Notifications
Clear all

அத்தியாயம் 18

 
Admin
(@ramya-devi)
Member Admin

தடுத்த சாமிநாதனை ஒரு பார்வையிலே எரித்தவன் ஓய்ந்து போய் படுத்து இருந்த ஆராவை கொத்தாக எழுப்பியவன் அவளை ஒரு உலுக்கு உலுக்கி

“என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க.. யாரையும் பார்க்க பிடிக்கலன்னு சொல்றியாம். யாரும் வேணான்னு சொல்றியாம். அப்போ என்னையும் வேணான்னு சொல்லி தலை முழுகிட்டு தான் போனியா” ஆத்திரமாய் கேட்டவனை

“உன்னை நான் தலைமுழுகுவேணா மாமா... ஆனா அனு தான் உனக்கு பொண்ணு பார்த்துகிட்டு இருக்காளே. பின்ன எப்படி நான் அங்க இருக்கிறது. அதான் கிளம்பி வந்துட்டேன்”

“ஏண்டி அவ பார்த்தா நான் ஒத்துக்கணும் ல டி”

“நீ ஒத்துக்க மாட்ட தான். ஆனா அவ பண்ற வேலை என்னை ரொம்ப கஷ்டபடுத்து மாமா.”

“இப்ப மட்டுமா அவ உன்னை கஷ்ட படுத்துறா.. நீ பொறந்ததுல இருந்தே தான் கஷ்ட படுத்திக்கிட்டு இருக்கா”

“அது வேற மாமா.. ஆனா இது.. மனசுக்கு புடுச்சவனுக்கு அவ கண்ணு முன்னாடியே வேற பொண்ணுக்கு மணம் பேசி முடிக்கிற வலி கொடுமை மாமா . எந்த வலிய வேணாலும் தாங்கிக்கலாம். ஆனா இந்த வலிய தாங்க முடியாது.” என்று விசும்பியவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன்

“நாம எங்காவது ஓடி போய்டலாமா டி” என்றவனை புன்னகையுடன் பார்த்தவள்

“அதுக்கு கூட அவ சம்மதம் வேணும் மாமா” என்று சொன்வளை உதறி தள்ளினான் கோவத்தில்

“என்ன தாண்டி நினைச்சுகிட்டு இருக்க. வாழ வான்னா அதுவும் முடியாது. சரி மறந்து தொலைனா அதுவும் முடியாது.. மனுசன சாக அடிக்கிரடி” என்று எரிந்து விழுந்தான் பிறைசூடன்.

“அனுவுக்கு வாக்கு குடுத்து இருக்கேன்”

“அப்போ இப்போ மட்டும் எதுக்கு அவளை விட்டுட்டு வந்து இருக்க”

“மாமா ஒரு அம்மா ஸ்தானத்துல இருந்து எல்லாம் பார்த்து செய்ய வேண்டியதை செஞ்சுட்டேன். இதுக்கு மேல அவளுக்கு செய்ய எதுவும் இல்லை. ஆனா ஒரு காதலியா அவ செயல்ல ரொம்ப அடி பட்டுட்டேன். அதுக்கு மேல அவ செயல்களால என்னால காயம் பட முடியாது. அதுதான் வந்துட்டேன்” என்று சொன்னவளின் விளக்கத்தில் வாயடைத்து போனான்.

அனுவை விட சின்னவள் அவளுக்கு தாயாய் எல்லாம் செய்தாளா.. ஓரளவு இதை அவன் யூகித்து இருந்தாலும் அவள் தாயாய் செய்ததை கேட்டு நெகிழ்ந்து தான் போனான்.

அதை கேட்டுக்கொண்டு இருந்த கீதா பிரகாஷ்க்கு கால் பண்ணி சொல்ல கேட்டவனின் கண்கள் கலங்கி போனது.

வீட்டுக்கு வந்தவன் அனுவின் கன்னத்திலே ஒன்னு விட்டான்.

“பொண்ணாடி நீயெல்லாம். உன்னை விட சின்ன பெண் ஆரா.. என் அண்ணி.. அவங்களுக்கு இருக்குற பொறுப்புள கொஞ்சமாச்சும் உனக்கு இருக்கா.. தாயில்ல பிள்ளைன்னு தாய் ஸ்தானத்துல இருந்து ஒன்னு ஒன்னையும் பார்த்து பார்த்து உனக்கு செஞ்சாங்க. ஆனா நீ அவங்களுக்கு என்னடி பண்ணுன.. எவ்வளவு நோகடிக்க முடியுமோ அவ்வளவு நோகடிச்ச..

