சாரி” என்றாள்.
“எதுவும் வேணாம் போடி” என்றான் கோவமாக
“ப்ளீஸ் மாமா.. சாரி”
“காதுல விழல மறுபடியும் சொல்லு”
“சாரி”
“அது இல்ல” என்றான் இருக்கமாய். அவனது இறுக்கத்தில் புரிந்துக்கொண்டவள்
முகம் சிவக்க “சாரி மாமா” என்றாள்
“ம்ம் இப்படி பேசி பழகு.. சரி போய் தூங்கு” என்றான்.
“வேற எதுவும் வேணுமா மாமா”
“வேணும்னு சொன்னா குடுத்துட்டு போவியா சொல்லுடி” என்றான்.
“மாமா” என்றாள் தவிப்பாய்.
“சரி போ” என்றான் தன்மையாக..
“ம்ம் இனிய இரவு வணக்கம்” என்று சொல்ல
“எனக்கு இனிய இரவுன்னா அது நீ என் மார்பில் தூங்கும் நாளில் தான் அது இப்போ இந்த வருசத்துல நடக்காது.. அப்புறம் என்ன இனிய இரவு ஒழுங்கு மரியாதையா ஓடி போய்டு போடி” என்றான் முறைப்புடன்.
“அதுக்கு காலம் வருமோ வராதோ எல்லாத்துக்கும் சாரி மாமா” என்றவள் அவனால் தூண்ட பட்ட உணர்வுகளை கையடக்க முடியாமல் விருட்டென்று கீழே சென்றுவிட்டாள்.
படுத்த இருவருக்கும் நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி செல்ல பேரு மூச்சுடன் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாளை வர வேற்றார்கள்.
அடுத்த நாள் பொழுது இனிமையாக புலர காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் இட்டவள் நிமர்ந்த போது அவளையும் கோலத்தையும் ரசித்த படி நின்றிருந்தான் பிறைசூடன்.
அவள் நிமிரவும் கண்ணடித்து புன்னகையுடன் காலை வணக்கம் சொல்ல அவனது சேட்டையில் மனம் குலைந்தவள் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு அடுப்படிக்குள் சென்று நுழைந்தாள்.
அவளை தொடர்ந்து அவனும் நுழைய குப்பென்று வேர்த்தது ஆராவுக்கு.
“மாமா நீ வெளிய போ” என்றாள் முகம் சிவந்து.
“ம்ஹும் முடியாது நீ காபி போட்டு குடு” என்று சட்டமாய் அங்கிருந்த மேடையில் ஏறி அமர்ந்துக்கொண்டான்.
“மாமா நீ..” உன் பார்வை என்னை பலவீன படுத்தும் என்று சொல்ல முடியாமல் திக்கி திணறிக்கொண்டிருந்தாள்.
“நான் இப்போ தாண்டி நானா இருக்கேன் வேணான்னு சொல்லுறியே” என்றான் வலியுடன்.
“இல்ல நீ இங்கவே இரு.. நான் எதுவும் சொல்லல” என்று அவசரமாய் சொன்னவள் அவனுக்கு காபி தயாரித்து கொடுத்தவள் குழந்தைக்கு பால் ஆற்றி ஆர விட்டவள் தனக்குரியதை எடுத்துக்கொண்டு அவனுக்கு எதிர் நின்று அவனை பார்த்துக்கொண்டே பருகினாள்.
“சரி ஏதாவது உதவி பண்ணவா இல்லை மேனேஜ் பண்ணிக்கிறியா..”
“இல்ல நான் பார்த்துக்குறேன்.. நீங்க குழந்தைக்கு பால் கொடுத்துடுங்க” என்று அவனிடம் பாலை கொடுத்துவிட்டு காலை நேர சமையலில் இறங்கினாள்.
அவ்வேளை முடிந்த பின் தோட்டத்துக்கு வந்து அங்கு நீர் பாய்ச்ச உதவிக்கு பிறை சூடனும் குழந்தையோடு வர காலை நேரம் அழகாய் கழிந்தது அவர்களுக்கு.
பின் இருவரும் சேர்ந்து பங்குக்கு வர அங்கிருந்த வேலையை பிறை சூடானுக்கு கற்று கொடுத்தாள்.
அவன் அந்த வேலைகளை செய்யும் போது மனதுக்கு கஷ்டமாய் இருந்தது.
“மாமா உனக்குன்னு மிக பெரிய நிறுவனம் காத்துகிட்டு ஆனா நீ போய் இங்க இந்த சில்ற வேலையெல்லாம் செய்யிறியே.. வேணாம் மாமா ப்ளீஸ்..”
“அப்போ என்னோட கிளம்பி வரியா ஆரா..” என்றான் கூர்மையாக அவளை பார்த்து.
“அது மட்டும் என்னால முடியாது மாமா.. எனக்கு யாரையும் பார்க்க விருப்பம் இல்ல... என்னை என் போக்குல விடு.. எனக்கு யாரும் வேணாம்.”
“நான் கூடவா..”
“நீ வேணும் தான். ஆனா அது எல்லோரோட சம்மதத்துடன் எனக்கு மட்டுமே நீ வேணும்” என்றாள் நிமிர்வுடன்.
“ அது இப்போதாய்க்கு நடக்காது. என் கொழுந்தியாள் அவங்க கொழுந்தனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஒருத்திய வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்காங்க... நீ என்ன சொல்ற நான் கட்டிக்கட்டுமா..”
அவனது வார்த்தையில் உள்ளம் பற்றி எரிய அதை அவனிடம் காமிக்காது “அது உங்க விருப்பம் மாமா” என்றாள்.
“அந்த அளவுக்கு வந்துட்ட இல்ல” என்று அவனுக்கு கோவம் வர
“நான் என் நிலையை சொன்னேன் மாமா... நீ உன் முடிவை எடு..”
“நான் முடிவு எடுத்ததுனால தான் உன்னை தேடி வந்து இருக்கேண்டி” என்றான் ஆற்றாமையாக
“அப்போ ஏன் மாமா இப்படி பேசுற.”
“நானா பேசுனேன் நீ தாண்டி ஆரம்பிச்ச..”
“என்னக்கு உன்னை இந்த நிலையில் பார்க்க கஷ்டமா இருக்குன்னு சொன்னது தப்பா..”
“உனக்கு மட்டும் தான் கஷ்டமா இருக்கா.. மகாராணி போல இருக்க வேண்டியவ இப்படி யாரும் இல்லாம பத்தாயிரம் காசுக்கு பேனா புடுச்சுகிட்டு இருக்கியேன்னு எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கேடி”
“வேணாம் மாமா”
“உனக்கு வேணாம்னா எனக்கும் வேணாம்டி”
“மாமா” என்றாள் கதறலாக
“அழதாடி எல்லோரும் பார்க்க போறாங்க” என்று சொல்ல
“யார் பார்த்தா எனக்கென்ன” என்று மூக்கை உருஞ்சியவள் சுற்றிலும் கண்களை ஓட்டினாள்.
அவளது முன்னெச்சரிக்கையில் சிரித்தவன் “போ போய் வேலைய பாரு” என்றவன் தன் மடி கணினியில் ஆழ்ந்தான்.
உன்னை தேடி வந்துள்ளேன் உனக்காக வந்துள்ளேன்
உன்னில் புதைந்த என்னை உயிர்வழி தந்து
உதறி வந்து விட்டாயே
உள்ளம் வலிக்குதடி
சத்தியமா ரைட்டர் இவன் சொல்ற கொளுந்தியா relation எனக்கு புரியல😳😳😳😳😳
Plz plz கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன்