Notifications
Clear all

அத்தியாயம் 9

 
Admin
(@ramya-devi)
Member Admin

“சரி நீ கண்ணை மூடிக்கோ” என்றவன் தனது கரம் கொண்டு அவளை ஆராய

“மாமா நாம பேசிகிட்டு இருக்கும் போது இது என்ன இப்படி பண்றீங்க” சிணுங்கியவள்

அவனது கரங்களில் தப்பிக்க எண்ணி அவனது மார்போடு ஒன்றிகொண்டாள்.

“ம்ஹும்” என்றவன் அவளது கழுத்தில் முகம் புதைக்க அவனது மீசை செய்யும் வித்தையில் மனம் மயங்கியவள் “வேணாம் மாமா” என்று அவனிடமே சரணடைந்தாள்.

“சந்தோசமா இருக்குடி” என்றான்.

“ம்ம் எனக்கும் தான்” என்றாள்.

“இனி நீ அனுவிடம் கொஞ்சம் படவேண்டியது இருக்கும்” என்றான்.

“ம்ம் ஆமா” என்று அவளும் ஒத்துக்கொண்டாள்.

“நீ உன் பிசினசை விட்டுட்டு கல்யாணம் முடியுற வரை என்னோட நிறுவனத்துக்கு வந்துடு.. அவ பார்வையில கொஞ்சம் படாம இருடி”

“ஏன் மாமா பயமா இருக்கா”

“ம்ம் ஆமா ஆனா நான் இருக்குற வரை உனக்கு எந்த தீங்கும் வர விட மாட்டேன்டி”

“அது தான் எனக்கு தெரியுமே மாமா. நீ இருக்கும் போது அவ என் நிழலை கூட தொடமுடியாது. இத்தனை வருசமா அப்படி தானே நீ துணையா இருக்க”

“இத்தனை நாள் இருந்தது பெருசு இல்லடி.. இனிமே உன்னை பாதுகாக்குறது தான் பெருசு.. அவ நீ நல்லா இருக்க கூடாதுன்றதுக்காக எந்த அளவுக்கு வேணாலும் கீழ இறங்கலாம். கல்யாணம் முடியுற வரை உன்னை விட்டு தள்ளி தான் இருக்க சொல்லுவாங்க”

“அவங்க சொன்னாலும் நீ அப்படியே கேட்டுட்டு தான் மாமா மறுவேலை பார்ப்ப”

“சரியா புருஞ்சுகிட்ட மாமாவை பத்தி” என்றவன் “ஆனா எனக்கு உன்னை ஒரு நிமிடம் கூட தனியா விட மனசு இல்லடி” என்று அவளை இறுக்கி அணைக்க

“உன் பயம் நியாயமானது தான். நான் முடுஞ்ச வரை கவனமா இருக்கேன். நீ சொன்ன படி உன் கிட்டவே வேலைக்கு வரேன். எப்படியும் நீ காலைல சீக்கிரமா வர சொல்லுவா. அதே போல தாமதமா தான் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவ.. சோ தூங்க மட்டும் தான் நீ என்னை வீட்டுக்கு விடுவ... அப்பவும் இந்த இடை பட்ட நேரத்துல போன்ல என்னோட தொடர்புள்ள தான் குடி இருப்ப.. அப்புறம் எதுக்கு பயம் உனக்கு. நான் எனக்காக இல்லைனாலும் உனக்காக என்னை பத்திரமா பாத்துக்குறேன் சரியா..” என்று கேட்டவளை வாஞ்சையுடன் பார்த்தவன்

“சரி டா. ஆனா கவனம் தேவை. எப்போ எது வேணா நடக்கலாம்.” எச்சரிக்க

“உன்னை மீறி தான் அவ என்னை ஏதாவது செய்ய முடியும் அதனால நீ கவலை படாத.. என் மாமன் என்னை ரொம்ப கவனமா பார்த்துக்குவான்” என்று சொல்லி அவனின் நெத்தியில் முத்தம் இட்டவளை இன்னும் நெருக்கி இறுக்கி கட்டிக்கொண்டான்.

அவளது கன்னத்தில் இருந்த சந்தனம் குங்குமம் அவனது முகத்திலும் சட்டையிலும் அப்பி இருக்க அதை சுட்டி காட்டி வெட்க பட்டவளை இன்னும் சிவக்க வைத்தான் பிறைசூடன்.

“என்ன இப்போவே எல்லாம் வேணுமா” என்று கண்களை சுருக்கி கேட்டவளை நெஞ்சோடு அணைத்தவன்

“வேணும் தான் ஆனா..” இழுத்தான் அவன்.

“ஆனா..” கொக்கி போட்டாள்.

“ம்ம்...” என்றபடி அவளை மேலும் கீழும் ரசனையுடன் பார்த்து “மஞ்ச கயித்துல தாலி கோத்து மூணு முடுச்சு போட்டதுக்கு பிறகு.. உன் நகைகள் எல்லாவற்றிற்கும் விடை கொடுத்து விட்டு வெறும் அந்த தாலியை மட்டும் விட்டு வச்சுட்டு, வகிட்டில் குங்குமம் நிறைய வைத்து  மற்றதை எல்லாம்” என்று நிறுத்தியவன் அவளை இன்னும் மோக பார்வை பார்த்து “உடை கூட எது..” என்று சொல்லிக்கொண்டு இருந்தவனின் வாயை வேகமாய் தாவி வந்து பொத்தினாள்.
“போதும் போதும்” என்றவளை சில்மிசமாக பார்த்தவன் “ம்ஹும் எனக்கு வேணும்” என்றவன் அவளது கரங்களை எடுத்து விட்டு அவளின் காதோரம் தன் ஆசைகளை சொல்ல எங்காவது மாயமாய் தான் மட்டும் மறைந்து போக முடியாதா என்று என்கி போனாள்.

