Notifications
Clear all

அத்தியாயம் 1.2

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

“அப்படி என்ன பண்ற” என்று கேட்டுக் கொண்டே அவளின் அருகில் வந்து அமர்ந்தான் பெருவளத்தான்.

அவன் அப்படி அருகில் வரவும் அவள் முறைத்துப் பார்த்தாள். அவளது பார்வையை கண்டு கொள்ளாமல் அவளின் தம்பியும் இவனும் ஆளுக்கு ஒரு புறமாய் அமர்ந்து அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தார்கள்.

மிகப்பெரிய கம்பெனியில் அவளுக்கு இண்டர்வியூ வந்து இருந்ததை பார்த்து வியந்துப் போனார்கள்.

“ஹேய்... சூப்பர் குட்டி...” என்று அவன் பாராட்ட அவளது முகத்தில் எந்த உணர்வும் இல்லை...

“அம்மா அப்பா இவளை பாருங்களேன்... எவ்வளவு பெரிய விசயத்தை நம்ம கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டா” என்று கூச்சல் போட்டவனிடம் என்னடா என்று ஒட்டு மொத்த குடும்பமே கூடியது.

விதுல் விசயத்தை சொல்ல, “என்னடி இது இவ்வளவு பெரிய விசயத்தை மறைச்சிட்ட. சொன்னா நாங்களும் சந்தோசப் படுவம்ல” என்று கேட்ட தாயை மிக சாதரணமாக பார்த்து,

“ப்ச் வெறும் இன்டெர்வியூ மட்டும் தான் வந்து இருக்கு. அதுக்கு எதுக்கு இவ்வளவு ஆர்பாட்டம். நான் இன்னும் செலக்ட் ஆகல. ஆன பிறகு சொல்லலாம்னு தான் சொல்லல” என்றாள் அசட்டையாக.

“இந்த கம்பனில இருந்து இன்டெர்வியூ கார்ட் வந்தாலே அது செலெக்ட் பண்ணிட்டாங்கன்னு தான் அர்த்தம் குட்டி” என்றான் அவளின் மாமான்.

“ஆமாம் க்கா மாமா சொல்றது நூறுக்கு நூறு சதவீதம் உண்மை. என் நண்பர்கள் எல்லாம் வேலைக்கு போனா இந்த கம்பெனிக்கு தான் போகணும். ஒன்ஸ் உள்ள போயிட்டா லைப் செட்டில்டுன்னு எங்க ப்ரொபசர் கூட சொல்லி இருக்காங்க” என்றான் அவளின் தம்பி விதுல்.

“ப்ச் அதெல்லாம் அப்படி கிடையாது. வெளியே பேச்சு வேணா அப்படி இருக்கலாம். நம்மக்கிட்ட டேலன்ட் இல்லன்னா எப்போ வேணாலும் வெளியே துரத்திடுவாங்க.  நாளைக்கு எனக்கு இண்டர்வியூ இருக்கு தொந்தரவு பண்ணாம போங்க அந்த பக்கம்” என்றவள் ஓரளவு அந்த நிறுவனத்தை பற்றி அலசி ஆராய ஆரம்பித்தாள்.

அவளுக்கு உதவியாக அவளது மாமன் பெருவளத்தானும் முக்கியமான குறிப்புகளை நெட்டில் தேடி எடுத்து தர அவனை ஒரு முறை முறைத்தாள்.

“என் வேலையை நான் பார்த்துக்குவேன்... எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க” முகத்தில் அடித்தது போல சொல்லி விட்டு தன் வேலையை பார்க்க,

“ரொம்ப ஓவரா பண்ணாதடி. மாமா பாவம் பார்த்து உனக்கு உதவி பண்றாரு. ஏத்துக்காம பெருசா பிகு பண்ற..” என்று சின்ன அக்கா மஞ்சு அவளை முறைத்தாள்.

யாருடைய பேச்சையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் வேலையில் முனைப்பாக இருந்தாள் ஆதினி. வீட்டிலே அதிகம் படித்தவள் இவள். இரண்டு மூன்று பட்டப்படிப்பு படித்து இருக்கிறாள். இரண்டாவது வருடம் படிக்கும் போதே சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள். கொஞ்சம் அறிவு கூடுதல். அதனாலே அவளின் வேலையில் யாராவது மூக்கை நுழைத்தால் அதிக கோவம் வரும்.

யாரோடும் அதிகம் ஒட்டாத கேட்டகரி.. அதோடு அவளின் விசயத்தில் யார் மூக்கை நுழைத்தாலும் பாராபட்சம் இல்லாமல் வெட்டிவிட்டுவாள் என்று அவளின் குடும்பம் அறிந்ததால்,

“அவளை விடுங்க மாப்பிள்ளை நீங்க வாங்க சாப்பிடலாம்” என்று அவனை அழைத்தார் குமுதா.