உன் அம்மா உயிரோட இருந்து இருந்தா கூட உன்னை இந்த அளவு பார்த்திருந்திருக்க மாட்டாங்க. அதுக்கு கொஞ்ச மாச்சும் நன்றி விசுவாசம் உனக்கு இருந்தா.. இனியும் அவங்க வாழ்க்கையில விளையாடாம என் அண்ணனையும் உன் தங்கையையும் சேர்த்து வை.” என்று வெறுத்து போய் சொல்லிவிட்டு போய்விட்டான்.

கன்னத்தில் அடிவாங்கியவள் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

“ஹ நீ சொன்னா நான் கேட்ப்பனா..” என்ற திமிர் அவளை விட்டு அப்போதும் போக வில்லை.

பிறைசூடனின் அனுமதியுடன் ஆரா சாமிநாதனின் ஊருக்கு சென்று அங்கு தங்கி வேலை பார்க்க ஆரம்பித்தாள். பிரைசூடனை அங்கு வர கூடாது என்றும், பேசகூடாது என்ற கட்டளையுடனும் அங்கு வசிக்க தொடங்கினாள்.

எல்லாமே நான்கு மாத காலம் மட்டுமே. அதற்க்கு மேல் பிரைசூடனால் ஆராவை விட்டு விலகி இருக்க முடியவில்லை.

தேடி வந்துவிட்டான். அனுவின் குழந்தையையும் தூக்கிக்கொண்டு. பிரகாஷ் பிரைசூடனிடம் குடுத்துவிட அனு எந்த கேள்வியும் கேக்கவில்லை.

==

பிறைசூடன் வந்து இரு பொழுதுகள் ஆன நிலையில் அன்று இரவு எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு ஆரா கீழே படுத்து இருக்க பிறைசூடன் கட்டிலில் படுத்து இருந்த படி

“இன்னும் எவ்வளவு நாள் டி என்னை காக்க வைக்க போற”

“மாமா ப்ளீஸ் இதை பத்தி பேசாதேயேன்”

“என் உணர்வுகள் உன்னை கேக்குதே இதக்காவது ஏதாவது பதிலை சொல்லுடி” என்ற நேரம் அவர்களது வீட்டு கதவை உடைத்து விடுவது போல தட்ட

“இந்த நேரத்துல யாறு” என்ற படி பிறைசூடன் போய் கதவை திறந்தான்.

அங்கே அனுவும் பிரகாஷும் நின்றுக்கொண்டு இருந்தார்கள்.

“வாடா” என்று வரவேற்றுவிட்டு உள்ளே சென்றான்.

இருவரும் உள்ளே வர ஆராவும் எழுந்து வந்து “யாருங்க” என்று கேக்க சரியாய் இருந்தது.

ஆராவின் நலுங்கிய தோற்றம் கண்டு அனு அவளை கூர்மையாக பார்த்தாள். அவளது பார்வையின் அர்த்தம் புரிய பிறைசூடனின் கைகளில் நரம்பு புடைத்தது. அனுவின் பார்வையில் ஆரா கூசி போனாள்.

“பிரகாஷ் உள்ள அறைக்குள்ள போய் உக்காருங்க” என்று அவனுக்கு மறைமுகமாக சொல்ல அவனும் அவளை அழைத்துக்கொண்டு அங்கே சென்றான்.

அங்கே கட்டிலில் ஒரு தலையணையும், கீழே பாயில் ஒரு தலையணையும் கிடக்க அனுவின் முகத்தில் வெற்றியின் சாயல் படிந்தது. அதை பிரைசூடனும் பிரகாஷும் வெறுப்புடன் பார்த்தார்கள்.

“நாளைக்கு வீட்டுல ஒரு பங்க்சன் இருக்கு அதுக்கு உங்களை கூட்டிட்டு போகலாம்னு தான் வந்தேன். உடனே கிளம்பு ஆரா...” என்று அனு சொல்ல

“நான் வரல” என்றாள்.

“ம்ஹும் நீ தான் முக்கியமா வந்து ஆகணும். எந்த மறுப்பும் சொல்லாத. உன் அத்தைகிட்ட நீயே பேசு” என்று போன் போட்டு குடுத்து ஆராவை சித்ராவோடு பேச வைத்து கையோடு பிரைசூடனையும் ஆராவையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டாள்.

அடுத்த நாள் அனைவரும் கூடியிருக்க பிரைசூடனுக்கும் ஆராவுக்கும் கல்யாணம் ஏற்பாடு நடந்துக்கொண்டு இருந்தது. ஆராவால் நடந்து கொண்டு இருப்பதை நம்ப முடியவில்லை. ஆனால் அவளது அலங்காரத்தை பார்த்து நம்ப தான் வேண்டி இருந்தது.

அவளை பிறைசூடனின் அருகில் அமரவைத்து ஆராவின் தோழியாய் அனு எல்லா வேலையும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவளது அந்த மாற்றத்தை யாராலும் நம்ப முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் சித்ராவிடம் வந்து “அத்தை ஆரா பெரிய அத்தான் திருமணத்தை நடத்தலாம். ஆனா ஆரா அப்பா அம்மா வரகூடாது” என்று கண்டிசன் போட்டாள்.

“ஏன்” என்று கேட்ட கணேசனுக்கு “அவங்க வந்த இந்த திருமணத்தை நடத்த விட மாட்டேன். உங்களுக்கு உங்க மகன் கல்யாணம் வேணுமா.. இல்ல தங்கச்சி சொந்தம் வேணுமான்னு முடிவு பண்ணிக்கோங்க” என்று சொல்ல யாரும் எதுவும் சொல்ல வில்லை அவளை எதிர்த்து. அவளின் விருப்பப்படி இப்போ திருமணமும் நடந்து கொண்டு இருக்கு.

சரியாய் தாலி கட்டும் நேரம் சண்முகமும் வள்ளியும் வந்து சேர்ந்தார்கள்.

“நாங்க உயிரோடு இருக்கும் போது நீ எப்படி எங்களுக்கு சொல்லாம நான் பெத்த புள்ளைக்கு கல்யாணம் செஞ்சு வைப்ப” வள்ளி கத்த

“ஹ பெத்துட்டா மட்டும் போதுமா புள்ளைய.. அதை நல்ல படியா வளர்க்கவும் செய்யணும். பெருசா வந்தேட்டீங்க கேள்வி கேக்க” அனு பதிலுக்கு கத்த

“ஏய் அதை நீ சொல்லாத”

“நான் தான் சொல்லுவேன். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம இருந்தது நீங்க. புள்ளய தனியா விட்டுட்டு போறமே அந்த புள்ளயோட நிலைமை என்ன ஆச்சுன்னு ஒரு முறையாவது இவ கிட்ட உக்கார்ந்து கேட்டு இருக்கீங்களா... என்னை விடுங்க. நான் தான் வேற வீட்டு பிள்ளை. ஆரா நீங்க சுமந்த பிள்ளை தானே. ஒரு வார்த்தை அவ கிட்ட உக்கார்ந்து பேசி இருக்கீங்களா.. நீங்க அவ கிட்ட பேசி இருந்தா இன்னைக்கு இவ இவ்வளவு கஷ்ட பட்டு இருக்க மாட்டா...

Loading spinner
Quote
Topic starter Posted : March 22, 2025 10:07 am
(@mrsbeena-loganathan)
Trusted Member

குழந்தை பருவத்தில்

கஷ்டங்களை அனுபவித்து

கண்ணீர் சிந்தியும்

கிடைக்காத அன்பு

காதலனின் ஆறுதல்

கன்னியும் கடந்துவிட

கல்யாணத்தில் உரிமை வேண்டுமோ

காலம் கடந்து வருந்தும் பெற்றோர்...

 

Loading spinner
ReplyQuote
Posted : March 26, 2025 5:08 pm
(@gowri)
Estimable Member

இது தான் சாத்தான் வேதம் ஓதுதுனு சொல்லுவாங்க போல🤷🤷🤷🤷🤷

Loading spinner
ReplyQuote
Posted : March 28, 2025 5:25 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top