அந்த அளவுக்கு வரைமுறைகளை கடந்து அவன் பேச்சு இருந்தது.

“மாமா”

“ம்ம்ம் சரி சரி” என்றவன் அதன் பிறகு தன்னை நிலை படுத்திக்கொண்டு அவளிடமிருந்து விளகிக்கொண்டான்.

அதன் பிறகு முகம் கழுவி இருவரும் தயாராகி வெளியே சென்று உணவை முடித்துக்கொண்டு படத்துக்கு சென்றார்கள். படம் முடிந்து சிறிது நேரம் சுற்றி திரிந்து விட்டு மீண்டும் வெளியவே உணவை முடித்துக்கொண்டு அவளை தூங்க மட்டுமே வீட்டுக்கு அனுப்பி வைத்தான் பிறைசூடன்.

அவர்கள் அந்த பக்கம் சென்ற பின் இங்கு கூடி இருந்தவர்கள் மணமக்களை உணவு உன்ன வர சொல்ல வேண்டா வெறுப்பாய் வந்து அமர்ந்தார்கள்.

ஒருவருக்கொருவர் ஊட்டி விட சொல்ல “சில்லி தனமா பிஹேவ் பண்ணாதீங்க” என்று கூறிவிட்டு பிரகாஷ் அவனது வேலையை செய்ய அனுவிற்கு முகத்தில் அடிவாங்கியது போல இருந்து.

ஆத்திரம் தலைக்கு ஏறியது. ஆனால் காட்ட தான் அவளால் முடியவில்லை. நிச்சயம் நின்னு பலரின் முன்னிலையில் அவமான பட இருந்ததை பிரகாஷ் தடுத்துவிட்டான் என்பதால் அவன் மீது ஆசை பொங்கி எல்லாம் வழியவில்லை.

நீயெல்லாம் ஒரு ஆளா என்ற கணக்கில் தான் அவனது இருப்பை கணக்கிட்டாள்.

அவளை பொறுத்த வரையில் பிறைசூடனின் மீதும் கூட காதல் கிடையாது. பிறைசூடனின் பார்வை எப்பொழுதும் ஆராவின் மீது மட்டுமே இருக்கும். அந்த பார்வையை அவள் உடைக்க மட்டுமே முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறாளே தவிர அந்த பார்வையை தன் மீது திருப்ப அவள் எந்த முயர்ச்சியும் செய்தது இல்லை.

அது எதுக்கு எனக்கு... என்னை பொறுத்த வரை அவன் அவ்வளவு உசத்தி கிடையாது அவன் காலில் விழுந்து கிடப்பதற்கு. என்ற உயர்ந்த எண்ணத்தை மனதில் வளர்த்து வைத்திருக்கிறாள். நான் எதுக்கும் எப்பவும் யாரிடமும் அடி பணிய மாட்டேன். அதுக்கான தேவையும் வராது. என்று ஒரு உயர்ந்த பண்புடனே இருந்தாள் அவள்.

காதல் என்பது காலில் விழுந்து கிடப்பது தான் அவளை பொறுத்த வரை. அதனால் காதலின் ஆழம் அவளுக்கு தெரியாது. அது அவளின் சாபமோ என்னமோ.

படம் எடுக்க கூட அவ்வளவு ஒத்துழைப்பு தரவில்லை இருவரும்... ஏனோ தானோ என்றே இருவரும் இருந்தார்கள்.

பிறைசூடன் தான் எடுக்கும் ஒத்துழைப்பு தராமல் வெளியே கிளம்பி சென்று விட்டான் என்றால் இவர்களின் போக்கு அதுக்கு மேல் இருக்கே என்று பெத்தவர்கள் கவலை கொண்டார்கள்.

இரவு இறங்கிய பின்னே சூடன் ஆராவை கொண்டு வந்து விட்டான். அதை ஆட்சேபம் தெரிவித்த வள்ளியை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தாள் ஆரா..

சூடன் பதில் சொல்ல போக அவனது கையை பிடித்து அழுத்த அவளை திரும்பி பார்த்தவன் அவள் கண்ணில் தெரிந்ததை படித்தவன் எதுவும் சொல்லாமல் அவளிடம் மட்டும் விடை பெற்று சென்றான்.

இருவரின் செயல்களை பார்த்த மூவரும் ஒவ்வொருவரும் ஒருவிதமாய் எண்ணினார்கள்.

Loading spinner
Quote
Topic starter Posted : March 22, 2025 9:50 am
(@mrsbeena-loganathan)
Trusted Member

சொல்லாத காதலை

சொல்லிக் கொண்டும்

மனதில் இருந்த ஆசையை

மறைக்காமல் பேசியும்

மனம் மகிழ்ந்து

மகிழ்வித்து இருக்கும் இரு ஜோடி...

 

எனக்கு உன் தேவை இல்லை

உனக்கு என் தேவை இல்லை என

இரு துருவங்களாக நிற்கும்

இரு இதயம்.....

Loading spinner
ReplyQuote
Posted : March 25, 2025 5:45 pm
(@gowri)
Estimable Member

பாரேன் ஆரா அடிப்பட்ட பார்வை தான் பார்ப்பானு பார்த்தா.....

இப்படி எல்லாம் கூட பார்க்க முடியுமா என்ன????

Loading spinner
ReplyQuote
Posted : March 28, 2025 4:29 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top