சிந்தை களைய இது ஆவுறது இல்லை தன்னையே திட்டிக்கொண்டவன் புடவையின் மறைவில் இருந்து சற்று விலகி எடுப்பாய் இருந்த அவளின் இடுப்பை தன் ஒற்றை கையில் இறுக்கி பிடிக்க அவனது அந்த செயலில் திகைத்து போனவள் வேகமாய் அவனது பிடியை உதற தொடங்கினாள்.
ஆனால் அவளால் அது முடியாமல் போக “என்ன இது விடுங்க” என்று திமிறினாள்.
அவளது முகத்தில் தெரிந்த பிடித்தமின்மையை கண்டு இன்னும் அவளை நெருங்கி அவளது முகத்தோடு முகம் புதைத்து தன் மூச்சு காத்தால் அவளது துள்ளலை அடக்கியவன்
“நீ இப்படி பேசுனதுக்காகவே உன்னை கல்யாணம் செஞ்சு கொடுமை படுத்தலாம் தான் ஆனா..” என்று இடைவெளி விட்டு அவளை கூர்ந்து பார்த்தவன்
“ஆனா அதுக்கு உனக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லையேடி” என்று வார்த்தையில் விஷம் தடவி சொன்னவனை கண்டு லேசாய் புன்னகைத்தவள்
“நல்ல வேலை எங்க தகுதி இருக்குன்னு இப்பவே தாலி காட்டிடுவீங்கலோன்னு பயந்தே போயிட்டேன்.” நக்கல் பண்ணியவள் “இந்த உலகத்துல கடைசி ஆணா நீங்க இருந்தா கூட உங்களை என் கண்ணு பார்க்காது மிஸ்டர். உங்களை எள்ளு முனையளவு கூட எனக்கு பிடிக்காது. என் விருப்பத்துக்கு கொஞ்சமும் தகுதி இல்லாத ஆள் நீங்க” என்றாள் நிதானமாக.
அவளது வார்த்தையில் காயம் பட்டு போனான் பழமலை நாதன். ஆனால் அதை உணர்ந்தது போல காட்டிக்கொள்ளாமல் “ம்ம்ம் அப்படியா... நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா... உங்க கிட்ட அப்படி என்னடி இருக்கு” என்று அவளை மேலும் கீழும் பார்த்தவன் அவனது பார்வை சற்றே அவளது அழகில் தேங்கி நிற்க கொஞ்சமும் யோசிக்காமல் அவனை அறைந்துவிட்டாள்.
அவளது அடியில் சுய நினைவுக்கு வந்தவன் அவளை தன் பிடியிலிருந்து உதறிவிட்டு
“என்னையே அடுச்சுட்டீள்ள..” வெறி வந்தவனாய் அவளை அடிக்க வர,
“நீ தப்பா பார்த்த அதனால தான் அடுச்சேன்” என்றாள் நிமிர்வாக
“பார்த்தாலே அடிப்பியா.. அப்போ” என்று அவளை நெருங்கி வந்து அவளை தொட வர வேகமாய் அவனுக்கு முதுகு காண்பித்து நின்றவள்
“சாரி” என்றாள்.
“உன் சாரியை நீயே வச்சுக்கோ எனக்கு இப்போ உன்னை தொடணும்... திரும்பு” என்றான் திமிராய்.
“அதான் சாரி சொல்றேன்ல, தள்ளி போங்க.. இல்லன்னா அத்தைக்கிட்ட சொல்லுவேன்” மிரட்டினாள்.
“நீ யார் கிட்ட வேணாலும் சொல்லு” என்றவன் அவளை திருப்ப முனைய.. எதிர் பாரா சமயம் அவனை தள்ளிவிட்டுட்டு வேக வேகமாய் ஓடினாள் அந்த சின்ன வரப்பில்.
அவள் தள்ளி விட்டிருந்த இடத்தில் சிறிய கூர் கல் ஒன்று இருக்க அதில் விழுந்த பழமலை நாதனின் இடுப்பில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.
காயத்தின் எரிச்சலில் அவள் மீது இன்னும் அதிக கோவம் வர ஒரு வெறியோடு அவளை துரத்தினான்.
அவன் எழுந்து துரத்த ஆரம்பித்ததில் முகிலாம்பிகைக்கு ஈர குலை நடுங்க முன்னிலும் அதிக வேகமாக ஓடினாள்.
ஓரளவு ஆட்கள் வேலை செய்யும் இடம் வந்துவிட அவளது வேகம் குறைந்தது. அவள் ஏன் நின்றுவிட்டால் என்ற காரணம் புரிய வன்மத்துடன் அவளை பார்த்தான்.
“ஓ இவங்கல்லாம் உனக்கு காவலுக்கு இருக்காங்களா.. அதான் தெனாவட்டா இருக்கியா.. எப்படியும் இன்னைக்கு என் கையில மாட்டுவடி. அப்போ இருக்கு உனக்கு” அவளின் காதோரம் மூச்சிரைத்த படியே பேசியவனின் வார்த்தையில் அவளுக்கு உடம்பு அச்சத்தில் நடுங்கியது.
“சரிதான் போடா” என்று விளகிச்செல்ல மனம் முண்டினாலும் இப்போதைக்கு இங்கிருந்து நகர முடியாது. ஆட்கள் புழங்கும் இடத்தை விட்டு நகர்ந்தால் தன் கதியை எண்ணி பார்க்கவே பயமாய் இருந்தது.
ஆனால் எவ்வளவு நேரம் இங்கவே இருக்க முடியும் கடவுளே.. என்று எண்ணிய சமயம் சரியாய் “கண்ணு..” என்று வாஞ்சயாய் அழைத்த படி அவ்விடத்துக்கு பருவதம் வந்து சேர்ந்தார்.
“அத்த” துள்ளி குதித்தாள் முகிலாம்பிகை.
“கண்ணு ஏன் வெயில்ல உக்கார்ந்து இருக்க.. நிழல்ல உக்கார வேண்டியது தானே..” என்று அதட்டிய படி அவளை அழைத்துக்கொண்டு சற்று எட்ட இருந்த மரத்துக்கு போனார்.
“என்ன அத்த. எதுக்கு இவ்வளவு தூரம் தேடி வந்து இருக்கீங்க” யோசனையுடன் அவரை பார்த்தாள்.
“ஆத்தா என்ன இவ்வளவு வெயில்ல வந்து இருக்க” வியர்வையை தன் துண்டால் துடைத்த படி பழமலை நாதனும் வர
“ம்ம் முகிலாம்பிகையோட மாமா வர்றேன்னு போன் போட்டு இருக்காருடா...” என்றவரின் பார்வை முகிலாம்பிகையிடமே இருந்தது.
“என்ன அத்தை சொல்றீங்க”
“ஆமாங்கண்ணு அவரு உன்னை கூட்டிட்டு போறாராம்” என்றார் வருத்தமாக.
“ஏன் இவ்வளவு நாள் எங்க போய் இருந்தாராம் இப்போ தான் தெரியுதாமா இவ இங்க இருக்கிறது” என்றான் சுல்லேன்று.
“அது இல்லடா” என்று தயக்கமாய் அவர் பேச
“எது இல்ல.. தங்கச்சி, தங்கச்சி வீட்டுக்காரு செத்து போய் சடங்கு கூட முழுசா முடிக்காம வேலை இருக்குன்னு போய் சேர்ந்துட்டு இப்போ அவங்களோட சேமிப்பு பணம் இருக்குன்னு தெருஞ்ச உடனையும் இவள கூட்டிட்டு போக வர்றாராக்கும்” என்றான் கடுப்பாய்.
இது என்ன புது கதை என்று அவனை பார்க்க
அவளது விழிகளை படித்தவன் “உங்கப்பன் எதுலயோ சேமிச்சு வச்ச பணம் உன் இருவத்தி மூணு வயசுல கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிட்டு தான் செத்து போயிருக்காரு. உன்னை கூட்டிட்டு வரும் போது உனக்கு இருபத்தி இரண்டு. அதான் அப்போ தெரியல பண கணக்கு. இப்போ தானே உனக்கு உரிய வயசு வந்து இருக்கு. அதான் விஷயம் கேள்விப்பட்டு உன்னை பார்க்க வராரு” என்றான் நக்கலாய்.
அதில் அவளுக்கு வேதனை ஏற்பட்டாலும் காட்டிக்கொள்ளவில்லை.
“இங்க பாரு இத்தனை நாள் உனக்கு சோறு போட்டதுக்காக ஒழுங்கா இன்னும் ஒரு வருஷம் இங்க இருந்து வேலை பார்த்துட்டு தான் நீ போகணும். அதை விட்டுட்டு உன் மாமன பார்த்த உடன் பொட்டிய கட்டுன நான் மனுசனா இருக்க மாட்டேன் பாத்துக்க” அவளிடம் எகிறினான்.
