அதோடு அவனையும் தான் இவ்வளவு நாளா எங்கும் பார்க்கவே இல்லை. இவ்வளவு நாள் பார்க்கதவனையா இன்று ஒரு நாள் சந்திக்க போகிறோம்... அதற்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணியவள்,
ப்ளாக் கலர் ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ், ஆஷ் கலர் மற்றும் ப்ளாக் கலரும் சேர்ந்தது போல புடவையும் அணிந்து இருந்தவள், அதற்கு தோதாக ப்ளாக் வித் ஆஷ் கலர் ஜுவல்லரியை அணிந்துக் கொண்டாள்.
பிரீஹெர் போட்டு பறந்து விரிந்த முதுகை மறைத்தவள், முகத்துக்கு மெலிதான ஒப்பனையோடு கிளம்பி விட்டாள்.
சிம்பிள் மேக்கப் தான். உடையும் கூட ரொம்ப சிம்பிள் தான். ஆனால் அவளது வனப்புக்கும் தோற்றத்துக்கும் அது அவ்வளவு அழகாக இருந்தது...
பார்ப்பவர்களின் கண்களை ஒரு கணமாவது திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு அவளின் நளினம் இருந்தது.
கிளம்பி கீழே வந்தவளை வீட்டு ஆட்களே வியந்துப் போய் பார்த்தார்கள்.
“அழகா இருக்க கண்ணு... என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. இத்தனை நாள் இந்த பொழிவை எங்க கண்ணு மறச்சி வச்ச... உன்னை இப்படி பார்க்க தான் நாங்க ஆசை பட்டோம்” என்று அவள் கன்னத்தை உருவி முத்தம் கொடுத்தார் பாட்டி.
அனைவரும் அதையே சொல்ல இவளுக்கு பெரும் கூச்சமாகிப் போனது. ஏந்திழையாள் வருகிறாள் என்றவுடன் ஏற்கனவே இருந்த காட்ஸை விட அதிக அளவு இறக்கினார்கள் தந்தை மார்களும் அண்ணன் மார்களும்.
“வரலன்னு சொன்னீங்க” என்று தன் கணவனிடம் கேட்டாள் திலோ...
“ம்ம் சொன்னேன் தான். ஆனா அவ இருக்கிற நிலையில எப்படி வராம இருக்க முடியும். அது தான் இன்னும் கண்ணுக்கு தெரியாத பலரை அங்கும் இங்குமாய் யுகேஷ்கிட்ட போட சொல்லி சொல்லி இருக்கேன்” என்று சொன்னவன் யுகேஷிடம் எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டான்.
கார்த்தியும் முழு மூச்சில் தங்கைக்கு முழு பாதுகாப்புக் கொடுத்தான். ஆனால் என்ன பாதுகாப்பு போட்டாலும் காற்றின் வேகத்தோடு இருப்பவனுக்கு அணைப்போட முடியுமா...?
யாரும் இல்லாத இடமாக பார்த்து ஏந்திழையாளை மடக்கிய ராசசிங்கன் அவளின் இதழ்களோடு அழுத்தமாக தன் இதழ்களை வலுக்கட்டாயமாக புதைத்தவன் அவளின் மேனியில் தன் முகத்தை அழுந்த புதைத்துக் கொண்டான் அரக்கனாய். அதோடு அவளின் உடைகளையும் மெலிதாக கலைத்து வைக்க விக்கித்து நின்றாள் பெண்ணவள்.





