“என்ன ஆரா இது.. இப்படி தான் நடந்துக்குவியா” என்று சண்முகம் கேட்க
“ரொம்ப சீக்கிரமா கேள்வி கேட்டுடீங்க...” என்றவள் தன் அறைக்கு போக
“கேட்டுகிட்டு இருக்கும் போதே நீ போனா என்ன அர்த்தம் ஆரா.. அப்பா கேக்குராருல பதில் சொல்லிட்டு போ” வள்ளி சொல்ல
“அப்பாவா... ஓ இவரு தான் என் அப்பாவா... சாரி எனக்கு இப்போ தானே அவரை அறிமுக படுத்துறீங்க.. அதனால எனக்கு தெரியல அடுத்த முறை கண்டிப்பா பதில் சொல்றேன்” என்று நக்கல் பண்ணியவளை கண்டு மூவருக்குமே வியப்பாய் இருந்தது.
“என்ன பேசுற ஆரா.. அவ உன் அம்மா நினைவு இருக்கட்டும். அவ கிட்ட இப்படி தான் பேசுவியா.” சண்முகம் கேட்க
“பார்ரா இப்ப தான் நினைவு வந்ததா உங்களுக்கு இது என் அம்மான்னு.. நான் அனாதைனுள்ள நினைச்சேன்.” என்றவளின் பேச்சில் இருந்த வலியை அனு புரிந்து கொண்டாலும் உனக்கு இதைவிட அதிகமா வலியை கொடுப்பேண்டி சபதம் எடுத்தாள்.
அவளின் புரியாத பேச்சை கேட்டு பெற்றவர்கள் இருவரும் குழப்பத்தில் அவளை பார்த்தார்கள்.
“நீ ஏன் ஆரா இப்படி பேசுற. உனக்கு என்ன ஆச்சு”
“எனக்கு எதுவுமே ஆகல” என்றால் பட்டும் படாமல்.
அப்போது தான் அவளது பேச்சை இருவரும் கவனித்தார்கள். அவள் இப்போது வரை அப்பா அம்மா என்று அழைக்காமல் மொட்டையாக அழைத்ததை.
“நாங்க உன்னை பெத்தவங்க ஆரா.. அந்த மரியாதையை நீ ஏன் குடுக்க மறுக்குற. என்ன தான் நீ நினைச்சுகிட்டு இருக்குற..” என்று வள்ளி கேட்க
“பெத்தால் மட்டும் போதாது பெத்த மகவை வளர்க்கவும் செய்யணும்”
“ஓ அப்போ நாங்க வளர்க்காம தான் நீ இப்படி இவ்வளவு பெரிய பெண்ணாய் வளர்ந்து நிக்குரியா”
“வளர்றது என்பது உங்க பார்வையில் வெறும் பணம் மட்டும் தான் இல்லையா... பணம் குடுத்தால் போதும் வேறு எதுவும் நீங்க பெத்த பிள்ளைக்கு தேவை இல்லை சரியா...” என்று கேட்டவளை கண்டு லேசாய் உள்ளம் துடித்தாலும் அவர்கள் செய்த தவறு அவர்களுக்கு புரியவில்லை.
“இப்போ நீ என்ன தான் சொல்ல வர்ற..” என்று எரிச்சல் மிகுதியில் சண்முகம் கேட்க அவரை ஆழ்ந்து பார்த்தவள் பதில் எதுவும் சொல்லாமல் விறுவிறுவென்று தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
ஆரா சொல்ல வந்த விஷயம் அனுவுக்கு தெள்ள தெளிவாய் புரிந்தது. ஆனால் அதை தெளிய வைக்க அவள் முன் வர வில்லை. அதை தெளிய வைத்து விட்டால் பின் ஆராவுக்கு அவள் செய்த காரியங்கள் எல்லாமே வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விடுமே...
ஆரா எதையும் கூறாமல் சென்றது அனுவுக்கு ரொம்ப சந்தோசமாய் இருந்தது. எல்லாவற்றையும் உடைத்து பேசிவிட்டால் பின் அவர்களின் உறவு இன்னும் பல பட்டுவிடுமே.. பிறகு தான் மட்டும் தனியாய்... “ம்ஹும் அது நடக்கவே கூடாது. அவ்வாறு நடக்க நான் அனுமதிக்க்கவும் மாட்டேன்.” என்று தனக்குள் சபதம் எடுத்தவளின் முகத்தில் அத்தனை வெறி தனம் இருந்தது.
ஆனால் மிக சாமர்த்தியமாக அதை மற்றவர்களின் பார்வைக்கு காட்டாமல் மறைத்துக்கொண்டாள்.
“என்னங்க சொல்ல வர்றா.. இவ” வள்ளி தன் கணவனை பார்த்து கேட்க
“எனக்கு என்ன தெரியும் அவளுக்கு தேவைனா அவளே வந்து சொல்லுவா... நீ வா” என்று அவரை அறைக்குள் கூட்டி சென்றார்.
அனுவிற்கு அவ்வளவு கோவம் வந்தது. ஆராவை அவளுக்கு பிடிக்காது தான். ஆனால் இப்படி ஒரு பெத்தவர்களை காணுகையில் உள்ளம் கோவத்தில் உழன்றது.
“இவங்க எல்லாம் எதுக்கு தான் பிள்ளைய பெத்துக்கிட்டான்களோ.. வேண்டா வெறுப்புக்கு புள்ளைய பெத்து காண்டா மிருகம்னு பேரு வச்சாங்களாம் அந்த கதையா இருக்கு.. ச்சை” என்று கடுப்பானாள்.
அடுத்த நாள் காலை எழுந்து குளித்தவள் அவசரமாய் அலுவலகம் சென்றாள் ஆரா. அங்கு தனக்குரிய எல்லா நிறுவனங்களையும் அனுவின் பெயருக்கு மாற்றி எழுதி நிறுவனத்தின் முழு பொறுப்பையும் அவளிடம் ஒப்படைய்த்தாள்.
அவளது அந்த செயல் அனுவை வியக்க வைத்தது. ஆனாலும்
“இத நீ மறுபடியும் வந்து கேட்டா கண்டிப்பா உனக்கு கிடைக்காது.” என்றால் கேலியாக
அவளது கேலியை சட்டை செய்யாமல் நிமிர்ந்து நின்று
“எனக்கு அது அவசியம் இல்லை. எனக்கு என் மாமாவோட சொத்து இருக்கு.. மாமாவே என் கிட்ட இருக்கும் போது அவருடைய சொத்து கூட எனக்கு தேவை இல்லை. அவரோட சொத்தே தேவை இல்லை என்னும் போது என் சொத்து எனக்கு பாரமாக தான் தெரியுது.
எனக்கு மட்டும் இல்ல என் சந்ததிகே இந்த சொத்து தேவை இல்லை.” என்றால்.
“ம்ம் ஓ அப்போ சந்ததியே இல்லாம பண்ணிட்டா” என்று சாதாரணமாய் ஒரு குண்டை தூக்கி போட்டவளை கண்டு உள்ளுக்குள் குளிர் பிறந்தது. ஆனாலும் அதை அவளிடம் காட்டிக்கொள்ளாமல்
“அது கண்டிப்பா உன்னால முடியாது.”
“அதையும் பார்ப்போம்” என்று அனு அவளிடம் சவால் விட்டாள்.
பிறைசூடனின் மீது நம்பிக்கை இருந்தாலும் அனுவின் வார்த்தையை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் சிறு வயதிலிருந்து அவளிடம் வாங்கிய பாடம் ஏராளாம்.
“கடவுளே நீ தான் என் வாழ்க்கை முழுவதும் துணை வர வேண்டும்” என்று வேண்டிக்கொண்டவள்
சூடானின் அலுவலகத்துக்கு சென்றாள். ஏற்க்கனவே அவளுக்கு அங்கு பழக்கம் என்பதால் நேரடியாக அவனது அறைக்கே சென்றாள்.
“என்ன அம்மணி முதல் நாளே அலுவலகத்துக்கு தாமதமா வர்ற..” எழுந்து நின்று அவளுக்கு ஒரு அணைப்பையும் அழகான மலர் செண்டையும் கொடுத்தான்.
அதில் மனம் மலர்ந்தவள் ஆசையாக அவனது கன்னத்தில் இதழ் பதித்து அவனது வரவேற்ப்பை அங்கீகாரம் செய்தாள்.
“ம்ம் பரவாயில்ல ஒரே நாள்ல நல்ல மாற்றம் தான்” பாராட்ட
இவள் முறைத்தாள்.
“என்னடி முறைப்பு” என்று அவளை நெருங்கி வர “கவனம் இது அலுவலகம்... உங்க படுக்கை அரை கிடையாது” என்று எச்சரித்தவலை தலை முதல் பாதம் வரை ஆசையாக பார்த்தான்.
அழகான பருத்தி புடவையில் தனக்குரிய கம்பீரத்தோடு சற்றே மிடுக்குடன் இருந்தால் ஆரா...
அவளது அந்த மரியாதையான தோற்றம் பிரைசூடனுக்கு மட்டும் போதையை தர மெல்ல அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான்.
அவனது நோக்கம் புரிய ஆரா பின்னால் சென்றாள்.
“ம்ஹும் நகரதேடி..” என்று கட்டளை இட்டவன் அவளின் கரத்தை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான்,
“மாமா இது..” என்று ஆரம்பிக்கும் போதே..