“இப்போ தான் காபியே குடித்தேன் கொஞ்ச நேரம் ஆகட்டும் நீங்க சாப்பிடுங்க” என்றவன் கீழே அமர்ந்து இருந்தவளுக்கு எதிரே சோபாவில் அமர்ந்துக் கொண்டான் பெருவளத்தான்.

அவன் வரும் பொழுதே வாங்கி வந்த மூன்று பாக்கட் ஸ்வீட்டில் ஒரு பாக்கெட் ஸ்வீட் அவளுக்கு பிடித்தாக பார்த்து வாங்கினான். எல்லோருக்கும் என்னென்ன பிடிக்கும் என்று லிஸ்ட் போட்டு இருந்தார்கள். ஆனால் ஆதினி மட்டும் எப்பொழுதும் எதுவும் அவனிடம் கேட்க மாட்டாள். ஆனால் அவளுக்கு பிடித்ததை வாங்கி வராமல் பெருவளத்தான் வர மாட்டான்.

எனவே அவளுக்கு படித்த இனிப்பை அவளிடம் நீட்டினான்.

அதை வாங்காமல் அவனை முறைத்துப் பார்த்தவள் மீண்டும் தன் வேலையில் மூழ்க அந்த ஸ்வீட்டில் ஒன்றை எடுத்து அவன் சாப்பிட்டான். அந்த ஸ்வீட் அவனுக்கும் பிடித்த ஒன்று...! அவன் சாப்பிடுவதை நிமிர்ந்து ஒரு கணம் பார்த்தவள் மீண்டும் தலையை குனிந்துக் கொண்டாள் லேப்டாப்பில்.

அவள் நிமிர்ந்து பார்க்கவும் “வேணுமா குட்டி” மீண்டும் அவன் கேட்க, நிமிர்ந்து அவனை ஒரு முறை முறைத்தாள். அவளது கடுப்பை உணர்ந்தவன், “போடி ரொம்ப தான் பண்ற” என்றுவிட்டு தன் போனை நோண்ட ஆரம்பித்தான்.

“போயேன் எனக்கென்ன வந்தது” என்று இன்னும் முறைத்து விட்டு தன் வேலையை தொடர்ந்தாள் ஆதினி. சிறிது நேரம் கழித்து இவனும் சாப்பிட போக அவர்களது தாய் பரிமாறினார் அவனுக்கு.

“தம்பி நம்ம மஞ்சுக்கு ஒரு வரன் வந்து இருக்கு” என்று சொல்ல,

“மாமா என் போனுக்கு அனுப்பி விட்டாரு அத்தை. நாளைக்கு போய் நேர்ல விசாரிக்கிறேன்” என்றான் அந்த குடும்பத்தின் தலை மகனாய்..

“இதுக்கு தான் மாப்பிள்ளை நீங்க வேண்டும்னு சொல்றது...” என்று பாரம் நீங்கியவறாய் சொன்னார். அதில் அந்த குடும்பத்துக்கு அவன் எவ்வளவு முக்கியமானவன் என்று உணர்ந்து சிரித்தான்.

அந்த நேரம் ஆதினி வர இந்த பேச்சை கேட்டு முகத்தை சுளித்தவள் குறிப்பாக அக்கா கணவனின் முகத்தில் இருந்த சிரிப்பை கண்டு முறைத்தவள் தன் தட்டில் இரண்டு தோசையை போட்டுக் கொண்டு அமர்ந்து உண்ண ஆரம்பித்தாள்.

“அப்படியே மாமாவையும் கவனிச்சுக்கடி நான் உள்ள பாலை அடுப்புல வச்சு இருக்கேன். பெரியவளும் நடுவுலவளும் தூங்க போயிட்டாளுங்க” என்ற தாயை முறைத்தாள்.

“எனக்கு இது தான் வேலையா? புருசனை கவனிக்கிறதை தவிர வேறு என்ன வேலை வெட்டி முறிக்கிறா அவ... அங்க வீட்டுலையும் அத்தை தான் எல்லா வேலையும் செய்யிறாங்க” கடுப்படித்தாள்.

“அவளை ஏன் அத்தை தொந்தரவு பண்றீங்க? நான் போட்டு சாப்பிட்டுக்க மாட்டனா. விடுங்க” என்றான் அவன் மிக இயல்பாக தன் மனைவிக்கு பரிந்து பேசுவது போல அவன் பேச பெருவளத்தானை முறைத்துப் பார்த்தால்.

“அது தான் அவரே சொல்றாரே போட்டுகிறார்னு அப்புறம் என்ன....?” முறைத்தவள் தன் தட்டை பார்த்து சாப்பிட்டாள்.

“இவளுக்கு ஏன் தான் இவ்வளவு ராங்கியோ தெரியல மாப்பிள்ளை.. நான் அடிச்சு கூட பார்த்துட்டேன் ஆனா திருந்தவே மாட்டிக்கிறா...” என்றவர் அவளது தலையில் ஒரு கொட்டை வைத்து விட்டு உள்ளே போய் விட்டார் குமுதா.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top