“அதான் காசு வருதே அதை இத்தனை நாள் நான் சாப்பிட்டதுக்கு என் சாப்பாட்டு செலவுக்கு வச்சுக்கோங்க நான் என் மாமா கூடவே போறேன்” என்றாள் கோவமாக
“அதெல்லாம் சரி தான்டி. ஆனா இத்தனை நாள் எங்க போச்சு இந்த வீரம். இப்போ காசு வரவும் எகுருறியா.. என்ன ஏத்தமடி உனக்கு” என்று அவளை அடிக்க வர
“அடேய் ஏண்டா புள்ளைகிட்ட போய் வம்பிளுத்துக்கிட்டு.. நீயும் தான் கண்ணு செவநேன்னு இருக்க வேண்டியது தானே.. இவன் இன்னைக்கு நேத்திக்கா இப்படி பேசுறான். உன்னை கண்ட நாள்ல இருந்து இப்படி தான் பேசுறான். நீயும் தான் எதுக்கு டா இப்படி பேசுற.. அவளுக்கு இல்லாத உரிமையா உனக்கு இருக்கு. இன்னொருக்கா புள்ளைக்கிட்ட இப்படி பேசுன உன்னை தான் பட்டினியா போடுவேன் பார்த்துக்க” இருவரையும் ஒரு சேர அடக்கி விட்டு
“ரெண்டு பேரும் வீட்டுக்கு வாங்க முதல்ல... இந்த நேரம் பார்த்து உங்க அப்பாவும் பாட்டியும் வேற இன்னைக்கு ஒரு கல்யாணம்னு வெளியூரு போயிருக்காவ.. என்ன செய்யிறதுன்னு வேற தெரியல.. இங்க நின்னுகிட்டு இருந்தா ஜோலியே ஓடாது.. வெரசா வாங்க இல்லன்னா முகிலு மாமா வந்துட போறாக.. அவங்க வரும்போது நாம வீட்டுல இல்லன்னா நல்லாருக்காது” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.
வீட்டுக்கு வந்தவள் அவர்கள் வருகிறார்கள் என்று சாப்பிட பஜ்ஜி போட போக “என்ன உன் மாமனுக்காக விருந்து தயார் செய்றியா... அந்த ஆளுக்கெல்லாம் இது ஒன்னு தான் கேடு. களனி தண்ணில காபி போட்டு குடு போதும்.” அடுப்பு மேடையில் ஏறி அமர்ந்து அங்கு பஜ்ஜி போடுவதற்காக வைத்து இருந்த பொருட்களை பார்த்து முகம் சுளித்தான்.
“டேய் பாவம்டா புள்ள.. சும்மா சும்மா அவளையே ஏண்டா நோண்டிகிட்டு இருக்க.. ஆம்பளையா லட்ச்சனமா போய் கூடத்துல இரு..” அவனை விரட்டி விட்டுட்டு தேங்காய் சட்னி அரைத்தார் பருவதம்.
எல்லாவற்றையும் தயார் செய்து வைத்த நேரம் வாசலில் கார் சத்தம் கேட்க முகிலாம்பிகையிடம் லேசாய் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அதை கண்ட பழமலை நாதன் “என்னடி பொண்ணு பார்க்க வர எபெக்ட்ல நிக்கிற” கிண்டல் அடிக்க பல்லை கடித்தாள் அவள்.
“டேய் அவங்க வந்து போற கொஞ்ச நேரம் வரை வாயை மூடிகிட்டு இரு டா.” கெஞ்சினார் பர்வதம்.
“நீ சொன்னா நான் கேக்கணுமா... அதெல்லாம் முடியாது. ஒழுங்கா அவளை வெளிய வர கூடாதுன்னு சொல்லு” என்றான் மிரட்டலாய்.
“டேய் அவங்க வர்றதே அவளை பார்க்கத்தான் சும்மா நொச்சு பண்ணாம போடா..” என்று அவனை கையோடு அழைத்துக்கொண்டு கூடத்துக்கு வந்து வந்தவர்களை வரவேற்று அமர வைத்தார்.
“கண்ணு பெரியவக வந்து இருக்காக பாரு தண்ணி எடுத்துட்டு வா சாமி” உள்ளே பார்த்து குரல் கொடுக்க தண்ணீர் நிறைந்த சொம்பை எடுத்துக்கொண்டு முகிலாம்பிகை வந்தாள்.
கூடத்தில் அமர்ந்து இருந்தவர்களை கண்டு லேசாய் பயம் வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் அழகான புன்னகையை சிந்தி “வாங்க மாமா.. வாங்க அத்தை” என்று வரவேற்று குடிக்க நீரை கொடுத்தாள்.
அவளது அந்த பணிவை பார்த்த இரு பெரியவர்களும் கண்களால் ஏதோ பேசிக்கொள்ள பருவதத்துக்கு திக்கென்று இருந்தது.
ரொம்ப நல்லது, நீ இவங்க கூடவே போ....
போய்ட்டு, உனக்கு ஒரு வேலையை தேடிக்கோ முகி.....
இந்த காட்டு பய உனக்கு வேணாம்😤😤😤😤
ரொம்ப நல்லது, நீ இவங்க கூடவே போ....
போய்ட்டு, உனக்கு ஒரு வேலையை தேடிக்கோ முகி.....
இந்த காட்டு பய உனக்கு வேணாம்😤😤😤😤
அப்படியெல்லாம் விட்டுட மாட்டான் டா பின்னாடியே போய் தூக்கிட்டு வந்துருவான் இவன்.. சரியான ஆராத்து
திக்குனு இருக்கா....ஏமா அவங்க எப்படிப்பட்ட ஆளு