“தெரியும்டி எனக்கும். நீ கொனஜ் நேரம் தோன தொணன்னு அரிக்காம இரு” சிடுசிடுத்தவன் அவளை பார்வையாலே கொள்ளை இட்டான்.
“ம்கும் இதுக்கு தான் என்னை உங்க கிட்ட வேலைக்கு வர சொன்னீங்களா” முனகலாய் கேட்டவளின் இதழ்களின் அசைவில் உள்ளம் தறிகெட்டு அலைய வேறு வழி இன்றி அவளிடமே சரணடைந்தான்.
அதன் பின் அவனது ஆளுமை அவளை வீழ்த்த இருக்கும் சூழ்நிலை உணர்ந்து அவனை கட்டுக்குள் கொண்டு வந்து அலுவலக வேலையை அவனை செய்ய வைத்து தானும் அவனுக்கு உதவியாய் இருந்தாள்.
அது இன்று மட்டும் இல்லாமல் திருமண நாள் வரும் வரை இதே கதையாகி போக அனுவிற்கு ஒரு பக்கம் எறிந்தாலும் இன்னொரு பக்கம் வில்லங்கமான ஒரு திட்டத்தை தீட்டி வைத்தாள்.
அனு இவ்வளவு அவமானத்திற்கு பிறகும் பதில் அடி எதுவும் குடுக்காமல் அமைதியாய் இருப்பதை கண்டு ஆராவுக்கு பயம் பிடித்துக்கொண்டது.
சின்ன துணி விசயத்திலே அவளை என்ன பாடு படுத்தினால் என்பதை நினைக்க இப்பவும் பயம் மனதை கவ்வியது.
இருவரும் ஒன்றாக துணி எடுக்க சென்று இருந்தார்கள் பொங்கலுக்காக. அப்போது இருவரும் பள்ளி பருவத்தில் தான் இருந்தார்கள். ஆராவின் தேர்வு எப்பொழுதுமே நன்றாகா இருக்கும். அதில் மனம் குமைந்து கொண்டு இருப்பாள் அனு.
அன்றைக்கும் ஆரா நன்றாக உடை எடுத்து பணம் கட்ட சென்றாள். அனுவிற்கும் அவளே அடுத்து கொடுத்தாள். அதுவும் நன்றாகவே இருந்தது.
ஆனாலும் அனுவிற்கு நிறைவு வரவில்லை. இருவரும் பணம் கட்ட செல்ல அங்கே பிறைசூடன் நின்றிருந்தான். அவன் தான் ஆராவை முதலில் பார்த்தது. பின் அவளிடம் வந்து
“என்ன எல்லாம் வாங்கு முடுச்சாச்சா..” என்று கேட்டு அவளது தேர்வை பார்த்தான்.
“ம்ம் நல்லா இருக்கு.. ஆனா இதைவிட இன்னும் நல்ல சுடிதார் இருக்கு வா நான் வாங்கி தரேன்” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.
“இல்ல மாமா இதுவே போதும். ஏற்க்கனவே போடாதது நிறைய இருக்கு” என்று அவனிடம் சொல்லியவளை கொஞ்சமும் பொருட் படுத்தாமல் அவளை இழுத்த்க்கொண்டு செல்ல அவனின் கைபிடியில் இருந்த தன் கையை உருவ பார்த்தாள். அதில் கோவம் கொண்ட சூடன் திரும்பி ஒரு முரட்டு தனமான பார்வை ஒன்றை வீச கப்சிப் என்று அமைதியாக போனாள்.
ஆரா திரும்பி அனுவை பார்க்க அவளது பார்வையில் தெரிந்த வன்மத்தை கண்டு உடம்பு தூக்கி வாரி போட்டது. பிறைசூடன் அனுவை பார்க்கவில்லை. பார்த்து இருந்தால் அவளையும் கூப்பிட்டு இருப்பானோ என்னவோ.
அவன் பார்க்கமால் போனது ஆராவுக்கு கஷ்டமாய் போனது. ஆராவாவது சொல்லி இருக்கலாம் அவனிடம். அவளும் சொல்ல வில்லை.
பெற்றவர்களுக்கு
பிள்ளையின் உணர்வு
புரியவில்லை
பிள்ளைக்கு
பெற்றவர்களின் அலட்சியம்
பதிலளிக்க முடியவில்
பார்த்துக் கொண்டிருந்த அனுவிற்கு
பத்திக் கொண்டு வந்தது...
பனிப்போராய் இருந்த அனு மனதில்
பலி போராய் மாறிவிட்டது.....
இவ எல்லா நேரத்திலும் அமைதியா இருந்தே கொள்ளுவா போல🤦🤦🤦🤦🤦
நல்ல அம்மா அப்பா 😏😏😏😏😏